<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	xmlns:georss="http://www.georss.org/georss" xmlns:geo="http://www.w3.org/2003/01/geo/wgs84_pos#" xmlns:media="http://search.yahoo.com/mrss/"
	>

<channel>
	<title>கமகம்</title>
	<atom:link href="http://carnaticmusicreview.wordpress.com/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>http://carnaticmusicreview.wordpress.com</link>
	<description>Classical Music</description>
	<lastBuildDate>Tue, 31 Jan 2012 06:29:12 +0000</lastBuildDate>
	<language>ta</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
	<generator>http://wordpress.com/</generator>
<cloud domain='carnaticmusicreview.wordpress.com' port='80' path='/?rsscloud=notify' registerProcedure='' protocol='http-post' />
<image>
		<url>http://s2.wp.com/i/buttonw-com.png</url>
		<title>கமகம்</title>
		<link>http://carnaticmusicreview.wordpress.com</link>
	</image>
	<atom:link rel="search" type="application/opensearchdescription+xml" href="http://carnaticmusicreview.wordpress.com/osd.xml" title="கமகம்" />
	<atom:link rel='hub' href='http://carnaticmusicreview.wordpress.com/?pushpress=hub'/>
		<item>
		<title>துருவ நட்சத்திரம் &#8211; வெளியீடு, இசை விழா, புத்தகக் கண்காட்சி</title>
		<link>http://carnaticmusicreview.wordpress.com/2012/01/05/dhruva-nakshatram-2/</link>
		<comments>http://carnaticmusicreview.wordpress.com/2012/01/05/dhruva-nakshatram-2/#comments</comments>
		<pubDate>Thu, 05 Jan 2012 03:41:22 +0000</pubDate>
		<dc:creator>Lalitharam</dc:creator>
				<category><![CDATA[அறிவிப்பு]]></category>
		<category><![CDATA[மிருதங்கம்]]></category>
		<category><![CDATA[வரலாறு]]></category>
		<category><![CDATA[Dhruva Nakshatram]]></category>
		<category><![CDATA[event]]></category>
		<category><![CDATA[Palani]]></category>
		<category><![CDATA[percussion instruments]]></category>
		<category><![CDATA[biography]]></category>
		<category><![CDATA[book fair]]></category>
		<category><![CDATA[book release]]></category>
		<category><![CDATA[dhruva nakshatram]]></category>
		<category><![CDATA[mridangam]]></category>
		<category><![CDATA[palani]]></category>
		<category><![CDATA[review]]></category>
		<category><![CDATA[solvanam]]></category>

		<guid isPermaLink="false">http://carnaticmusicreview.wordpress.com/?p=551</guid>
		<description><![CDATA[டிசம்பர் 11 அன்று சென்னை ராக சுதா அரங்கில் துருவ நட்சத்திரம் வெளியானது. ஞாயிறு காலை 9.00 மணிக்கு அவ்வளவு பேர் கூடி அரங்கை நிறைத்தது ஆச்சர்யமாக இருந்தது.  இந்த விழாவுக்காகவே பெங்களூர், ஓசூர் போன்ற ஊர்களில் இருந்து நண்பர்கள் வந்து நெகிழ வைத்தனர். விழாவைப் பற்றி கிரியும், சுகாவும் விவரமாகவே எழுதியுள்ளனர். அன்றைய கச்சேரியில் பழனி வழியில் வந்திருக்கும் இரு இளம் வித்வான்களின் தனியை இங்கு காணலாம். நூல் வெளியான அன்று ஹிந்துவில், கோலப்பன் புத்தகத்தைப் [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=carnaticmusicreview.wordpress.com&amp;blog=5911820&amp;post=551&amp;subd=carnaticmusicreview&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p>டிசம்பர் 11 அன்று சென்னை ராக சுதா அரங்கில் துருவ நட்சத்திரம் வெளியானது.</p>
<p>ஞாயிறு காலை 9.00 மணிக்கு அவ்வளவு பேர் கூடி அரங்கை நிறைத்தது ஆச்சர்யமாக இருந்தது.  இந்த விழாவுக்காகவே பெங்களூர், ஓசூர் போன்ற ஊர்களில் இருந்து நண்பர்கள் வந்து நெகிழ வைத்தனர்.</p>
<p><a href="http://carnaticmusicreview.files.wordpress.com/2012/01/ram-book.jpg"><img class="aligncenter size-full wp-image-552" title="ram - book" src="http://carnaticmusicreview.files.wordpress.com/2012/01/ram-book.jpg?w=500&#038;h=752" alt="" width="500" height="752" /></a></p>
<p>விழாவைப் பற்றி <a href="http://www.sasariri.com/2011/12/blog-post_14.html?spref=fb">கிரியும்,</a> <a href="http://solvanam.com/?p=18463">சுகாவு</a>ம் விவரமாகவே எழுதியுள்ளனர்.</p>
<p>அன்றைய கச்சேரியில் பழனி வழியில் வந்திருக்கும் இரு இளம் வித்வான்களின் தனியை <a href="http://www.youtube.com/watch?v=FGqEoUYo3ks">இங்கு </a>காணலாம்.</p>
<p>நூல் வெளியான அன்று ஹிந்துவில், கோலப்பன் <a href="http://www.thehindu.com/arts/music/article2704665.ece">புத்தகத்தைப் பற்றியும் என்னைப் பற்றியும்</a> எழுதியிருந்தார். சில நாட்களில் டைம்ஸ் ஆஃப் இந்தியாவிலும்<a href="http://epaper.timesofindia.com/Repository/ml.asp?Ref=VE9JQ0gvMjAxMS8xMi8xNCNBcjAwNjAw"> ஒரு கட்டுரை</a> வெளி வர, “என்ன செய்யற-னு தெரியல. ஆனா என்னமோ செய்யர போல இருக்கு”, என்கிற ரீதியில் பல நண்பர்களிடமிருந்து தொலைபேசி அழைப்புகள் வந்தன.</p>
<p>இந்த இரு கட்டுரைகளின் உபயத்தில், ம்யூசிக் அகாடமியில் கர்நாடிக் ம்யூசிக் புக் ஸ்டோரின் ஸ்டாலில் புத்தகம் எதிர்பார்த்ததை விட நன்றாகவே விற்றது என்றால், இணையத்தில் நண்பர் சொக்கன் எழுதிய <a href="http://nchokkan.wordpress.com/2011/12/20/pazhani/">அறிமுகத்தினால் </a>இந்தப் புத்தகத்தை வாங்கினோம் என்று பலர் எனக்கு மின்னஞ்சல் அனுப்பினர்.  &#8221;இந்தப் புத்தகத்துக்கு இவ்வளவு ஆர்டரா?” என்று உடுமலை.காம் சிதம்பரம் அதிர்ச்சியில் பல நாட்கள் இருந்தார். சில நாட்களாய் ஆர்டர் இல்லை என்று நேற்று பேசும் போது சொன்னார். அப்போதுதான் அவர் குரலில் கொஞ்சம் ஆசுவாசம் தெரிந்தது.</p>
<p>புத்தகம் எழுதும் போது, கதை போல எழுதிய அத்தியாயங்கள் எல்லாம் அதிகப் பிரசங்கம் ஆகி விடுமோ என்ற பயம் எனக்கு இருந்தது. இத்தனைக்கும் மான்பூண்டியா பிள்ளை, தட்சிணாமூர்த்தி பிள்ளை போன்ற அத்தியாயங்கள் சொல்வனத்திலும், இந்த வலைப்பூவிலும் வெளியானவைதான். புத்தகத்தைப் படித்தவர்கள் அனைவருக்கும் அந்தப் பகுதிகளே பெரிதும் பிடித்திருக்கின்றன. பிரபல எழுத்தாளர்கள் இந்திரா பார்த்தசாரதி, அசோகமித்ரன், இரா.முருகன் போன்றோரும் லா.ச.ரா-வின் மகன் சப்தரிஷி போன்ற தேர்ந்த ரசிகர்களும் இதனை உறுதி செய்தனர்.  இதுவரை இணையத்தில் வெளியாகாத ஓர் அத்தியாயம் சில நாட்களுக்கு முன் (சேதுபதியின் பதிப்புரையோடு) <a href="http://www.tamilpaper.net/?p=5255">தமிழ் பேப்பரில் </a>வெளியானது.</p>
<p>இ.பா-வும் அ.மி-யும் புத்தகத்தைப் பற்றிச் சொன்னவை <a href="http://solvanam.com/?p=18503">இந்த வார சொல்வனம் </a>இதழில் வெளியாகியுள்ளது.</p>
<p>இரண்டு நாட்களுக்கு முன் தினமணியிலும் புத்தகத்தில் இருந்து ஒரு சிறிய பகுதி வெளியாகியிருந்தது.</p>
<p>இந்தப் புத்தகத்துக்கு இவ்வளவு விளம்பரம் நான் எதிர்பார்க்காத ஒன்று.</p>
<p>எல்லாவற்றையும் விட,  “இணையத்தில் ஓர் ஓரத்தில் எழுதவதன் மூலம் இவ்வளவு நண்பர்களா”, என்ற எண்ணமே மேலோங்கி நிற்கிறது.</p>
<p>அந்த நண்பர்களுள் பலரை புத்தகக் கண்காட்சியில் சந்திக்க நினைத்திருந்தேன். ஆனால், பணி நிமித்தமாக இந்த வாரக் கடைசியில் வெளிநாடு செல்ல வேண்டி உள்ளது. திரும்ப ஒன்றரை மாதங்கள் ஆகும்.</p>
<p>புத்தகங்களுடனும், நண்பர்களுடனும் உறவாடும் அரிய வாய்ப்பை இழக்கத்தான் வேண்டி உள்ளது <img src='http://s0.wp.com/wp-includes/images/smilies/icon_sad.gif' alt=':-(' class='wp-smiley' /> </p>
<p>புத்தகக் கண்காட்சியில் டிஸ்கவரி புக் பேலஸின் ஸ்டாலில் (ஸ்டால் எண் 334)  ‘துருவ நட்சத்திரம்’ புத்தகம் கிடைக்கும்.</p>
<p>இணையத்தில் பெற: <a href="http://udumalai.com/?prd=thuruva+natchatram&amp;page=products&amp;id=10381">http://udumalai.com/?prd=thuruva+natchatram&amp;page=products&amp;id=10381</a></p>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/carnaticmusicreview.wordpress.com/551/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/carnaticmusicreview.wordpress.com/551/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/carnaticmusicreview.wordpress.com/551/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/carnaticmusicreview.wordpress.com/551/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/carnaticmusicreview.wordpress.com/551/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/carnaticmusicreview.wordpress.com/551/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/carnaticmusicreview.wordpress.com/551/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/carnaticmusicreview.wordpress.com/551/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/carnaticmusicreview.wordpress.com/551/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/carnaticmusicreview.wordpress.com/551/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/carnaticmusicreview.wordpress.com/551/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/carnaticmusicreview.wordpress.com/551/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/carnaticmusicreview.wordpress.com/551/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/carnaticmusicreview.wordpress.com/551/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=carnaticmusicreview.wordpress.com&amp;blog=5911820&amp;post=551&amp;subd=carnaticmusicreview&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://carnaticmusicreview.wordpress.com/2012/01/05/dhruva-nakshatram-2/feed/</wfw:commentRss>
		<slash:comments>2</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/29b774b2f86e81e92d15835a8955a5f8?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">Lalitharam</media:title>
		</media:content>

		<media:content url="http://carnaticmusicreview.files.wordpress.com/2012/01/ram-book.jpg" medium="image">
			<media:title type="html">ram - book</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>தனி ஆவர்த்தனக் கச்சேரி</title>
		<link>http://carnaticmusicreview.wordpress.com/2011/12/15/thani-avartana/</link>
		<comments>http://carnaticmusicreview.wordpress.com/2011/12/15/thani-avartana/#comments</comments>
		<pubDate>Thu, 15 Dec 2011 01:50:20 +0000</pubDate>
		<dc:creator>Lalitharam</dc:creator>
				<category><![CDATA[மிருதங்கம்]]></category>
		<category><![CDATA[வரலாறு]]></category>
		<category><![CDATA[Dhruva Nakshatram]]></category>
		<category><![CDATA[percussion instruments]]></category>
		<category><![CDATA[personality]]></category>
		<category><![CDATA[Chembai]]></category>
		<category><![CDATA[chowdiah]]></category>
		<category><![CDATA[dhruva nakshatram]]></category>
		<category><![CDATA[mridangam]]></category>
		<category><![CDATA[palani subramaniam pillai]]></category>

