Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for பிப்ரவரி, 2010

இந்த மாத ஸ்ருதி இதழ், ஓவியர்/பாடகர் சிறப்பதிழாக மலர்ந்துள்ளது.

ஸ்ருதி பத்திரிக்கையின் contributing editor-ஆக 20 வருடங்களுக்கு மேல் இருந்தவர் ராஜம். ராம்நாராயண், ஜானகி, ஸுதா என்று ஸ்ருதி குடும்பத்தினர்கள் எழுதியுள்ள கட்டுரைகள் நெஞ்சைத் தொடுகின்றன. 80-களில் ஸ்ருதி பட்டாபிராமன் ராஜத்தைப் பற்றிய எழுதிய கட்டுரையும் மீள் பிரசுரம் ஆகியிருக்கிறது.

இவை தவிர, என்னை மிகவும் கவர்ந்த கட்டுரை ஓவியர் (ஹிந்து புகழ்) கேஷவுடையது.

collector’s item-ஆக மலர்ந்துள்ள இவ்விதழைப் இங்கு பெறலாம்

இச் சிறப்பிதழில் வெளியாகியிருக்கும் என் கட்டுரை கீழே.

I can neither sing nor paint. Yet I regard myself as S.Rajam’s disciple, as I sincerely hope to follow his bani of living life (Raja Margam). I met Rajam sir on a Vijayadasami day in 2006, when I interviewed him for my GNB book. Despite poor health, he gave me a detailed interview.

He was painting a Saptamata series then. When I pointed out that his depiction was significantly different from the early Chola sculptures, his eyes lit up. An ardent admirer of Chola and Pallava art, he couldn’t wait to see the photographs of those sculptures. From then on, my visits to Chennai were never complete without a session with Rajam sir.

Rajam sir had the rare ability of objectively analysing music. He did not let the person behind the music influence his analysis. His accounts of the likes of Ambi Dikshitar, Papanasam Sivan, and Madurai Mani were a real treat. It was as if he was living those moments again. Every time I asked him about his experience of learning from Mylapore Gowri Amma, he sang “Tiruvotriyur Tyagarajan” and “Ettanai sonnalum”. The way he mimicked Gowri Ammal’s abhinayam is unforgettable.

I have watched him teach from close quarters. Each session was a peek into his creativity, as he would spontaneously unfold sangati after sangati even in the rarest of the kritis.

I had the good fortune of seeing the Saptaswara paintings bloom from the details mentioned in the ‘Sangita Kalpadrumam’ of Muthiah Bhagavatar. To watch the way Rajam sir went about his research and the layers he created literally and figuratively to depict all the details was a once-in-a-lifetime experience.

We would discuss something in a very casual way and the next time I visited him, Rajam sir would have painted something based on our conversation. Once I asked him if the similes mentioned in kritis were realistic. Rajam sir responded with an extempore line drawing of the kriti “Anta Rama soundaryam” (See Illustration), depicting the various similes and their correlation to an attribute of Rama.

For the past six months, I have been involved in making a documentary on Rajam sir. Despite his difficulty in moving about, Rajam sir gave me the utmost cooperation and often suggested frames and lighting during the shoot. He also created some paintings exclusively for the documentary. Our crew and I were shattered when we realized that Rajam sir wouldn’t be around when we screen the documentary.

A few months ago, at 91, Rajam sir wanted to paint all the 108 karanas. He also said, “I  painted the trinity long ago and the painting has become famous. Only a few days ago, I realised that I hadn’t painted the Tamil Isai trinity”. He wanted me to look out for details on Marimutha Pillai. He also wanted to depict the entire Soundarya Lahari through his paintings. I’m sure he had much more in his ‘to-do’ list.

The last wish he expressed to me when I recently met him at Isabel Hospital was to celebrate ‘Kotiswara Iyer day’ annually. I hope his disciples will fulfil this wish. While I cherish the many wonderful moments I had with Rajam sir, the very thought that he won’t be around when I visit Chennai next is difficult to deal with.

