Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for ஒக்ரோபர், 2018

சென்னை போன்ற நகரங்களில் கலைக்காக இசைப் பயிற்சி பெருபவர்கள் அதிகம். கிராமப்புரங்களில், குறிப்பாக நாகஸ்வரம்/தவில் பயில்பவர்களைக் காணும் போது கலைக்காக கற்பவர்களைவிட வறுமையினால் இசைப்பள்ளிக்கு வரும் மாணவர்கள் பலரைக் காணமுடியும்.

அத்தகைய மாணவர்களை ஊக்கிவிக்கும் வண்ணம், முடிந்த அளவில் பரிவாதினியின் மூலமாக உதவி செய்யவுள்ளோம். அதன் தொடக்கமாக வரும் நவம்பர் 3-ஆம் தேதி நான்கு மாணவர்களுக்கு (3 நாகஸ்வரம், 1 தவில்) இசைக்கருவிகளைத் வாங்கித் தரவுள்ளோம்.

பரிவாதினி ஒருங்கிணைத்திருக்கும் வித்வான் யாழ்பாணம் பாலமுருகன் அவர்களின் நாகஸ்வரக் கச்சேரிக்கு முன் இந்த நிகழ்வு இடம் பெரும்.

மாணவர்கள் விவரம்:

நாகஸ்வரம்: பாலகணேஷ் (16), சந்திரசேகர் (18), வேல்மூர்த்தி (17)

தவில்: கோபீஸ்வரன் (9)

இந்த முயற்சியில் பங்களிக்க விரும்புவோர் பரிவாதினிக்கு நன்கொடை செலுத்தலாம்.

For contributions:

Parivadini Charitable Trust,
Union Bank of India
Account Number: 579902120000916
branch: Kolathur, Chennai,
IFSC Code: UBIN0557994

Read Full Post »

கர்நாடக இசையைப் பொருத்தமட்டில் வெளிநாட்டில் இருப்பவர்கள் இந்தியாவில் இருந்து இந்தக் கலைஞர் நம் நாட்டுக்கு வந்து கச்சேரி செய்யமாட்டாரா என்று ஏங்குவதுதான் வழக்கம். அதற்கு நேர்மாறாக, வெளிநாட்டு கலைஞர் நம் ஊரில் வந்து கர்நாடகயிசை இசைக்க மாட்டாரா என்று நினைப்பது அரிதினும் அரிது.

1960-கள்/70-களில் தவில் மேதை யாழ்ப்பாணம் தட்சிணாமூர்த்திக்கு இது நிகழ்ந்தது. அதன்பின் அதே மண்ணில் இருந்து உருவாகியிருக்கும் நாகஸ்வர கலைஞர் யாழ்ப்பாணம் பாலமுருகனின் மேல் அத்தகைய எதிர்பார்ப்புகள் உருவாகியுள்ளன.

கடந்த இரண்டு ஆண்டுகளில் எண்ணற்ற முறை ஃபேஸ்புக், ட்விட்டர் முதலான இணையவெளிகளில் பாலமுருகனின் இசைப்பதிவுகள் பலரால் பகிரப்பட்டுள்ளன. அவர் வாசித்த பல திரையிசைப் பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. கர்நாடக சங்கீத ரசிகர்களை அவர் நாகஸ்வரத்தின் இனிமையும், சுஸ்வரமான ராக வாசிப்பில் தென்படும் கற்பனை வளமும் அழகுணர்ச்சியும் , “யார் இந்தப் புதுக் காற்று?”, என்று திரும்பிப்பார்க்க வைத்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் நல்லூர் கந்தசாமி கோவிலின் ஆஸ்தான நாகஸ்வர வித்வானாய் இருக்கும் பாலமுருகன் தன் இசைப் பயணத்தைப் பற்றிக் கூறுகையில்,

“எங்கள் பூர்வீகம் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆவுடையார்கோயில். தாத்தா தவில் வித்வானாக இருந்தவர். அவர் காலத்தில் இலங்கைக்கு குடிபெயர்ந்தோம். அப்பா சுப்புசாமி பிள்ளை நாகஸ்வர வித்வான். அதைத் தவிர, தவில், வாய்ப்பாட்டு, மிருதங்கம், கடம், கஞ்சிரா ஆகியவற்றிலும் தேர்ச்சி பெற்றவர். என் எட்டாவது வயதில் அவரிடம் கற்றுக் கொள்ள ஆரம்பித்தேன்.”, என்கிறார்.

தன் இளமைக் காலங்களை இலங்கையில் நடந்த போருக்கிடையிலேயே கழித்த பாலமுருகன், தன் இருபதாவது வயது வரையில் வாழ்க்கையை பத்து கிலோமீட்டருக்குள்ளேயே கழித்ததாகக் கூறுகிறார்.