		<guid isPermaLink="false">http://carnaticmusicreview.wordpress.com/?p=548</guid>
		<description><![CDATA[சமீபத்தில் வெளியான என் நூலின் முதல் அத்தியாயம் இது. &#160; “அண்ணா! கீழயே நிக்கறேளே! வண்டில ஏறுங்கோ” என்ற குரல் அந்த இளைஞனின் எண்ண ஓட்டத்தைக் கலைத்தது. ‘இன்னும் சில நிமிடங்களில் ரயில் கிளம்பி விடும். ரயிலடிக்கு வந்த பின் வர மாட்டேன் என்றா சொல்ல முடியும்? பாகவதரைப் பார்த்தால் பேச்சே வரõது. இதில் பொய் வேறா சொல்ல முடியும்? சென்ற முறை பம்பாய் சென்றபோது மனம் குதியாட்டம் போட்டது. இந்த முறை எப்படியாவது மெட்ராஸிலேயே தங்கிவிட [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=carnaticmusicreview.wordpress.com&amp;blog=5911820&amp;post=548&amp;subd=carnaticmusicreview&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<blockquote><p>சமீபத்தில் வெளியான என் நூலின் முதல் அத்தியாயம் இது.</p></blockquote>
<p>&nbsp;</p>
<p>“அண்ணா! கீழயே நிக்கறேளே! வண்டில ஏறுங்கோ” என்ற குரல் அந்த இளைஞனின் எண்ண ஓட்டத்தைக் கலைத்தது.</p>
<p>‘இன்னும் சில நிமிடங்களில் ரயில் கிளம்பி விடும். ரயிலடிக்கு வந்த பின் வர மாட்டேன் என்றா சொல்ல முடியும்? பாகவதரைப் பார்த்தால் பேச்சே வரõது. இதில் பொய் வேறா சொல்ல முடியும்? சென்ற முறை பம்பாய் சென்றபோது மனம் குதியாட்டம் போட்டது. இந்த முறை எப்படியாவது மெட்ராஸிலேயே தங்கிவிட மாட்டோமா என்று தவியாய்த் தவிக்கிறது.’ என்றெல்லாம் குழம்பிக் கொண்டிருந்த அவன் கையைப் பிடித்து வண்டிக்குள் இழுத்தே விட்டான் பாகவதரின் சிஷ்யன்.</p>
<p>“அண்ணா நாலஞ்சு தடவை உங்களைக் கேட்டுட்டார்” என்றவனைப் பார்த்து வெற்றுப் புன்னகை ஒன்றை உதிர்த்த படி உள்ளே சென்றான் சுப்ரமணியம்.</p>
<p>உரத்த குரலில் சௌடையாவுடன் பேசிக் கொண்டிருந்த செம்பை பாகவதர், உள்ளே நுழைந்தவனைக் கண்டதும், “ஏய்! எங்க யாக்கும் போனாய் நீ? எத்தர நாழியா நோக்கு வேண்டி காத்துண்டு இருக்கோம். ஏன் மொகமெல்லாம் வாடியிருக்கு? உடம்புக்கு சுகமில்லையோ?” என்றார்.</p>
<p>“அதெல்லாம் ஒண்ணும் இல்லண்ணா” என்று தன் இருக்கையில் அமர்ந்தான் சுப்ரமணியம்.</p>
<p>சற்றைக்கெல்லாம் வண்டி கிளம்பி விட, பாகவதர் பழைய கதைகளை சௌடையாவிடம் விவரிக்கத் தொடங்கினார். திடீரென சுப்ரமணியத்தைப் பார்த்து, “சுப்புடு! நீ நேக்கு மொத மொதல்ல வாசிச்ச கச்சேரி ஓர்மை இருக்கோ?” என்றார்.</p>
<p>“அதை மறக்க முடியுங்களா? அப்ப எனக்கு பதினெட்டு வயசு கூட முடியல. 1926-ல நெல்லூர் கிட்ட புச்சிரெட்டிபாளையத்துல ஒரு கல்யாண கச்சேரி. அன்னிக்குப் பாடின கல்யாணியும் காம்போதியும் காதுலையே கிடக்குதுங்களே”</p>
<p>“சுப்புடு! அன்னிக்கே உன் வாசிப்பு நேக்கு ரொம்பப் பிடிச்சுது கேட்டியா. நிறைய இடத்துல பெரியவர் வாசிப்பை ஓர்மை படுத்தித்து.”</p>
<p>“அண்ணா! தட்சிணாமூர்த்தி ஐயா வாசிப்பு எங்க, என் வாசிப்பு எங்க. உங்களுக்கு தெரியாததா?”</p>
<p>“அப்படிச் சொல்லாதே சுப்புடு. உன் கையில எல்லாம் பேசறதாக்கும். கணக்கு, துரிதத்துலையும் தெளிவு, காலப்ரமாண சுத்தம் எல்லாம் நெறஞ்சு இருக்கு. ஆனா…”</p>
<p>“ஆனா என்னண்ணா? குத்தம் குறை இருந்தா தயங்காம சொல்லுங்க. நிச்சயம் மாத்திக்கறேன்.”</p>
<p>“சுப்புடு! என்ன வார்த்தை சொல்றாய் நீ. உன் வாசிப்புல குத்தம் சொல்றதாவது. அதுல வேண்டியதெல்லாம் பூர்ணமா இருக்கு. ஆனா நேக்கொரு ஆசை.”</p>
<p>“சொல்லுங்கண்ணா”</p>
<p>“இந்தக் கணக்கெல்லாம் கையில பேச அசுர சாதகம் பண்ணிருப்பாய் இல்லையா? கேட்க நன்னாத்தான் இருக்கு. இதையெல்லாம் ரசிக்கவே நிறைய ஞானம் வேணும். போன கச்சேரியில பிரமாதமா தனி வாசிச்சாய். திஸ்ரத்துக்குள்ள சதுஸ்ரத்தை நுழைச்சு வாசிச்சதெல்லாம் பெரிய காரியம். பட்சே, நான் கல்யாணி கிருதி அனுபல்லவியில கார்வை குடுத்து நிறுத்தினப்போ ஸர்வலகுவா ரெண்டு ஆவர்த்தம் வாசிச்சயே, அப்போ நிஜமாவே சிலிர்த்துப் போச்சு. அதுனாலயாக்கும் இன்னொருக்கா அதே எடத்தைப் பாடினேன். கணக்கெல்லாம் வேண்டாங்கலை. அதுக்காக ஸௌக்யமா வாசிக்கறதை குறைச்சுக்காத. சூட்சமம் என்னன்னா தனியில வாசிச்ச கணக்கு, புத்தியைத் ஸ்பர்சிச்சுது. கிருதியில வாசிச்ச டேக்கா சொல்லு மனசை ஸ்பர்சிச்சுது. நீ பகவானா நினைக்கறயே தட்சிணா- மூர்த்தி பிள்ளை, அவரோட விசேஷமே அவர் பாட்டுக்குக் கொடுக்கற போஷாக்குதான். அவருக்குத் தெரியாத கணக்கா? அவர் பண்ணாத கோர்வையா? ஆனாலும், காரைக்குடி பிரதர்ஸுக்கு வாசிக்கும்போது மூணாமத்த வீணையாவே அவர் மிருதங்கம் மாறிடுமாக்கும். ஒரு சாப்பு குடுத்தாப் போறும். மனசு நிறைஞ்சுடும்.”</p>
<p>பாகவதர் பேசப் பேச ஏற்கெனவே குழம்பியிருந்த சுப்ரமணியத்தின் மனம் மேலும் கலக்கத்துக்குள்ளானது.</p>
<p>‘வாழைப் பழத்துல ஊசி ஏத்தறாரா பாகவதர்? நிறைய கச்சேரி வாய்ப்புகள் வரணும்னா வித்வத்தை எல்லாம் மூட்டை கட்டி வெச்சாகணுங்கறாரா? பாடறவர் கையில தாளம் போடறாப்புல மிருதங்கக்காரன் வாத்தியத்துல தாளம் போட்டாப்போதும் போல இருக்கு. கச்சேரி கேட்கறவனுக்கு ராகமோ, கிருதியோ புரியற அளவுக்கு லய நுணுக்கங்கள் புரியறதில்லை. அது யார் குத்தம்? அவங்களுக்கு புரியலைங்கறதாலயே வாசிக்காம இருக்க முடியுமா?’ என்றெல்லாம் அவனுள் எண்ண அலைகள் எழும்பியபடி இருந்தன.</p>
<p>அது வரை அமைதியாய் வந்த சௌடையா, “அண்ணா! ஒரு விஷயம்…” என்று இழுத்தார்.</p>
<p>“சொல்றதுக்கென்ன நாள் பார்க்கணுமா? என்னவாக்கும் சேதி?” என்றார் செம்பை.</p>
<p>“உங்களுக்குத் தெரியாத சம்பிரதாயம் இல்ல. கச்சேரியில ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு இடம் இருக்கு. அதுல பாடகருக்கு வலப் பக்கம் மிருதங்கம், இடப் பக்கம் வயலின். இதுதான் சம்பிரதாயம்.”</p>
<p>“சௌடையா! நீங்க சொல்ற விஷயத்துக்குள்ள போறதுக்கு முன்னாடி ஒரு சோத்யம் கேக்கறேன். ஒரு வாய்ப்பாட்டுக் கச்சேரி நன்னா அமையறத்துக்கு எதெல்லாம் காரணம்?”</p>
<p>“பாடறவர் ஸ்ருதி சுத்தமாப் பாடணும். சபை அறிஞ்சு பாடணும். மனசு முழுக்க கச்சேரியில லயிச்சு சத்தியமாப் பாடணும்.”</p>
<p>“பாடறவர் ஒழுங்காப் பாடினா மாத்திரம் கச்சேரி நன்னா அமைஞ்சுடுமோ?”</p>
<p>“அது எப்படி? கூட வாசிக்கற பக்கவாத்தியங்களும் பாடறவர் பாட்டுக்கு போஷாக்கு பண்ணி மெருகேத்தணும்”</p>
<p>“அதைச் சொல்லும்! ஆக பாடகர், வயலின் வித்வான், மிருதங்க வித்வான் மூணு பேரும் பிரகாசிச்சாத்தான் கச்சேரி சோபிக்கும் இல்லையா?”</p>
<p>“அதுல என்ன சந்தேகம்”</p>
<p>“அப்போ, மிருதங்கக்காரர் வாசிப்பு பரிமளிக்கறதும் கச்சேரிக்கு முக்கியம்தானே?”</p>
<p>“இல்லையாபின்ன. அவர் அமைச்சுக் கொடுக்கற பாதையில- தானே நாம நடக்க முடியும்?”</p>
<p>“ரொம்ப சரி. மிருதங்க வாசிப்பு நன்னா அமைய வாத்யத்தோட வலந்தலை சபையை பார்த்து இருக்கணுமா? எதிர்பக்கம் இருக்கணுமா?”</p>
<p>பாகவதர் தன்னை மடக்கிவிட்டதை உணர்ந்த சௌடையா மெல்லிய புன்னகை ஒன்றை உதிர்த்தார்.</p>
<p>“உமக்கே புரிஞ்சு இருக்கும்னு நினைக்கறேன். கச்சேரியில எங்க உட்கார்ந்தா என்ன? சம்பிரதாயங்கறதே நாம வெச்சதுதானே? பழைய நாளுல எல்லாம் வயலினே இல்லை. வீணையும், குழலும்தான் பக்க வாத்யம். அதனால, வயலினோட கச்சேரி செய்யறது சம்பிரதாய விரோதம்னு சொல்ல முடியுமோ? வழக்கமா உள்ள வயலினோட தந்தி அமைப்பை மாத்தி நீங்க வாசிக்கற வயலின் சம்பிரதாயத்துக்கு விரோதமான வயலின்னு சொன்னா ஏத்துக்க முடியுமோ?” என்று பாகவதர் அடுக்கிக் கொண்டே போனார்.</p>
<p>கேட்டுக் கொண்டு வந்த அந்த இளைஞனுக்கு ஒரு பக்கம் பாகவதரின் மேல் மதிப்பும், மறு பக்கம் வீண் சம்பிரதாயங்களின் மேல் வெறுப்பும் பெருகின.</p>
<p>‘ஒரு மனுஷனுக்கு வலது கைப்பழக்கமோ, இடது கைப் பழக்கமோ அமையறது கடவுள் சித்தமில்லையா? எத்தனையோ காலமா நாகஸ்வர கச்சேரியில ரெட்டைத் தவில் வாசிக்கறது வழக்கத்துலதானே இருக்கு. அப்படி வாசிக்கும்போது ஒருத்தர் வலக்கைப் பழக்கம் இருக்கறவராகவும், மற்றவர் இடக்கை பழக்கம் இருக்கறவரõகவும் உள்ள ஜோடிகள் எத்தனையோ உண்டே. அம்மாப்பேட்டை பக்கிரியோட வாசிப்பைக் கேட்க கூட்டம் அலை மோதுமே. அவரும் இடது கைப் பழக்கம் கொண்டவர்தானே? ரேடியோ கச்சேரியில என் கூட சந்தோஷமா வாசிக்கிற வயலின் வித்வான்கள் சபா கச்சேரியில வாசிக்கத் தயாராயில்லை. இடம் மாறாம தொப்பியை சபை பக்கம் வெச்சு வாசிச்சா கேட்க நல்லாவா இருக்கும்? பரம்பரை பரம்பரையா லயத்துல ஊறின எனக்கு ஏன் இப்படி சோதனை வரணும்? என் வாசிப்பு சரியில்லை-னு ஒதுக்கினா நியாயம். என் இடது கைப் பழக்கத்தால் கச்சேரி வாய்ப்பு தட்டிப் போவது எந்த விதத்துல நியாயம்?’ என்றெல்லாம் அந்த இளைஞனின் நெஞ்சம் குமுறியது.</p>
<p>யோசனையில் தலையைக் கவிழ்த்திருந்தவனின் தோளைத் தொட்ட பாகவதர், “சுப்புடு! இதுக்கு முன்னால் நீ பம்பாய் பார்த்திருக்கியோ?” என்று கேட்டார்.</p>
<p>பாகவதரின் கேள்வி அவனை மேலும் தளரச் செய்தது. அதைப் பற்றி பேச விரும்பாதததால் தலையை இல்லை என்று ஆட்டியபோதும், அவன் மனக்கண் முன் பழைய நினைவுகள் ஓடத் தொடங்கின.</p>
<p>முதல் பயணம் என்பதால் ஆசை ஆசையாய் பம்பாய்க்குக் கிளம்பியிருந்தான். முதன்முறையாய் அங்கு வாசிக்கப் போகும் கச்சேரியே ஒரு பெரிய சபையில் சிறந்த பாடகரின் கச்சேரியாய் அமைந்ததை எண்ணி அவன் உள்ளத்தில் உற்சாகம் பொங்கியது. நிறைந்த சபையில் கச்சேரி விறுவிறுப்பாக தொடங்கியது. பாடகருக்கு போஷாக்கு செய்து நன்கு உழைத்து வாசித்தான். முதல் பாடலின் அனுபல்லவி முடிந்து சரணம் பாடுவதற்குள் திஸ்ரத்தில் சின்ன மோரா ஒன்றை வாசித்ததற்கே கூட்டம் ஆரவாரித்தது. அந்த இளைஞனின் முகத்தில் பரவசம் பரவ ஆரம்பித்த வேளையில் பாடகரின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க ஆரம்பித்தன.</p>
<p><img src="http://solvanam.com/wp-content/uploads/2011/12/p_s_p-681x1023.jpg" alt="" width="545" height="818" /></p>
<p>அடுத்த பாடலுக்கு முன்னால் அரை மணி நேரம் ராகம் பாடினார். கிருதியைப் பாடி நிரவல், ஸ்வரம் என்று விஸ்தாரமாய் முடித்தபோது கச்சேரி தொடங்கி 2 மணி நேரம் ஆகிவிட்டது. தன் திறமையை முழு வீச்சுடன் காட்ட தனி ஆவர்த்தனம் விடுவார் என்றெண்ணியிருந்தான் அந்த இளைஞன். ஸ்வரப்ரஸ்தாரத்துக்கு ஆரவாரமாய் கைத்தட்டிய கூட்டமும் தொடர்ந்து தாளம் போடத் தயாரானது. ஆனால் பாடகரை அவசர அவசரமாய் அடுத்த ராகத்தைப் பாடத் தொடங்கினார். எவ்வளவோ முயன்றும் சுப்ரமணியத்தால் பாடகரின் கவனத்தை ஈர்க்க முடியவில்லை. ராக பாவத்துக்குள் மூழ்குவது போன்ற பாவனையில் கண்ணை மூடிக் கொண்டு ஆலாபனை செய்பவரை என்ன செய்ய முடியும்?</p>
<p>ராகம் முடிந்ததும் தானம் பாடி பல்லவியை அமர்க்களமாய் பாடி முடித்தபோது கூட்டம் கலையத் தொடங்கி விட்டது. அப்போதும் அவர் தனி ஆவர்த்தனம் விடத் தயாராக இல்லை என்று உணர்ந்தபோது, “இப்பவாவது தனி வாசிக்கலாமா?” என்று வாயைத் திறந்து சுப்ரமணியம் கேட்டே விட்டான். வேண்டா வெறுப்பாய் பாடகர் தாளம் போட ஆரம்பித்தார். நல்ல நேரத்தில் தனி என்றாலே இளைப்பாற அரங்கை நீங்கும் கும்பல், கச்சேரி கிட்டத்தட்ட முடிந்த நிலையிலா தனி கேட்க உட்கார்ந்திருக்கும்? எல்லோரும் கலையும் நேரத்திலா நன்றாய் வாசிக்கத் தோன்றும். ஏதோ பேருக்கு இரண்டு நிமிடம் வாசித்து கோர்வையை வைத்து தனியை முடித்தான். “ஆஹா! ஜிஞ்சாமிர்தம்! எப்பேர்பட்ட வாசிப்பு” என்ற பாடகரின் குசும்பு அவன் மனதை சுருக்கெனத் தைத்தது.</p>
<p>இந்நிகழ்வால் ஏற்பட்ட கசப்பு அவனை பம்பாய்க்கு மீண்டும் வரக் கூடாது என்ற முடிவை நோக்கிச் செலுத்தியது. ஆனால் இன்றோ மீண்டும் பம்பாய்க்கு சென்று கொண்டிருக்கிறான்.</p>
<p>ஒரு வேளை பாகவதர் அழைப்பை மறுத்திருந்தால்…</p>
<p>அது எப்படி முடியும்? அவரிடம் கொடுத்த வாக்கை மீற முடியுமா?</p>
<p>பதின்ம வயதில் நாயனா பிள்ளைக்கும், டைகருக்கும் வாசித்திருந்தாலும், கச்சேரி வாய்ப்புகள் அதிகம் கிட்டாமலே இருந்த காலத்தை மறக்கவா முடியும்? நாயனா பிள்ளை போன்ற லயசிம்மத்துடன் வாசித்ததைக் கேட்ட மற்ற பாடகர்கள், இந்த வாசிப்புக்கு நம்மால் தாளம் போட்டு நிர்வாகம் பண்ண முடியுமா என்ற பயந்தார்கள். போதாக் குறைக்கு இடது கைப் பழக்கம் வேறு. இசையை நம்பியே வாழ்க்கை நடத்துபவனுக்கு கச்சேரிகளே இல்லை என்றால் ஜீவனம் எப்படி நடக்கும்?</p>
<p>அந்தச் சமயத்தில் கொடி கட்டிப் பறந்த பாடகர்களுள் செம்பை முதன்மையானவர். அவருக்கு வழக்கமாய் பாலக்காடு மணி ஐயர்தான் வாசித்து வந்தார். மணி ஐயர் சிறுவனாக இருந்த போதே, அவரை தட்சிணாமூர்த்தி பிள்ளையுடன் இணைத்து வாசிக்க வைத்து, அவர் திறமையை உலகுக்கு எடுத்துக் காட்ட வழி செய்தவர் செம்பை. ஏதோ ஒரு காரணத்தினால் செம்பைக்கு மணி ஐயர் பெயரில் மனத்தாங்கல் ஏற்பட்டது.</p>
<p>அப்போது அவனைக் கூப்பிட்டார் செம்பை. “சுப்புடு! உன் கையில பேசாததே இல்லையாக்கும். இந்த வாசிப்பு எல்லாருக்கும் தெரியணும். அதுக்கு நான் வழி பண்றேன். அதுக்கு முன்னால நாம ஒரு ஒப்பந்தம் போட்டுக்கணும்.” என்று பீடிகை போட்டார் செம்பை.</p>
<p>“பெரியவர் தட்சிணாமூர்த்தி பிள்ளை உங்களுக்கு எவ்வளவோ சந்தோஷமா வாசிப்பார். அப்பேர்பட்ட பாட்டு உங்களோடது. நீங்க என் கிட்ட ஒப்பந்தமாப் போடணும்? கட்டளை போட்டா செய்ய மாட்டேனா?”</p>
<p>“அப்படின்னா நேக்கு ஒரு வாக்கு கொடு.”</p>
<p>“நீங்க என்ன சொன்னாலும் செய்யறேன்.”</p>
<p>“நான் எங்க கச்சேரிக்குக் கூப்பிட்டாலும் வரணும். கச்சேரிக்கு ரேட் நீ பேசக் கூடாது. நான் என்ன பேசிக் குடுக்கறேனோ ஒப்புக்கணும்.”</p>
<p>“இது என்னண்ணா பிரமாதம். கரும்பு தின்னக் கூலியா என்ன? உங்க பாட்டுக்கு சன்மானமே இல்லாம கூட வாசிப்பேனே.”</p>
<p>இந்த நிகழ்வுக்குப் பின் அவனுக்கு எக்கச்சக்க கச்சேரிகள். கோவில் கச்சேரி, கல்யாணக் கச்சேரி, சபா கச்சேரி என்று சதா செம்பை வைத்தியநாத பாகவதருடன் சுழன்று கொண்டே இருந்தான். இசை உலகும் அவனது வாசிப்பை கவனிக்கத் தொடங்கியது. மெது மெதுவாய் மற்ற பாடகர்களும் அவனை அழைக்க ஆரம்பித்தனர். செம்பை கச்சேரி இல்லாத சமயத்தில் மற்றவர்களுக்கும் அவன் வாசித்து வந்தான். அப்படி ஒரு சமயத்தில்தான் பம்பாயில் வேறொரு பாடகருடன் அந்தக் கசப்பான அனுபவம் ஏற்பட்டது.</p>
<p>அது நடந்த அடுத்த மாதம் செம்பை பம்பாய்க்கு வருமாறு அழைக்க, கொடுத்த வாக்கை மீற முடியாமல் ஒப்புக் கொள்ள நேர்ந்தது.</p>
<p>‘இவ்வளவு குமுறலை மனதுக்குள் அடக்கியபடி வாசித்தால் நன்றாகவா இருக்கும்? முழு மனதுடன் வாசிக்க முடியாத இடத்தில் நல்ல பேரை வாங்க முடியும்? நமக்கு எவ்வளவோ உபகாரம் செய்து வரும் செம்பை பாகவதரின் கச்சேரியிலா நான் அசிரத்தையாய் வாசிக்க முடியும்?’</p>
<p>எண்ண அலைகளின் சுழற்சியில் சிக்கித் தவித்தபடி ரயில் பயணத்தை எப்படியோ கடத்தினான் அவ்விளைஞன். பம்பாயில் ஜாகைக்குச் சென்றதும், “அண்ணா, எனக்குத் தலைவலியா இருக்கு. நான் கொஞ்சம் ஓய்வு எடுத்துக்கறேன்.” என்று கூட்டத்தினின்று நழுவி தன் அறைக்குள் தனிமையில் மூழ்கினான்.</p>
<p>அவன் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த வேளையில் செம்பையைச் சந்திக்க வந்த ரசிகர், “இன்னிக்குக் கச்சேரியில மிருதங்கம் யாரு?” என்றார்</p>
<p>“பழனி முத்தையா பிள்ளையோட பையன் சுப்புடுவாக்கும் மிருதங்கம். அவன் வாசிப்பை பம்பாய் முதன்முதலா கேட்கப் போறது” என்று கண் சிமிட்டினார் பாகவதர்.</p>
<p>“முதன்முதலாவா? போன மாசம்தானே அவர் இங்க வந்திருந்தார்? அப்ப நடந்த விவகாரத்தையெல்லாம் பார்த்தபோது இனிமே அவர் இங்க வரவேமாட்டார்னு நினைச்சேன்.”</p>
<p>“ஓ! நான் கேட்டப்போ இதுக்கு முன்னால பம்பாய் வந்ததில்லைனு சொன்னானே! என்னவாக்கும் நடந்தது? விவரமாய்ச் சொல்லும்.” என்று பாகவதர் பரபரக்க, நடந்ததையெல்லாம் விளக்கினார் ரசிகர்.</p>
<p>“அப்படியா சேதி. நீங்க இதெல்லாம் சொன்னது ரொம்ப நன்னாச்சு” என்று யோசனையில் ஆழ்ந்தார் பாகவதர்.</p>
<p>மாலையில் கச்சேரிக்காக மேடை ஏறும் வரை சுப்ரமணியத்திடம் பாகவதர் பேசவில்லை. அவர் ஏதும் கேட்டால் போலியாய் நடந்து கொள்ள வேண்டிய நிலை ஏற்படுமோ என்று பயந்தவனுக்கு, அவர் பேசாததே பெரிய ஆறுதலாய் இருந்தது.</p>
<p>கச்சேரி தொடங்குவதற்கு முன் அவனைப் பார்த்து ஒரு முறை மலர்ந்த புன்னகையை வீசிய பாகவதர், கண்களை மூடி குருவாயூரப்பனை வணங்கிவிட்டு ஸ்ருதியோடு இணைந்து கொண்டார். அவரது வெண்கலக் குரல் அரங்கை நிறைக்க, நல்ல விறுவிறுப்புடன் வர்ணத்தைத் தொடங்கினார்.</p>
<p>மேடையேறும்போது அவன் மனத்தில் இருந்த குழப்பம் எல்லாம் பாகவதர் பாட ஆரம்பித்ததும் பறந்தோடியது. நங்கூரம் பாய்ச்சியதுபோல் ஸ்திரமான தாளத்தைப் போடுவதைப் பார்க்கும்போதே அவனுக்கு வாசிக்க வேண்டும் என்ற ஆவல் பெருகியது. முக்தாய் ஸ்வரம் முடிந்தபோதே அரங்கில் இருப்பவர்கள் எல்லாம் ஆரவாரிக்க, மேடையிலிருந்தோர் எல்லாரும் கச்சேரி களை கட்டிவிட்டதை உணர்ந்தனர்.</p>
<p>வர்ணத்துக்குப் பின், ‘வாதாபி கணபதிம்’ பாடி, ‘ப்ரணவ ஸ்வரூப வக்ர துண்டம்’ என்ற இடத்தில் நிரவல் செய்தார் பாகவதர். தார ஸ்தாயியில் ஷட்ஜம், ரிஷபம், காந்தாரம் என்று ஒவ்வொரு ஸ்வரத்திலும் கார்வை கொடுத்து பாகவதர் நிற்கும் வேளையில், அவன் மிருதங்கத்திலிருந்து புறப்பட்ட சாப்புகளும், குமுக்கிகளும் எண்ணற்ற ஆஹாகாரங்களைப் சம்பாதித்தன. கீழ் கால ஸ்வரங்களுக்குத் தென்றலாய் வருடிய மிருதங்கம், பாகவதரின் விசேஷமான ‘கத்திரி ஸ்வரங்களின்’ போது கோடை இடியாய் முழங்கியது.</p>
<p>கச்சேரி ஆரம்பித்த அரை மணிக்குள் ரசிகர்கள் மனது நிறைந்து விட, பாகவதர் அவனைப் பார்த்து, “தனி வாசிச்சுடு” என்றார்.</p>
<p>“தனியா? நான் ஏதும் தப்புப் பண்ணிட்டேனா? எதானாலும் நேரடியாச் சொல்லுங்க.”</p>
<p>“ஏய்! தப்பொண்ணும் இல்லையாக்கும். நீ கிருதிக்கு வாசிச்சதை எப்படி ரசிச்சாப் பார்த்தியோ? எனக்கே பாடறதை நிறுத்திட்டு கொஞ்சம்கூடக் கேட்டாத் தேவலைன்னு தோணித்து. சீக்கிரம் வாசி.” என்று உற்சாகப்படுத்தினார்.</p>
<p>அவன் மகிழ்ச்சியெல்லாம் வாசிப்பில் வெளிப்படத் தொடங்கியது. இரண்டு ஆவர்த்தம் வாசித்ததும் பாகவதர் ரயிலில் சொன்னது நினைவுக்கு வந்தது. தன் மனத்துக்கு சரி என்று தோன்றாதபோதும், இவரது பெருந்தன்மைக்கு வேண்டியாவது விவகாரமில்லாமல் சர்வலகுவாய் இன்று நிறைய வாசிக்க வேண்டும் என்று முடிவெடுத்தான். ஸ்ருதியொடு இழைந்தபடி அவன் உதிர்த்த சாப்புகளும், மீட்டுச் சொற்களும் ரசிகர்களை களிப்பில் ஆழ்த்தின. புறா குமுறுவது போன்ற குமுக்கிகள் அவன் மிருதங்கத்தின் தொப்பியில் இருந்து எழுந்தபோது சௌடையா தன்னை மறந்த நிலையில் ஆஹாகாரம் செய்தார். ஐந்து நிமிடங்கள் சர்வ சௌக்யமாய் வாசித்துவிட்டு தனியை முடிக்கப் போகும் வேளையில், “சுப்புடு! அந்தக் கண்ட நடையைக் கொஞ்சம் பிரஸ்தாபம் பண்ணேன்” என்றார்.</p>
<p>பாகவதரை இன்னும் வாசிக்கச் சொல்லிக் கேட்கிறார் என்றதும் கூட்டமும் அந்த இளைஞனை உற்சாகப்படுத்துவதில் முனைந்தது. கதி பேதம் செய்து கண்ட நடைக்குத் தாவி, கண்டத்தின் ஐந்தை ஐந்தாகவே காட்டாமல் வெவ்வேறு அழகிய கோவைகளை அவன் உருவாக்கியபோது பாகவதர் முகத்தில் பெருமிதம் ததும்பியது. அதன்பின் சதுஸ்ரத்துக்குத் தாவி மின்னல் வேகஃபரன்கள் வாசித்து, மோரா கோர்வை வாசித்து தனியை நிறைவு செய்யும்போது அரை மணிக்கு மேல் தனி வாசித்திருந்தான் அவ்விளைஞன். அன்று அவனுக்குக் கிடைத்த கைத்தட்டல் போல் அவன் அதுவரை கண்டதில்லை.</p>
<p>“என்னமா வாசிச்சான் பார்த்தேளா? தனி ஆவர்த்தனம் வாசிச்சா நிறைய இடத்துல எழுந்து போறா. நீங்களாக்கும் உண்மையான ரசிகாள். இப்பவே இன்னொரு தனி கொடுத்தாக் கூட உட்கார்ந்து கேட்பேளோல்லியோ?” என்று ரசிகர்களைப் பார்த்து கேட்டார் பாகவதர். பாகவதர் தென்னகத்தில் உள்ள ரசிகர்களைக் காட்டிலும் நம்மை உயர்ந்தவர் என்று கூறிவிட்டதை எண்ணி புளகாங்கிதம் அடைந்த பம்பாய் ரசிகர்கள், அந்தக் கச்சேரியில் இனி எத்தனை தனி வாசித்தாலும் அலுக்காமல் கேட்டிருப்பார்கள்.</p>
<p>இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, இரண்டு பாடலுக்கு ஒரு முறை அவனை தனி வாசிக்கச் சொல்லிக் கொண்டே வந்தார் பாகவதர். ரூபகம், கண்ட சாபு, மிஸ்ர சாபு என்று வெவ்வேறு தாளங்களில் தன் திறமையை காட்டிக் கொண்டே வந்தான் அவ்விளைஞன். நேரம் செல்லச் செல்ல சபையின் மொத்த கவனமும் மிருதங்க வித்வானின் மேலேயே தங்கியது. பாட்டுக்கு மிருதங்கம் என்பது போய், மிருதங்கம் பரிமளிக்க வேண்டி பாகவதர் பாடுவது போன்ற தோற்றம் ஏற்பட்டது.</p>
<p>கணக்குகளை அவ்வப்போது காட்டி, சௌக்கியத்தைப் பிரதானமாக்கிக் கொண்டு வாசிக்கும்போதுதான் பாகவதர் ரயிலில் கூறிய விஷயத்தில் பொதிந்திருந்த உண்மை அவனுக்கு விளங்க ஆரம்பித்தது. உண்மையான லய வேலைப்பாடு விரலை ஒடிக்கும் கணக்குகளில் இல்லை, மிகவும் சௌக்யமாய் வாசித்தபோதும் லய விவகாரங்களை நுணுக்கமாய்ச் செய்ய முடியும் என்பதை அவன் உணர ஆரம்பித்தான்.</p>
<p>இறுதியாகத் திருப்புகழ் பாடியபோது, அரங்கில் இருந்த ரசிகர்கள் ஒருமித்த குரலாய் “இன்னொரு தனி” என்று முழங்கினர். அவர்களுக்கிணங்கி ஐந்தாவது முறையாகத் தனி வாசிக்கச் சொன்னார் பாகவதர். கரணம் தப்பினால் மரணம் என்ற வகையிலான சந்த தாளத்தில் சுப்ரமணியம் வாசிக்க, இம்மி பிசகாமல் தாளம் போட்டு உற்சாகப் படுத்திக் கொண்டே வந்தார் பாகவதர். ஒவ்வொரு முறையும் இடத்தில் சரியாக வந்து சேரும்போதும் அரங்கில் ஆரவாரம் அதிகரித்துக் கொண்டே போனது. இறுதியாய் கோர்வை வைத்து முடித்தபோது, “வேற தெரிஞ்ச தாளத்தோட கோர்வையை முன்ன பின்ன தள்ளி எடுத்து இடத்துக்குக் கொண்டு வரலையாக்கும். இந்தத் தாளத்துக்கான பிரத்யேகமான கோர்வையை வாசிச்சான். வாசிப்புல சத்தியம்னா இதுதானே?” என்று பாகவதர் புகழ் மாலை சூட்ட கச்சேரி இனிதே முடிந்தது.</p>
<p>“இதுவரை எத்தனை தனி ஆவர்த்தனத்தின்போது எழுந்து போயிருப்போம். அதனால் எவ்வளவு நஷ்டம் என்று இன்றுதான் புரிகிறது.” என்று சிலர் மனம் வருந்தினர். “தா தீ தொம் நம் மட்டுமே ஒழுங்காக வாசிக்க வராதபோது, நாம் எப்படி இந்த வாசிப்பெல்லாம் வாசிப்பது” என்று சிலர் கலங்கினர். சபையின் காரியதரிசி, “நாளன்னிக்கு கச்சேரிக்குள்ள வேற பேனருக்கு ஏற்பாடு செய்யணும். செம்பை வைத்தியநாத பாகவதர், சௌடையா &#8211; பார்ட்டி என்றிருக்கும் பேனரில், மிருதங்கம் வாசித்த இளைஞனின் பெயரையும் நிச்சயம் சேர்க்க வேண்டும்” என்று நினைத்துக் கொண்டார். “Grand Mridangam Conert” என்று அடுத்த நாள் தினசரி ஒன்று அவன் புகழ் பாடியது.</p>
<p>இளமை முதல் பல துயரங்களைக் கண்ட அவனுக்கு அதன்பின் உயரங்கள் மட்டுமே காத்திருந்தன.</p>
<p>அந்த இளைஞன்தான், சுப்புடு என்றும், பழனி என்றும், பிள்ளைவாள் என்றும் பலரால் அழைக்கப்பட்ட மிருதங்க வித்வான் பழனி சுப்ரமணிய பிள்ளை.</p>
<p>********************************************************************************************************</p>
<p>நன்றி: <a href="http://solvanam.com/">http://solvanam.com/</a></p>
<p><em>நூலை இணையத்தில் இங்கு வாங்கலாம்: <a href="http://udumalai.com/?prd=thuruva%20natchatram&amp;page=products&amp;id=10381">http://udumalai.com/?prd=thuruva%20natchatram&amp;page=products&amp;id=10381</a></em></p>
<p>&nbsp;</p>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/carnaticmusicreview.wordpress.com/548/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/carnaticmusicreview.wordpress.com/548/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/carnaticmusicreview.wordpress.com/548/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/carnaticmusicreview.wordpress.com/548/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/carnaticmusicreview.wordpress.com/548/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/carnaticmusicreview.wordpress.com/548/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/carnaticmusicreview.wordpress.com/548/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/carnaticmusicreview.wordpress.com/548/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/carnaticmusicreview.wordpress.com/548/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/carnaticmusicreview.wordpress.com/548/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/carnaticmusicreview.wordpress.com/548/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/carnaticmusicreview.wordpress.com/548/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/carnaticmusicreview.wordpress.com/548/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/carnaticmusicreview.wordpress.com/548/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=carnaticmusicreview.wordpress.com&amp;blog=5911820&amp;post=548&amp;subd=carnaticmusicreview&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://carnaticmusicreview.wordpress.com/2011/12/15/thani-avartana/feed/</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/29b774b2f86e81e92d15835a8955a5f8?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">Lalitharam</media:title>
		</media:content>

		<media:content url="http://solvanam.com/wp-content/uploads/2011/12/p_s_p-681x1023.jpg" medium="image" />
	</item>
		<item>
		<title>துருவ நட்சத்திரம்</title>
		<link>http://carnaticmusicreview.wordpress.com/2011/12/08/dhruva-nakshatram/</link>
		<comments>http://carnaticmusicreview.wordpress.com/2011/12/08/dhruva-nakshatram/#comments</comments>
		<pubDate>Thu, 08 Dec 2011 18:17:23 +0000</pubDate>
		<dc:creator>Lalitharam</dc:creator>
				<category><![CDATA[அறிவிப்பு]]></category>
		<category><![CDATA[மிருதங்கம்]]></category>
		<category><![CDATA[வரலாறு]]></category>
		<category><![CDATA[percussion instruments]]></category>
		<category><![CDATA[personality]]></category>
		<category><![CDATA[book release]]></category>
		<category><![CDATA[invite]]></category>
		<category><![CDATA[mridangam]]></category>
		<category><![CDATA[palani subramaniam pillai]]></category>
		<category><![CDATA[shruva nakshatram]]></category>
		<category><![CDATA[solvanam]]></category>