அந்த ராம் சௌந்தர்யம் கிருதியில் வரும் உவமைகள்

அரவிந்த மலர் – காலுக்கு

அட்சயத் துணி – முழங்காலுக்கு

துதிக்கை – தொடைக்கு

பூமி – விரிந்த மார்புக்கு

கமுகு மரம் – கழுத்து

மலை – புஜங்கள்

பவளம் – வாய்

மன்மதன் – அழகு

Read Full Post »

ச்ங்கீத மும்மூர்திகளுள் முத்துஸ்வாமி தீட்சிதர் விசேஷமானவர்.  மற்ற இருவரும் வாய்ப்பாட்டில் சிறந்து விளங்கினர். தீட்சிதர் ஒருவரே வாத்தியத்திலும்  தேர்ச்சி பெற்றவர்.  தென்னிந்திய இசை தவிர ஹிந்துஸ்தானி இசையிலும் பயிற்சி உடையவர்.

ஓவியர் ராஜம் வரைந்த தீட்சிதர்

அவரது கிருதிகள் வரலாற்று ஆவணங்களாக அமைந்துள்ளன. அப்பர், சம்பந்தர் போல ஊர் ஊராகச் சென்று, அந்தந்த க்ஷேத்ரங்களைப் பற்றிப் பாடியவர். கோயில் அமைப்பு, ஸ்தல புராணம், ஸ்தல விருட்சம், குளங்கள் என்று சகல விதமான தகவல்களையும் கீர்த்தனைகளுள் நிரப்பியவர்.

எண்ணற்ற அரிய ராகங்களில் கிருதிகள் அமைத்தவர். விவாதி ராகங்களை கையாள்வதில் முன்னோடி. அஸம்பூர்ண பத்ததியில், எண்ணற்ற மேளராகங்களில் பாடல் புனைந்தவர். பல ராகங்களின் உருவங்களை, இவர் கீர்த்தனை அமைப்பைக் கொண்டே உணர முடிகிறது.

எஸ்.ராஜம் எழுதிய கட்டுரையில், “சங்கதிகள் அதிகமில்லாமல் முழு ராக சாயை ஒரு கீர்த்தனையிலேயே அடக்கிய பெருமை இவருக்குத்தான் உண்டு. ராகத்தின் அமைப்பு மாறாமல் இருக்க சிட்டஸ்வரங்கள் உதவுகின்றன. சவுக்க காலத்தில் பாடும் திறன் பெற்றவரே இவர் கீர்த்தனைகளை போஷாக்குடன் பாட முடியும். தவிர, மந்திரஸ்தாயியிலும் நன்றாக நின்று பாடும் திறனும் தேவைப்படுகிறது.”, என்கிறார்.

நவக்கிரஹ கிருதிகள், பஞ்சலிங்க கிருதிகள், தேவி நவாவர்ண கிருதிகள் முதலிய பல தொகுப்புகளில் கிருதிகள் அமைத்த பெருமையும் இவரையே சேரும்.

இவ்வளவு பெருமைகள் நிறைந்த இவர் கிருதிகள் சமீப காலத்திலேயே புழக்கத்தில் அதிகரித்திருக்கின்றன. தீட்சிதர் கிருதிகள் கடினமானவை, கச்சேரிக்கு ஒவ்வாதவை – என்ற எண்ணம் பல காலம் இருந்தது. அகாடமியில் தீட்சிதர் தினம் கொண்டாடிய போது, அது தேவையில்லாத ஒன்று சுப்புடு எழுதி, பெரும் பரபரப்பை உண்டாக்கியதை பலர் நினைவுபடுத்திக் கொள்ளக் கூடும்.

Justice can be delayed – not denied. என்பது போல, தீட்சிதர் கிருதிகள் இன்று பரவலாகப் பாடப்படுகின்றன.

தொடர்ந்து 12 மணி நேரம் நடை பெரும் ‘தீட்சிதர் அகண்டம்’  தவறாமல் வருடந்தோரும் நடைபெருகிறது.

இந்த வருட அகண்டம் வரும் ஞாயிற்றுக் கிழமை, சிவகாமி பெத்தாச்சி அரங்கில் நடை பெறவுள்ளது.

முன்னணியில் இருக்கும் வித்வான்களும், முன்னணிக்கு வந்து கொண்டிருக்கும் இளைஞர்களும் பங்கு பெறுகின்றனர்.