“தெரிந்தவர்கள் எல்லாம் போரில் மாண்டு விழுந்த போதும், அடுத்த நாள் பிழைத்திருப்போமா என்று அறியாத போதும் தொடர்ந்து சங்கீத சாதகம் செய்வதை என் தந்தையார் வலியுறுத்தி வந்தார். என் வீட்டில் திருவாவடுதுரை ராஜரத்தினம் பிள்ளை அவர்களின் கேசட்டுகளைத் தவிர வேறொரு நாகஸ்வர கேஸட்டுக்கு இடமில்லை. “அதைத் திரும்பித் திரும்பிக் கேளு. அதில் இருப்பவற்றை முழுவதும் வாசிக்க முடியாவிட்டாலும், அதிலிருந்து ஏதாவது சில விஷயங்கள் உனக்கும் ஒட்டிக் கொள்ளும். அப்படி ஒட்டிக் கொண்டாலே பெரிய விஷயம்தான்.”, என்று அப்பா சொல்வார். அந்த நெருக்கடி நிலையிலும் விடாது செய்த சாதகம்தான் என்னை இன்று ஒரே நாளில் மூன்று இடங்களில் வாசிக்க வேண்டும் என்றாலும் சமாளிக்க உதவுகின்றன.”, என்கிறார் 38 வயது பாலமுருகன்.

அளவெட்டி பத்மநாபனிடம் சிறப்புப் பயிற்சி பெற்றுள்ளார். வித்வான் பத்மநாபனுடனும் அதன்பின் இலங்கையில் பிரபலமாயிருந்த வித்வான் கானமூர்த்தியுடனும் துணை நாகஸ்வரமாக சில ஆண்டுகள் வாசித்த பின் , தனது 23-வது வயதில் இருந்து தனி ”செட்” அமைத்துக் கொண்டு வாசித்து வருகிறார். சிங்கப்பூர் செண்பக விநாயகர் கோயில் கும்பாபிஷேகத்துக்காக முதன் முதலாய் வெளிநாட்டுப் பயணம் சென்ற பாலமுருகனின் வாசிப்பு இன்று லண்டன், ஆஸ்திரேலியா, கனடா முதலான நாடுகளில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தென்னிந்தியாவிலும், குறிப்பாக கர்நாடகத்திலும் கேரளத்திலும் எண்ணற்ற அழைப்புகளை ஏற்று நிறைய கோயில் கச்சேரிகள் செய்து வருகிறார்.

 

இவர் வாசிப்பைக் கேட்டு, ஹரித்வாரமங்கலம் பழனிவேல், டி.ஏ.கலியமூர்த்தி, தஞ்சாவூர் கோவிந்தராஜன், மன்னார்குடி வாசுதேவன் போன்ற பெரிய தவில் வித்வான்கள் மனமுவந்து இவருடன் வாசித்திருக்கின்றனர்.

“2006-ல் யாழ்பாணத்துக்கு ஒரு கச்சேரிக்காக சென்றிருந்த போது அங்கு பாலமுருகன் இரண்டாவது நாயனம் வாசித்தார். அவர் வாத்யத்தின் நாதமே இனிமையாகவும் தனித்துவமாகவும் இருந்தது. எது வாசித்தாலும் அதிலிருந்த குளிமை மனத்தை ஈர்த்தது. 2009-ல் ஒரு வாய்ப்பு கிடைத்த போது அவரி இந்தியாவுக்கு அழைத்து வாசிக்க வைக்க சிபாரிசு செய்தேன். அதன்பின் நிறைய கச்சேரிகளில் சேர்ந்து வாசித்துள்ளோம். அன்று நான் அவரை அழைத்தது போக இன்று அவர் என்னை இலங்கைக்கு அழைத்து பல கச்சேரிகளில் வாசிக்க வழியும் செய்யும் அளவிற்கு வளர்ந்துள்ளார். முன்னணி கலைஞர்கள் மன்னார்குடி வாசுதேவன், திருப்புங்கூர் முத்துகுமாரிசாமி போன்றோரும் அவர் அழைப்பின் பேரில் சென்று இலங்கையில் அடிக்கடி வாசித்து வருகின்றனர்.” என்கிறார் தவில் வித்வான் கோவிலூர் கே.ஜி. கல்யாணசுந்தரம்.

இந்தியாவில் வாசிப்பதைப் பற்றி பாலமுருகன், ”2013-ல் எங்கள் வாசிப்பைக் கேட்டுவிட்டு திரு. ஏ.கே.பழனிவேல் எங்களை பொங்கல் தினத்தன்று சன் டிவி-யில் வாசிக்க ஏற்பாடு செய்தார். இந்த வருடம் திருவையாறு தியாகராஜ உற்சவத்திலும் முதன் முறையாக வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது.”. என்கிறார்.