		<guid isPermaLink="false">http://carnaticmusicreview.wordpress.com/?p=542</guid>
		<description><![CDATA[கடந்த சில மாதங்களாகவே இங்கு எதுவும் எழுதவில்லை. அதற்கு முக்கிய காரணம் நான் எழுதிக் கொண்டிருந்த நூல். ஸ்ருதி பத்திரிகையின் பழைய இதழ்களைப் படிப்பது எனக்குப் மிகவும் பிடித்த பொழுது போக்கு.  ஒரு முறை 1987-ல் வந்த ஸ்ருதி இதழ்களைப் புரட்டிக் கொண்டிருந்த போது, மிருதங்க வித்வான் தஞ்சாவூர் உபேந்திரன் எழுதியிருந்த கடிதம் கண்ணில் பட்டது.   “இடது கைப்பழக்கம் உள்ள ஒவ்வொரு மிருதங்க வித்வானும், ஒவ்வொரு வேளை சாப்பிடும் போது பழனி சுப்ரமணிய பிள்ளையை நன்றியுடன் [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=carnaticmusicreview.wordpress.com&amp;blog=5911820&amp;post=542&amp;subd=carnaticmusicreview&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div>கடந்த சில மாதங்களாகவே இங்கு எதுவும் எழுதவில்லை. அதற்கு முக்கிய காரணம் நான் எழுதிக் கொண்டிருந்த நூல்.</div>
<div></div>
<div>ஸ்ருதி பத்திரிகையின் பழைய இதழ்களைப் படிப்பது எனக்குப் மிகவும் பிடித்த பொழுது போக்கு.  ஒரு முறை 1987-ல் வந்த ஸ்ருதி இதழ்களைப் புரட்டிக் கொண்டிருந்த போது, மிருதங்க வித்வான் தஞ்சாவூர் உபேந்திரன் எழுதியிருந்த கடிதம் கண்ணில் பட்டது.   “இடது கைப்பழக்கம் உள்ள ஒவ்வொரு மிருதங்க வித்வானும், ஒவ்வொரு வேளை சாப்பிடும் போது பழனி சுப்ரமணிய பிள்ளையை நன்றியுடன் நினைத்துக் கொள்ள வேண்டும்&#8221; என்று அவர் எழுதியிருந்தது மனதில் ஆழமாகப் பதிந்தது.  அன்று விழுந்த முதல் விதை, காலப் போக்கில் பழனி சுப்ரமணிய பிள்ளையின் வாசிப்பைக் கேட்கக் கேட்க விருட்சமாய் வளர்ந்தது.</div>
<div></div>
<div>இந்த நூலை எழுத ஆரம்பிக்கும் போது, இதை யாருக்காக எழுதுகிறேன் என்ற கேள்வி எழுந்தது.  கர்நாடக இசையில் தேர்ச்சி உடையவர்களுக்காகவா? அல்லது பரிச்சயம் மட்டும் உள்ளவர்களுக்காகவா? அல்லது பரிச்சயமே இல்லாமல், பழனி சுப்ரமணிய பிள்ளையின் பெயரைக் கேள்வியே பட்டிருக்காதவர்களுக்காகவா? இந்தக் கேள்விக்கு பதில் காண்பது சுலபமாக அமையவில்லை.  ஒருவருக்காக எழுதி மற்றவரை விடுவதற்கு மனம் ஒப்பவில்லை.  எல்லோருக்குமாக எழுதுவது என்பதோ இயலாத காரியம் என்ற போதும் அதைச் செய்யவே விரும்பினேன்.  இதன் விளைவாக இந் நூலின் வெவ்வேறு பகுதிகள் வெவ்வேறு விதங்களில் அமைந்திருக்கின்றன.  குறிப்பாக, பழனி சுப்ரமணிய பிள்ளையின் வாசிப்பை நன்கு உணர்ந்தவருக்கு, கற்பனையாய்க் காட்சி விரித்து கதை போல எழுதப்பட்டிருக்கும் பகுதிகள் எரிச்சலூட்டக் கூடும்.   “என்னவோ நேரில் இருந்து பார்த்தா மாதிரி எழுதியிருக்கான்&#8221; என்று இளக்காரப் பார்வை வீசக் கூடும் என்பதை நன்கு உணர்ந்திருக்கிறேன்.  இந்த நூலில் கற்பனைகளைக் கலந்து நான் எழுதியிருக்கும் பகுதிகளில் பெரும்பாலானவை சொல்வனம் இணைய இதழில் தனிக் கட்டுரைகளாக வெளியாகியுள்ளவை.  அவை வெளியான போது பெற்ற வரவேற்பே என்னை அந்தப் பகுதிகளை மாற்றாமலேயே புத்தகத்தில் சேர்த்துக்கொள்ளத் தூண்டின.</div>
<div></div>
<div><a href="http://carnaticmusicreview.files.wordpress.com/2011/12/last-and-final-cover.jpg"><img class="aligncenter size-medium wp-image-543" title="Book Cover" src="http://carnaticmusicreview.files.wordpress.com/2011/12/last-and-final-cover.jpg?w=300&#038;h=217" alt="துருவ நட்சத்திரம்" width="300" height="217" /></a></div>
<div></div>
<div>பழனி சுப்ரமணிய பிள்ளையின் பங்களிப்பை முழுமையாக உணர அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையும் வாசிப்பும் மட்டும் போதாது, அவர் வாசித்த வாத்யம்; அதன் வரலாறு; அவருக்கு முன்னால் இருந்த நிலை; அவர் வாசிப்பை பாதித்தவர்கள்; அவர் சம காலத்தினர் ஆகியவற்றை வைத்துப் பார்க்கும் போதுதான் முழுமையான பார்வை கிடைக்கும்.  இவற்றை எல்லாம் இந்த நூல் முழுமையாகப் பதிவு செய்திருக்கிறது என்று சொல்ல முடியாது.  மேலே குறிப்பிட்ட அனைத்திலும் ஒரு பறவைப் பார்வையை அளிக்கவே முயன்றிருக்கிறேன்.</div>
<div></div>
<div>இந்த நூலுக்கான அடித்தளமாக, பழனியுடன் நேரில் பழகியர்களின் நேர்காணல்களே அமைந்துள்ளன.  நேர்காணல்களை என்னால் இயன்றவரை நானே எடுத்தேன் என்றாலும் கணிசமான நேர்காணல்களை ஏற்கெனவே கே.எஸ்.காளிதாஸ் எடுத்து வைத்திருந்தார்.  அவர் பேட்டி கண்டிருந்தவர்களுள் பெரும்பாலானவர்கள், நான் தகவல் சேகரிக்க ஆரம்பிக்கும் போது உயிருடன் இல்லாதவர்கள்.  காளிதாஸ் சிறந்த மிருதங்க வித்வான் மட்டுமன்றி தெளிவாகவும் சுவையாகவும் எழுதக் கூடியவர்.  நினைத்திருந்தால், பழனியைப் பற்றிய நூலை என்னை விட சிறப்பாக அவர் எழுதியிருக்க முடியும்.  ஆனால், ஏனோ என் மூலமாகத்தான் இந்த நூல் வெளிவர வேண்டும் என்பதில் என்னை விட அதிக ஆர்வமாக இருந்தார்.  சில வாரங்களுக்கு ஒரு முறை தொலைபேசி மூலமும், நேரில் சந்திக்கும் போதும் தூண்டிக் கொண்டே இருந்தார்.  அவரது வழிகாட்டலும் தூண்டுதலும் இல்லாமல் இந்த நூலை எழுதியிருக்க முடியாது என்பதில் சந்தேகமே இல்லை.</div>
<div></div>
<div>காளிதாஸ் கொடுத்த தகவல்களை மட்டும் வைத்து இந்த நூலை எழுதியிருந்தாலும் இப்போதுள்ள நூலிலுள்ள வடிவத்திலிருந்து அது அதிகம் வேறுபட்டிருக்காது.  இருப்பினும், எனக்குத் தெரிந்த அத்தனை வழிகளிலும், சுமார் நான்கு ஆண்டுகள் தகவல்களைச் சேகரித்த பின்னரே இந்த நூலை எழுதியுள்ளேன்.  கருத்திலோ, தகவல்களிலோ பிழை வராமலிருக்க முடிந்த வரை முயன்றுள்ளேன்.  இதையும் மீறி தகவல் பிழைகளோ, கருத்து முரண்களோ இருப்பின், வாசகர்கள் தயங்காமல் தெரிவிப்பார்களானால் அடுத்த பதிப்புகளில் திருத்திக்கொள்ள ஏதுவாக இருக்கும்.</div>
<div></div>
<div>இந்நூல் மலரக் காரணமானோர் பலர். என் தம்பியின் மிருதங்க ஆசானாய் அறிமுகமாகி, எங்கள் குடும்பத்தில் ஒருவராகவே ஆகிவிட்டவர் திரு. திருவையாறு பாலசுப்ரமணியம். லயம் என்றால் என்னவென்றே அறியாத நிலையில் மிருதங்க வாசிப்பின் அடிப்படைகளையும், கச்சேரியில் கேட்டு ரசிக்க வேண்டிய அம்சங்களையும் இவரிடம்தான் அறிந்து கொண்டேன்.</div>
<div></div>
<div>1962-ல் மறைந்து விட்ட பழனியை இன்றளவும் கேட்டு ரசிக்கக் காரணமாக இருப்பவை கச்சேரி ஒலிப்பதிவுகள். அவற்றை அரும்பாடுபட்டு சேர்த்திருப்பினும், எந்தப் பிரதிபலனும் எதிர்பார்க்காமல் என்னிடம் பகிர்ந்து கொண்ட திரு.நாராயணசாமி, திரு.சிவராமகிருஷ்ணன், திரு.லக்ஷ்மி நரசிம்மன், திரு.கிருஷ்ண பிரசாத் ஆகியோரிடம்பட்டுள்ள கடனை இந்த ஜென்மத்தில் அடைக்க முடியாது.</div>
<div></div>
<div>நூலை எழுதும் போது பல சமயங்களின் எப்படி மேலே கொண்டு செல்வது என்ற குழப்பங்கள் ஏற்பட்டன. அத்தகைய சமயங்களில் எல்லாம் ‘தினமணி’ சிவகுமாரிடம் உரையாடித் தெளிவடைந்துள்ளேன். இந்த நூலுக்கு வேராய் பத்திரிகை செய்திகளும், நேர்காணல்களுமே அமைந்துள்ளன. பழைய பத்திரிகைக் களஞ்சியங்களில் தேட, ரோஜா முத்தையா ஆய்வு நூலகத்தினர் அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்தனர்.</div>
<div></div>
<div>இந்த நூலுக்காக திரு. திருச்சி சங்கரனை நேர்காணல் எடுத்த போது, டிசம்பர் சீஸன் களேபரத்துக்கு இடையிலும் இரண்டு முறை நேரம் ஒதுக்கி, தன் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். புதுக்கோட்டை லய பரம்பரையின் முதன்மைக் கலைஞர்களுள் ஒருவரான திரு.சங்கரனுக்கு ‘சங்கீத கலாநிதி’ விருது கிடைத்துள்ள வேளையில் என் புத்தகம் வெளிவருவதை எண்ணி மகிழ்கிறேன்.</div>
<div></div>
<div>முனைவர் பி.எம்.சுந்தரத்தின் ஆய்வுகள் நான் ஆதர்சமாகக் கருதுபவை. ஒரு முறை நேரிலும் பல முறை தொலைபேசியிலும், கலைஞர்கள் பற்றியும், சென்ற நூற்றாண்டின் சங்கீத உலக நிகழ்வுகள் பற்றியும் எனக்கெழுந்த சந்தேகங்களை பொறுமையாகப் போக்கினார். பழனி என்ற அற்புத மனிதரைக் கண்முன் கொண்டு வந்து நிறுத்தியவர் திரு.ஜெ.வெங்கடராமன், பழனியைப் பற்றிய நினைவுகளை அவர் கண்ணீர் மல்க பகிர்ந்து கொண்டது என்னுள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. பழனி என்ற கலைஞன் காலம் கடந்து நிற்பதை உணரும் வகையில் பழனிக்கு அடுத்த தலைமுறை வித்வானான மதுரை டி. சீனிவாஸனும், அதற்கு அடுத்த தலைமுறை வித்வான் அருண்பிரகாஷும் பேசினர். பாலக்காடு மணி ஐயரின் மகன் திரு. ராஜாராம் கூறிய தகவல்கள் மணி ஐயர் &#8211; பழனி உறவைப் புரிந்து கொள்ள ஏதுவாய் அமைந்தன.</div>
<div></div>
<div>நூலின் சில பகுதிகளை, எல்லோரும் படிக்கும் விதமாய் இருக்க வேண்டும் என்பதற்காக, கொஞ்சம் கற்பனை கலந்து கதை போல எழுதய போதும், கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. அப்படி எழுதிய பகுதிகளுள் ஒன்றான மான்பூண்டியா பிள்ளையின் கதையைப் பாராட்டி எழுத்தாளர் ஜெயமோகனும், எழுத்தாளர் விமலாதித்த மாமல்லனும் வெளியிட்ட குறிப்புகள் எனக்குத் துணிச்சலை அளித்தன.</div>
<div></div>
<div>இதுவரை சொல்வனம் பதிப்பகம் வெளியிட்டு இருக்கும் இரு புத்தகங்களும் பொக்கிஷங்கள். மூன்றாவதாய் என் புத்தகம் வெளி வருவதில் எனக்குப் பெருமகிழ்ச்சி. நூலை நேர்த்தியாய் வடிவமைத்த திரு.மணிகண்டனும், அவசரம் என்ற போதும் நூலைத் தரமாக அச்சடித்துக் கொடுத்த நண்பர் ஜெயராமனும் ஆபத்பாந்தவர்கள்.</div>
<div></div>
<div>நான் முறையாகத் தமிழ் பயின்றவன் அல்லன். என் எழுத்தை செம்மைப்படுத்தியதில் பெரும் பங்கு திரு. ஹரிகிருஷ்ணனையே சேரும். என் தாயார் ஆர்.விஜயலட்சுமி, தந்தையார் ஆர்.மகாதேவன், என் தம்பி டி.எம்.சாய்ராம், நண்பர்கள் ஷீலா ராமன், முரளி, அருண் நரசிம்மன், ராமச்சந்திர ஷர்மா, சிந்துஜா, திரு.பாரதி மணி, ஷங்கர் இராமநாதன் ஆகியோர் பல்வேறு அத்தியாயங்களைப் படித்துக் குறை, நிறைகளைச் சுட்டினர்.</div>
<div></div>
<div>தகவல் சேகரிக்க வேண்டி பல பயணங்களை மேற்கொண்ட போதும், எழுதுகிறேன் என்ற பெயரில் பல மாதங்கள் கழித்த போதும், “என்னைக் கவலைகள் தின்னத் தகாமல்” பார்த்துக்கொண்டவர் என் மனைவி ஆர்.கிருத்திகா.</div>
<div></div>
<div>அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.</div>
<div></div>
<div><a href="http://carnaticmusicreview.files.wordpress.com/2011/12/palani-book-release-invite.jpg"><img class="aligncenter size-full wp-image-544" title="PALANI BOOK RELEASE INVITE" src="http://carnaticmusicreview.files.wordpress.com/2011/12/palani-book-release-invite.jpg?w=500&#038;h=713" alt="" width="500" height="713" /></a></div>
<div></div>
<div>டிசம்பர் 11-ம் தேதி அன்று இந்த நூல் சென்னை ராக சுதா அரங்கில் (மயிலாப்பூர், நாகேஸ்வரன் பூங்கா அருகில்) காலை 9.00 மணிக்கு வெளியாகிறது. வாசகர்கள் அனைவரையும் இந்நிகழ்வுக்குப் பணிவுடன் வரவேற்கிறேன்.</div>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/carnaticmusicreview.wordpress.com/542/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/carnaticmusicreview.wordpress.com/542/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/carnaticmusicreview.wordpress.com/542/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/carnaticmusicreview.wordpress.com/542/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/carnaticmusicreview.wordpress.com/542/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/carnaticmusicreview.wordpress.com/542/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/carnaticmusicreview.wordpress.com/542/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/carnaticmusicreview.wordpress.com/542/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/carnaticmusicreview.wordpress.com/542/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/carnaticmusicreview.wordpress.com/542/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/carnaticmusicreview.wordpress.com/542/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/carnaticmusicreview.wordpress.com/542/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/carnaticmusicreview.wordpress.com/542/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/carnaticmusicreview.wordpress.com/542/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=carnaticmusicreview.wordpress.com&amp;blog=5911820&amp;post=542&amp;subd=carnaticmusicreview&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://carnaticmusicreview.wordpress.com/2011/12/08/dhruva-nakshatram/feed/</wfw:commentRss>
		<slash:comments>8</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/29b774b2f86e81e92d15835a8955a5f8?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">Lalitharam</media:title>
		</media:content>

		<media:content url="http://carnaticmusicreview.files.wordpress.com/2011/12/last-and-final-cover.jpg?w=300" medium="image">
			<media:title type="html">Book Cover</media:title>
		</media:content>

		<media:content url="http://carnaticmusicreview.files.wordpress.com/2011/12/palani-book-release-invite.jpg" medium="image">
			<media:title type="html">PALANI BOOK RELEASE INVITE</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>பழனி முத்தையா பிள்ளை</title>
		<link>http://carnaticmusicreview.wordpress.com/2011/02/26/palani-muthiah-pillai/</link>
		<comments>http://carnaticmusicreview.wordpress.com/2011/02/26/palani-muthiah-pillai/#comments</comments>
		<pubDate>Sat, 26 Feb 2011 15:33:20 +0000</pubDate>
		<dc:creator>Lalitharam</dc:creator>
				<category><![CDATA[percussion instruments]]></category>
		<category><![CDATA[personality]]></category>
		<category><![CDATA[legend]]></category>
		<category><![CDATA[manpoondia pillai]]></category>
		<category><![CDATA[mridangam]]></category>
		<category><![CDATA[palani muthiah pillai]]></category>
		<category><![CDATA[pudukottai school]]></category>

		<guid isPermaLink="false">http://carnaticmusicreview.wordpress.com/?p=530</guid>
		<description><![CDATA[புதுக்கோட்டை லய பரம்பரையை உயரங்களுக்கு இட்டுச் சென்றவர்கள் வரிசையில் முத்தையாப் பிள்ளைக்கும் ஒரு முக்கிய இடம் உண்டு. புதுக்கோட்டை வழியில் வந்தவர் என்ற போதும் இவர் பிறந்தது பழநியில். மிடற்றிசை பிரபலமாவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னிருந்தே இசையை பராமரித்தும் வளர்த்தும் வந்தவர்கள், நாதஸ்வரம் மற்றும் தவில் கலைஞர்களாக விளங்கிய இசை வேளாளர்கள்தான். அந்தப் பரம்பரையில் பெரியசெல்வன் என்பவரின் மூத்த மகனாக 1868-ல் முத்தையா பிள்ளை பிறந்தார். பரம்பரை கலையான தவில் வாசிப்பை கற்றதோடு இளம் வயதில் பழநி [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=carnaticmusicreview.wordpress.com&amp;blog=5911820&amp;post=530&amp;subd=carnaticmusicreview&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div>
<p>புதுக்கோட்டை லய பரம்பரையை உயரங்களுக்கு இட்டுச் சென்றவர்கள் வரிசையில் முத்தையாப் பிள்ளைக்கும் ஒரு முக்கிய இடம் உண்டு. புதுக்கோட்டை வழியில் வந்தவர் என்ற போதும் இவர் பிறந்தது பழநியில். மிடற்றிசை பிரபலமாவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னிருந்தே இசையை பராமரித்தும் வளர்த்தும் வந்தவர்கள், நாதஸ்வரம் மற்றும் தவில் கலைஞர்களாக விளங்கிய இசை வேளாளர்கள்தான். அந்தப் பரம்பரையில் பெரியசெல்வன் என்பவரின் மூத்த மகனாக 1868-ல் முத்தையா பிள்ளை பிறந்தார்.</p>
<p>பரம்பரை கலையான தவில் வாசிப்பை கற்றதோடு இளம் வயதில் பழநி (கடம்) கிருஷ்ணையரிடம் வாய்ப்பாட்டும் கற்றார் என்று பி.எம்.சுந்தரம் எழுதியுள்ளார். இள வயதில் வாத்தியத்தில் நல்ல தேர்ச்சியை அடைந்த போதும், அந்தத் துறையில் நிபுணராக வேண்டி புதுக்கோட்டை மான்பூண்டியா பிள்ளையிடம் குருகுலவாசம் மேற்கொண்டார். மான்பூண்டியா பிள்ளை கஞ்சிராவில் பெயர் பெற்றிருந்தார் என்ற போதும், அவருடைய குருநாதர் மாரியப்பத் தவில்காரரே, ஓரளவு தேர்ச்சி பெற்ற மாணவர்களை மேற்கொண்டு பயில மான்பூண்டியா பிள்ளையிடம் அனுப்பி வைப்பாராம்.</p>
<div id="attachment_11065"><img title="2-manpoondiya-pillai-and-muthiah-pillai" src="http://solvanam.com/wp-content/uploads/2010/10/2-manpoondiya-pillai-and-muthiah-pillai.jpg" alt="பழநி முத்தையா பிள்ளைவுடன் மான்மூண்டியா பிள்ளை" width="319" height="400" />மான்மூண்டியா பிள்ளையுடன் பழநி முத்தையா பிள்ளை&nbsp;</p>
</div>
<p>மான்பூண்டியா பிள்ளையின் சிஷ்யர்களுள், கச்சேரி வித்வானாக தட்சிணாமூர்த்தி பிள்ளைக்குப் பெரும் பெயர் இருந்த போதிலும், லய விவகாரங்களில் தேர்ச்சியைப் பொறுத்த மட்டில் முத்தையா பிள்ளையின் பெயர் சிறந்து விளங்கியது. “எந்த வித்வான் தலையால் போட்ட லய முடிச்சையும் முத்தையா பிள்ளை காலால் அவிழ்த்துவிடுவார். ஆனால் முத்தையா பிள்ளை காலால் போட்ட முடிச்சை தலையால் அவிழ்ப்பதே முடியாத காரியம்”, என்றொரு சொலவடை லய உலகில் இருந்து வந்ததாக எம்.என்.கந்தசாமி பிள்ளை கூறியுள்ளார்.</p>
<p>முத்தையா பிள்ளையின் குருகுலவாசத்தின் போது ஒரு நாள் புதுக்கோட்டையில் மதுரை பொன்னுசாமி நாயனக்காரரின் கச்சேரி ஏற்பாடாகியிருந்தது. அவருக்கு வழக்கமாய் வாசிக்கும் தவில்காரர் திடீரென்று வர முடியாமல் போனது. உடன் வாசிக்க ஆளில்லாமல் தவித்த போது முத்தையா பிள்ளையை போட்டுக் கொள்ளும்படி மான்பூண்டியா பிள்ளை சிபாரிசு செய்தார். ஓர் இளைஞர் தனக்கு ஈடுகொடுத்து வாசிக்க முடியுமா என்று முதலில் பொன்னுசாமி பிள்ளை தயங்கினாலும் அந்த யோசனைக்கு இசைந்தார். அன்று கச்சேரியில் முத்தையா பிள்ளையின் வாசிப்பைக் கேட்டதும், பொன்னுசாமி பிள்ளை பெரிதும் மகிழ்ந்து வாயாறப் பாராட்டினார். அதன் பின் பல கச்சேரிகளில் சேர்த்துக் கொண்டார்.</p>
<p>சிதம்பரம் வைத்தியநாத பிள்ளைக்கு என்றொரு நாகஸ்வர வித்வான் இருந்தார். அவரைப் பற்றி எழுதும் போது, “பல்லவிச் சுரங்கம் என்று போற்றிக் குறிப்பிடப்பட்டவர் இவர். இவருடைய பல்லவிகள், அமைப்பில் சிறியவையானாலும லய நுட்பம் மிகுந்தவை. வைத்தியநாத பிள்ளையின் மேளம் என்றால் பல்லவி இல்லாமலிருக்காது. அதிலே அடுக்கடுக்காக இடம் பெறும் கணக்கு வழக்குகளைச் சமாளிப்பதில், தவிற்கலைஞர்கள் சிரமப்படுவதைக் கண்டுகளிக்கவும் கூட்டம் வருவது சகஜம். இவரது பல்லவிகளின் அமைப்பு புரியும்படிதான் இருக்கும். ஆனால், அதை வாசிக்க முற்படுகையில், அவர் அமைத்துக் கொள்ளும் காலப்ரமாணம் மற்றவர்களுக்கு நிர்ணயப்படாமல், அப்பல்லவி சரியாக அமையாமல் போய்விடும்.”, என்கிறார் பி.எம்.சுந்தரம். “அந்தக் காலத்தில் பல்லவிகள் பல சமயம் கைக்கலப்பில் முடிந்து விடுவதுண்டு. வைத்தியநாத பிள்ளையின் கச்சேரிகள் போலீஸ் பந்தோபஸ்துடன் கூட நடந்திருக்கின்றன. அப்படிப் பட்டவருக்கு வாசிக்கத் தோதான் ஆள் என்றே முத்தையா பிள்ளையை அழைத்து வந்தனர்.”, என்று தா.சங்கரன் ஒரு நேர்காணலில் கூறியுள்ளார். மாயூரத்தில் வைத்தியநாத பிள்ளை மூன்று காலங்களில் வாசித்த மல்லாரியைப் பற்றியும், அன்று அவருக்கு தவில் வாசித்தவர் முத்தையா பிள்ளை என்றும் பி.எம்.சுந்தரத்தின் ‘மங்கல இசை மன்னர்கள்’ நூலிலிருந்து தெரிய வருகிறது.</p>
<p>அன்றைய நாட்களில் பல்லவிகள் என்றால் அவை போட்டிகள்தான் என்பதை உணர்த்த பல குறிப்புகள் கிடைக்கின்றன. ஒருவர் வாசித்ததை மற்றவர் வாசிக்க முடியாவிட்டால், இனி அந்த வாத்யத்தை தொடுவதில்லை என்று சபதம் மேற்கொள்வது சாதாரணமாய் இருந்திருக்கிறது. ஒரு திருமண ஊர்வலத்தில் உறையூர் கோபால்ஸ்வாமி பிள்ளை நாகஸ்வரத்துக்கு முத்தையா பிள்ளை தவில் வாசித்தார். பாதி ஊர்வலம் நடக்கும் போது இருவருக்கும் சச்சரவு ஏற்பட்டு, “இனி தவிலை வாசிப்பதில்லை”, என்றொரு சபதத்தை முத்தையா பிள்ளை எடுத்தார்.</p>
<p>தட்சிணாமூர்த்தி பிள்ளை கடத்தைத் துறந்து மிருதங்கமும் கஞ்சிராவும் வாசித்தது போலவே முத்தையா பிள்ளையும் இவ்விரு வாத்தியங்களிலும் நிறைய கச்சேரிகள் செய்தார். தட்சிணாமூர்த்தி பிள்ளை கஞ்சிராவுடன் சேர்ந்து கோனேரிராஜபுரம் வைத்தியநாத ஐயர், காரைக்குடி வீணை சகோதரர்கள், பலல்டம் சஞ்சீவ ராவ் போன்ற முன்னணி வித்வான்களுக்கு மிருதங்கம் வாசித்துள்ளார் முத்தையா பிள்ளை.</p>
<p>நாயினாப் பிள்ளை, தன் மனதிற்குகந்த மிருதங்கக் கலைஞரான முத்தையா பிள்ளையையே பிற்காலத்தில் சம்பந்தி ஆக்கிக் கொண்டார். அவரது மகள் நீலாயதாக்ஷியை முத்தையா பிள்ளையின் மூத்த மகனான நாகேஸ்வரனுக்கு அளித்தார். முத்தையா பிள்ளையின் இரண்டாவது மகனே முழவிசையின் உயரங்களைத் தொட்ட பழநி சுப்ரமணிய பிள்ளை. பிற்காலத்தில் பழநியுடன் சேர்ந்து பல கச்சேரிகளில் முத்தையா பிள்ளை கஞ்சிரா வாசித்துள்ளார்.</p>
<p>முத்தையா பிள்ளைக்கு இரு மனைவியர். முதல் மனைவி சென்னிமலையைச் சேர்ந்த உண்ணாமுலையம்மாள். இவருக்குப் பிறந்தவர்கள்தான் நாகேஸ்வரனும், சுப்ரமணியமும். மற்றொரு மனைவி அஞ்சுகத்தமாள். இவர்தான் முதன் முதலில் ‘ராகம் தானம் பல்லவி’ பாடிய பெண்மணி என்கிறார் இசையாய்வாளர் பி.எம்.சுந்தரம். இவருக்குப் பிறந்த சௌந்திரபாண்டியனையே தன் வாரிசாகக் கருதினார் முத்தையா பிள்ளை.</p>
<p>முத்தையா பிள்ளையின் லய குறிப்புகள் ஒரு நோட்டுப் புத்தகத்தில் பதிவாகியிகியிருந்ததாகத் தெரிய வருகிறது. “அந்தப் புத்தகம் அவரது பிரிய மகன் சௌந்திரபாண்டியனுடன் இருந்தது. இதைப் பெற பழநி சுப்ரமணிய பிள்ளை எத்தனையோ முறை முயன்றும் பயனற்றுப் போனது.”, என்கிறார் பழநியின் சீடர் கே.எஸ்.காளிதாஸ். 1973-ல் சௌந்திரபாண்டியன் மியூசிக் அகாடெமியில் இந்த நோட்டுப் புத்தகத்தைப் பற்றி பேசியுள்ளார் என்று அகாடமியின் ஜர்னல் தெரிவிக்கிறது. திண்ணியம் வெங்கடராம ஐயர், “இந்த நோட்டுப் புத்தகத்தை பதிப்பிக்க வேண்டும்”, என்று சொல்லி இருப்பதைத் தவிர வேறொரு குறிப்பும் அந்த நிகழ்வைப் பற்றி கிடைக்கவில்லை.</p>
<p>பல வருடங்கள் தன் குருநாதருக்குத் துணையாக இருந்து வந்த முத்தையா பிள்ளையின் கடைசி ஆசை அநேகமாய் மான்பூண்டியா பிள்ளைக்கு சமாதி கோயில் எழுப்புவதாகத்தான் இருந்திருக்க வேண்டும். பழநி சுப்ரமணிய பிள்ளையின் பெரும் முயற்சியால் இந்தக் கோயில் 1945-ல் எழுப்பப்பட்டது. குடமுழுக்கை முன் நின்று நடத்திய முத்தையா பிள்ளை அதே ஆண்டே மறைந்தார்.</p>
</div>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/carnaticmusicreview.wordpress.com/530/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/carnaticmusicreview.wordpress.com/530/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/carnaticmusicreview.wordpress.com/530/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/carnaticmusicreview.wordpress.com/530/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/carnaticmusicreview.wordpress.com/530/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/carnaticmusicreview.wordpress.com/530/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/carnaticmusicreview.wordpress.com/530/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/carnaticmusicreview.wordpress.com/530/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/carnaticmusicreview.wordpress.com/530/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/carnaticmusicreview.wordpress.com/530/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/carnaticmusicreview.wordpress.com/530/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/carnaticmusicreview.wordpress.com/530/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/carnaticmusicreview.wordpress.com/530/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/carnaticmusicreview.wordpress.com/530/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=carnaticmusicreview.wordpress.com&amp;blog=5911820&amp;post=530&amp;subd=carnaticmusicreview&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://carnaticmusicreview.wordpress.com/2011/02/26/palani-muthiah-pillai/feed/</wfw:commentRss>
		<slash:comments>2</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/29b774b2f86e81e92d15835a8955a5f8?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">Lalitharam</media:title>
		</media:content>