நான் சென்னைக்குச் செல்ல டிக்கெட் எடுத்து விட்டேன். சென்னையில் இருப்பவர்கள், சென்னைக்கு வரக் கூடியவர்கள் நிச்சயம் பங்கு பெற்று இன்புற வேண்டும்.

Read Full Post »

முடிந்த சீஸனில் சௌம்யா, மேண்டலின் ஸ்ரீனிவாஸ், சஷாங்க், லால்குடி டூயட், அபிஷேக் ரகுராம் போன்றவர்களை கேட்க முடியாமல் போனது வருத்தம்தான். அந்த வரிசையில் நான் அதிகம் கேட்க விரும்பி, ஆனால் கேட்க முடியாமல் போனவருள் இன்னொருவர் காயத்ரி வெங்கடராகவன். இன்று அவருடைய கச்சேரி இருப்பதை பேப்பரில் பார்த்ததும், நிச்சயம் போய்விட வேண்டும் என்று முடிவெடுத்தேன்.

நல்ல கனமான சாரீரம். லயத்தில் நல்ல பிடிப்பு. பாவபூர்வமான சங்கீதம் என்று இவருடையதைக் கூறலாம். நிறைய கே.வி.நாராயணசாமி வழியில் பாடுகிறார் என்று எனக்குத் தோன்றும். ஒவ்வொரு ராகத்தையும், கீர்த்தனையையும் திளைத்து, ருசித்து, ரசித்துப் பாடுகிறார் என்று கேட்பவருக்கு நன்றாக விளங்கும்.

இன்று ஸ்ரீ பார்வதி கூடத்தில், பத்மா வீரராகவனின் கிருதிகளைப் பாடினார். பத்மா வீரராகவன் என்ற பெயரை நான் கேள்விப்பட்டதே இல்லை. ஸ்ரீபார்வதி அரங்கம் கச்சேரிக்கு அவ்வளவு உகந்தததல்ல. இருப்பினும் காயத்ரியின் கச்சேரியை தவறவிடக்கூடாது என்றே சென்றேன்.

தற்கால வாக்கேயக்காரரான பத்மா வீரராகவன், காயத்ரியின் முதல் குருவாம். நிறைய திவ்யபிரபந்தங்களுக்கு மெட்டமைத்திருக்கிறாராம். திருவிண்ணகரத்து ஒப்பிலியப்பன் மேல் நிறைய பாடல்கள் புனைந்திருக்கிறாராம். சமீபத்தில் ஸவர சாஹித்யங்களுடன் அவருடைய உருவாக்கங்கள் ”ஒப்பிலியப்பன் மலர்கள்” என்ற பெயரில் புத்தகமாய் வெளியாயுள்ளன. 72 மேளகர்த்தா ராகங்களிலும், ராக முத்திரையோடு, எளிமையான தமிழில் பாடல்கள் புனைந்துள்ளார்.

கச்சேரி கீரவாணி வர்ணத்துடன் தொடங்கியது. சில ஆவர்த்தங்கள் கல்பனை ஸ்வரங்களும் பாடினார். ’வானத்தின் மீதொரு அதிசயம்’ என்ற மோகன ராக கிருதி, நல்ல விறுவிறுப்பான காலப்ரமாணத்தில் அமைந்திருக்கிரது. ’நட்சத்திரங்கள்’ என்ற வார்த்தையில் அழகழகாய் சங்கதிகள்! அதற்கடுத்து ‘கம்பீர நடை காண’ என்ற பாடலை கம்பீர நாட்டை ராகத்தில் பாடினார். அதன்பின், கமாஸ் சாயல் அடிக்காமல், காம்போஜியின் பிரயோகங்கள் புகாமல் ஹரிகாம்போஜியை தனித்தன்மையுடன் மிளிரும் வகையில் short and sweet-ஆக ராகம் பாடினார். அதுவரை வயலினில் ரூபா ராஜகோபாலன் என்ன வாசித்தார் என்று கேட்கவில்லை. இந்த ராகத்தின் போது, கேட்க ஆரம்பித்தது. காயத்ரி பாடியதை, இவரும் பிரமாதமாய் வாங்கி வாசித்தார். ‘வருவாரோ வரம்’ என்ற பாடல் is a welcome addition to the raga. கச்சேரிகளில் பந்துவராளிக்கும், ஆனந்த பைரவ்களுக்கும் பதிலாக இந்த ராகத்தைப் பாடலாம். பாடலின் சரணத்தின் ராகத்தின் பெயரும் அழகாக பொருந்தியுள்ளது.