கர்நாடக இசையோடு திரையிசையையும் வாசிப்பதைப் பற்றி பேசும் போது, “இன்றைய சூழலில், குறிப்பாக இலங்கையில் வாசிக்கும் போது, இளைஞர்கள் கவனத்தை தக்க வைக்க திரையிசைப் பாடல்களையும் வாசிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. கச்சேரிக்கு அழைத்தவர்கள் விரும்பிக் கேட்கும் போது தட்ட முடிவதில்லை. ரசிகர்களுக்காக திரையிசையை வாசித்தாலும் என் மனது எப்போதும் கர்நாடக ராகங்களையும் கீர்ததனைகளையும்தான் பெரிதும் விரும்புகின்றது.”

தன்னை அதிகம் பாதித்த இசையைக் குறிப்பிடும் போது, “ஜி.என்.பி, மதுரை சோமு, சேஷகோபாலன் ஆகியோரின் ராக ஆலாபனைகள் என்னை பெரிதும் பாதித்துள்ளன. கீர்த்தனைகள் பாடுவதில் மகாராஜபுரம் சந்தானத்தின் வழியை பெரிதும் விரும்புவேன். அதே வழியில் வாசிக்கவும் முயன்று வருகிறேன்.”, என்கிறார்.

 

கோயில் கச்சேரிகளில் ஓய்வின்றி வாசித்துவரும் பாலமுருகன் விரைவில் இந்தியாவிலும், அமெரிக்கா முதலான நாடுகளிலும் கர்நாடக இசைக் கச்சேரிகள் நடத்தும் சபைகளிலும் வாசிப்பார் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை.

balamurugan

அதன் தொடக்கமாக வரும் நவம்பர் 3-ம் தேதி சென்னையில், மயிலாப்பூர் ராக ஸுதா அரங்கில் இவர் கச்சேரி நடைபெறுகிறது.

For contributions:

Parivadini Charitable Trust,
Union Bank of India
Account Number: 579902120000916
branch: Kolathur, Chennai,
IFSC Code: UBIN0557994

Read Full Post »

இந்தியாவில் கடந்த சிலநாட்களாய் அதிகம் விவாதிக்கப்பட்டுவரும் #metoo-வில் என் குறைந்தபட்ச பங்களிப்பாய் செய்தகொண்ட சுயபரிசீலனையின் விளைவாய் சில சொந்த நிலைப்பாடுகளையும், நான் பங்களிப்பை அளித்து வரும் பரிவாதினியின் சார்பில் சில நிலைப்பாடுகளையும் எடுத்துள்ளேன்.

 

1. #metoo-வின் மூலமாய் குற்றம்சாட்டப்பட்டிருக்கும் கலைஞரின் கச்சேரிகளுக்கு இனி செல்வதில்லை.

2. அவர் பாடியவற்றைப் பற்றி ரசனைக் குறிப்புகள் எழுதுவதோ, அல்லது அவர் பாடல்களை சமூக வலைத்தளங்களில் பகிர்வதோ செய்யப்போவது இல்லை.

3. அவருடைய வாழ்க்கை வரலாறு எழுதுவது, நேர்காணல் வெளியிடுவது போன்ற செயல்களில் ஈடுபடப்போவதில்லை.

4. பரிவாதினி ஒருங்கிணைக்கும் நிகழ்ச்சிகளில் அவர்கள் இடம்பெற மாட்டார்கள்.

5. பரிவாதினி செய்து வரும் இணைய நேரலை ஒளிபரப்புகளிலும் அவர்களின் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப் போவதில்லை.

இந்தக் கலைஞர்களைப் பற்றி லலிதாராம் எழுதி அவர்களுக்கு ஒன்றும் ஆகப்போவதில்லை. அவர்கள் பரிவாதினியில் பாடித்தான் பெயர் வாங்க வெண்டும் என்ற நிலையுமில்லை என்பதை நன்கறிவேன்.

இத்தனை ஆண்டுகள் “அதெல்லாம் இருக்கட்டும் – அந்தத் தோடியும் காம்போஜியும் பாரு!”, என்றிருந்தது போல இனியும் இருப்பது சரியல்ல என்பதே கடந்த சில நாட்களில் நான் கண்டுகொண்டது. இந்தப் புரிதலை வெளிப்படுத்தும் குறைந்தபட்ச வெளிப்பாடே இந்த நிலைப்பாடு.