		<media:content url="http://solvanam.com/wp-content/uploads/2010/10/2-manpoondiya-pillai-and-muthiah-pillai.jpg" medium="image">
			<media:title type="html">2-manpoondiya-pillai-and-muthiah-pillai</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>எஸ்.ராஜம் நினைவு தினம்</title>
		<link>http://carnaticmusicreview.wordpress.com/2011/02/08/rajam-remembrance-2011/</link>
		<comments>http://carnaticmusicreview.wordpress.com/2011/02/08/rajam-remembrance-2011/#comments</comments>
		<pubDate>Tue, 08 Feb 2011 06:46:04 +0000</pubDate>
		<dc:creator>Lalitharam</dc:creator>
				<category><![CDATA[அறிவிப்பு]]></category>
		<category><![CDATA[personality]]></category>
		<category><![CDATA[Documentary]]></category>
		<category><![CDATA[Remembrance]]></category>
		<category><![CDATA[S.Rajam]]></category>

		<guid isPermaLink="false">http://carnaticmusicreview.wordpress.com/?p=523</guid>
		<description><![CDATA[எஸ்.ராஜம் பற்றி இந்தத் தளத்திலேயே நிறைய எழுதியாகிவிட்டது. அவரிடம் நான் பாட்டோ ஓவியமோ கற்கவில்லை. இருப்பினும் என் குருநாதர் அவர்தான். அவர் பிறந்த நாளை ஒட்டி வரும் வார இறுதியான Feb 13 அன்று அவருடைய நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. ராஜத்தைப் பற்றி சங்கீத கலாநிதி வேதவல்லியும், ஓவியர் கேஷவும் பேசவுள்ளனர். இயக்குனர் எஸ்.பி.காந்தனோடு சேர்ந்து நான் உருவாக்கி வரும் எஸ்.ராஜம் பற்றிய ஆவணப் படத்திலிருந்து 25 நிமிட excerpts திரையிடப்பட உள்ளது. டி.வி.ராம்பிரசாதின் கச்சேரியும் [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=carnaticmusicreview.wordpress.com&amp;blog=5911820&amp;post=523&amp;subd=carnaticmusicreview&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p>எஸ்.ராஜம் பற்றி இந்தத் தளத்திலேயே நிறைய எழுதியாகிவிட்டது. அவரிடம் நான் பாட்டோ ஓவியமோ கற்கவில்லை. இருப்பினும் என் குருநாதர் அவர்தான்.</p>
<p>அவர் பிறந்த நாளை ஒட்டி வரும் வார இறுதியான Feb 13 அன்று அவருடைய நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. ராஜத்தைப் பற்றி சங்கீத கலாநிதி வேதவல்லியும், ஓவியர் கேஷவும் பேசவுள்ளனர். இயக்குனர் எஸ்.பி.காந்தனோடு சேர்ந்து நான் உருவாக்கி வரும் எஸ்.ராஜம் பற்றிய ஆவணப் படத்திலிருந்து 25 நிமிட excerpts திரையிடப்பட உள்ளது. டி.வி.ராம்பிரசாதின் கச்சேரியும் உள்ளது.</p>
<p>நிகழ்ச்சி விவரங்கள்:</p>
<p><a href="http://carnaticmusicreview.files.wordpress.com/2011/02/remembering-s-rajam-invite.png"><img class="aligncenter size-full wp-image-526" title="Remembering S Rajam - Invite" src="http://carnaticmusicreview.files.wordpress.com/2011/02/remembering-s-rajam-invite.png?w=500&#038;h=375" alt="" width="500" height="375" /></a></p>
<p>ஞாயிற்றுக் கிழமை என்பதால் நிறைய பேர் வருவீர்கள் என்று நம்புகிறேன்.</p>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/carnaticmusicreview.wordpress.com/523/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/carnaticmusicreview.wordpress.com/523/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/carnaticmusicreview.wordpress.com/523/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/carnaticmusicreview.wordpress.com/523/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/carnaticmusicreview.wordpress.com/523/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/carnaticmusicreview.wordpress.com/523/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/carnaticmusicreview.wordpress.com/523/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/carnaticmusicreview.wordpress.com/523/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/carnaticmusicreview.wordpress.com/523/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/carnaticmusicreview.wordpress.com/523/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/carnaticmusicreview.wordpress.com/523/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/carnaticmusicreview.wordpress.com/523/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/carnaticmusicreview.wordpress.com/523/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/carnaticmusicreview.wordpress.com/523/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=carnaticmusicreview.wordpress.com&amp;blog=5911820&amp;post=523&amp;subd=carnaticmusicreview&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://carnaticmusicreview.wordpress.com/2011/02/08/rajam-remembrance-2011/feed/</wfw:commentRss>
		<slash:comments>3</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/29b774b2f86e81e92d15835a8955a5f8?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">Lalitharam</media:title>
		</media:content>

		<media:content url="http://carnaticmusicreview.files.wordpress.com/2011/02/remembering-s-rajam-invite.png" medium="image">
			<media:title type="html">Remembering S Rajam - Invite</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>தட்சிணாமூர்த்தி பிள்ளை</title>
		<link>http://carnaticmusicreview.wordpress.com/2011/02/05/dakshinamurthi-pillai/</link>
		<comments>http://carnaticmusicreview.wordpress.com/2011/02/05/dakshinamurthi-pillai/#comments</comments>
		<pubDate>Sat, 05 Feb 2011 05:39:57 +0000</pubDate>
		<dc:creator>Lalitharam</dc:creator>
				<category><![CDATA[மிருதங்கம்]]></category>
		<category><![CDATA[வரலாறு]]></category>
		<category><![CDATA[percussion instruments]]></category>
		<category><![CDATA[personality]]></category>
		<category><![CDATA[Alathur Brothers]]></category>
		<category><![CDATA[Ariyakudi]]></category>
		<category><![CDATA[Chembai]]></category>
		<category><![CDATA[Dakshinamurthi Pillai]]></category>
		<category><![CDATA[Kanjira]]></category>
		<category><![CDATA[Karaikkudi Brothers]]></category>
		<category><![CDATA[manpoondia pillai]]></category>
		<category><![CDATA[mridangam]]></category>
		<category><![CDATA[Musiri]]></category>
		<category><![CDATA[Narayanasamiyappa]]></category>
		<category><![CDATA[Palghat Mani Iyer]]></category>