’பட்டாபிஷேகம் காண’ என்ற அடுத்த பாடல் ரசிகப்ரியா ராகத்தில் அமைந்துள்ளது. பாடலின் பல்லவி, இன்று பிரபலமாய் இருக்கும் ‘அருள் செய்ய வேண்டுமையா’ பாடலின் பல்லவியை நிறைய நினைவுபடுத்தியது. காயத்ரியின் பெரிய பலம் அவர் கொடுக்கும் பாவம். அவர் இழுத்து இழுப்புக்கெல்லாம் குரல் போகிறது. பிருகாவா, கார்வையா, ஜாருவா…நினைத்ததெல்லாம் பேசுகிறது. இன்று சாருகேசியில், தார ஸ்தாயியில் நின்று கார்வைகள் கொடுத்த பின், மத்ய ஸ்தாயி தைவதத்தை நோக்கி அவரோஹணித்து (புது பிரயோகம்! சரியா என்று தெரியவில்லை) கடைசியில் பல அழகிய கோவைகள் பாடி தார ஷட்ஜத்தில் ஆலாபனையை நிறைவு செய்த அழகிருக்கிறதே…த்சொ… த்சொ…அப்படி ஒரு உருக்கம். சாருகேஸி ராகம் பிரவாகமாய் ஓடியது. ‘நாவினிக்க மனமினிக்க’ என்று தீந்தமிழில் இசைமாறி பொழிந்தார். கல்பனை ஸ்வர பொருத்தங்களுக்கு பெயர் எடுத்த டி.ஆர்.சுப்ரமணியம்தான் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர். அவர் முன்னிலையில் காயத்ரி சாருகேஸியில் வைத்த பொருத்தங்கள் would have definitely made TRS proud.

ஈரோடு நாகராஜ் மிக உற்சாகமாய் மிருதங்கத்தில் பக்கபலமாக இருந்தார். வழக்கமாய் தொப்பியில் வாசிப்பவைகள், நம்மூரில் இருக்கும் ஒலியமைப்பால் கேட்காது. இன்று, தொப்பி நன்றாகக் கேட்டது. வலந்தலையில் வாசித்த ஃபரன்கள் எல்லாம் சுத்தமாய் கேட்கவில்லை. இன்று வாசித்த தனியில், திஸ்ர நடை கதி-பேதம் நன்றாக இருந்தது. கடைசியில் வைத்த கேர்வையும் ப்ளிச்சென்று இருந்தது.

சாருகேஸியைத் தொடர்ந்து தோடியிலும், ஷண்முகப்ரியாவிலும் கிருதிகளைப் பாடினார். தோடி கீர்த்தனை மிஸ்ர சாபுவில் அமைந்துள்ளது. நிச்சயம் மெயின் கிருதியாகக் கூட இதைப் பாடலாம் என்றே தோன்றியது. அமீர்கல்யாணியில் ‘நீல வண்ணக் கண்ணா’ என்று தாலட்டு பாடலொன்றில் கண்ணனை கொஞ்சிய போது, ஒவ்வொரு ‘தாலேலோவுக்கும்’ அரங்கிலிருந்த ஒவ்வொரு மனமும் தூளியாடின!

சிவரஞ்சனியில் தில்லானா பாடிய போது, அதற்குள் கச்சேரி முடிந்துவிட்டதே என்று தோன்றியது! பத்மா மெட்டமைத்துள்ள இரண்உ பாசுரங்களைப் பாடினார் காயத்ரி. அரியக்குடி அமைத்துள்ள சிந்து பைரவி மெட்டை விட, ‘அன்று இவ்வுலகம்’ பாசுரத்துக்கு, பேகடாவில் அமைக்கப்பட்டுள்ள மெட்டு எடுப்பாக உள்ளது. ‘அன்று இவ்வுலகம் அளந்தாய்’ என்ற வரியில் ‘அளந்தாய்’ என்ற வார்த்தையை கீழ் நோக்கி பிரயோகிக்குமாறு அரியக்குடி அமைத்துள்ளார். அவ்வார்த்தை மேல் நோக்கி செல்வது போல் அமைத்திருக்கிறார் பத்மா வீரராகவன். உலகளந்தவன் என்றது, தூக்கிய திருவடியே நினைவுக்கு வருவதால், புதிய மெட்டு இன்னும் நன்றாய் பொருந்துகின்றது.