இதில் சில கலைஞர்களின் மேல் அபாண்டமாய் பழிசுமத்தியிருக்கக் கூடும். எத்தனையோ காலம் எண்ணற்ற இடர்பாடுகளைப் பற்றி மூச்சுவிடக்கூட முடியாத சூழலைக் கொஞ்சமாவது மாற்ற முற்படும் இந்த வேளையில் சன்னமாகவாவது எதிர்குரலை எழுப்பியிருப்பவர்கள் பக்கம் நிற்பதே சரியென்றுபடுகிறது. அந்தக் குரல்களில் ஒலிப்பவையெல்லாம் உண்மையின் குரல்கள்தானா என்ற ஆராய்ச்சிக்கு இது தருணமல்ல.

Read Full Post »

As a minimum response to the recent #metoo wave I introspected for the last few days and made a few decisions – some personal and some for Parivadini.

  1. I will not attend concerts of the artists who have been outed by the #metoo wave.
  2. I will not write notes/articles on their music. I will not share their music on Social media.
  3. I will not involve in writing their biography or publish their interviews.
  4. They will not be part of Programs curated under Parivadini banner.
  5. Parivadini will not webcast programs involving these artists.

I’m fully aware that these artists will not miss much if Lalitharam doesn’t write about them. Neither do these artists gain visibility y performing for Parivadini.

This is a minimum response to show support to the victims who have shown courage to come out speak up. I have been guilty to always looking at the glory of art and turning a blind eye on the prevalent exploitation. Time is truly up for such thinking now. This stance is a small step towards the change.

It is quite possible that some of the allegations could be baseless. At this juncture, I would like to stand with the side that didn’t have a chance to voice out their sufferings. Addressing concerns on baseless allegations can wait for now.

Read Full Post »

My friend Balaji Santhanam translated my the post I made on this subject yesterday. Thank you Balaji for taking the time to do this.

Yesterday, Chinmayi published a list of people in Carnatic music who crossed the lines with Women.

So, what is acceptable behavior? Is it true that they were affected? Can these be false allegations? If the accuser is unknown, can’t anyone can say anything about anyone else?

Questions, questions and more questions…

2951080-KWGMGAQN-32

It is not easy to find answers for these questions. But if we say that we need to find the answers before we can talk about this, it will take another hundred years to even utter a word.

Being a Carnatic music fan for many years, I have had the opportunity to move with many artists and students. After starting Parivadini, I got a chance to move with sabhas, their office bearers and “behind the scene” controllers. From that experience, I can say that let there be no doubt that this field is second to none in crossing the limits with women.

As far as music is concerned (could be the same with other fields too), it our fault that we put the artist in the same high pedestal as the art. The greatness of music is such that it can make the musician and the music seem inseparable in glare of the stage, when seen from a distance. But mirages don’t become the reality. The greasepaint has to come off of the stage.

Does this include only artists?

I know a girl student who stopped learning because an organizer took her inside the room telling the guru, while she was tuning her Tampura, “Send the disciple in. I have made special hot jeera water for you”

There are teachers who put conditions like this on the first day: “I may be free at any time. Even if I call you in the middle of the night, you need to send your daughter. Music isn’t easy”.

Whatever be the talents, for a musician to take up music as his profession a lot of compromises have to be made. After organizing concerts at a small level for just five years at Parivadini, we get calls from hundreds of aspirants (mostly their parents) asking for chances from all over the world. Often times, there is a desperation and anxiety in those who seek these opportunities. When a youngster’s father asks, “Is there anything else to be done saar”,  the dirty game has the chance to start right there. “Organizing concerts is an arduous task. We have to add some dirt to the mix” is how people start getting into the mud. Who is to draw the line on what is proper and what is not. It is the individual’s discretion.

In this situation, it is naive to believe that we can protect everyone just by emphasizing on what is morally right. How many ever ads there are about the importance of wearing helmet, it is the fine (could be just a token amount) that makes most to wear them. Given the present scenario, it is the fear of being outed that can bring down the violations against women.

Because of this, some innocents may be accused. However, we may have to bear that as a small price we pay for the larger good.

Without focusing on the names or the credibility of the accusations or the gossips around that, each of us should take this opportunity to accept our basic responsibility to at least honestly introspect and answer the tough questions for ourselves.

Am not saying this for others. Just once for myself.

Read Full Post »

நேற்று சின்மயி கர்நாடக சங்கீத உலகில் பெண்களிடம் வரம்பு மீறியவர்களென்று ஒரு பெயர் பட்டியல் வெளியிடத் தொடங்கியுள்ளார்.

இந்த விஷயத்தில், எது வரம்பு? பாதிக்கப்பட்டது உண்மையா? அவதூறாக இருக்க முடியாதா? பாதிக்கப்பட்டவர் விவரம் வெளியில் தெரியாத போது, யாரைப் பற்றி வெண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் சொல்லலாம் என்று ஆகிவிடாதா?