		<guid isPermaLink="false">http://carnaticmusicreview.wordpress.com/?p=518</guid>
		<description><![CDATA[இந்தக் கட்டுரைக்குத் துணையாக இருந்தவற்றைக் கட்டுரையின் முடிவில் பட்டியலிட்டுள்ளேன். இவை தவிர, தேடினாலும் கிடைக்காத இணைய ஆர்க்கைவ்களுக்குள்ளும் சில கட்டுரைகளோ, நான் உபயோகித்துள்ள கட்டுரைகளின் மொழி பெயர்ப்புகளோ பதுங்கி இருக்கலாம். அவற்றுக்கும் இந்தக் கட்டுரைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன். புதுக்கோட்டை தட்சிணாமூர்த்தி பிள்ளை சமாதி கோயிலில் ஆராதனை நடைபெற்றுக் கொண்டிருந்தது. வருடா வருடம் நடக்கும் நிகழ்வுக்கு முதன் முறையாய் சென்றிருந்தேன். மிருதங்கமும், கஞ்சிராவும் மாற்றி மாற்றி ஒலித்து சூழலை நாதமயமாக்கிக் கொண்டிருந்தன. [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=carnaticmusicreview.wordpress.com&amp;blog=5911820&amp;post=518&amp;subd=carnaticmusicreview&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div>
<blockquote><p>இந்தக் கட்டுரைக்குத் துணையாக இருந்தவற்றைக் கட்டுரையின் முடிவில் பட்டியலிட்டுள்ளேன். இவை தவிர, தேடினாலும் கிடைக்காத இணைய ஆர்க்கைவ்களுக்குள்ளும் சில கட்டுரைகளோ, நான் உபயோகித்துள்ள கட்டுரைகளின் மொழி பெயர்ப்புகளோ பதுங்கி இருக்கலாம். அவற்றுக்கும் இந்தக் கட்டுரைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.</p></blockquote>
<p><strong>பு</strong>துக்கோட்டை தட்சிணாமூர்த்தி பிள்ளை சமாதி கோயிலில் ஆராதனை நடைபெற்றுக் கொண்டிருந்தது. வருடா வருடம் நடக்கும் நிகழ்வுக்கு முதன் முறையாய் சென்றிருந்தேன். மிருதங்கமும், கஞ்சிராவும் மாற்றி மாற்றி ஒலித்து சூழலை நாதமயமாக்கிக் கொண்டிருந்தன. மனமெல்லாம் சில வருட காலமாய் அவரைப் பற்றி திரட்டிய தகவல்கள் அலைமோதிக் கொண்டிருந்தன.</p>
<div>
<div id="attachment_12683"><img title="dakshinamurthi-pillai-madam" src="http://solvanam.com/wp-content/uploads/2011/01/dakshinamurthi-pillai-madam.jpg" alt="தக்‌ஷிணாமூர்த்தி பிள்ளை மண்டபமும், முருகனும்" width="542" height="346" />&nbsp;</p>
<p><span style="text-decoration:underline;"><em><strong>தட்சிணாமூர்த்தி பிள்ளை சமாதி கோயில் முக மண்டபமும், முருகனும்</strong></em></span></p>
</div>
</div>
<p>கோயிலுக்கு வெளியில் இருந்து “ஆஹா! ஆஹா! என்ன அழகு! என்ன ருசி!” என்றொரு குரல் ஒலித்துக் கொண்டே இருந்தது. இசையை இவ்வளவு ரசிப்பவர் வெளியே நிற்கிறாரே என்று நினைத்துக் கொண்டேன். நேரம் ஆக ஆக, தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருந்த அந்தக் குரல் மனதை நெருட ஆரம்பித்தது. கோயிலில் பூஜை முடிந்து தீபாராதனை ஆன பின்னும் அந்தக் குரல் ஒலித்துக் கொண்டே இருந்தது. பொறுக்க முடியாமல் வெளியில் சென்ற போது, ஆங்கொரு பெரியவர் புதர்களிடையே அமர்ந்திருந்தார்.</p>
<p>வயது தொண்ணூறுக்கு மேல் இருக்கும். தலை சீரான கதியில் ஆடிக் கொண்டிருந்தது. கண்களில் இருந்து நீர் வழிந்து கொண்டிருந்தது. விரல்கள் தன்னிச்சையாய் தாளம் போட்டுக் கொண்டிருந்தன. சமாதி கோயிலுள் ஒலித்த தாளத்துக்கும் பெரியவரின் தாளத்துக்கும் சம்பந்தமே இல்லை. ஏனோதானோவென்றும் அவர் தாளம் போடவில்லை. அந்த விரல்கள் சீரான காலப்ரமாணத்தில் ஒரே தாளத்தை தெளிவாகப் போட்டன.</p>
<p>மெதுவாக அவரருகில் சென்று நின்று கொண்டேன். என்னை நிமிர்ந்து பார்த்தவர், “உங்களுக்கும் கேட்குதா?”, என்றார்.</p>
<p>எனக்கு அவர் குரலைத் தவிர வேறொன்றும் கேட்கவில்லை.</p>
<p>“தம்பி! என்னடா இவன் பைத்தியக்காரன்னுதானே பார்க்குறீங்க?”</p>
<p>எதுவும் சொல்ல என் நா எழவில்லை.</p>
<p>என் மனதில் ஓடியவற்றை தெளிவாய்ப் படித்தவர் போல, “எல்லாரும் கோயிலுக்குள்ள இருக்கும் போது இவன் மட்டும் புதர்ல உட்கார்ந்திருக்கானேன்னு நினைக்கறீங்க.”, என்றார்.</p>
<p>ஆச்சர்யத்தில் என் முகம் மாறியதைப் பார்த்து புன்னகைத்தவாறு, “இந்த இடம் இன்னிக்குத்தான் தம்பி புதராயிருக்கு. இங்கதான் எங்க ஐயா கட்டின கோயில் இருந்தது. சிற்ப வேலைபாடோட கருங்கல் மண்டபமும், ஸ்ரீ விமானமுமா, எவ்வளவு கம்பீரமா இருந்த கோயில் தெரியுமா? பக்கத்து கொட்டகையில தண்டபாணிய தரிசனம் பண்ணி இருப்பீங்களே? அவரு இந்தக் கோயில்லதான் இருந்தாரு. நான் இங்க வந்தாலே தட்சிணாமூர்த்தி பிள்ளை வாசிப்பு காதுல தானா வந்து விழும்.”</p>
<p><a rel="lightbox" href="http://solvanam.com/wp-content/uploads/2011/01/dandapani-temple-at-pudukottai-in-2011.jpg"><img title="dandapani-temple-at-pudukottai-in-2011" src="http://solvanam.com/wp-content/uploads/2011/01/dandapani-temple-at-pudukottai-in-2011.jpg" alt="dandapani-temple-at-pudukottai-in-2011" width="486" height="347" /></a></p>
<p>தட்சிணாமூர்த்தி பிள்ளையின் வாசிப்பு என்று அவர் சொன்னதும் என் மனது பரபரத்தது.</p>
<p>“அவர் வாசிப்பை நீங்க கேட்டிருக்கீங்களா?”</p>
<p>“நான் கேட்டுகிட்டு இருக்கேன்னு சொல்றேன். கேட்டிருக்கியான்னா என்ன அர்த்தம்?”</p>
<p>“அது இல்லையா, நேரில் அவர் கச்சேரில வாசிச்சதைக் கேட்டு இருக்கீங்களா?”</p>
<p>“எனக்கு நெனவு தெரியாத நாள்ல இருந்து கச்சேரிக்கு எங்கப்பா கூட்டிக்கிட்டுப் போக ஆரம்பிச்சுட்டாங்க. எனக்குப் பதினேழு வயசுலதான் தட்சிணாமூர்த்தி ஐயா சமாதி ஆனார். அது வரைக்கும் புதுக்கோட்டை, தஞ்சாவூர், கும்பகோணம், திருச்செந்தூர்-னு ஊர் ஊராப் போய் நானும் எங்கப்பாவும் அவர் வாசிப்பைக் கேட்டிருக்கோம்.”</p>
<p>“ஐயா! நான் ஒரு ரைட்டர். சில வருஷமாவே அவரைப் பத்தி தகவல் திரட்டறேன். உங்களுக்குத் தெரிஞ்சதை எல்லாம் எனக்கு சொன்னா ரொம்ப உதவியா இருக்கும்.”</p>
<p>“அவரைப் பத்தி சொல்ல என் ஒரு நாக்கு போதுமா தம்பி. ஆதி சேஷனுக்கு ஆயிரம் நாக்காமே. அவரு வேணா சொல்லலாம்.”</p>
<p>“தட்டிக் கழிக்காம, நிச்சயம் உங்களுக்கு தெரிஞ்சதை சொல்லணும்.”</p>
<p>“தெரிஞ்சதை சொல்றேன். வாங்க வீட்டுக்குப் போவோம்”, என்று மெல்ல எழுந்திருந்தார்.</p>
<p>“ஒரு நிமிஷத்துல வந்துடறேன்”, என்று கோயிலுக்குள் சென்று அவசர அவசரமாய் உடைமைகளை எடுத்துக் கொண்டு கிளம்பினேன்.</p>
<p>பெரியவர் வீடு தூரமில்லை. 90 வயதிலும் சீரான நடை. வாயிலுள் தன்னைக் குறுக்கிக் கொண்டு அந்த உருவம் வீட்டினுள் சென்றது. நானும் பின் தொடர்ந்தேன். நாற்காலியில் என் உட்காரச் சொல்லிவிட்டு, ஓர் அறைக்குள் நுழைந்தார். திரும்பி வரும் போது கையில் ஒரு புத்தகம். புத்தகத்தைப் பார்த்த போதே அதை அவர் பல முறை படித்திருக்க வேண்டும் என்று தோன்றியது.</p>
<p>அருகில் வந்ததும், திருச்சி தாயுமானவன் எழுதியுள்ள தட்சிணாமூர்த்தி பிள்ளையின் வாழ்க்கை வரலாறை கையில் வைத்திருப்பது தெரிந்தது. சென்னையில் அந்தப் புத்தகத்தை நான் கண்டதில்லை. அதை எழுதிய தாயுமானவன்தான் தட்சிணாமூர்த்தி பிள்ளையின் சமாதி கோயிலை கட்டியவர் என்று அன்று காலைதான் தெரிந்து கொண்டிருந்தேன்.</p>
<div>
<div id="attachment_12686"><img title="at-thayumanavan-house" src="http://solvanam.com/wp-content/uploads/2011/01/at-thayumanavan-house.jpg" alt="திருச்சி தாயுமானவன் வீட்டில் எடுக்கப்பட்ட தக்‌ஷிணாமூர்த்தி பிள்ளையின் புகைப்படம்" width="481" height="691" />&nbsp;</p>
<p><span style="text-decoration:underline;"><em><strong>திருச்சி தாயுமானவன் வீட்டில் எடுக்கப்பட்ட தக்‌ஷிணாமூர்த்தி பிள்ளையின் புகைப்படத்தின் புகைப்படம்</strong></em></span></p>
</div>
</div>
<p>“தம்பி! மளிகைக் கடை வெச்சிருந்தவரோட பையனா பொறந்து, பிறந்த கொஞ்ச நாளுக்குள்ள தாயை இழந்து, படிப்பு ஏறாம ஊர் ஊராத் திரிஞ்சு, சிபாரிசுல அரண்மனை காவக்காரனா போன ஒருத்தர் காதுல விழுந்த இசைல மயங்கி, அது பின்னால போய், சங்கீதத்தோட உச்சத்துக்குப் போறதுங்கறது மனுஷனால ஆகிற காரியமா சொல்லுங்க?”</p>
<p>நான் அவர் பேச்சை பதிவு செய்ய ரிக்கார்டரை ஆன் செய்தேன்.</p>
<p>“தட்சிணாமூர்த்தி ஐயாவோட அப்பா பேரு இராமசாமி பிள்ளை. இங்கதான் மளிகைக் கடை வெச்சிருந்தார். அம்மா பேரு அமராவதி. பெரியப்பா, முத்து வளர்த்தா பிள்ளை, யோகாநந்தர்-ங்கற பேர்ல சன்யாஸியா வாழ்ந்தவர். அந்தக் காலத்துல பெரிய இடத்துக்கெல்லாம் அவருதான் வைத்தியம் பார்ப்பார். ஜோசியமும் சொல்வார். எத்தனையோ வருஷம் ஹடயோகம் பண்ணின மகான் அவர். அவர் ஹடயோகம் பண்ணின இடத்துலதான் நாம இன்னிக்கு சந்திச்சோம். அவர் மேற்பார்வைலதான் தட்சிணாமூர்த்தி பிள்ளை வளர்ந்தார்.”</p>
<p>ஊருக்கு வெளியே இருந்த அந்த இடம் ஹடயோகம் செய்ய தோதாகத்தான் இருந்திருக்க வேண்டும், என்று நினைத்துக் கொண்டேன்.</p>
<p>“ஏழு வயசுல தட்சிணாமூர்த்திப் பிள்ளையை பள்ளிக் கூடத்துல சேர்த்தாங்களாம். அவருக்குப் படிப்பு ஏறலை. குதிரை வண்டி ஓட்டறது, குஸ்தி போடறது மாதிரியான விஷயங்கள்லதான் லயிப்பு இருந்தது. ஆறடி உயரம், கட்டுமஸ்தான உடம்போட, பிள்ளை ஆஜானுபாகுவா இருப்பார். பெரியப்பாவோட ஊர் ஊராப் போய் கோயில்களை பார்க்கிறதுலையும் ரொம்ப ஆர்வமாம்.”</p>
<p>“இள வயசுல சங்கீதம் கத்துக்காம பிற்காலத்துல பெரிய பேர் வாங்கினது ஆச்ச்ர்யம் இல்லையா?”</p>
<p>“ஆமாம். பிள்ளைக்கு கிட்டத்தட்ட 16 வயசாகும் போது, பெரியப்பாவோட சிபாரிசுனால புதுக்கோட்டை அரண்மனைல காவலாளி வேலை கிடைச்சுது. லயத்துல பிரம்மலயம்-னு உண்டு. அது சொல்லிக் கொடுத்து வரதில்லை. இயற்கையா அமைஞ்சாத்தான் உண்டு.”</p>
<p>“லால்குடி ஜெயராமன் வாசிப்பைக் கேட்டு அவருக்கு பிரம்மலயம் உண்டுனு பாலக்காடு மணி ஐயர் சொல்லி இருக்காரதாக் கேள்விப் பட்டிருக்கேன்.”</p>
<p>“அதேதான்! பிள்ளைக்கும் பிரம்மலயம் தானா அமைஞ்சு இருந்தது. புதுக்கோட்டை அரண்மனைல நிறைய கச்சேரிகள் நடக்கும். பிள்ளை அதை நிறைய கேட்டிருக்கார். கேட்கக் கேட்க அவருக்குள்ள பொதிஞ்சிருந்த லயம் வெளிப்பட ஆரம்பிச்சுது.”</p>
<p>“…..”</p>
<p>“துப்பாக்கி, அரண்மனைக் கதவு, தொப்பி, செடிக்கு தண்ணி ஊத்தும் பானை, இப்படி கைல கிடைச்சதுல எல்லாம் தாளம் போட்டுக்கிட்டே இருப்பாராம் பிள்ளை. ஒரு தடவ, பெரியப்பாவோட நச்சாந்துப்பட்டிக்குப் போன போது, ஏகாதசி மடத்துல தங்கியிருக்கார். அங்க ஒரு பண்டாரம் பானையை வெச்சு தட்டிகிட்டு இருந்தார். அதப் பார்த்ததும், இவருக்கும் அதை வாங்கி வாசிக்கத் தோணியிருக்கு. பண்டாரம் பானையை கொடுத்ததும், பிள்ளை வாசிக்க ஆரம்பிச்சிருக்கார். அது வரைக்கும் அரண்மனைல கேட்டதை வெச்சு பானையில் வாசிச்சதும், அந்தப் பண்டாரம், “அப்பா! நீ என்னை விட நல்லா வாசிக்கிற. தினமும் பானையைத் தட்டிப் பழகு”-னு பானையை இவர் கிட்டக் கொடுத்தாராம்.”</p>
<p>“இந்த விஷயங்கள் எல்லாம் பழநி சுப்ரமணிய பிள்ளை எழுதின கட்டுரையிலையும் இருக்கு”, என்று என் பையைத் திறந்து நான் சேகரித்திருந்ததை கடை பரப்ப ஆரம்பித்தேன்.</p>
<p>கட்டுரையை வாங்கிப் பார்த்த பெரியவர், “தாயுமானவன் புத்தகத்துல இன்னும் கொஞ்சம் விரிவா இருக்கு. நச்சாந்துப்பட்டியில ஒரு பாகவதர் ராமாயணம் கதை சொன்னார். கதையில நிறைய பாட்டும் வருமே! பிள்ளைக்கு, அவர் பாடும் போது வாசிக்கணும்-னு ஆசை வந்திருக்கு. எப்படியோ பல பேரை நச்சரிச்சு சம்மதம் வாங்கி, தன் பானையையே கடமா பாவிச்சு, பாகவதர் பாட்டுக்கு ரொம்ப அனுகூலமா வாசிச்சு இருக்கார். இதைப் பார்த்து ரொம்ப சந்தோஷப்பட்டவர் பெரியப்பா யோகானந்தர்தான். பிள்ளையை இந்த வித்தையை நல்லா விருத்தி செஞ்சுக்கச் சொன்னார். தட்சிணாமூர்த்தி பிள்ளை ஊர் திரும்பினதும், ஒரு கடத்தை வாங்கி தொடர்ந்து சாதகம் செஞ்சு வந்தார்.”</p>
<p>“அவர் முதல் கச்சேரி பத்தி எதுவும் தகவல் இருக்கா?”</p>
<p>“குறிப்பா எந்தக் கச்சேரி முதல் கச்சேரினு தெரியல. உள்ளூர்-ல முதல்ல கச்சேரிகள் வாசிச்சாலும், கட வித்வானாப் பேர் வாங்கினது ராமநாதபுரத்துலதான். பாஸ்கர சேதுபதி மகாராஜாவோட சமஸ்தானத்துக்குப் போனார் பிள்ளை. அங்க பூச்சி சீனிவாச ஐயங்காரோட பரிச்சியம் கிடைச்சதும், அவர் மூலமா அரண்மனை கச்சேரிகள் நிறைய கேட்க ஆரம்பிச்சார். காலப்போக்குல, அங்க கச்சேரி செய்ய வந்த வித்வான்கள் கிட்ட தன்னை அறிமுகப்படுத்திகிட்டு, தன்னையும் கச்சேரியில போட்டுக்க வேண்டினார். அப்படி போட்டுகிட்டவங்க எல்லாம் இவருடைய லய ஞானத்தைப் பார்த்து அசந்து போனாங்க.”</p>
<p>“மான்பூண்டியா பிள்ளை கிட்ட சிஷ்யனா போகறதுக்கு முன்னாலயே கச்சேரி பண்ண ஆரம்பிச்சுட்டாரா? பழநி சுப்ரமணிய பிள்ளை எழுதியிருக்கற குறிப்புல மான்பூண்டியா பிள்ளை கிட்ட கத்துகிட்ட பிறகுதான் இராமநாதபுரம் போய் நிறைய கச்சேரி செய்தார்-னு வருது. ஈ.கிருஷ்ணையர், பிள்ளை 25 வயசு வரை கடம் வாசிச்சு, அதுக்குப் பின்னாலதான் மான்பூண்டியா பிள்ளை கிட்ட சிஷ்யரா சேர்ந்தார்-னு எழுதியிருக்கார்.”</p>
<p>“இதெல்லாம் நான் பொறக்கறதுக்கு முன்னாடி நடந்த சமாச்சாரம் பாருங்க, அதனால் உறுதியாச் சொல்ல முடியல. தாயுமானவன் புத்தகத்துல அவர் சீதாபதி ஜோஸ்யர் கிட்டயும், இலுப்பூர் மூக்கையா பிள்ளை கிட்டயும் மிருதங்கம் கத்துகிட்டு பாலாமணி நாடக கம்பெனியில மிருதங்கம் வாசிச்சார். அப்புறம் இராமநாதபுரம் சமஸ்தானம் போய், நிறைய கச்சேரிகள் செஞ்சு, மாங்குடி சிதம்பர பாகவதரால, 40 வயசுக்கு மேலதான் மான்பூண்டியா பிள்ளையைப் பார்த்தாருன்னு இருக்கு. எது எப்படியோ, தட்சிணாமூர்த்தி பிள்ளைங்கற வைரத்தை, பட்டை தீட்டின புகழ் மான்பூண்டியா பிள்ளைக்குதான்.”</p>
<p>குருவையும் சிஷ்யரையும் ஒரே வரியில் குறிப்பிடும் ஈ.கிருஷ்ணையரின் வரி எனக்கு நினைவுக்கு வந்தது. பெரியவருக்குப் படித்துக் காண்பித்தேன்.</p>
<p>“If the guru showed to the world that there was an instrument like that capable of being adopted as an accompaniment in a musical concert, the discple demonstrated the highest possibilities of the same.”</p>
<div>
<div id="attachment_12686"><img title="with-manpoondia-pillai" src="http://solvanam.com/wp-content/uploads/2011/01/with-manpoondia-pillai.jpg" alt="மாமூண்டியா பிள்ளையோடு தக்‌ஷிணாமூர்த்தி பிள்ளை" width="498" height="374" />&nbsp;</p>
<p><span style="text-decoration:underline;"><em><strong>மாமூண்டியா பிள்ளையோடு தட்சிணாமூர்த்தி பிள்ளை</strong></em></span></p>
</div>
</div>
<p>பெரியவர் தொடர்ந்தார், “மான்பூண்டியா பிள்ளையும், தட்சிணாமூர்த்தி பிள்ளையும் கூடை நிறைய பொடிக் கல்லா பொறுக்கி கிட்டு கோயில்ல போய் உட்கார்ந்துக்குவாங்களாம். ‘தம்பி கல்லுங்களை அஞ்சஞ்சா அடுக்கு, இப்ப ஒரு அஞ்சை மூணாவும், இன்னொரு அஞ்சை ஏழாவும் மாத்து’-னு எல்லாம் மான்பூண்டியா பிள்ளைச் சொல்லச் சொல்ல, கல்லை அடுக்கியே நிறைய நுட்பமான லய கணக்குகளையெல்லாம் தயார் பண்ணுவாங்களாம்.”</p>
<p>“மான்பூண்டியா பிள்ளை கிட்ட போனதுமே தட்சிணாமூர்த்தி பிள்ளை கடத்தை விட்டுட்டார் இல்லையா?”</p>
<p>“அவர் கடத்தை விடக் காரணமா இருந்தவர் நாராயணசாமியப்பா.”</p>
<p>“இதைப் பற்றி நிறைய கட்டுரைகள்-ல வருது. இராமநாதபுரம் அரண்மனை-ல தட்சிணாமூர்த்தி பிள்ளை வாசிப்பை நாராயணசாமியப்பா கேட்டார். அந்தக் காலத்துல மிருதங்கத்தில் பிரபலம் ஆன முதல் கலைஞர் அவர்தான். மான்பூண்டியா பிள்ளைக்கு அங்கீகாரம் வாங்கிக் கொடுத்தவரும் அவர்தான்.”</p>
<p>“நாராயணசாமியப்பா தட்சிணாமூர்த்தி பிள்ளை வாசிப்பைக் கேட்டு, “தம்பி, உன் கிட்ட இருக்கற திறமை முழுமையா வெளிய வரணும்-னா மிருதங்கம்தான் உனக்கு சரியான வாத்தியம்.”-னு சொல்லி இருக்கார். இதைக் கேட்ட பிள்ளைக்கோ ஒரு பக்கம் சந்தோஷம் இன்னொரு பக்கம் சந்தேகம். இவ்வளவு வருஷமா கடத்தை அடிச்சு அடிச்சு உறுதியான கையால, மிருதங்கம் மாதிரி மிருதுவா வாசிக்க வேண்டிய வாத்யத்தை வாசிக்க முடியுமான்னு நினைச்சு இருக்கார். அதைக் கேட்டதும் நாராயணசாமியப்பா, தன்னோட மிருதங்கத்தில் ஒண்ணை எடுத்துக் கொடுத்து, “தம்பி! ஆண்டவன் அனுக்ரஹத்தில் நீ ரொம்ப நல்லா வருவ”-ன்னு ஆசீர்வாதம் செஞ்சாராம். ஆனால், பிள்ளை கடத்தை விட்டதுக்கு இன்னொரு காரணமும் இந்தப் புத்தகத்துல இருக்கு.”</p>
<p>“….?”</p>
<p>“அந்தக் காலத்தில, கச்சேரியில போட்டி நடக்கறது சகஜம். போட்டியில தோத்தவர் அந்த வாத்யத்தையே வாசிக்கறதில்லை-னு முடிவுக்கு வந்துடறது சாதாரணமா நடக்கிற விஷயம். ஒரு தடவை பழநி ‘கடம்’ கிருஷ்ணையரும் தட்சிணாமூர்த்தி பிள்ளையும் சேர்ந்து வாசிச்சு இருக்காங்க. கச்சேரி முடிஞ்சதும் சாஷ்டாங்கமா நமஸ்காரம் செஞ்சு, ‘இனி இந்த வாத்யத்தை வாசிக்கப் போறதில்லை’-னு தட்சிணாமூர்த்தி பிள்ளை சபதம் எடுத்துகிட்டாராம்.”</p>
<p>பெரியவர் விரல் நுனியில் விஷயச் சுரங்கமே இருந்தது.</p>
<p>“கடத்தை விட்ட போதும் பிள்ளைக்கு எக்கெச்செக்க கச்சேரி.”</p>
<p>“மான்பூண்டியா பிள்ளையோடு சேர்ந்து நிறைய கச்சேரிகள் வாசிச்சு இருக்கார். அதுல எல்லாம் மிருதங்கம்தான் வாசிச்சார். இருந்தாலும் கஞ்சிராவிலும் விடாம சாதகம் பண்ணிகிட்டு வந்தார்.”</p>
<p>மான்பூண்டியா பிள்ளை பற்றி பேச்சு திசை திரும்பியதும் எனக்குள் ஓர் ஐயம் எழுந்தது.</p>
<p>“மான்பூண்டியா பிள்ளை தவில் வாசிப்பை அடிப்படையா வெச்சு வந்தவர். அவர் கிட்ட கத்துகிட்ட தட்சிணாமூர்த்தி பிள்ளை வாசிப்புலையும் கணக்கு நிறைய இருக்குமா”</p>
<p>“பிள்ளைக்குக் கணக்கைப் பத்தி தெரியணும்னா, இந்தப் புத்தகத்துல ”முடிகொண்டான் வெங்க்டராம ஐயர் கடிதாசியை வாசிங்க.”</p>
<p>“பிள்ளையவர்கள் 5 நிமிஷத்தில் வாசிப்பது எப்படி பூர்த்தியாய் காது நிறைந்து இருக்குமோ அதே போல, ஒன்றரை மணி நேரம் வாசித்தாலும் வந்தது வராமல் வாசிக்கக் கூடிய கற்பனை உடையவர். திஸ்ர கதி மட்டுமின்றி நான்கு அக்ஷரத்தை ஐந்தாகவும், ஏழாகவும், ஒன்பதாகவும் அழகாக அமர்த்தி வாசிக்கும் திறமை பெற்றவர். அதிலும் பல விவகாரங்களை எதிர்பாரா விதம் செய்யும் சாமர்த்தியம் கொண்டவர். அவர் கற்பனைகளை மனதில் வாங்குவதோ, பிசகாமல் தாளம் போடுவதோ அவரைப் போல உழைத்தவர்களுக்குத்தான் சாத்தியம். சென்னையில் ஒரு சமயம் 35 தாளங்களில் பல திருப்புகழ்களைப் பாடினார்கள். அப்போது மிருதங்கம் வாசித்த நம் பிள்ளை, பழக்கத்தில் இல்லாத தாளங்களில் கூட, ஏற்கெனவே தயார் செய்து வைத்திருந்ததைப் போல, வித விதமான மோராக்களும், கணக்குகளும் வைத்து வாசித்தது பெரிய ஆச்சர்யமாக இருந்தது.”</p>
<p>கடிதம் ஒரு சந்தேகத்தைப் போக்க இன்னொரு சந்தேகம் முளைத்தது.</p>
<p>“தட்சிணாமூர்த்தி பிள்ளையோட கஞ்சிரா பெருசா? மிருதங்கம் பெருசா?”</p>
<p>“அதையும் முடிகொண்டானே அழகா சொல்லியிருப்பாரே! ‘இவர் மிருதங்கம் வாசிக்கும் போது கஞ்சிரா வாசிக்க வேண்டாம் என்றும், கஞ்சிரா வாசித்தால் மிருதங்கம் வேண்டாமென்றும் கேட்பவர்களுக்குத் தோன்றும்”-னு எழுதியிருக்காரே! இவரோட சேர்ந்து கஞ்சிரா வாசிக்கணுங்கறத்துக்காகவே தவிலில் முடிசூடா மன்னனா இருந்த இலுப்பூர் பஞ்சாபிகேச பிள்ளை தவிலை விட்டார். கஞ்சிராவைப் பொறுத்த வரைக்கும், இன்னிக்கு வரைக்கும் இவரைப் போல யாருமே வாசிச்சதில்லை.”</p>
<p>“சித்தூர் சுப்ரமணிய பிள்ளை பாடியிருக்கற ரிக்கார்டுல, ஒரு மேல்கால ஃபரன் வாசிச்சு இருக்கார் பாருங்க. அதுக்கு இணையா இது வரைக்கும் நான் வேறெதையும் கேட்டதில்லை” என்று தஞ்சாவூர் பி.எம்.சுந்தரம் சொன்னது எனக்கு நினைவுக்கு வந்தது.</p>
<p>“ஆண், பெண், கச்சேரி, பஜனை, ஹரிகதை, நாடகக் கம்பெனி-னு எல்லாம் வித்தியாசம் பார்க்காம வாசிச்சவர் தட்சிணாமூர்த்தி பிள்ளை”, என்றும் பி.எம்.சுந்தரம் சொல்லி இருந்தார். அதை பெரியவரிடம் சொன்னேன்.</p>
<p>“பிள்ளைக்கு தினமும் வாத்தியத்தில் வாசிச்சாகணும்னுதான் குறி. வேற எந்த சிந்தனையும் கிடையாது.” என்றவாரே தன் கையில் இருந்த புத்தகத்தில் இருந்து பாபநாசம் சிவனின் கடிதத்தில் சில வரிகளைப் படிக்க ஆரம்பித்தார்.</p>
<p>“ஸ்ரீரங்கத்தில் மருங்காபுரி கோபாலகிருஷ்ணையர் குமாரன் உபநயனத்தின் போது என் போன்ற சிறு பிள்ளைகள் பலர் விளையாட்டாய் தலைக்கொன்று இரண்டு பாட்டுகளைப் பாடிக் கொண்டு வந்தோம். காலை 8 மணி முதல் 12.30 மணி வரை நடந்த இந்தக் குழந்தை விளையாட்டில் கூட, தன் கஞ்சிராவை சேர்த்துக் கொண்டு அலுக்காமல் வாசித்து பிரமாதப் படுத்தினார்.”</p>
<p>“இப்ப புரியுதா நான் சொன்னது?”</p>
<p>நான் தலையசைத்தேன்.</p>
<p>“கச்சேரி பண்ண ஆரம்பிச்ச கொஞ்ச வருஷத்துக்குள்ளையே உச்சாணிக்குப் போனவர் தட்சிணாமூர்த்தி பிள்ளை.”</p>
<p>“அவர் புகழ் உச்சியில் இருந்த போது வெளியான ஈ.கிருஷ்ண ஐயரோட குறிப்பை படிச்ச போது அவரோட பெருமை புரிஞ்சுது.”</p>
<p>“He is the virtual ruler of any musical concert of note and he ensures a crowded house. Perhaps his fee is rather high for an accompanist. But none grudges to pay him and his presence pays in turn”</p>
<p>தனி ஆவரத்தனத்தில் மிருதங்கமும் கஞ்சிராவும் மாறி மாறி வாசிப்பது போல பெரியவரும் நானும் எங்களிடம் இருந்த குறிப்புகளை மாறி மாறி படித்து மகிழ்ந்தோம்.</p>
<p>“அவர் வாசிப்பை பத்தி படிக்கதான் முடியுதே தவிர, அதிகம் கேட்கற அதிர்ஷ்டம் எனக்கில்லை. நீங்க நேரில கேட்ட அவர் வாசிப்புல உங்களை கவர்ந்த அம்சம் எது?”</p>
<p>“சமயோசிதம். எந்த நேரத்துல எதை எப்படி வாசிக்கணும்-னு அவருக்குத்தான் தெரியும்.”</p>
<p>“ஒரு செம்மங்குடி கச்சேரியில பாவப்பூர்வமா பாடி விஸ்ராந்தியான சூழல் ஏற்பட்ட போது, யாரோ ஒரு ரசிகர் “ஐயா தனி வாசிக்கணும்”-னு கேட்டாராம். “ஆண்டவனே! தனி வாசிச்சா இந்த சூழல் கெட்டுப் போயிடும்”-னாராம் பிள்ளை. பிரமாதமான தனிக்கு கிடைப்பதை விட, அன்னிக்கு வாசிக்க மறுத்ததுக்கு அப்ளாஸ் கிடைச்சிதாம். பழநி சுப்ரமணிய பிள்ளையோட குறிப்புல “சாதாரண பாடகராயிருந்தாலும் அவரை உயர்ந்த ஞானஸ்தர் என்று ரசிகர்கள் கருதும்படி தன் வாசிப்பால் காட்டிவிடுவார்கள். சிறியதைப் பெரிதாகக் காட்டும் திறமையில் இவருக்கு ஈடு இணையில்லை”-னு எழுதியிருக்கார்.”</p>
<p>“எப்படி அவரால அதை செய்ய முடிஞ்சுது?…”</p>
<p>“….?”</p>
<p>“அவர் ஒரு சித்தர். அந்த அமானுஷ்ய வாசிப்புல கட்ட முடியாத விஷயம் உண்டா?”</p>
<p>பெரியவர் என்னை சிந்தனையில் ஆழ்த்தினார்.</p>
<div>
<div id="attachment_12686"><img title="at-madras-kannan-house1" src="http://solvanam.com/wp-content/uploads/2011/01/at-madras-kannan-house1.jpg" alt="மெட்ராஸ் கண்ணன் வீட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம்" width="435" height="636" />&nbsp;</p>
<p><span style="text-decoration:underline;"><em><strong>மதறாஸ் கண்ணன் வீட்டில் எடுக்கப்பட்ட புகைப்படத்தின் புகைப்படம்</strong></em></span></p>
</div>
</div>
<p>பிள்ளையைப் பற்றி பல அமானுஷ்ய குறிப்புகள் கிடைக்கின்றன. 90 வயசைத் தாண்டியும் கம்பீரமாக மிருதங்கம் வாசிக்கும் மதராஸ் கண்ணனை நான் சந்தித்த போது, “மிருதங்கத்துல எவ்வளவோ மஹா வித்வான்கள் இருந்திருக்காங்க. ஆனால் தட்சிணாமூர்த்தி பிள்ளை அவங்களுக்கெல்லாம் மேல இருந்தவர். நம்ம பூஜை அறையில இருக்க வேண்டியவர்” என்று சொன்னார். அவர் வாசிப்புக்கும் அமானுஷ்ய சக்திக்கும் தொடர்பைப் பற்றி என்னால் எந்த முடிவுக்கும் வர முடியவில்லை. இருப்பினும் அவர் கச்சேரியில் பங்கு பெருகிறார் என்றாலே கூட்டம் பன் மடங்கு வந்தது என்பதை 1930-களில் வெளியாகுயுள்ள பல குறிப்புகள் உணர்த்துகின்றன.</p>
<p>எனக்குள் பல எண்ணங்கள் அலை மோதிய போதும், என் கைகள் நான் சேகரித்த குறிப்புகளையும், படங்களையும் ஒன்றொன்றாய் பெரியவரிடத்தில் கொடுத்து வந்தன. ஒரு ஃபுல் பெஞ்ச் கச்சேரியின் படத்தைப் பார்த்ததும் பெரியவர் மௌனத்தைக் கலைத்தார்.</p>
<p><a rel="lightbox" href="http://solvanam.com/wp-content/uploads/2011/01/full_bench-1.jpg"><img title="full_bench-1" src="http://solvanam.com/wp-content/uploads/2011/01/full_bench-1.jpg" alt="full_bench-1" width="558" height="263" /></a></p>
<p>“அந்தக் காலத்துல ஃபுல் பெஞ்ச் கச்சேரி ரொம்பப் பிரபலம்.”</p>
<p>“அந்தக் கச்சேரிகளில் ‘ரிங் மாஸ்டர்’ போன்றவர் தட்சிணாமூர்த்தி பிள்ளை-னு நாயனாப் பிள்ளை சிஷ்யரே ஆனந்த விகடன்-ல எழுதியிருக்காரே.”</p>
<p>“அவரோட வெற்றிக்கு பல காரணங்கள் இருந்தாலும், எல்லாத்தையும் விட முக்கியமான காரணம் ஒண்ணு இருக்கு”</p>
<p>“…..?”</p>
<p>“இந்தப் புத்தகத்துல எவ்வளவோ மஹா வித்வான்கள் எழுதின கடுதாசி எல்லாம் இருக்கு.”, சில மணி நேரங்கள் ஆன பின்னும் பெரியவர் கையிலிருந்து தாயுமானவனின் புத்தகம் இறங்கவில்லை.</p>
<p>“அதுல திரும்பத் திரும்ப வர விஷயம் ஒண்ணுதான். பொறாமை, பூசல், கோபம், பாரபட்சம் எல்லாத்துக்கும் மீறினவர் தட்சிணாமூர்த்தி பிள்ளை-னு எல்லாருமே சொல்லி இருக்காங்க. அவரை விரும்பாத ஆட்களே இல்லை-னு பாபநாசம் சிவன் சொல்லி இருக்கார். ‘சதாகாலமும் முருகனிடம் கொண்டிருந்த திடபக்தி, பரோபகார சிந்தை, மகான்களைப் பின்பற்றி நடப்பது இம் மூன்றும்தான் அவருக்கு அழியாப் புகழைத் தந்தன’-னு காரைக்குடி சாம்பசிவ ஐயர் எழுதியிருக்கார்.”</p>
<p>பிள்ளையைப் பற்றி பலர் வித்வான்கள் எழுதியிருந்த கடிதங்கள் எனக்கு அடுத்த கேள்வியை எடுத்துக் கொடுத்தன.</p>
<p>“தட்சிணாமூர்த்தி பிள்ளை யாருக்கெல்லாம் தொடர்ந்து வாசிச்சார்.”</p>
<p>“அவர் யாருக்கு தம்பி வாசிக்கலை? அந்தக் காலத்துல மான்பூண்டியா பிள்ளையோட சேர்ந்து கோனேரிராஜபுரம் வைத்தியநாத ஐயருக்கு நிறைய வாசிச்சு இருக்கார். அதுக்குப் பிறகு நிறைய வாசிச்சது காஞ்சிபுரம் நாயினாப் பிள்ளைக்குதான்.”</p>
<p>“நாயினாப் பிள்ளைக்கு வாசிக்கறது ரொம்ப கஷ்டமாமே!”</p>
<p>“தட்சிணாமூர்த்தி பிள்ளையும் நாயினாப் பிள்ளையும் வெளிப் பார்வைக்கு நிறைய போட்டி போட்டது போலத் தோணினாலும் ரொம்ப அன்யோன்யமானவங்க. ஒரு கச்சேரியில நாயினா பிள்ளை சங்கராபரண ராகத்தை விஸ்தாரமா பாடிகிட்டு இருந்தார். தட்சிணாமூர்த்தி பிள்ளைக்கோ மிருதங்க ஸ்ருதி மேல திடீர்-னு சந்தேகம். பாடகர், மேடை, கச்சேரியெல்லாம் மறந்து வாத்யத்தை ஸ்ருதி சேர்க்க ஆரம்பிச்சுட்டார். நாயினா பிள்ளை என்ன செஞ்சும் தட்சிணாமூர்த்தி பிள்ளை கவனிக்கறதா தெரியலை. உடனே, “ஸ்வர ராக ஸுதா” பாட ஆரம்பிச்சுட்டார். பிள்ளையும் பிரமாதமா பாட்டுக்கு வாசிச்சார். பல்லவி, அனுபல்லவி முடிஞ்சு சரணம் பாடும் போது வழக்கமா பாடற, “மூலாதாரஜ நாதமெறுகுடே” சரணத்தைப் பாடாம, “மத்தள தாளகதுல தெலியக” சரணத்தைப் பாடினார். “தாளம் புரியாம மத்தளத்தை அடிச்சா அதுல சுகம் உண்டா”-னு அர்த்தம் வர சரணம். சரணத்தைக் கேட்ட அடுத்த நிமிஷம் பிள்ளை வாத்யத்தை நிமித்திட்டார்.”</p>
<p>“ஐயயோ! அப்புறம்?”</p>
<p>“நாயனாப் பிள்ளை, சிரிச்சுகிட்டே “என்ன ஆச்சு”-ன்னார். “இத்தனை நாளா இல்லாத சரணம் எங்கேந்து வந்ததுங்கறேன்”-னு பொரிஞ்சார் தட்சிணாமூர்த்தி பிள்ளை. நாயனா பிள்ளையும் சளைக்காம, “நீங்க இன்னிக்கு தவில் சம்பிரதாயமா ராகம் பாடும் போது மிருதங்கத்தை ஸ்ருதி சேர்த்தீங்களே, அது மட்டும் புதுசில்லையா”-ன்னார். பிள்ளை உடனே, “ஆண்டவனே! மன்னிகணும்”-னு சந்தோஷமா வாசிக்க ஆரம்பிச்சுட்டார்.”</p>
<p><a rel="lightbox" href="http://solvanam.com/wp-content/uploads/2011/01/mali-cartoon-1936.jpg"><img title="mali-cartoon-1936" src="http://solvanam.com/wp-content/uploads/2011/01/mali-cartoon-1936.jpg" alt="mali-cartoon-1936" width="509" height="383" /></a></p>
<p>“நாயினாப் பிள்ளை தவிர வேற யாருக்கு நிறைய வாசிச்சார்?”</p>
<p>“காரைக்குடி பிரதர்ஸுக்கு அவர் வாசிச்ச அளவு வேற யாரும் வாசிக்கலை. பாட்டுக்கு வாசிக்கறதும் வீணைக்கு வாசிக்கறதும் ஒண்ணில்லை. வீணைக்கு நிறைய அடக்கி வாசிக்கணும். தட்சிணாமூர்த்தி பிள்ளை வாசிப்பை ‘மூணாவது வீணை’-னு சொல்லி இருக்காங்கனா அவர் எப்படி வாசிச்சு இருப்பாருனு புரிஞ்சுக்கலாம். அதுலையும் அவங்க 8-களை சவுக்கத்தில பல்லவி வாசிக்கும் போது, தங்கு தடையில்லாம ஒவ்வொரு ஆவர்த்தத்துக்கும் நகாசை கூட்டிக்கிட்டே வாசிக்கற அழகுக்கு ஈடே கிடையாது.”</p>
<p>காரைக்குடி பிரதர்ஸ் என்றதும் என் மனம் சென்னை சம்பிரதாயாவுக்குத் தாவியது. இராமநாதபுரம் முருகபூபதியின் நேர்காணலில் தட்சிணாமூர்த்தி பிள்ளை காரைக்குடி பிரதர்ஸுக்கு வாசித்ததைப் பற்றி நெகிழ்ச்சியுடன் பேசி இருந்தார்.</p>
<p>“காரைக்குடி பிரதர்ஸ் கச்சேரியில தட்சிணாமூர்த்தி பிள்ளை மிருதங்கம். வர்ணம் முடிஞ்சு, ரெண்டாவது கிருதி வாசிக்கும் போதே மிருதங்கம் மக்கர் பண்ண ஆரம்பிச்சுடுச்சி. பாட்டு வாசிக்கும் போதே பிள்ளை இன்னொரு மிருதங்கத்தை எடுத்து பக்கத்துல நிமிர்த்தி வெச்சு, தபலா மாதிரி தொப்பிக்கு ஒரு வாத்யம், வலந்தலைக்கு ஒரு வாத்யமா வாசிச்சார். காரைக்குடி பிரதர்ஸுக்கு கேட்கக் கேட்க ஒரே ஆனந்தம். பாட்டு முடிஞ்சதும் தீர்மானம் வெச்சு முடிக்கப் போனவரைத் தடுத்து, “பிள்ளைவாள்! அப்படியே ஒரு தனி வாசிக்கணும்”-ன்னார் காரைக்குடி சுப்பராம ஐயர். கணக்கு வழக்குல எல்லாம் நுழையாம, டேக்காவும், குமுக்கியுமா வாசிக்க வாசிக்க கூட்டம் கூத்தாட ஆரம்பிச்சிடுச்சு. அப்படி ஒரு வாசிப்பை ஜென்மத்தில் கேட்டதில்லை”</p>
<p>மஹாவித்வான் முருகபூபதியில் குரல் மீண்டும் செவிகளுள் ஒலித்தது.</p>
<p>“நாயினாப் பிள்ளைக்கும், காரைக்குடி பிரதர்ஸுக்கு அடுத்த தலைமுறைக்கு தட்சிணாமூர்த்தி பிள்ளை நிறைய வாசிச்சு இருக்காரில்லையா?”</p>
<p>“ 1910-ல இருந்து 1930 வரைக்கும் முன்னுக்கு வந்த முக்கியமான பாட்டுக்காரங்களை தூக்கி விட்டதே தட்சிணாமூர்த்தி பிள்ளைதானே.”</p>
<p>அரியக்குடி, செம்பை, ஆலத்தூர் சகோதரர்கள் போன்றவர்களின் வாழ்க்கையைப் பற்றி நான் அறிந்தவன்தான் என்ற போதிலும், இவர்கள் இளமைப் பருவமெல்லாம் தட்சிணாமூர்த்தி பிள்ளை என்ற பொன் சரடால் இணைக்கப் பட்டதென்பதை நான் அது நாள் வரை சிந்த்தித்துப் பார்த்ததில்லை.</p>
<p>“1918-ல திருப்பரங்குன்றத்துல ஒரு கச்சேரி. அன்னிக்கு மதுரை புஷ்பவனம் பாடியிருக்கணும். அவரால வர முடியலை.தட்சிணாமூர்த்தி பிள்ளைதான் கச்சேரி கேட்க வந்திருந்த அரியக்குடியை மேடை ஏத்தி பாட வெச்சார்.”</p>
<p>பெரியவர் சொல்லச் சொலல் எல்லார்வி அரியக்குடி புத்தகத்தில் எழுதியுள்ள வரிகள் என் மனதில் ஓடின.</p>
<p>“செம்பை பாகவதர் முன்னுக்கு வர தட்சிணாமூர்த்தி பிள்ளை எவ்வளவோ பாடு பட்டார். மலைக்கோட்டை கோவிந்தசாமி பிள்ளையை, செம்பைக்கு வாசிக்கச் சொல்லி தானும் வாசிச்சு, அவருக்கு ஓஹோ-ன்னு பேர் வாங்கி வெச்சவர் பிள்ளைதான்.”</p>
<p>பெரியவர் மீண்டும் புத்தகத்தைப் பிரித்து, “முதல் முதலாகப் பிள்ளையவர்கள் எங்களுக்கு ஏற்பாடு செய்த கச்சேரி 1929-ம் ஆண்டு திருவாரூரில் நடந்தது. அன்று எங்கள் கச்சேரிக்கு கஞ்சிரா வாசித்தார். அன்று முதல் அவர் காலமாகும் வரை நாங்கள் அவராலேயே சங்கீத உலகில் முன்னணிக்கு வந்ததை என்றென்றும் மறக்க முடியாது” என்று ஆலத்தூர் பிரதர்ஸ் எழுதியிருந்ததையும் முடிகொண்டான் வெங்கடராம ஐயர் முதன் முதலில் சென்னையில் பாடிய போது உடன் வாசித்தது தட்சிணாமூர்த்தி பிள்ளைதான் என்பதையும் படித்துக் காட்டினார்.</p>
<p>“அந்தக் காலத்துல தட்சிணாமூர்த்தி பிள்ளைதான் ‘கிங் மேக்கர்’ போல இருக்கு.”</p>
<p>“ஆமாம். பாலக்காடு மணி ஐயர், தட்சிணாமூர்த்தி பிள்ளையை ‘இசையரங்குக்கு சேனாபதி’-னு சொல்லி இருக்கார். மணி ஐயருக்கு அவர் மேல தேவதா விசுவாசம்.”</p>
<p>“1942-ல மணி ஐயர் எழுதின கட்டுரைலையே, “என்னை விட வயதிலும் அனுபவத்திலும் பெரியவராயிருந்த ஸ்ரீ பிள்ளை அவர்களுடன் பல கச்சேரிகளுக்குச் சென்று வாசிக்க நேர்ந்ததை என் வாழ்க்கையின் விசேஷ பாக்யமாகக் கருதுகிறேன்”-னு எழுதியிருக்கார். “தட்சிணாமூர்த்தி பிள்ளையையே மிஞ்சினவர் மணி ஐயர்”-னு சொன்னதைக் கேட்டு, “மகா பாவம் அது!”-னு மணி ஐயர் உணர்ச்சிவசப்பட்டிருகார்.”</p>
<p>மணி ஐயரைப் பற்றி பேச்சு வந்ததும் என் மனதை சில விஷயங்கள் நெருட ஆரம்பித்தன.</p>
<p>“மணி ஐயரும் பிள்ளையும் ஒருவரை மற்றவர் எப்படி மிஞ்சலாம் என்று சதா சர்வ காலம் எண்ணினர். ஒரு கச்சேரியில் தட்சிணாமூர்த்தி பிள்ளை இரண்டாம் காலம் வாசிக்கத் தவித்தார் அதை மணி ஐயர் வாசித்துக் காண்பித்தார். தட்சிணாமூர்த்தி பிள்ளைக்கு தேவையான போது மணி ஐயர் தாளம் போட்டு உதவினார், அனால் மணி ஐயருக்கு தேவைப்பட்ட போது பிள்ளை உதவி செய்யாமல் நழுவினார்.”, என்றெல்லாம் சமீபத்தில் வந்த மணி ஐயரின் வாழ்க்கை வரலாறு குறிக்கிறது. வேறொரு கச்சேரியில் தட்சிணாமூர்த்தி பார்வை மூலம் என்ன மணி ஐயரிடம் பேசினார் என்பதை அப்போது பிறந்திருக்காத நூல் ஆசிரியர் உணர்ந்து எழுதியிருக்கிறார்.</p>
<p>மணி ஐயர் தட்சிணாமூர்த்தி பிள்ளையைப் பற்றி வைத்திருந்த எண்ணங்களை உணர அவரே எழுதியுள்ள கட்டுரையையும், அவர் பேசி இன்று நமக்குக் கிடைக்கக் கூடிய பேச்சையும் கேட்டாலே தெரியும்.</p>
<p>மணி ஐயர் லயத்தைப் பற்றி பேசும் போது, “அப்படி என்ன தட்சிணாமூர்த்தி பிள்ளை வாசிச்சுட்டார்-னு எல்லாம் கேட்கிறா. இராமநாதபுரம் மகாராஜா முன்னிலைல ஒரு முசிறி கச்சேரி. அடுத்த நாள் எனக்கு மெட்ராஸுல கச்சேரி. ராத்திரி 9 மணிக்கு ரயிலைப் பிடிச்சாகணும். கச்சேரி த்டங்கவே 6.30 மணிக்கு மேல ஆயாச்சு. கச்சேரி அமோகமா நடந்து, பல்லவி முடிஞ்சு தனியெல்லாம் ஆயாச்சு. நான் முன்னாலையே சொல்லியிருந்தபடி, “நான் உத்தரவு வாங்கிக்கறேன்”-னேன். ராஜா, ‘மணி ஐயருக்கு என்ன உண்டோ கொடுத்தனுப்புங்கோ. அவர் கிளம்பட்டும், ஆனால் கச்சேரி நடக்கட்டும்’-னார். நான் மிருதங்கத்தை தட்சிணாமூர்த்தி பிள்ளை கிட்ட கொடுத்தேன். ‘ஆண்டவனே! அடுத்து மெட்ராஸுல பார்க்கும் போது வாத்யத்தை சேர்பிச்சுபிடறேன்’-ன்னார். நானும் கிளம்பி சாமானை எல்லாம் வண்டியில ஏத்தப் போனேன். அப்ப முசிறி ‘திருவடி சரணம்’ பாட ஆரம்பிச்சார். தட்சிணாமூர்த்தி பிள்ளை மிருதங்கத்தை எடுத்து வாசிக்க ஆரம்பிச்சார். நான் அப்படியே நின்னுட்டேன். அவர் ஒண்ணும் வாசிக்கலை. கணக்கு வாசிச்சாரா? கோர்வை வெச்சாரா? சொல்லு போட்டாரா? ஒண்ணுமேயில்லை. குமுக்கி, மீட்டு, சாப்புதான் வாசிச்சார். பல்லவி முடியும் போது ஒரு சாதாரண முத்தாய்ப்புதான் வெச்சார். அப்படியே ஒரு அஞ்சு நிமிஷம் கேட்டுட்டுதான் என்னால அந்த இடத்தைவிட்டுப் போக முடிஞ்சுது. அதுதான் தெய்வீகம். சிலவாளுக்குத்தான் அது வரும். எல்லாருக்கும் வராது.”, என்று அந்தப் பதிவில் கூறியுள்ளார்.</p>
<p>என் லாப்டாப்பைத் திறந்து மணி ஐயரின் பேச்சை போட்டுக் காண்பித்தேன். அவர் கண்கள் கலங்கின.</p>
<p>“மணி ஐயரோட கடைசி நினைவுல கூட தட்சிணாமூர்த்தி பிள்ளைதானே இருந்தார். ஆஸ்பத்திரியில இருந்த மணி ஐயர் திடீர்-னு எழுந்து, “சீக்கிரம் போய் டாக்ஸி கொண்டா. கச்சேரிக்கு நேரமாச்சு. தட்சிணாமூர்த்தி பிள்ளை காத்துண்டு இருக்கார்”-னு சிஷ்யன் கிட்ட சொல்லி இருக்கார்.”, என்று மணி ஐயரின் மகன் என்னிடம் சொன்ன விஷயத்தையும் சொன்ன போது பெரியவர் என் கையைப் பிடித்துக் கொண்டார்.</p>
<p>அழுதுவிடுவார் என்று தோன்றியதால் பேச்சை மாற்றினேன்.</p>
<p>“தட்சிணாமூர்த்தி பிள்ளையிங்கற வித்வானைப் பத்தி நிறைய பேசினோம். அவருடைய வாழ்க்கை முறை எப்படி இருந்தது?”</p>
<p>“அவரு பெரிய செலவாளி. ஆனால் எல்லாச் செலவும் நல்ல வழியிலதான். பெரிய முருக பக்தர். திருப்புகழ் அவ்வளவு அழகாப் பாடுவார். எம்.எஸ்.சுப்புலட்சுமிக்குக் கூட திருப்புகழ் கத்துக் கொடுத்து இருக்கார். அறுபடை வீட்டுக்கும் போய், ஒரு மண்டலம் மௌன விரதம் இருந்து மணிக் கணக்கா கஞ்சிரா வாசிப்பாராம். சின்மயாநந்த மௌனகுரு சுவாமிகள்-ங்கிற பேருல இல்லற துறவியா வாழ்ந்தவர். இன்னிக்கு புதராக் கெடக்கற இடத்துலதான் அவர் கட்டின தண்டபாணி கோயில் கம்பீரமா இருந்தது. தெருத் தெருவா அலைஞ்சு காசு சேகரிச்சு எழுப்பின கோயில் அது.”</p>
<p>செல்ஃபோன் சிணுங்கி பெரியவர் பேச்சைத் துண்டித்தது. என்னுடன் புதுக்கோட்டை வந்திருந்த நண்பர் திரும்பிப் போகத் தயாராய் இருந்தார். சில நிமிடங்களில் மீண்டும் தட்சிணாமூர்த்திப் பிள்ளை சமாதி கோயிலில் அவருடன் சேர்ந்து கொள்வதாய் கூறி இணைப்பைத் துண்டித்து பெரியவரிடம் விடை பெற ஆயத்தமானேன்.</p>
<p>பெரியவர் கோயில் வரை தானும் வருகிறேன் என்றார்.</p>
<p>பிரிய மனமில்லாததால் இருவரும் முடிந்த வரை மெதுவாக நடந்தோம். பெரியவர் பேச்சைத் தொடர்ந்தார்.</p>
<p>“எப்பப் பார்த்தாலும் தட்சிணாமூர்த்தி பிள்ளையைச் சுத்தி பெரிய கூட்டமே இருக்கும். யாராவது சாமியாரைப் பார்த்துட்டா பரம சந்தோஷம். ‘ஒரு சமயம் பொன்னமராவதியில் நாயினா பிள்ளை கச்சேரிக்கு இவர் பஸ்ஸில் போகிறார். நானும் அதே பஸ்ஸில் கதைக்குப் போகிறேன். வழியில் மரத்தடியில் யாரோ ஒரு சாமியார் உட்கார்ந்திருப்பதைப் பார்த்துவிட்டார். உடனே பஸ்ஸை நிறுத்து அந்த சாமியாரை ஏறச் சொன்னார். பஸ்காரன் இடமில்லை என்றான். இவர், ‘அப்படியானா சரி, பஸ் முன்னால போகட்டும். நான் பின்னால வந்து சேர்றேன்.’ என்று அங்கேயே இறங்கிவிட்டார். அன்று அவர் பாதிக் கச்சேரியில்தான் கலந்து கொண்டாராம்.”-னு சரஸ்வதி பாய் எழுதியிருக்காங்க.”</p>
<p>பெரியவர் தன் புத்தகத்தை கையோடு எடுத்து வந்திருந்தார்.</p>
<p>“விந்தையான மனுஷர்தான்.”, என்றேன்.</p>
<p>“மனுஷர்-னா சொன்னீங்க? தப்பு தம்பி. மனுஷனால அவர் செஞ்சதையெல்லாம் செய்ய முடியுமா? இந்தப் புத்தகத்துல அவர் வாழ்க்கைல நடந்த பல் ஆமானுஷ்ய விஷயங்கள் பத்தி இருக்கு. அவ்வளவு ஏன் தம்பி, மனுஷனால தன் கடைசி நேரத்தை தெரிஞ்சுக்க முடியுமா?”</p>
<p>“அதெப்படி முடியும்?”</p>
<p>“தாது வருஷம், வைகாசி 13-ம் தேதி 6.30 மணிக்கு தன்னுடைய நேரம்-னு முன்னாலையே எல்லார் கிட்டயும் சொல்லி இருக்கார். பாடகச்சேரி இராமலிங்க சுவாமிகள் வந்து சமாதி காரியமெல்லாம் செஞ்சு வெச்சு, “இவர் மரணம் அடையவில்லை. ஜீவனை அடக்கி வைத்திருக்கிறார்.”-னு சொன்னார்.”</p>
<p>“……”</p>
<p>“நான் சொல்றதுல நம்பிக்கை இல்லைன்னா இந்தாங்க புத்தகம். பொறுமையா படிச்சுப் பாருங்க.”, என்று அவர் பொக்கிஷமாய் வைத்திருந்த புத்தகத்தை க்ஷண நேரத்தில் என் கையில் திணித்தார்.</p>
<p>புத்தகம் என் கையில் பட்ட போது சன்னமாக என் காதுகளுள் அந்த தீம்காரம் கேட்டது. நாங்கள் சந்தித்த புதரை நெருங்கியிருந்தோம். என் விரல்கள் தன்னிச்சையாய் தாளம் போட ஆரம்பித்தன.</p>
<p style="text-align:center;">**************************************************************************************</p>
<p><strong>உதவி</strong>:</p>
<ul>
<li>நேர்காணல்கள்: கே.எஸ்.காளிதாஸ், திருச்சி தாயுமானவன், பி.எம்.சுந்தரம், மதறாஸ் கண்ணன், காரைக்குடி கணேசன், பாலக்காடு மணி ஐயரின் மகன் ராஜாராமன்.</li>
<li>சம்பிரதாயாவில் கிடைக்கும் மிருதங்க வித்வான் முருகபூபதியின் நேர்காணல்</li>
<li>தட்சிணாமூர்த்தி பிள்ளை வாழ்க்கை வரலாறு, திருச்சி தாயுமானவன்</li>
<li>பழநி சுப்ரமணிய பிள்ளை ரேடியோ உரை</li>
<li>Personalities in Present Day MUsic, E.Krishna Iyer</li>
<li>லயத்தைப் பற்றி பாலக்காடு மணி ஐயரின் உரை</li>
<li>இசை மேதைகள், த.சங்கரன்</li>
<li>அரியக்குடி, எல்லார்வி</li>
<li>செம்பை செல்வம், எல்லார்வி</li>
<li>பாலக்காடு மணி ஐயர், சாருகேசி</li>
<li>அபிநவ நந்திகேசுவரர், பி.ப.ஸ்ரீநிவாஸ ஐயங்கார், ஆனந்த விகடன் தீபாவளி மலர், 1939</li>
<li>ஆடல் பாடல், கர்நாடகம், ஆனந்த விகடன், பெப்ரவரி 1934, ஏப்ரல் 1934, ஜூன் 1936</li>
</ul>
</div>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/carnaticmusicreview.wordpress.com/518/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/carnaticmusicreview.wordpress.com/518/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/carnaticmusicreview.wordpress.com/518/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/carnaticmusicreview.wordpress.com/518/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/carnaticmusicreview.wordpress.com/518/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/carnaticmusicreview.wordpress.com/518/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/carnaticmusicreview.wordpress.com/518/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/carnaticmusicreview.wordpress.com/518/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/carnaticmusicreview.wordpress.com/518/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/carnaticmusicreview.wordpress.com/518/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/carnaticmusicreview.wordpress.com/518/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/carnaticmusicreview.wordpress.com/518/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/carnaticmusicreview.wordpress.com/518/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/carnaticmusicreview.wordpress.com/518/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=carnaticmusicreview.wordpress.com&amp;blog=5911820&amp;post=518&amp;subd=carnaticmusicreview&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://carnaticmusicreview.wordpress.com/2011/02/05/dakshinamurthi-pillai/feed/</wfw:commentRss>
		<slash:comments>5</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/29b774b2f86e81e92d15835a8955a5f8?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">Lalitharam</media:title>
		</media:content>