நிறைவாக மங்களம் பாடினார். இந்த ‘மங்களம்’-தான் ஹம்சத்வனியில் அமைந்துள்ள ஒரே மங்களமாக இருக்கும் என்று நினைக்கிறேன். இந்தப் பாடல்தான் பத்மா வீரராகவன் புனைந்த முதல் பாடலாம்.

ஸ்பென்சர் வேணுகோபால், ராஜி கிருஷ்ணன், அஷோக் மாதவ் போன்ற தற்கால வாக்கேயக்காரர் வரிசையில் பத்மா வீரராகவனையும் இன்று அறிய முடிந்தது. காயத்ரி போன்ற அவரது சிஷ்யர்கள் நிறைய பாடினால் நிச்சயம் இவரது புனைவுகள் காலத்தைத் தாண்டி நிற்கும்.

கச்சேரி முடிந்ததும், ‘உப்பிலியப்பன்’ என்று பாடுவதை விட ‘ஒப்பிலியப்பன்’ என்று பாடினால் இன்னும் நன்றாக இருக்கும் என்று காயத்ரியிடம் கூறினேன். “அதற்கென்ன, அடுத்த கச்சேரியில் மாற்றிவிடலாம்”, என்று அவருடைய ட்ரேட் மார்க் புன்னகை ஒன்றை வீசியபடி.

கச்சேரி முடிந்ததும் பேசிய டி.ஆர்.எஸ், காயத்ரிக்கு, melody princess’ (queen என்றால் வயதானவர் என்று தோன்றுகிறதாம்), என்று பட்டம் கொடுக்கலாம் என்றார்!

கச்சேரியில் ஒரே ஒரு குறைதான். ‘அதிசயம்’, ‘இசை’, ‘சேய்’, ‘சில’ போன்ற பதங்கள் ‘அதிஷயம்’, ‘இஷை’, ‘ஷேய்’, ‘ஷில’ என்று பாடப்பட்டன. இந்த ஒரு குறையை மட்டும் களைந்துவிட்டால், காயத்ரி நிச்சயம் melody princess-தான்!

Read Full Post »

மிருதங்கக் கலைஞர் திருச்சி தாயுமானவனைப் பற்றி சங்கீத சீஸனிலேயே எழுத வேண்டும் என்றிருந்தேன். இப்போதுதான் முடிந்தது.

இந்த வருடம், அகாடமியின் டிடிகே விருதைப் பெறும் இவர் கொட்டையூரில் பிறந்தவர். இசை கலைஞர்களின் குடும்பத்தில் பிறந்தவர். தந்தை ராஜு வயலின் வித்வான். குடும்பத்த்ல் அனைவருமே ஒன்று வாய்ப்போட்டோ அல்லது வயலினையோ எடுத்துக் கொண்டு அதில் தேர்ச்சியைப் பெற்றனர். அந்தக் குடும்பத்தில் தாயுமானவன் எப்படி மிருதங்கத்தின் பக்கம் வந்தார் என்பது சுவாரஸ்யமான கதை.

“எனக்கு ஏழு வயதிருக்கும் போது எங்கள் விட்டுக்கு ஒரு மிருதங்கம் வந்தது. ஒரு நாடகக் கலைஞர் அடகு வைத்துப் போன மிருதங்கம் அது. அதை தினமும் வாசிப்பேன். அதிலிருந்து புறப்பட்ட நாதம் என்னை ஈர்த்தது. கற்றால் மிருதங்கம்தான் கற்பேன் என்று ஒரே பிடியாய் என் தந்தையிடம் கூறிவிட்டேன்.”,  என்கிறார் தாயுமானவன்.