என்றெல்லாம் பல கேள்விகள்…

 

2951080-KWGMGAQN-32

Source: https://www.saatchiart.com/art/Painting-stop-child-abuse/999085/3690152/view

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதிலை சுலபமாக கண்டடைய முடியாது. இதற்கெல்லாம் பதில் தெரிந்த பின்தான் நாம் வரம்பு மீறலைப் பற்றி பேச வேண்டும் என்றால் இன்னும் ஒரு நூற்றாண்டுக்கு மௌனமாகத்தான் இருக்கமுடியும்.

கர்நாடக இசையின் தீவிர ரசிகனாக பல ஆண்டுகளாய் இருப்பவன் என்கிற வகையில் பல கலைஞர்களுடனும், மாணவர்களுடனும் பழக வாய்ப்பு எனக்கு அமைந்துள்ளது. பரிவாதினியைத் தொடங்கிய பின் பல சபாகள், அதன் நிர்வாகிகள் , நிர்வாகிகளாக இல்லாத போதும் அதிகாரம் செலுத்தும் நிழல் மனிதர்கள் என்று பல நாவல்களுக்கு உரிய மனிதர்களுடன் பழக நேர்ந்தது.

அந்த அனுபவத்தில், பெண்களிடம் வரம்பு மீறி நடப்பதில் இந்தத் துறை எந்தத் துறைக்கும் குறைந்ததல்ல என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.

இசையைப் பொருத்தவரை (மற்ற துறையிலும் இது பொருந்தலாம்) கலை காட்டும் உயரத்தில் கலைஞனையும் வைத்துப் பார்ப்பது நமது பிழையே. தூரத்தில் அமர்ந்து போலி வெளிச்சத்தில் மேடையில் அமர்ந்திருக்கும் கலைஞனைக் காணும்போது இசையின் உன்னதம் கலைஞனையும் கலையையும் இரண்டரக் காட்டும் மாயவித்தை இயற்கையானதே. ஆனால் தோற்றமயக்கங்கள் என்றைக்கு நிதர்சனங்களாயிருக்கின்றன. மேடை இறங்கயதும் அரிதாரம் கலைந்துதானே தீரவேண்டும்?

கலைஞர்கள் மட்டும்தானா இதில் அடக்கம்?

குரு ஸ்ருதி சேர்த்துக் கொள்ளும் போது,  ”சிஷ்யையை அனுப்பு, உனக்காக ஸ்பெஷல் சீரக வெந்நீர் போட்டு வைத்திருக்கிறேன்”, என்று அறைக்குள் அழைத்துப் போகும் காரியதரிசிக்கு பயந்து சங்கீதமே வேண்டாம் என்று முடிவெடுத்த பெண்ணை எனக்குத் தெரியும்.

“எனக்கு எப்போ வேணாலும் நேரம் கிடைக்கும். நான் பாதி ராத்திரிக்கு கூப்பிட்டாலும் பெண்ணை அனுப்பி வெக்கணும். சங்கீதம்-னா சும்மா இல்லை”, என்று முதல் நாளே பெற்றோரிடம் நிபந்தனை போட்டுக் கொள்ளும் வாத்தியார்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

என்னதான் திறமை வாய்த்தாலும்,  இசையை மட்டும் தொழிலாக வைத்துக் கொள்ள ஒரு கலைஞன் என்னென்னமோ சமரசங்களை செய்துகொள்ளத்தான் வேண்டியிருக்கிறது. ஐந்து வருடங்களாக மட்டுமே, அதுவும் மிகச் சிறிய அளவில் கச்சேரிகள் ஒருங்கிணைத்து வரும் பரிவாதினிக்கே வாரம் தவறாமல் வாய்ப்புகள் கேட்டு எங்கிருந்தெல்லாமோ அழைப்புகள் வந்தபடியிருக்கின்றன. அந்த அழைப்புகளில் பலநேரம் “எத்தைத் தின்றால் பித்த தெளியும்” என்கிற பதட்டமும் சேர்ந்து ஒலிக்கும்.

“வேற எதாவது பண்ணனுமா ஸார்…”, என்று ஒரு இளைஞனின் அப்பா இழுக்கும்போது தொடங்குகிறது இந்த அழுக்காட்டம். ”கச்சேரி நடத்தறது என்ன சுலபமாவா இருக்கு? கொஞ்சம் அழுக்கும் சேர்த்துக்கத்தான் வேண்டியிருக்கு”, என்றுதான் பின்னால் நிறைய அழுக்கையும் சேர்த்துக்கொள்ளும் அனைவரும் தொடங்குகின்றனர். எது கொஞ்சம், எது நிறையவென யார் வரையறுப்பது?

அவரவருக்குத் தக்கபடிதான்.