		<media:content url="http://solvanam.com/wp-content/uploads/2011/01/dakshinamurthi-pillai-madam.jpg" medium="image">
			<media:title type="html">dakshinamurthi-pillai-madam</media:title>
		</media:content>

		<media:content url="http://solvanam.com/wp-content/uploads/2011/01/dandapani-temple-at-pudukottai-in-2011.jpg" medium="image">
			<media:title type="html">dandapani-temple-at-pudukottai-in-2011</media:title>
		</media:content>

		<media:content url="http://solvanam.com/wp-content/uploads/2011/01/at-thayumanavan-house.jpg" medium="image">
			<media:title type="html">at-thayumanavan-house</media:title>
		</media:content>

		<media:content url="http://solvanam.com/wp-content/uploads/2011/01/with-manpoondia-pillai.jpg" medium="image">
			<media:title type="html">with-manpoondia-pillai</media:title>
		</media:content>

		<media:content url="http://solvanam.com/wp-content/uploads/2011/01/at-madras-kannan-house1.jpg" medium="image">
			<media:title type="html">at-madras-kannan-house1</media:title>
		</media:content>

		<media:content url="http://solvanam.com/wp-content/uploads/2011/01/full_bench-1.jpg" medium="image">
			<media:title type="html">full_bench-1</media:title>
		</media:content>

		<media:content url="http://solvanam.com/wp-content/uploads/2011/01/mali-cartoon-1936.jpg" medium="image">
			<media:title type="html">mali-cartoon-1936</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>புலிக்குப் பிறந்த புலி</title>
		<link>http://carnaticmusicreview.wordpress.com/2011/01/01/margazi-last2010/</link>
		<comments>http://carnaticmusicreview.wordpress.com/2011/01/01/margazi-last2010/#comments</comments>
		<pubDate>Sat, 01 Jan 2011 18:33:17 +0000</pubDate>
		<dc:creator>Lalitharam</dc:creator>
				<category><![CDATA[December 2010]]></category>
		<category><![CDATA[Music Review]]></category>
		<category><![CDATA[december]]></category>
		<category><![CDATA[Delhi Sunderrajan]]></category>
		<category><![CDATA[Krishna Gana Sabha]]></category>
		<category><![CDATA[Neyveli Narayanan]]></category>
		<category><![CDATA[TNS Krishna]]></category>

		<guid isPermaLink="false">http://carnaticmusicreview.wordpress.com/?p=508</guid>
		<description><![CDATA[கர்நாடக சங்கீதத்தில் இவர்கள் கச்சேரி எங்கு நடந்தாலும் நிச்சயம் சென்று கேட்பேன் என்று சொல்லும் வகையில், மூன்று பேர் என் பட்டியலில் உண்டு. ஒருவர் அபிஷேக் ரகுராம், மற்றவர் அம்ருதா வெங்கடேஷ், மூன்றாமவர் மதுரை டி.என்.எஸ்.கிருஷ்ணா. பொதுவாக, ஒரு பாடகரைப் போலவே இன்னொருவர் பாடினால், originality இல்லை என்று குறை கூறுவது வழக்கம். அவர் பாடுவதை கண்ணை மூடிக் கேட்டால் இள வயது சேஷகோபாலன் பாடுவது போலவே இருக்கிறது. இருந்தாலும், கிருஷ்ணாவை வழக்கம் போல குறை கூற [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=carnaticmusicreview.wordpress.com&amp;blog=5911820&amp;post=508&amp;subd=carnaticmusicreview&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div id="post-1975">
<div>
<p>கர்நாடக சங்கீதத்தில் இவர்கள் கச்சேரி எங்கு நடந்தாலும் நிச்சயம் சென்று கேட்பேன் என்று சொல்லும் வகையில், மூன்று பேர் என் பட்டியலில் உண்டு. ஒருவர் அபிஷேக் ரகுராம், மற்றவர் அம்ருதா வெங்கடேஷ், மூன்றாமவர் மதுரை டி.என்.எஸ்.கிருஷ்ணா.</p>
<p>பொதுவாக, ஒரு பாடகரைப் போலவே இன்னொருவர் பாடினால், originality இல்லை என்று குறை கூறுவது வழக்கம்.</p>
<p><a rel="lightbox[1975]" href="http://www.tamilpaper.net/paper/wp-content/uploads/2011/01/2.jpg"><img title="2" src="http://www.tamilpaper.net/paper/wp-content/uploads/2011/01/2-204x300.jpg" alt="" width="204" height="300" /></a>அவர் பாடுவதை கண்ணை மூடிக் கேட்டால் இள வயது சேஷகோபாலன் பாடுவது போலவே இருக்கிறது. இருந்தாலும், கிருஷ்ணாவை வழக்கம் போல குறை கூற முடியாது. ஏனெனில், ஒரு கிரிக்கெட் வீரரை இவரது ஆட்டம் டெண்டுல்கரைப் போலவே உள்ளது என்று சொன்னால் அது குறையாக இருக்குமா? ஒரு டென்னிஸ் வீரரின் பேக்-ஹேண்ட் ரோஜர் ஃபெடரரைப் போலவே உள்ளது என்று சொன்னால் அது குறையாகுமா? அது போலத்தால் கிருஷ்ணா பாடுவது சேஷகோபாலன் பாடுவது போலவே உள்ளது என்று சொல்வதும் குறையாகாது. இன்னும் சொல்லப் போனால், சேஷகோபாலனுக்குப் பின்னும் அவர் பாணி சங்கீதத்தை அதே வீச்சோடு (இதுதான் முக்கியம்) கேட்க முடியும் என்பதே இசை ரசிகர்களுக்கு ஒரு நற்செய்திதான்.</p>
<p>இந்த வருடம் பல இளைஞர்களுக்கு அகாடமி ப்ரைம் ஸ்லாட் அளித்தபோது, இவரையும் அந்தப் பட்டியலில் சேர்க்காததில் வருத்தமே. அந்த வருத்தம், நேற்று காலை இவர் கிருஷ்ண கான சபையில் பாடிய போது அதிகரித்தது.</p>
<p>காலை வேளை கச்சேரிகளை, போன வருடம் போல டிக்கெட் கச்சேரியாக வைக்காமல், மினி ஹாலில் ஃப்ரீ கச்சேரியாக இந்த வருடம் வைத்திருப்பது நல்ல விஷயம். அரங்கம் சின்னதென்பதால் ஈயடித்தாற் போல் காட்சியளிக்கவில்லை. டிக்கெட் இல்லை என்பதால், ஓரளவு கூட்டமும் இருந்தது.</p>
<p>நேற்று உடன் வாசித்தவர்கள் டில்லி சுந்தர்ராஜன் (வயலின்), நெய்வேலி நாராயணன் (மிருதங்கம்), பேப்பரில் கடம் வாசிப்பதாக செய்தி வரவில்லை என்ற போதும் நேற்று கடம் வித்வானும் கச்சேரியில் வாசித்தார். அவர் பெயரை கேட்க மறந்துவிட்டது.</p>
<p>கச்சேரியை நவராகமாலிகை வர்ணத்தில் தொடங்கினார். சிட்டை ஸ்வரங்களுக்குப் பின், ஒன்பது ராகங்களிலும் கல்பனை ஸ்வரங்கள் பாடியது நல்ல விறுவிறுப்பான தொடக்கத்தை அளித்தது. ஒரு ராகத்திலிருந்து இன்னொரு ராகத்துக்குத் தாவும் அநாயாசம் பெரிதும் கவர்ந்தது.</p>
<p>’மேரு ஸமான’ பாடலில் அடுக்கடுக்காய் நிறைய சங்கதிகள் கிருஷ்ணா போட, அதை பெரும்பாலும் சரியாக ஊகித்து வாசித்தார் நெய்வேலி நாராயணன். பாடலின் பல்லவியில் பாடிய கல்பனை ஸ்வரங்களில் சௌக்யமும் இருந்தது விவகாரமும் இருந்தது. ஸ்வரத்தை முடிக்கும் போது வைத்த கோர்வை – fitting climax.</p>
<p>நேற்று கிருஷ்ணா பாடிய ஹம்ஸநாதம் அதிகம் கேட்கக் கிடைக்காதது. ஹம்ஸநாதத்தின் உண்மையான வடிவில் தைவதம் உண்டு. காலப்போக்கில் அந்த தைவதம் தொலைந்து விட்டது. இது எஸ்.ஆர்.ஜானகிராமன் போன்ற ஆய்வாளர்கள் ஒப்புக் கொண்டது. தஞ்சாவூர் கல்யாணராமன் போன்றோர் இந்த தைவத்ததுடனேயே இந்த ராகத்தைப் பாடியுள்ளனர் என்ற போதும் கச்சேரியில் இதைக் கேட்பது அபூர்வம். நேற்று கிருஷ்ணா சிறு கோட்டோவியமாய் ராகத்தை தெளிவாக சில நிமிடங்களுள் ஆலாபனை செய்து, முத்தையா பாகவதரின் ‘கிருபாநிதே’ பாடினார். ஆலாபனையிலும், கிருதியிலும், சிட்டை ஸ்வரங்களிலும் கிருஷ்ணா அந்த தைவத்தை மிக நேர்த்தியாய் கையாண்டார்.</p>
<p>நேற்றைய பிரதான ராகம் மோகனம். கிருஷ்ணாவின் குரல் மந்திர பஞ்சமத்தில் இருந்து, தார பஞ்சமம் வரை சுலபமாக சஞ்சரிக்கிறது. டி.என்.எஸ் பாணி ஆலாபனையில், ராகத்தின் மையத்தை ஓரிடத்தில் நிறுத்தி, அந்த மைத்தை வெவ்வேறு இடத்தில் இருந்து தொடுவது சிறப்பம்சமாகும். உதாரணத்துக்கு மோகனத்தின் தைவதத்தில் ஆலாபனையின் மையத்தை நிறுத்தி, அந்த தைவதத்தை ‘க-த’, ‘ரி-த’, ‘ஸ-த’ என்று மத்ய ஸ்தாயி ஸ்வரங்களில் இருந்தும் தார ஸ்தாயி ஸ்வரங்களில் இருந்தும் தொடும் போது, எண்ணற்ற பரிமாணங்கள் பிறந்து கொண்டே இருக்கும். Linear exposition-க்குள் non-linear exposition-ம் பொதிந்திருப்பது இந்தப் பாணிக்கே உரிய தனிச் சிறப்பு. இப்படி பாடுவதை கேட்டுப் புரிந்து கொள்வதற்கே நிறைய கவனம் தேவை என்னும் போது, அதைப் பாட எத்தகைய நிர்ணயமும் துல்லியமும் தேவை என்பதை உணர்ந்து கொள்ளலாம். இது போன்ற கற்பனைகளை அள்ளிக் கொடுக்கும் அறிவு பலருக்கு உண்டு எனினும், அதை குரலில் சாத்தியமாக்குவது சிலருக்குத்தான் முடிகிறது. அந்த வகையில் கிருஷ்ணா புண்ணியம் செய்தவர். அவர் இழுத்த இழுப்புக்கெல்லாம் குரல் செல்கிறது.</p>
<p>அடிக்கடி கேட்கக் கிடைக்கும் பாடல்களைப் பாடாமல், தஞ்சாவூர் ராமஸ்வாமி பிள்ளையின் ‘ஜெகதீஸ்வரி’ பாடினார். மோகனத்தின் தைவதத்தைக் கொஞ்சிய படியே ஒலிக்கும் சிட்டை ஸ்வரத்தையும், சரணம் முடிந்ததும் அந்த சிட்டை ஸ்வரங்களுக்கு உரிய சாஹித்யத்தையும் கிருஷ்ணா வெகு அற்புதமாகப் பாடினார். வேறெந்த மோகன கிருதிக்கும் குறைச்சல் இல்லை என்னும் படியாக மிளிரும் இந்தத் தமிழ்ப் பாடலை இன்னும் நிறைய பேர் பாடலாம்.</p>
<p>‘கதி என்று நம்பினோரை காப்பதே உன் வைராக்யம்’ என்ற வரியில் விஸ்தாரமாய் இரண்டு காலங்களில் நிரவல் பாடிய பின் கல்பனை ஸ்வரங்கள் பாடினார். அவற்றில் சில ஆவர்த்தங்கள் முழி பிதுங்கும் கணக்குகளும் அடக்கம்.</p>
<p>பாடல்களிலும் சரி, தனியிலும் சரி நெய்வேலி நாராயணனின் மிருதங்கம் சுநாதமாய் ஒலித்தது.</p>
<p>தனி முடியும் போது கச்சேரி முடிய 30 நிமிடங்களே எஞ்சி இருந்தன.</p>
<p>அப்போது ஹேமவதி ராகத்தை எடுத்து பத்து நிமிடங்கள் விஸ்தாரமாக ஆலாபனை செய்தார், நேரம் இருந்தால் இன்னும் ஒரு மணி நேரத்துக்குக் கூட ஆலாபனை செய்வார் என்றே தோன்றியது. நேரம் இல்லாதததால் வயலினில் பேருக்கு வாசித்து முடித்தார் டில்லி சுந்தரராஜன்.</p>
<p>சில நிமிட தானத்துக்குப்பின், மிஸ்ர திரிபுடையில் பல்லவி பாடினார்.</p>
<p>என்னுடைய யூகம் யாதெனில், இந்தப் பல்லவியை இரண்டு களையில் தயாரித்துக் கொண்டு வந்திருக்க வேண்டும்.</p>
<p>நேரம் இல்லாததால் ஒரு களைக்குத் தாவினார்.</p>
<p>விரைவாகப் பாட வேண்டி இருந்ததால் சாஹித்யம் செம உதை வாங்கியது. சாஹித்யம் தமிழில் என்பதால், அது சிதைகிறது என்பதை ரசிகர்களால் உணர முடிந்தது.</p>
<p>“இட்ட மருந்தென்னவோ அறியேன் – கண்ணே பெண்ணே நீ” என்ற சாஹித்யத்தில் கண்ணே, பெண்ணே தவிர ஒன்றுமே விளங்கவில்லை. கீழ் காலத்தில் பல்லவியை பாடிய போதுதான் கொஞ்சம் புரிந்தது. கடிகாரத்தைப் பார்த்த படியே பல்லவியையும், ஸ்வரங்களையும் பாடி முடித்தார்.</p>
<p>இவ்வளவு நன்றாகப் பாடிவிட்டு, கிருஷ்ணா சாஹித்யத்தை சிதைப்பவர் என்ற அவப் பெயரை வாங்கியிருந்திருக்க வேண்டாம். அதற்கு முன் பாடிய பாடல்கள் அனைத்திலும் சாஹித்யம் நன்றாகத்தான் புரிந்தது. இரண்டு மணி நேரத்துக்குள் விஸ்தாரமாக ஒரு ராகத்தை நிரவல் ஸ்வரங்களுடனும் பாடிவிட்டு, ராகம் தானம் பல்லவியும் பாடுவது முடியாத காரியம். அதை தவிர்த்திருந்தால், இந்த அவசர ப்சமையலை தவிர்த்திருக்கலாம்.</p>
<p>அரங்கில் சிலருக்கு இதனால் அதிருப்தி என்ற போதும் எனக்கு அது குறையாகத் தோன்றவில்லை.</p>
<p>பல்லவிக்குப் பின், ‘வந்து கேட்பார் இல்லையோ’ என்று பாடியபோது என் மனத்திலும் அந்த வரிகளே தோன்றின. இந்த சங்கீதத்தைக் கேட்க இவ்வளவு பேர்தானா? கூட்டம் கூட்டமாக ‘வந்து கேட்பாரில்லையே’ என்ற வருத்தமும் மேலிட்டது.</p>
<p>அடுத்த வருடமாவது இந்த இளைஞருக்கு ப்ரைம் ஸ்லாட் கிடைக்க வேண்டும். ப்ரைம் ஸ்லாட் கிருஷ்ணாவுக்கு பெயரையும் புகழையும் கொடுக்கும் என்பதை விட, நினைத்ததைப் பாடும் அளவிற்கு நிச்சயம் அவகாசத்தை அளிக்கும்.</p>
<p>ஓர் அற்புதமான கச்சேரியுடன் என் டிசம்பர் நிறைவுக்கு வந்தது.</p>
<p>இந்த சீஸன் கட்டுரைகளைத் தொடர்ந்து படித்து, ஊக்கம் அளித்த அனைத்து வாசகர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.</p>
</div>
</div>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/carnaticmusicreview.wordpress.com/508/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/carnaticmusicreview.wordpress.com/508/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/carnaticmusicreview.wordpress.com/508/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/carnaticmusicreview.wordpress.com/508/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/carnaticmusicreview.wordpress.com/508/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/carnaticmusicreview.wordpress.com/508/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/carnaticmusicreview.wordpress.com/508/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/carnaticmusicreview.wordpress.com/508/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/carnaticmusicreview.wordpress.com/508/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/carnaticmusicreview.wordpress.com/508/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/carnaticmusicreview.wordpress.com/508/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/carnaticmusicreview.wordpress.com/508/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/carnaticmusicreview.wordpress.com/508/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/carnaticmusicreview.wordpress.com/508/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=carnaticmusicreview.wordpress.com&amp;blog=5911820&amp;post=508&amp;subd=carnaticmusicreview&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://carnaticmusicreview.wordpress.com/2011/01/01/margazi-last2010/feed/</wfw:commentRss>
		<slash:comments>11</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/29b774b2f86e81e92d15835a8955a5f8?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">Lalitharam</media:title>
		</media:content>