தாயுமானவனின் முதல் குரு கும்பகோணம் ராஜப்ப ஐயர். 1945-ல் புதுக்கோட்டை தட்சிணாமூர்த்தி ஆசாரியார் (இவர் தட்சிணாமூர்த்திப் பிள்ளையின் சிஷ்யர்)  ஒரு கச்சேரிக்காக கும்பகோணம் வந்திருந்த போது தாயுமானவனின் வாசிப்பைக் கேட்க நேர்ந்தது. உடனே, ராஜப்ப ஐயரை அணுகி, தாயுமானவனை தன்னுடன் அனுப்புமாறு கேட்டுக் கொண்டார். ராஜப்ப ஐயரும் இசைய, தாயுமானவனின் குருகுலவாசம் தொடங்கியது.

தட்சிணாமூர்த்தி ஆசாரியார் மிகவும் கண்டிப்பானவர். புதுக்கோட்டை பாணியில் ஊரியவர். மிருதங்கம், கஞ்சிரா இரண்டிலும் சிறந்த தேர்ச்சியைப் பெற்றிருந்தவர். அவரிடம் 12 வருட காலம் குருகுலவாசம் செய்த தாயுமானவன், காலப்போக்கில் அவருடன் சேர்ந்தே பல கச்சேரிகள் வாசிக்கும் வாய்ப்பையும் பெற்றார். அரியக்குடி, ஆலத்தூர், சித்தூர், தண்டபாணி தேசிகர், தியாகராஜ பாகவதர் என்று அன்று முன்னிலையில் இருந்த அனைத்து வித்வான்களுக்கும் குருவுடன் சேர்ந்து இசைத்துள்ளார்.

குருவின் மனதிற்குகந்த சீடர் காலப்போக்கில் குருவின் மருமகனாகவும் மாறி, கனகாம்புஜத்தைக் கைப்பிடித்தார். தட்சிணாமூர்த்திப் பிள்ளையின் மேல் அபார பக்தி கொண்டிருந்தவர் தட்சிணாமூர்த்தி ஆசாரியார். ”எங்க ஐயா, புதுக்கோட்டை ஐயாவைப் பத்தி சொல்லிக்கிட்டே இருப்பாங்க. அவங்க சொல்றதைக் கேட்டே எனக்கும் அவர் பேர்ல ஈடுபாடு ஏற்பட்டுப் போச்சு.”, என்னும் தாயுமானவன், அவரது குருவையும் பரமகுருவையும் போலவே மிருதங்கம், கஞ்சிரா என்று இரு வாத்தியங்களிலும் தேர்ச்சியைப் பெற்றார்.

இவ்விரு வாத்தியங்களைத் தவிர கோன்னக்கோலிலும் நிபுணர். “எங்கள் வழிப்படி கற்றுக் கொள்ளும் போது சொல்லப்படும் ஜதிகளே, வல்லின மெல்லினங்களோடு, கொன்னக்கோல் இசைப்பது போலத்தான் இருக்கும். எந்த ஒரு பாடத்தையும் கையில் தாளம் போட்டு கொன்னுப்பிக்காமல் வாத்தியத்தில் வாசித்துப் பழக மாட்டோம். மதுரை சோமு கச்சேரியில் என் குருநாதருடன் வாசிக்கும் போது, மன்னார்குடி வைத்தியலிங்கம் பிள்ளை கொன்னக்கோல் இசைப்பார். அவரது கொன்னுப்பித்தல் முறை என்னை பெரிதும் கவர்ந்து, நானும் அதில் தேர்ச்சி பெறத் தூண்டியது.”, என்கிறார்.

தாயுமானவனிடம் பேசினால், 30 நொடிகளுக்கு ஒரு முறை தன் குருநாதரைப் பற்றியும் தட்சிணாமூர்த்திப் பிள்ளையைப் பற்றும் பேசாமல் இருக்க மாட்டார். தன் குருநாதரின் கனவுகளை மெய்யாக்கியதை தன் வாழ்நாள் சாதனையாகக் கருதுகிறார்.