இந்த நிலையில் அறவுணர்வை மட்டும் நம்பி எல்லோரையும் பாதுகாத்துவிடலாம் என்று நம்புவது அப்பாவித்தனத்தின் உச்சம். என்னதான் பிரசாரம் செய்தாலும், ஹெல்மெட் போடாவிட்டால் நூறு ரூபாய் அபராதம் என்கிற விதியைக் கண்டு பயந்து தலைக்கவசம் அணிபவர்கள்தான் அதிகம். அந்த வகையில், எல்லை மீறினால் தன் பெயர் வெளியிடப்படும் என்கிற பயம் இன்றைய அவசியம் என்றே நினைக்கிறேன்.

இதனால் சிலர் மேல் அபாண்டமாய் பழிசுமத்தக்கூடும்தான். சூழலின் பெருநலன் கருதி இந்த விஷயத்தை சிறு சங்கடமாய் கடக்க வேண்டியதுதான் சரியென்றுபடுகிறது.

வெளியிடப்பட்டிருக்கும் பெயர்களும், அதன் நம்பகத்தன்மையும், அதையொட்டிக் கிடைக்கும் வம்புகளும் என்று விவாதங்களின் மையம் செல்லாமல், சங்கீதத்துறையில் ஈடுபடும் ஒவ்வொருவரும் தன்னைத்தானே கேள்வி கேட்டுக் கொண்டு நேர்மையாய் நமக்கு நாமே பதிலளித்துக் கொள்ளும் தருணமாய் இதை மாற்றிக்கொள்வதுதான் நாம் இப்போது செய்யக்கூடிய குறைந்தபட்ச பொறுப்புள்ள செயலாக இருக்கமுடியும்.

இதை நான் யாருக்கும் சொல்லவில்லை. எனக்கு நானே ஒருமுறை சொல்லிக் கொள்கிறேன்…

Read Full Post »

இந்தக் கட்டுரை முதலில் இங்கு வெளியானது

மிருதங்க வினைஞர் பர்லாந்தைப் பற்றி சென்ற வாரம் பார்த்தோம். அவர் பெயரில் விருது ஒன்று 2013-ல் தொடங்கப்பட்டது. அதனை முதலில் பெற்றவர் பர்லாந்தின் மகன் செல்வம். இவரும் தன் தந்தையாரைப் போலவே மிருதங்கம் தயார் செய்வதில் தேர்ச்சியும் தனித்தன்மையும் பெற்றிருந்தார்.

தன் இளமைக்காலங்களை ஒருமுறை நினைவுகூர்ந்த செல்வம்,

“என் தந்தையார் மிருதங்க வேலையில் பேர் பெற்றவர் என்றாலும் நான் அவரிடம் தொழில் கற்கவில்லை. பள்ளிக்குச் சென்று ஈ.எஸ்.எல்.சி வரை படித்தேன். 1950-களின் கடைசியில் அப்பாவுக்கு சர்க்கரை நோய் கட்டுக்கடங்காமல் ஆகிவிட்டது. வேலை செய்ய மிகவும் சிரமப்பட்டார். அதனால் படிப்பைத் தொடராமல் வேலைக்குச் செல்ல முடிவெடுத்தேன். மாஜிஸ்டிரேட் அலுவலகத்தில் “பங்கா” (மின்விசிறிக்கு முந்தைய காலத்தில் இருந்த கையால் இழுத்து இயக்கப்பட்ட விசிறி) இழுக்கும் வேலை கிடைத்தது.

எங்கள் குடும்பத்துக்கு மணி ஐயரும், அவர் குருநாதரும் நிறைய ஆதரவு அளித்துள்ளனர். என் தாத்தா செபாஸ்டியனுக்கு நிலம் வாங்கிக் கொடுத்தது வைத்தியநாத ஐயர்தான். குடிசைவீட்டை கட்டிடமாக்க மணி ஐயர் உதவியுள்ளார். அப்படி அவர்கள் ஆதரவு இருந்தும் நான் ஏன் இந்த வேலையில் இருக்கவேண்டும் என்று பலர் கேட்ட போதும் எனக்கு அவர்களிடம் செல்லத் தோன்றவில்லை. ஒருநாள் மணி ஐயரே அழைத்தார்.

“உன் அப்பாவுக்கு முடியவில்லை. நிறைய வேலை இருக்கிறது. உன்னால் செய்ய முடியுமா?”, என்று கேட்டார்.

நான் சற்றும் தயங்காமல், “செய்ய முடியும்”, என்றேன்.

”இதுவரை என்ன வேலை செய்திருக்கிறாய்?”

“அப்பாவும் சித்தப்பாவும் வேலை செய்வதைப் பார்த்திருக்கிறேன். நான் வேலை செய்ததில்லை”, என்றேன்.