		<media:content url="http://www.tamilpaper.net/paper/wp-content/uploads/2011/01/2-204x300.jpg" medium="image">
			<media:title type="html">2</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>அதிசய அகிரா</title>
		<link>http://carnaticmusicreview.wordpress.com/2011/01/01/akira-io/</link>
		<comments>http://carnaticmusicreview.wordpress.com/2011/01/01/akira-io/#comments</comments>
		<pubDate>Sat, 01 Jan 2011 11:27:43 +0000</pubDate>
		<dc:creator>Lalitharam</dc:creator>
				<category><![CDATA[December 2010]]></category>
		<category><![CDATA[personality]]></category>
		<category><![CDATA[Akira Io]]></category>
		<category><![CDATA[Manakkal Rangarajan]]></category>
		<category><![CDATA[Phorography]]></category>
		<category><![CDATA[R Vedavalli]]></category>
		<category><![CDATA[RK Srikantan]]></category>

		<guid isPermaLink="false">http://carnaticmusicreview.wordpress.com/?p=502</guid>
		<description><![CDATA[டிசம்பர் சீஸன் கச்சேரி கேட்க மட்டுமின்றி, பல வித்தியாசமான ஆளுமைகளை சந்திக்கும் களமாகவும் விளங்குகிறது. நீங்கள் கச்சேரிக்குச் செல்பவரென்றால் அகிரா இயோவை (Akira Io) நிச்சயம் பார்த்திருப்பீர்கள். சிரிக்கும் கண்களை உடைய ஜப்பானியர். கிட்டத்தட்ட நாட்டிய முத்திரை போலக் கைகளை வைத்துக் கொண்டு தாளம் போடுவதையும் நீங்கள் கண்டு களிக்கக் கூடும். அப்படித் தாளம் போடாத நேரத்தில் அவர் கைகள் காமிராவுடன் உறவாடிக் கொண்டு இருக்கும். பல நாட்களாகவே இவருடன் பேச வேண்டும் என்றிருந்த ஆசை நேற்றுதான் [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=carnaticmusicreview.wordpress.com&amp;blog=5911820&amp;post=502&amp;subd=carnaticmusicreview&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p>டிசம்பர் சீஸன் கச்சேரி கேட்க மட்டுமின்றி, பல வித்தியாசமான ஆளுமைகளை சந்திக்கும் களமாகவும் விளங்குகிறது.</p>
<p><a href="http://carnaticmusicreview.files.wordpress.com/2011/01/akira-io-taken-by-ramprasad.jpg"><img class="aligncenter size-full wp-image-503" title="Akira Io taken by  Ramprasad" src="http://carnaticmusicreview.files.wordpress.com/2011/01/akira-io-taken-by-ramprasad.jpg?w=500" alt=""   /></a></p>
<p>நீங்கள் கச்சேரிக்குச் செல்பவரென்றால் அகிரா இயோவை (Akira Io) நிச்சயம் பார்த்திருப்பீர்கள். சிரிக்கும் கண்களை உடைய ஜப்பானியர். கிட்டத்தட்ட நாட்டிய முத்திரை போலக் கைகளை வைத்துக் கொண்டு தாளம் போடுவதையும் நீங்கள் கண்டு களிக்கக் கூடும். அப்படித் தாளம் போடாத நேரத்தில் அவர் கைகள் காமிராவுடன் உறவாடிக் கொண்டு இருக்கும்.</p>
<p>பல நாட்களாகவே இவருடன் பேச வேண்டும் என்றிருந்த ஆசை நேற்றுதான் நிறைவேறியது.</p>
<p>“நான் ஒரு ஃப்ரீலான்ஸ் போட்டோகிராபர். ஆனால் முறையாக நான் போட்டோகிராபி படிக்கவில்லை. நான் டோகியோவில், வஸெடா (Waseda) பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறையில் பட்டம் பெற்றுள்ளேன். 1996-ல் எக்ஸ்சேஞ்ச் ஸ்டூடண்டாக ரஷ்யா சென்றேன். ஜப்பான் திரும்பி ‘freelance Russian interpretor’ ஆனேன்”, எனும் அகிரா,   “என் நண்பர்கள் பலர் புகைப்படம் எடுப்பதில் ஆர்வமாயிருந்தனர். 1994-ல் இருந்து எனக்கும் அந்த ஆர்வம் தொற்றிக் கொண்டது. அவர்கள் கொடுத்த ஊக்கம் என்னை ஃப்ரீலான்ஸ் போட்டோகிராபராகவும் ஆக்கியது. 1999-ல் பேங்காகில் நடந்த சர்வதேச புகைப்படக் கண்காட்சியில் என் படமும் தேர்வாகி அதற்கு பரிசும் கிடைத்தது. அதன் பின் ஒரு ஜப்பானிய இணையப் பத்திரிகை எனக்கு ‘escape’ என்ற பெயரில் ஒரு Photo Column வழங்கியது.”, என்கிறார்.</p>
<p>சென்னைக்கு முதன் முதலில் வந்ததை நினைவு கூறும் அகிரா, “2001-ல் இந்தியாவுக்கு இரண்டாவது முறையாக வந்தேன். முதன் முறை வட இந்தியாவை மட்டும் பார்த்திருந்ததால், இம் முறை தென்னிந்தியா வந்தேன். நான் வந்த நேரத்தில் சென்னையில் மார்கழி இசை விழா நடந்து கொண்டிருந்தது. ஜப்பானில் ஹிந்துஸ்தானி இசையுடன் இருக்கும் பரிச்சயம் தென்னிந்திய இசைக்குக் கிடையாது. வித்தியாசமான அனுபவம் என்பதால் கச்சேரி சென்று கேட்க நினைத்தேன். நான் கேட்ட முதல் கச்சேரி ம்யூசிக் அகாடமியில் மதுரை டி.என்.சேஷகோபாலனுடையது. எம்.சந்திரசேகரன், குருவாயூர் துரை மற்றும் ஹரிசங்கர் உடன் வாசித்த கச்சேரி அது.” என்கிறார்.</p>
<div id="attachment_1957"><a href="http://carnaticmusicreview.files.wordpress.com/2011/01/manakkal-rangarajan-2.jpg"><img class="size-full wp-image-504 alignleft" title="Manakkal Rangarajan 2" src="http://carnaticmusicreview.files.wordpress.com/2011/01/manakkal-rangarajan-2.jpg?w=500&#038;h=332" alt="" width="500" height="332" /></a>&nbsp;</p>
<p style="text-align:left;">“எனக்கு அப்போது கர்நாடக இசை பற்றி ஒன்றுமே தெரியாத போதும் அந்த அனுபவம் மிகுந்த பரவசத்தை ஏற்படுத்தியது. ஸ்டேஜ் டிக்கெட் வாங்கியிருந்ததால், மேடையில் கலைஞர்களை வெகு அருகில் இருந்து பார்க்கும் அனுபவமும் கிட்டியது. குறிப்பாக குருவாயூர் துரையும், ஹரிசங்கரும் வாசித்த தனி ஆவர்த்தனம் என்னை இசையின்பால் இழுத்தது. அதே வருடம் திருவையாறு தியாகராஜர் உற்சவத்திலும் கலந்து கொண்டேன். இவ்வளவு பேர் ஒன்றாகக் கூடிப் பாடுவதையும் கேட்பதையும் பார்க்கவே ஆனந்தமாக இருந்தது. அதன் பின் வருடா வருடம் வந்து இசையை அனுபவிக்க வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டேன். 2005 வரை நான் வந்ததெல்லாம் பாட்டைக் கேட்டு ரசிக்க மட்டுமே.” என்று நம்மை ஆச்சர்யப்படுத்துகிறார்.</p>
</div>
<p>கர்நாடக இசை பற்றி அறிமுகம் இல்லாத போதும், எந்த விஷயம் அவரைக் கவர்ந்தது என்று கேட்டதற்கு, “ஜப்பானில் பாரம்பரிய இசை உண்டென்ற போதும், அங்குள்ள ரசிகர்கள் கர்நாடக சங்கீத ரசிகர்களைப் போல ஆழ்ந்து ரசிப்பதில்லை. முதன் முதலில் எஸ்.என் ம்யூசிகல்ஸில் ‘ரசிகா டயரியை’ பார்த்த போது ஆச்சர்யப்பட்டு போனேன். கச்சேரியில் பார்த்தால், பல ரசிகர்கள் கிருதி, ராகம், தாளம், வாக்கேயக்காரர் பெயர் என்று குறிப்பெடுத்துக் கொள்வதைக் காண முடிந்தது. பாட ஆரம்பித்த சில நொடிகளுக்குள் ராகத்தை கண்டுபிடித்துவிடும் ரசிகர்கள் என்னை ஆச்சர்யப்படுத்தினர். ஒவ்வொரு கச்சேரியிலும், மேடையில் நடப்பதைக் கேட்பவர்கள் நன்கு உணர்ந்து ரசிப்பது என்னை மிகவும் கவர்ந்தது. மேடையில் பாடுபவர்களும் சரி, அரங்கில் அமர்ந்திருப்பவர்களும் சரி, கச்சேரியின் போது ஒருவித பரவச நிலையை (trance) அடைவதை என்னால் உணர முடிந்தது. ஜப்பானுக்கு இந்த இசையையும், இது தொடர்பான விஷயங்களையும் அறிமுகப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. அதனால் என் படங்களில் ‘தீம்’ ஆக கர்நாடக இசையைத் தேர்வு செய்தேன்.” என்கிறார்.</p>
<p>“காலப் போக்கில், இசையைப் பற்றி மட்டுமின்றி, சபாக்கள், நிகழ்ச்சி வடிவமைப்பு, வாத்தியங்கள், அவற்றைச் செய்யும் முறைகள், பாடகர்கள் பயிற்சி செய்யும் முறைகள், கச்சேரியை நிர்வகித்தல் என்று முழுமையாக கர்நாடக சங்கீதத்தை ஒரு ‘Photo Book’-ஆக வெளியிட்டு ஜப்பானுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் உருவானது. அந்தத் திட்டத்துக்கு ‘Focus Carnatica’ என்று பெயரிட்டேன்.” என்றார் காபியை அருந்திய படி.</p>
<p>இந்தத் திட்டத்தை செயலாக்க நிறைய செலவாகி இருக்குமே, உங்களுக்கு ஸ்பான்ஸர்கள் உண்டா என்று கேட்டதற்கு, “நான் சென்ற</p>
<div id="attachment_1958"><a rel="lightbox[1955]" href="http://www.tamilpaper.net/paper/wp-content/uploads/2010/12/R.K.Srikantan.jpg"><img title="R.K.Srikantan" src="http://www.tamilpaper.net/paper/wp-content/uploads/2010/12/R.K.Srikantan-300x199.jpg" alt="" width="300" height="199" /></a>ஆர்.கே. ஸ்ரீகண்டன்&nbsp;</p>
</div>
<p>கச்சேரிகள் பலவற்றில் ஸ்பான்ஸராக நல்லியின் பெயரைக் கண்டேன். ஒரு முறை ஸ்ரீ பார்த்தசாரதி சாமி சபாவில் அருணா சாய்ராம் கச்சேரிக்கு நான் படமெடுக்கப் போயிருந்தேன். அன்று நல்லியும் வந்திருந்தார். என்னைக் கண்டததும், கூப்பிட்டு விசாரித்து அவரது விசிடிங் கார்டை அளித்து விட்டுப் போனார். என் திட்டம் மனத்துக்குள் உருவானதும், அவற்றைச் செயலாக்க நிச்சயம் ஸ்பான்ஸர் தேவை என்று தோன்றியது. உடனே நான் எடுத்த படங்கள் சிலவற்றை ஒரு நூல் போல அச்சடித்து, நல்லிக்கு ஜப்பானிலிருந்து அனுப்பி வைத்தேன். அதன் பின், நேரிலும் சென்று அவரைச் சந்தித்து என் திட்டத்தை விளக்கினேன். நல்லியும் என் திட்டத்தை ஆமோதித்ததும், 2008-ல் முழு ஆண்டும் இந்தியாவிலேயே தங்கிப் படமெடுத்தேன். டிசம்பரில் மட்டுமின்றி, ஆண்டு முழுவதும் கர்நாடக சங்கீதம் சென்னையில் எப்படி நடக்கிறது என்று படம் பிடிக்க அது உதவியாய் இருந்தது.”</p>
<p>2008-ல் இருந்து விசாவுக்காக மட்டும் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை ஜப்பான் சென்று இரண்டு மாதங்கள் தங்கி வரும் அகிரா, இப்போது ஆழ்வார்பேட்டையில் வீடு எடுத்து குடும்பத்துடன் தங்கியுள்ளார். 2011-ல் ஜூன் மாதத்துக்குள் தன் கனவு பிராஜக்ட் நிறைவேறிவிடும் என்கிறார்.</p>
<p>“நீங்கள் சொல்வது போன்ற புத்தகம் ஜப்பானுக்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கு – குறிப்பாகச் சென்னைக்கு மிக அவசியம் என்றுதான் தோன்றுகிறது”, என்றதற்கு, “என் திட்டத்தைச் செயலாக்கும் முன் இது போன்ற புத்தகங்கள் கிடைக்குமா என்று தேடிப் பார்த்தேன். அப்படி ஒரு புத்தகத்தை நீ செய்தால்தான் உண்டு என்று பலர் கூறினர். இந்தியாவில் வரும் வெளிநாட்டவர் திரும்ப எடுத்துச் செல்லும் நல்ல Souvenir-ஆகவும் இந்தப் புத்தகம் அமையும் என்று நினைக்கிறேன். ஸ்ருதி ஆசிரியர் ராம் நாராயணுடன் சேர்ந்து இந்தப் புத்தகத்தை இந்தியாவிலும் வெளியிடும் திட்டம் இருக்கிறது.”, என்று அடுத்த கேள்விக்கு வசதியாய் லீட் கொடுத்தார்.</p>
<p>“ஸ்ருதி இதழில் உங்கள் பெயரும் புகைப்படக் கலைஞராக இடம் பெருகிறதே! அவ்விதழுடன் அறிமுகம் எப்படி கிடைக்கதது?”, என்றதற்கு, “டகாகோ இனொவுவே (Takako Inoue) என்ற ஜப்பான் நாட்டு இசை பேராசிரியருக்கு கர்நாடக சங்கீதத்தில் நிறைய ஆர்வம் உண்டு. அவருக்கு ஸ்ருதியில் எழுதும் மன்னா ஸ்ரீநிவாஸன், ஆசிரியர் குழுவில் இருக்கும் ஜானகி போன்றோர் நல்ல நண்பர்கள். அவர் கூறியதன் பேரில், சில படங்களுடன் ஸ்ருதி அலுவலகம் சென்றேன். அதன் பின் அவ்வப்போது என் படங்களும் அந்த இதழில் வந்து கொண்டிருக்கின்றன.”, என்கிறார்.</p>
<p>அகிரா இசை உலகின் கணங்களை பதிய வைக்க Canon EOS 5D கேமிராவை உபயோகிக்கிறார். இயற்கை வெளிச்சத்தில் ஃப்ளாஷ் உதவியின்றிப் படம் எடுப்பதையே விரும்புகிறார்.</p>
<div id="attachment_1959"><a href="http://carnaticmusicreview.files.wordpress.com/2011/01/r-vedavalli-2.jpg"><img class="aligncenter size-full wp-image-505" title="R.Vedavalli 2" src="http://carnaticmusicreview.files.wordpress.com/2011/01/r-vedavalli-2.jpg?w=500&#038;h=332" alt="" width="500" height="332" /></a><br />
அவர் எடுத்ததில் அவருக்குப் பிடித்த படங்களைப் பற்றி கேட்டதற்கு, ரொம்ப நேரம் யோசித்த பின், “எதைச் சொல்வதென்று தெரியவில்லை! ஆர்.கே.ஸ்ரீகண்டன், வேதவல்லி போன்ற சீனியர் வித்வான்களை படமெடுத்த அனுபவம் மிகுந்த மகிழ்ச்சியையும் நிறைவையும் கொடுத்தது என்று வேண்டுமானால் சொல்லலாம். 91 வயதில் ஸ்ரீகண்டன் ஸார் கணீரென்று பாடுவது பெரிய அதிசயம் என்கிறார் கண்கள் விரிய.&nbsp;</p>
</div>
<p>கச்சேரிகளில் படம் எடுப்பதோடன்றி, தேர்ந்த ரசிகர் போலத் தாளம் போட்டு ரசிப்பதையும் பார்க்க முடிகிறது. இது எப்படிச் சாத்தியமானது?, என்ற கேள்விக்கு, “இங்கிருந்தபோது கற்றுக் கொண்டதுதான். இப்போது மோகனம், ஹம்ஸத்வனி போன்ற எளிய ராகங்களைக் கண்டுபிடிக்க முடிகிறது. ‘நினுவினா’, ‘ஸோபில்லு’ போன்ற கிருதிகள் வாசிக்கப்படும் போது அடையாளம் காண முடிகிறது. தாளம் போடவும் ரசிகர்களைப் பார்த்துக் கற்றுக் கொண்டேன்”, என்று சற்று வெட்கத்துடன் சிரிக்கிறார்.</p>
<p>”போட்டோ புத்தகம் வெளியான பின்?”, என்றதற்கு, “ஜப்பானில் கர்நாடக இசை நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும். இந்தியாவுக்கு ஜப்பானியர்கள் வரும் வகையில் ‘Carnatic music tours’ இயக்க வேண்டும். கர்நாடக சங்கீதத்துக்கு என்னால் ஆனதை செய்ய வேண்டும்”, என்றார்.</p>
<p>அடுத்த கச்சேரிக்கு நேரமாகிவிட, “Of course we will run into each other quite often. Let us catch up then”, என்றபடி அரங்கிற்குள் நுழைந்தார் அகிரா.</p>
<p><em>[கட்டுரையில் இடம்பெற்ற படங்கள், அகிரா எடுத்தவை. அகிராவின் படம், ராம்பிரசாத் எடுத்தது.)</em></p>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/carnaticmusicreview.wordpress.com/502/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/carnaticmusicreview.wordpress.com/502/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/carnaticmusicreview.wordpress.com/502/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/carnaticmusicreview.wordpress.com/502/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/carnaticmusicreview.wordpress.com/502/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/carnaticmusicreview.wordpress.com/502/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/carnaticmusicreview.wordpress.com/502/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/carnaticmusicreview.wordpress.com/502/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/carnaticmusicreview.wordpress.com/502/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/carnaticmusicreview.wordpress.com/502/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/carnaticmusicreview.wordpress.com/502/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/carnaticmusicreview.wordpress.com/502/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/carnaticmusicreview.wordpress.com/502/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/carnaticmusicreview.wordpress.com/502/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=carnaticmusicreview.wordpress.com&amp;blog=5911820&amp;post=502&amp;subd=carnaticmusicreview&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://carnaticmusicreview.wordpress.com/2011/01/01/akira-io/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/29b774b2f86e81e92d15835a8955a5f8?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">Lalitharam</media:title>
		</media:content>

		<media:content url="http://carnaticmusicreview.files.wordpress.com/2011/01/akira-io-taken-by-ramprasad.jpg" medium="image">
			<media:title type="html">Akira Io taken by  Ramprasad</media:title>
		</media:content>

		<media:content url="http://carnaticmusicreview.files.wordpress.com/2011/01/manakkal-rangarajan-2.jpg" medium="image">
			<media:title type="html">Manakkal Rangarajan 2</media:title>
		</media:content>

		<media:content url="http://www.tamilpaper.net/paper/wp-content/uploads/2010/12/R.K.Srikantan-300x199.jpg" medium="image">
			<media:title type="html">R.K.Srikantan</media:title>
		</media:content>

		<media:content url="http://carnaticmusicreview.files.wordpress.com/2011/01/r-vedavalli-2.jpg" medium="image">
			<media:title type="html">R.Vedavalli 2</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>ஓ.எஸ்.டி @ ஸ்ரீங்கேரி மடம்</title>
		<link>http://carnaticmusicreview.wordpress.com/2010/12/30/margazi-10/</link>
		<comments>http://carnaticmusicreview.wordpress.com/2010/12/30/margazi-10/#comments</comments>
		<pubDate>Thu, 30 Dec 2010 18:12:59 +0000</pubDate>
		<dc:creator>Lalitharam</dc:creator>
				<category><![CDATA[December 2010]]></category>
		<category><![CDATA[Music Review]]></category>
		<category><![CDATA[december 2010]]></category>
		<category><![CDATA[MSN Murthy]]></category>
		<category><![CDATA[Neyveli Narayanan]]></category>
		<category><![CDATA[OST]]></category>