அது என்ன கனவுகள்? – புதுக்கோட்டை தட்சிணாமூர்த்திப் பிள்ளையின் வாழ்க்கை வரலாறை நூலாக்குதல், அவருக்கு ஒரு சமாதி கோயில் கட்டுதல். இவ்விரு கனவுகளையும் பெரும்பாடு பட்டு நனவாக்கியிருக்கிறார் தாயுமானவன். வருடா வருடம் இவர் எழுப்பிய சமாதி கோயிலில் தட்சிணாமூர்த்திப் பிள்ளைக்கு குருபூஜை சிறப்பாக நடை பெறுகிறது.

65 வருடங்களுக்கு மேலாக வாசித்து வரும் இவர், பிரபல கலைஞர்கள் அனைவரின் பாட்டுக்கும் வாசித்துள்ளார். தியாகராஜ பாகவதருக்கும், கே.பி.சுந்தராம்பாளுக்கும் எண்ணற்ற கச்சேரிகள் வாசித்துள்ளார். மலேசியா, இலங்கை, சிங்கப்பூர் என்று பல நாடுகளுக்குப் ப்யணம் செய்துள்ளார். 1971-ல் திருச்சி வானொலியில் சேர்ந்து, பல லய சம்பந்தமான நிகழ்ச்சிகளைத் தயாரித்துள்ளார்.  “குருப்ரியா லய வித்யாலயா” என்ற இவரது பள்ளியின் மூலமாக எண்ணற்ற கலைஞர்களை தயாரித்துள்ளார்.

இவர் வாங்கியிருக்கும் விருதுகளின் பட்டியல் நீளமானது. கலைமாமணி, திருச்சி கலைக்காவிரி அளித்துள்ள வாழ்நாள் சாதனை விருது, காஞ்சி காமகோடி பீடத்தின் ஆஸ்தான வித்வான் ஸ்தானம் ஆகியவை அவர் வாங்கியிருக்கும் விருதுகளில் சில. இவரை கௌரவித்தவர்கள் பட்டியலில் இப்போது மியூசிக் அகாடமியும் இணைந்திருப்பது மிக நல்ல விஷயமாகும்.

(பதிவில் உள்ள படங்கள், சென்ற வருடம் தாயுமானவனை அவர் இல்லத்தில் சந்தித்த போது எடுக்கப்பட்டவை. முதல் படம், போட்டோவை போட்டோ பிடித்தது)

Read Full Post »

ஜி.என்.பி நூற்றாண்டு மலர், கந்தர்வ கானம், பற்றிய விமர்சனம் இங்கே

Read Full Post »

இன்றைய ஃப்ரைடே ரெவ்யூ பகுதியில் ராஜத்தைப் பற்றி பல நல்ல பதிவுகள் வெளியாகியுள்ளன.

Gowri Ramnarayan’s Poignant Profile here

Rajam’s sir prime disciple Vijayalakshmi’s tribute here

Lakshmi Venkatraman’s account on his paintings here

Randor Guy on Rajam’s brush with the Film world here

ராண்டர் கையின் கட்டுரையில் ‘கானனம் எது ஸ்வாமி’ கானடா ராகத்தில் என்று தவறாகக் குறிக்கப்பட்டுள்லது. அது அமைந்திருகும் ராகம் பிலஹரி. ராஜம் சிவகவி படத்தில் முருகனாக நடித்திருந்தாலும், பிரசுரமாகியிருக்கும் படத்தில் இருக்கும் பாலகன் ராஜம் அன்று.

Read Full Post »

லா.ச.ரா-வின் புதல்வர் சப்தரிஷி எழுதியுள்ள விமர்சனம் இந்த மாத அமுதசுரபியில். என் புத்தகம் வெளியான போது எனக்கொரு கடிதம் எழுதியிருந்தார். அதைப் படித்ததும், “கடிதம் என் புத்தகத்தை விட நன்றாக இருக்கிறது”, என்றேன். இப்போதும் அதைத்தான் சொல்லத் தோன்றுகிறது. லா.ச.ரா-வும் சுஜாதாவும் கலந்த கலவையாக சப்தரிஷியின் பிரயோகங்கள் ஜொலிக்கின்றன.

டிவிடியை இங்கே வாங்கலாம்

Read Full Post »