அப்போது அப்பாவும் மணி ஐயர் வீட்டுக்குள் நுழைந்தார்.

”என்ன பர்லாந்து! உன் பையன் வேலை செஞ்சது இல்லை. பார்த்ததை வெச்சே செய்வேன்கறானே!”, என்று கேட்டார்.

அதற்கு என் அப்பா, “அவன் செய்வேன்னு சொன்னா நிச்சயம் செய்வான்.”, என்று அடித்துக் கூறினார்.

மகிழ்ந்த மாஸ்டரும், “மாடிக்குப் போ! உனக்குத் தெரிஞ்ச வேலையை செய்!”, என்றார்.

அன்று வேளாங்கன்னி மாதாவிடம், “என்னை மாஸ்டருக்கு கெட்ட பெயர் வரவழைக்காத படியும், என் தந்தையைவிட அதிக பேர் வாங்காதபடியும் வைக்க வேண்டும்”, என்று வேண்டிக் கொண்டு வேலையில் இறங்கினேன்.

அந்த அறைக்குள் 60 மிருதங்கங்கள் இருப்பது கண்டு மிரண்டு போனேன். பெரும்பாலான மிருதங்கங்களில் ஒரு துண்டு பேப்பர் சொருகியிருந்தது. அதில் இருந்த குறிப்புகள்தான் என் குரு. அவற்றில் எந்த மிருதங்கத்தில் எந்த வேலை செய்ய வேண்டும் என்று மாஸ்டர் எழுதியிருந்ததை வைத்து என் வேலையைத் தொடங்கினேன்.

என் அப்பா மாஸ்டரைப் பார்த்தாலே எழுந்துவிடுவார். என்னிடம் மாஸ்டர் இன்னும் நெருக்கமாக பழகினார் என்றே தோன்றுகிறது. நான் அவர் அருகில் தைரியமாக அமர்ந்து பேசுவேன். என்னிடம் என் அப்பாவின் வேலையைப் பற்றி நிறைய சொல்லி இருக்கிறார்.

“காசுக்காக என்றைக்கும் உன் அப்பா வேலை செய்ததில்லை. கச்சேரிக்கு நிறைய ஊர் ஊராகப் போகும் போது வீட்டுக்கு வரக் கூட நேரமிருக்காது. அந்த மாதிரி சமயங்களில் இடையில் எதோ ஒரு ஊரின் பிளாட்பாரத்தில் அமர்ந்து கூட வேலை செய்திருக்கிறார். நேரமில்லாவிட்டால் அடுத்த ஸ்டேஷன் வரை டிக்கெட் வாங்கி ஓடும் வண்டியில் கூட வேலை செய்திருக்கிறார். அந்த ஸ்ரத்தை உனக்கு வர வேண்டும்”, என்று அவர் சொன்னதுதான் எனக்கு வேத வாக்கு.

அந்த அறையிலேதான் இருப்பேன். தூக்கம் வந்தால் மிருதங்கங்களுக்கிடையிலேயே தூங்குவேன். சாப்பாடு மாஸ்டர் வீட்டிலிருந்தே வந்துவிடும். என் அப்பாவைப் பார்த்து நான் கற்றுக் கொண்டது ஒன்றுதான்.  ஒரு வாத்யத்தை தொட்டதும் அதில் என்ன வேலைகள் செய்ய வேண்டும், எந்த ஸ்ருதிக்கு சரியாக இருக்கும், எப்படி வார் பிடிக்க வேண்டும் என்றெல்லாம் உள்ளணர்வில் தெரிய வேண்டும். அந்த உள்ளுணர்வு கிட்டிவிட்டால் வேலை சிறப்பாக இருக்கும். மாஸ்டரின் குறிப்புகள் என் உள்ளுணர்வை வளர்த்துக் கொள்ள வழி வகுத்தன.

நாளடைவில் எனக்கு சரியாகப்பட்டதையே செய்ய ஆரம்பித்தேன். இது மாஸ்டருக்குத் தெரியும். ஒருமுறை, என் அப்பாவிடம் பேசும் போது, “இப்போது பாரு, நான் இந்த மிருதங்கத்தில் சில வேலைகள் சொல்கிறேன். செல்வம் பேசாமல் கேட்டுவிட்டு தனக்கு சரியென்று தோன்றும் வகையில் செய்து முடிப்பான்”, என்று கூறி என்னை அழைத்து அந்த வேலையைக் கொடுத்தார்.  நானும் அவர் எதிர்பார்த்தபடியே என் பாணியில் வாத்தியத்தை தயார் செய்து கொடுத்தேன். இருவரும் அதைக் கண்டு பெரும் மகிழ்ச்சியுற்றது ஒருவகையில் என் வேலைக்குக் கிடைத்த பெரிய அங்கீகாரம்.