		<guid isPermaLink="false">http://carnaticmusicreview.wordpress.com/?p=500</guid>
		<description><![CDATA[இவர் கச்சேரிக்கு நம்பிப் போகலாம், minimum guarantee சங்கீதம் என்று சிலரைத்தான் சொல்ல முடியும். ஒரு சிலர் ஷேவாக் ஆட்டம் போல. ஒரு நாளைக்கு 300 ரன்னும் கிடைக்கும் அடுத்த நாள் முதல் பாலை தெர்ட் மேனில் கைக்கு அப்பர் கட் செய்வதும் நடக்கும். வேறு சிலர் மைக் ஹஸ்ஸி ரகம். எந்த ராஜா எந்தப் பட்டினம் போனாலும், ஆட்டம் முடியும் போது 50 ரன்களாவது இவர் பெயருக்கு எதிரில் வந்துவிடும். அந்த ரக பாடகர்களுள் ஒருவராக [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=carnaticmusicreview.wordpress.com&amp;blog=5911820&amp;post=500&amp;subd=carnaticmusicreview&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div id="post-1940">
<div>
<p>இவர் கச்சேரிக்கு நம்பிப் போகலாம், minimum guarantee சங்கீதம் என்று சிலரைத்தான் சொல்ல முடியும். ஒரு சிலர் ஷேவாக் ஆட்டம் போல. ஒரு நாளைக்கு 300 ரன்னும் கிடைக்கும் அடுத்த நாள் முதல் பாலை தெர்ட் மேனில் கைக்கு அப்பர் கட் செய்வதும் நடக்கும். வேறு சிலர் மைக் ஹஸ்ஸி ரகம். எந்த ராஜா எந்தப் பட்டினம் போனாலும், ஆட்டம் முடியும் போது 50 ரன்களாவது இவர் பெயருக்கு எதிரில் வந்துவிடும். அந்த ரக பாடகர்களுள் ஒருவராக ஓ.எஸ். தியாகராஜனைக் கூறலாம். கடந்த பத்து வருடங்களில் 20 முறையாவது இவரை நேரில் கேட்டிருப்பேன். ஒரு கச்சேரி கூட சோடை போய் நான் கேட்டதில்லை.</p>
<p>நேற்று சிருங்கேரி மடத்தில் எம்.எஸ்.என்.மூர்த்தி, நெய்வேலி நாராயணன் சகிதம் ஓ.எஸ்.டி கச்சேரி. அரங்கில் எதிரொலி அதிகம் என்ற போதும் சூழல் ரம்மியமாய் இருந்தது. நான் தி.நகர் டிராபிக்கை குறைத்து மதிப்பிட்டு விட்டதால், நுழையும் போது ‘எவரநி’ கிருதியை முடித்துக் கொண்டிருந்தார். நான் கேட்டுள்ள ஓ.எஸ்.டி கச்சேரிகளில் பாதிக்கு மேற்பட்ட கச்சேரிகளில், ஆரம்பத்திலேயே விறுவிறு என்றொரு கல்யாணியைப் பாடிவிடுவார். பெரும்பாலும் அது ‘ஈஸ பாஹிமாம்’ கிருதியாக இருக்கும். அப்படி இல்லாத பட்சத்தில் ‘அம்ம ராவம்மா’ கிருதியாக இருக்கும். நேற்று தாயம் ‘தாமரஸ தள நேத்ரி’-யின் பக்கம் (எந்தக் கிருதி என்று கண்டுபிடித்துக் கொள்ள இந்த வரி போதாதா என்ன?) <em>போதாது – ஆசிரியர்</em></p>
<p>கல்யாணியில் நிரவல் ஸ்வரம் பாடியபோதே கச்சேரி களை கட்டிவிட்டது. அனுபல்லவியில் “நெம்மதினி நீ விஹப”  “ரம்முலோ” என்றெல்லாம் சாஹித்யத்தை வெட்டிச் சாய்க்காமல், அற்புதமாய் பதம் பிரித்துப் பாடுவது ஓ.எஸ்.டி-யின் ஸ்பெஷாலிடி! தொடர்ந்து தேவகாந்தாரியைச் சுருக்கமாய் ஆலாபனை செய்து தமிழ் தியாகைய்யரின் சமஸ்கிருத பாடலான ‘ஷாரதே’ கிருதியை இழைத்துப் பாடினார். ஓ.எஸ்.டி-யின் கச்சேரியில் உள்ள அளவு, அலுப்பே தட்டாத வகையில் அவர் செய்யும் பங்கீடு அவரது பெரிய பலம்.</p>
<p>எந்த நேரத்தில் நான் பிலஹரி அதிகம் கேட்கக் கிடைக்கவில்லை என்று வி.வி.எஸ் கச்சேரி பற்றி எழுதியதில் சொன்னேனோ தெரியவில்லை. விட்டேனா பார் என்று சென்றவிடமெல்லாம் துரத்துகிறது. நேற்று சந்தீப் நாராயணனும், காயத்ரி வெங்கட்ராகவனும் விஸ்தாரமாக பிலஹரி பாடினர். இன்று ஓ.எஸ்.டி-யின் மெல்லிய கீற்றாய் பிலஹரியைத் தொடங்கியபோது நொந்தே போனேன். நல்ல காலம், கீற்று சற்றைக்கெல்லாம், ‘சந்திரசேகர யதீந்திரம்’ என்ற கிருதியாக மாறியது. கல்லிடைக்குறிச்சி வேத தாஸர் செய்த கிருதியாம். கச்சேரி முடிந்ததும் கேட்டுத் தெரிந்து கொண்டேன். தேவ காந்தாரியும், பிலஹரி கச்சேரி சிருங்கேரி மடத்தில் நடந்ததால் பாடப்பட்டவை என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை.</p>
<p>நேற்றைய பிரதான ராகம் தோடி. ஓ.எஸ்.டி ஆதார ஷட்ஜத்தில் நங்கூரம் பாய்ச்சியது போல நின்று கார்வை கொடுத்தார் பாருங்கள்! தார ஸ்தாயியில் குரலை உயர்த்தி, மந்திரத்தில் குரலைக் குறுக்குவோர் கச்சேரிகளையே கேட்டுப் புளித்துப் போயிருந்த என் செவிகள் நேற்று புளகாங்கிதம் அடைந்தன.</p>
<p>ஓ.எஸ்.டி-யின் ஆலாபனை அணுகுமுறை ராமநாதபுரம் கிருஷ்ணன் செய்வது போல, கீழ் ஸ்தாயியில் குரலை உயர்த்தியும், மேல் ஸ்தாயியில் குரலை அடக்கியும் விளங்குகிறது. தார ஸ்தாயியில் கத்தாமல், நளினமான பல சங்கதிகள் பாட இந்த அணுகுமுறை பெரிதும் உதவுகிறது. ராகத்தின் மையமாக தைவதம், முதல் தார ஷட்ஜம் வரையிலான இடத்தை வைத்துக் கொண்டு நிறைய பாடினார். நீண்டு ஒலித்த தார ஷட்ஜ கார்வையும், அதனைத் தொடர்ந்து வளைந்தும் நெளிந்தும் ஒலித்த தைவதத்தில் கமகங்களும் அடுத்தடுத்துப் பாடி அழகிய அலைகளை படர விட்டார். கிட்டத்தட்ட பதினைந்து நிமிடங்களுக்கு நிறைவாக தோடியை அலசிவிட்டு, “ஏமிஜேசிதே” பாடினார்.</p>
<p>நிரவலைப் பற்றிச் சொல்லும்போது எஸ்.ராஜம், “நல்ல விஷயத்தை வைத்துதான் நிரவணும். ஏமி ஜேஸிதே பாடிவிட்டு “காம மோக தாஸுடை” என்று நிரவிக் கொண்டு இருக்கக் கூடாது.”, என்பார். நேற்று ஓ.எஸ்.டி அதைத்தான் செய்தார். காம மோகத்தைக் கடந்து “வர மந்த்ர”-வில் நிரவல் செய்தார். மைசூர் பாகை செய்யும் போது தாம்பாளம் முழுவதும் படர்ந்திருந்தாலும், அப்படியே சாப்பிட முடியாது. துண்டம் துண்டமாய் நறுக்கும்போது எடுத்து உண்ன வசதியாக இருக்கும். அப்படித்தான் நேற்று ஓ.எஸ்.டி தோடியை நிர்வாகம் செய்தார். கேட்ட ரசிகர்களும், உடன் வாசித்த வித்வான்களும், முழுமையாய் வாங்கி அனுபவிக்க வசிதயாக இருந்தது. ஸ்வரங்களில், ஓ.எஸ்.டி இரண்டு காலத்திலும் இடத்துக்குப் பாடிவிட்டு, அதன் பின் சமத்திற்கு வரும்படியாக குறைப்பு செய்தார். ஆலாபனையிலும் சரி, ஸ்வரங்களிலும் சரி ஷட்ஜ, பஞ்சம வர்ஜ இடங்கள் நிறைந்து இருந்தன. இந்த இடங்களே ராகத்தை உருக்கமாக ஒலிக்க வைத்ததாக எனக்குத் தோன்றியது. ஸ்வரங்களில், ஓ.எஸ்.டி பாடியதையெல்லாம் உடனுக்குடன் வாசித்து கலக்கினார் நெய்வேலி நாராயணன். அரங்கில் நேற்று அவரது தொப்பி சுத்தமாக கேட்க வில்லை. வலந்தலையின் நாதத்துடன் தொப்பியின் கும்காரங்களும் சேர்ந்து ஒலித்திருப்பின் எவ்வளவோ நன்றாக இருந்திருக்கும்.</p>
<p>தனி ஆவர்த்தனத்திலும் இந்தக் குறை இருந்தது. குறிப்பாக டேக்கா சொல் வாசித்த போது, இதை உணர முடிந்தது. இருப்பினும், குறை தெரியாது நன்றாக வாசித்தார். நேற்று வாசித்த கோர்வைகள் எல்லாம் சரியாக இடத்துக்கு வந்தன என்று சொல்லுமளவிற்குத்தான் என் லய அறிவு இடமளிக்கிறது. ஆதி தாளம் புரியும் அளவிற்கு, மிஸ்ர சாபுவை தெரிந்து கொள்ளவில்லை. வரும் வருடங்களில் தெரிந்து கொள்ள வேண்டும்.</p>
<p>வயலின் வாசித்த எம்.எஸ்.என் மூர்த்தி இடைஞ்சல் இல்லாமல் வாசித்தார். அவருடைய வாய்ப்புகளை அளவாக வாசித்தார்.</p>
<p>தனி முடிந்ததும், சில சீட்டுகள் வந்தன. அவற்றைப் பாடும் முன் நிறைய யோசித்துவிட்டு. “சரவண பவ எனும் திருமந்திரம்” பாட ஆரம்பித்தார். பல்லவி முடிந்து மிருதங்கத்தில் தீர்மானம் வைத்தும் அனுபல்லவியை எடுக்கவில்லை. உடனிருந்த சிஷ்யருக்கும் சாஹித்யம் தெரியாததால் பாட்டு அப்படியே அந்தரத்தில் நின்றது. உடனே அரங்கில் இருந்து ஒரு கூட்டமே “புரம் எரித்த பரமன்” என்று அடியை எடுத்துக் கொடுத்ததும், பாடலைப் பாடி முடித்தார். “திடீர் என்று பாடச் சொன்னால் இதுதான் சங்கடம்”, என்றார்.</p>
<p>அடுத்து பாடிய “காண வேண்டாமோ” பாடல்தான் தமிழில் இது வரை வந்துள்ள பாடல்களுள் மிகச் சிறந்ததாக நான் கருதுவது. ஸ்ரீரஞ்சனியின் அத்தனை அழகும் குழைத்துச் செய்யப்பட்ட பாடல். “வீணில் உலகைச் சுற்றி சுற்றி” என்ற வரியில் உலகமும் சுற்றும், அவ்வுலகில் உரைபவரும் சுற்றுவர், அப்படி எக்கெச்செக்க நகாசு சங்கதிகள்! அவற்றை ஓ.எஸ்.டி பாடிய போது my day was made.</p>
<p>அடுத்து பாடிய ராகமாலிகை பாடும் முன், “முடிந்த வரை பாடுகிறேன். அனு பல்லவியில் மறந்தாலும் மறந்துவிடலாம்”, என்று எச்சரிக்கை விடுத்து ஆரம்பித்தார். அழகான ஹிந்துஸ்தானி ராகங்களால் ஆன ராகமாலிகை “அனுமனை அனுதினம் நினை மனமே” அவற்றை நல்ல பாவபூர்வமாக பாடி கச்சேரியை நிறைவு செய்த போது கேட்டவர்கள் அனைவரும் நிறைவாக வீடு சென்றிருப்பர் என்பது உறுதி.</p>
</div>
</div>
<p>&nbsp;</p>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/carnaticmusicreview.wordpress.com/500/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/carnaticmusicreview.wordpress.com/500/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/carnaticmusicreview.wordpress.com/500/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/carnaticmusicreview.wordpress.com/500/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/carnaticmusicreview.wordpress.com/500/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/carnaticmusicreview.wordpress.com/500/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/carnaticmusicreview.wordpress.com/500/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/carnaticmusicreview.wordpress.com/500/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/carnaticmusicreview.wordpress.com/500/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/carnaticmusicreview.wordpress.com/500/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/carnaticmusicreview.wordpress.com/500/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/carnaticmusicreview.wordpress.com/500/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/carnaticmusicreview.wordpress.com/500/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/carnaticmusicreview.wordpress.com/500/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=carnaticmusicreview.wordpress.com&amp;blog=5911820&amp;post=500&amp;subd=carnaticmusicreview&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://carnaticmusicreview.wordpress.com/2010/12/30/margazi-10/feed/</wfw:commentRss>
		<slash:comments>2</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/29b774b2f86e81e92d15835a8955a5f8?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">Lalitharam</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>பூனைக்கு மணி</title>
		<link>http://carnaticmusicreview.wordpress.com/2010/12/29/margzi-9/</link>
		<comments>http://carnaticmusicreview.wordpress.com/2010/12/29/margzi-9/#comments</comments>
		<pubDate>Wed, 29 Dec 2010 16:21:41 +0000</pubDate>
		<dc:creator>Lalitharam</dc:creator>
				<category><![CDATA[December 2010]]></category>
		<category><![CDATA[december 2010]]></category>
		<category><![CDATA[Prodigies]]></category>
		<category><![CDATA[Sruti]]></category>

		<guid isPermaLink="false">http://carnaticmusicreview.wordpress.com/?p=497</guid>
		<description><![CDATA[சென்னை சீஸனுக்கு இணையாக உலகத்தில் வேறெந்த இடத்திலும் இசைத் திருவிழா நடக்கிறதா என்று சந்தேகமே. சென்ற ஞாயிற்று கிழமை ஹிண்டுவின் நான்காம் பக்கம் முழுவதுமே கச்சேரி விவரங்களுக்காக ஒதுக்கும் அளவிற்கு கச்சேரிகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. சந்தோஷம்தான், ஆனால்…. கச்சேரி நடந்தால் போதுமா? Does quantity matter more than quality? இப்படிச் சொன்னதற்காக கச்சேரிகளின் தரமெல்லாம் மோசம் என்று சொல்கிறேன் என்று நினைக்கக் கூடாது. இளம் வித்வான்களுக்கு முன்னொரு காலத்தில் இருந்தது போல, திறமையைக் காட்ட மேடைகள் [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=carnaticmusicreview.wordpress.com&amp;blog=5911820&amp;post=497&amp;subd=carnaticmusicreview&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div id="post-1923">
<div>
<p>சென்னை சீஸனுக்கு இணையாக உலகத்தில் வேறெந்த இடத்திலும் இசைத் திருவிழா நடக்கிறதா என்று சந்தேகமே. சென்ற ஞாயிற்று கிழமை ஹிண்டுவின் நான்காம் பக்கம் முழுவதுமே கச்சேரி விவரங்களுக்காக ஒதுக்கும் அளவிற்கு கச்சேரிகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. சந்தோஷம்தான், ஆனால்….</p>
<p>கச்சேரி நடந்தால் போதுமா? Does quantity matter more than quality?</p>
<p><a href="http://carnaticmusicreview.files.wordpress.com/2010/12/tambur.jpg"><img class="aligncenter size-medium wp-image-498" title="tambur" src="http://carnaticmusicreview.files.wordpress.com/2010/12/tambur.jpg?w=199&#038;h=300" alt="" width="199" height="300" /></a></p>
<p>இப்படிச் சொன்னதற்காக கச்சேரிகளின் தரமெல்லாம் மோசம் என்று சொல்கிறேன் என்று நினைக்கக் கூடாது.</p>
<p>இளம் வித்வான்களுக்கு முன்னொரு காலத்தில் இருந்தது போல, திறமையைக் காட்ட மேடைகள் இல்லை என்று இன்று சொல்ல முடியாது. 10 வர்ணம், 30 கிருதி பாடம் ஆன வாண்டுக்குக் கூட எங்கோ ஒரு மூலையில் கச்சேரி நடக்கிறது. அது நல்ல விஷயம்தானே!</p>
<p>நல்ல விஷயம்தான். ஆனால் யாருக்கு நல்லது?</p>
<p>“இந்தக் கல்லை கையில போட்டா நல்லது நடக்கும்”, என்பவர் யாருக்கு நல்லது என்றே சொல்ல மாட்டார். அவருக்கு நல்லது என்பதுதான் அவ்வாக்கின் தாத்பர்யம் என்று கூட ஒரு பாஷ்யம் உண்டு. அதைப் போலத்தான் இந்தக் கச்சேரிகளில் குழந்தைகளைப் பாட வைப்பதும். பழைய படங்களில் கதாநாயகன் தறுதலையாய் இருந்தால் “ஒரு கல்யாணத்தை பண்ணி வெச்சுட்டா எல்லாம் சரியாகிவிடும்”, என்றொரு வசனம் வரும். அது மாதிரி இன்று சங்கீதம் சரியாக வரவில்லை என்றால், “டிசம்பர்-ல கச்சேரில பாட வெச்சுட்டா எல்லாம் சரியாகிவிடும்”, என்று இசை வட்டாரங்களில் வசனங்கள் உண்டு போலும். இன்று Child Prodigy பட்டம் கலைமாமணியை விட சீப்பாகக் கிடைக்கிறது.</p>
<p>இந்த டிராஜிடிகள் செய்யும் கச்சேரியை யார் கேட்கிறார்கள். இசைக் கலைஞர்களின் உறவினர், மைக் ஸெட்காரர், வீட்டில் மருமகள் வாய்க்கு பயந்து சபாவுக்குள் தஞ்சம் புகும் மாமிகள் சிலர். சபா செகரட்டரி நிச்சயம் தனி ஆவர்த்தனம் முடியும் போது வந்துவிடுவார். கச்சேரி ஆனதும், “உம்ம பிள்ளைதான் சார் அடுத்த மாண்டலின் ஸ்ரீனிவாஸ்”, ரேஞ்சிற்கு ஏத்திவிடுவார்.</p>
<p>குழந்தைக்கு நல்லதும் அல்லதும் தெரிகின்ற வயதா என்ன? பெற்றோருக்கோ அது ‘தம் மக்கள்’ (வள்ளுவர் பின்னிட்டார்) பாடிய கச்சேரி. குழலையும் யாழையும் விட இனிமையாகத்தான் இருந்திருக்கும். சந்தோஷமாய் தேங்காய் மூடியுடன் வீட்டிற்குச் சென்று, அடுத்த நாள் அரைத்து விட்ட சாம்பார் சாப்பிடலாம்.</p>
<p>அப்படி என்றால் காலை வேளை கச்சேரிகளே கூடாதா? இளைஞர்கள் பாடவே கூடாதா?</p>
<p>அப்படிச் சொல்லவில்லை. இன்று முன்னிலையில் விளங்கும் பாடகர்கள் பாடுவதை விட இளைஞர்கள் பாட்டை கேட்பதையே அதிகம் விரும்புபவன் நான். அப்படி நிறைய இளைஞர்கள் நிச்சயம் இருக்கிறார்கள். காவேரி தண்ணி குடித்தால்தான் சங்கீதம் வரும் என்ற காலம் எல்லாம் போய், தேம்ஸ், ஹட்ஸன் கரையோரம் வளர்ந்தும் கூட அற்புதமாய் இசைக்கும் கலைஞர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இவர்களுக்கு எவ்வளவு வேண்டுமானாலும் வாய்ப்பளிக்கலாம்.</p>
<p>ஆனால், இந்தக் கலைஞர்கள் ஒரே நாளில் எவ்வளவு இடங்களில்தான் பாட முடியும்? 55 சபாகளில் கூப்பிட்டால் அவர்கள் எவ்வளவு சபைக்குத்தான் மறுப்பு தெரிவிக்க முடியும்? வளர்ந்து வரும் சமயத்தில் வரும் கச்சேரியை வேண்டாம் என்றால், மாமா கோவித்துக் கொண்டு அடுத்த வருடம் ‘தன்னால் இயன்றதை’ செய்துவிடுவாரோ என்ற பயம் இவர்களுக்கு வருவது நியாயம்தானே?</p>
<p>தன் சபாவில் நடக்கும் ஒவ்வொரு கச்சேரியும் தரமானதாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் சபா காரியதரிசிகளுக்கு உண்டா? அகாடமியில் நாள் முழுவதும் ஐந்து வேளையும் கச்சேரிகள் நடப்பது போல், தன் சபாவிலும் நடக்க வேண்டும் என்ற ஆசை மட்டும் இருந்தால் போதுமா? என் பாட்டி சொல்வார், ‘கழுதை விட்டை கை நிறைய’, என்று. அப்படி கச்சேரிகள் வைப்பதற்கு வைக்காமல் போனால்தான் என்ன குடி முழுகிப் போய்விடும்?</p>
<p>இன்றைய நிலையில் திறமையானவர்கள் கச்சேரி ஒவ்வொன்றுக்கும் இணையாக தகுதியே இல்லாது மேடையேறும் கச்சேரிகளையும் நிச்சயம் அடையாளம் காண முடியும்.</p>
<p>தகுதி என்றால்? சிம்மநந்தனத்தில் பல்லவி பாட வேண்டும் என்றா சொல்கிறோம்? இல்லை. ஸ்ருதியுடன் பாட வேண்டும்.</p>
<p>கர்நாடக இசையில் ஸ்ருதியுடன் பாடுபவர்கள் குறைச்சல் என்று சொன்னால் நிறைய பேருக்கு கோபம் வருகிறது. அப்படிச் சொல்ல, தீவிர கர்நாடக சங்கீத ரசிகனான எனக்கும்தான் வலிக்கிறது. ஆனாலும், எவ்வளவு நாள்தான் denial-ல் வாழ்வது? பூனைக்கு என்றேனும் மணி கட்டித்தானே ஆக வேண்டும்?</p>
<p>இன்று பாடுபவர்கள் பலருக்கு மந்திர ஸ்தாயியில் காற்றுதான் வருகிறது. பஞ்சமம் வேண்டாமையா, நிஷாதம் தைவதமாவது கேட்க வேண்டாமா? தார ஸ்தாயியில் கண்ணை மூடி, கையைத் தூக்கி, கழுத்தைச் சாய்த்துக் கத்துவதுதான் சங்கீதமா? ’கூரை ஏறி கோழி பிடிக்காதவன் கோபுரம் ஏறி வைகுண்டம் போனானாம்’ என்பது போல, ஆதார ஷட்ஜத்தில் தஸ வித கமகமும் பாடி விட்டு, காம்போதியில் தார காந்தாரத்தில் கால் மணி நேரம் கார்வை (அதுவும் கள்ளக் குரலில்) கொடுக்கிறேன் என்று மல்லு கட்டுவது தேவைதானா?</p>
<p>இன்றைய சஞ்சயானாலும் சரி, அன்றைய ஜி.என்.பி ஆனாலும் சரி, இளம் வயதில் நிறைய கேட்டிருக்கிறார்கள். அதற்கு அவர்கள் எழுத்தே சாட்சி. ஒவ்வொரு வருடமும் தன் கச்சேரியே டஜன் கணக்கில் இருக்கும் போது, குழந்தைகள் எங்கிருந்து கச்சேரிகள் கேட்கும்? கச்சேரி என்பது உடல் அளவிலும் சரி, மனதளவிலும் சரி, பெரும் உழைப்புதான். மதியம் 2.00 மணிக்கு உழைத்து வாசித்த குழந்தையை சாயங்காலம் கச்சேரியில் திருச்சி சங்கரன் வாசிக்கும் கோர்வைகளை எல்லாம் பதிய வைத்துக் கொள் என்றால் நடக்கிற காரியமா?</p>
<p>பெற்றோர்களே! உங்கள் ஆசை புரியாமல் இல்லை. சேஷகோபாலன் மாலையில் பாடும் மேடையில் என் மகன் காலையில் பாடினான் என்றால் பெருமைதான். ஆனால் அவன் காலையில் நாலு சீஸன் பாடிவிட்டு காணாமல் போவதையா நீங்கள் விரும்புகிறீர்கள்? அவனும் சேஷகோபாலனாக வேண்டும் என்றுதானே நினைப்பீர்கள்.</p>
<p>அப்படி நினைப்பது உண்மையெனில், குழந்தையை நல்ல சங்கீதத்தை கேட்க விடுங்கள். 9 அயதில் கச்சேரி செய்ய எல்லோரும் ஸ்ரீநிவாஸ் அல்ல. எப்போது கச்சேரி செய்ய ஆரம்பிக்கிறார்கள் என்பதை விட, எங்கே சென்று முடிக்கிறார்கள் என்பதுதான் முக்கியம் . 20 வயதுக்கு மேல் கச்சேரி செய்ய ஆரம்பித்து, எல்லோரும் மதிக்க தக்க வகையில் வாழ்ந்தவர்கள்/வாழ்பவர்கள் பலர் உண்டு.</p>
<p>சபா நிர்வாகிகளே! நீங்கள் கலையை வளர்ப்பதாக நினைத்து உங்கள் அட்டவணையை இட்டு நிரப்புவதால் செய்யும் பாதகம்தான் அதிகம். மாலை கச்சேரிகளுக்கு மட்டும்தான் நல்ல கலைஞர்கள் கிட்டினர் என்றால், அது மட்டும் போதும். நாள் முழுவதும் நடந்தால்தான் உங்கள் சபையை மதிப்போம் என்று யாரும் சொல்லப் போவதில்லை. எப்படியும் காலை வேளை கச்சேரிக்கு நீங்களே வருவதில்லை.</p>
<p>புராதன கோயில்களை நாசம் செய்து விட்டு, ஒவ்வொரு தெருவிலும் புதிதாய் கோயிலெழுப்புவதற்கும், புதிது புதிதாய் சபா ஆரம்பிப்பதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை. உங்களிடம் பணமிருந்தால், ராணி சீதை அரங்கில் எழுந்திருக்கும் போதெல்லாம் ஸீட்டிலிருந்து கிரீச்சிடும் ஒலி எழாமல் இருக்க வழி செய்யுங்கள். சாஸ்திரி ஹாலில் போஸ் ஸ்பீக்கர் வாங்கித் தாருங்கள். மைலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸின் அரதப் பழைய பேனரில் ’வருடத்தை’ வருடா வருடம் ஒட்டு வேலை செய்து மாற்றுகிறார்களே, அவர்களுக்கு ஒரு புது பேனர் வாங்கிக் கொடுங்கள்.</p>
<p>சபா நடத்துவது பணத்தை செலவழிக்க அல்ல, பணம் சம்பாதிக்க என்று நீங்கள் கூறுவீர்களாயின், உமக்கு வாழ்த்துகள். காற்றுள்ள போது தூற்றிக் கொள்ளுங்கள். ஈஸ்வரோ ரக்ஷது.</p>
<p>ஒரே ஒரு விஷயம்.</p>
<p>அபஸ்வரம் கேட்டால் ஆயுசு குறையுமாம்.</p>
<p>கச்சேரிக்கு வரும் எங்களை இன்னும் சில வருடங்கள் வாழ விடுங்கள்!</p>
</div>
</div>
<p>&nbsp;</p>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/carnaticmusicreview.wordpress.com/497/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/carnaticmusicreview.wordpress.com/497/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/carnaticmusicreview.wordpress.com/497/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/carnaticmusicreview.wordpress.com/497/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/carnaticmusicreview.wordpress.com/497/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/carnaticmusicreview.wordpress.com/497/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/carnaticmusicreview.wordpress.com/497/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/carnaticmusicreview.wordpress.com/497/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/carnaticmusicreview.wordpress.com/497/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/carnaticmusicreview.wordpress.com/497/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/carnaticmusicreview.wordpress.com/497/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/carnaticmusicreview.wordpress.com/497/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/carnaticmusicreview.wordpress.com/497/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/carnaticmusicreview.wordpress.com/497/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=carnaticmusicreview.wordpress.com&amp;blog=5911820&amp;post=497&amp;subd=carnaticmusicreview&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://carnaticmusicreview.wordpress.com/2010/12/29/margzi-9/feed/</wfw:commentRss>
		<slash:comments>3</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/29b774b2f86e81e92d15835a8955a5f8?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">Lalitharam</media:title>
		</media:content>

		<media:content url="http://carnaticmusicreview.files.wordpress.com/2010/12/tambur.jpg?w=199" medium="image">
			<media:title type="html">tambur</media:title>
		</media:content>
	</item>
	</channel>
</rss>