பெங்களூரில் ஆலத்தூர் பிரதர்ஸ் கச்சேரிக்கு மாஸ்டர் வாசிக்க இருந்தார். ஏதோ காரணத்தினால் அவர்கள் வரமுடியாததால் மாலியின் கச்சேரி மாற்றாக ஏற்பாடாகியது. ஆலத்தூரின் ஸ்ருதி ஒரு கட்டை. மாலியின் ஸ்ருதியோ ஐந்து கட்டை. அரை நாளில் வாத்தியங்களை மாற்றி தயார் செய்தேன். கச்சேரி முடிந்ததும் மாஸ்டர் என்னை அழைத்து மாலி என்னைப் பார்க்க விரும்புவதாகக் கூறினார். மாலியைச் சென்று பார்த்த போது என்னை மிகவும் பாராட்டி, மிருதங்கத்தின் நாதம் தன்னை வாசிக்கத் தூண்டியதாகக் கூறினார்.

செல்வத்தை குடும்பத்தில் ஒருவராக பார்த்த மணி ஐயரின் மகன் ராஜாராம்,

“என் அண்ணாவின் காம்பஸ் போன்ற உபகரணங்களை மிருதங்க வேலையில் உபயோகிப்பதில் அப்பா, செல்வம் இருவருக்கும் பெரிய ஆவல் உண்டு. ஒருமுறை வெட்டுத்தட்டு எடுக்க காம்பஸில் வட்டம் போட செல்வம் அண்ணாவை அணுகிய போது அண்ணா ஏதோ வேலையாய் இருந்தார். இரண்டு மூன்று அழைத்தும் அண்ணா செவி சாய்க்காதலால் செல்வம் கோபத்தில் வெறும் கையால் எடுத்த வெட்டுத்தட்டு கச்சிதமாய் காம்பஸில் போட்ட வட்டம் போல் வந்ததைப் பார்த்து நாங்கள் ஆச்சரியப்பட்டுப் போனோம்.”

வேலையில் அசகாயசூரந்தான் என்றாலும், செல்வத்திடம் குறும்பும் உண்டு.

ஒருமுறை அப்பா தன் விருப்பத்திற்கு ஏற்றார் போன்ற நாதம் மிருதங்கத்தில் வரவில்லை என்று மீண்டும் மீண்டும் மாற்றச் சொல்லிக் கொண்டிருந்தார். செல்வமும் செய்து செய்து அலுத்துப் போய், “நாளைக்கு செஞ்சுத் தரேன் பாருங்க, உங்களுக்கு ஏற்றார் போல் இருக்கும்”, என்று கிளம்பிவிட்டார். அடுத்த நாள் கொண்டு வந்த வாத்யம் அப்பா எதிர்பார்த்த ஒலியை ஏற்படுத்தியது ஆனால் அதை வாசித்ததுமே, “என்னமோ சரியில்லையே, எதோ பெரிய சில்மிஷம் பண்ணி இருக்க!, என்ன பண்ணினாய்?”, என்று கேட்டார்.

செல்வமும் சிரித்துக் கொண்டே, பன்றியின் தோலை உபயோகித்ததாகவும், நீங்கள் கேட்ட ஒலி அதில்தான் வரும் என்றும் கூறிச் சிரித்தார். பர்லாந்திடம் இல்லாத இது போன்ற தைரியம் செல்வத்திடம் நிறைய உண்டு.

மணி ஐயர் தஞ்சாவூரில் இருந்து சென்னைக்குக் குடிபெயர்ந்த போது செல்வமும் சென்னைக்கு வந்து தொழிலைத் தொடர்ந்தார். துரதிர்ஷ்டவசமாக 1995-ல் நடந்த சாலைவிபத்தில் செல்வம் தன் வலது கரத்தை இழந்தார்.

2017 ஃபெப்ரவரியில் செல்வம் மறைந்தார். அவர் மகன்கள் இன்றும் மிருதங்க வினைஞர்களாகத் தொழில்புரிந்து வருகின்றனர்.

Read Full Post »

 

இன்று காலை ஃபேஸ்புக், அந்து வருடங்களுக்கு முன்னால் இதே நாளில் டி.ஆர்.எஸ் மறைந்த போது எழுதிய சிறு குறிப்பைக் காட்டியது.

I’ve never had a chance to say this to you in person on how much I admired your music despite meeting you so many times. Your concerts, lec dems and speeches were really useful for not just music students but for rasikas like me too. I cherish listening to each one of your speeches on GNB. They did help me a great deal when I wrote my book.

I couldn’t stop laughing when you read my book and asked me if I was interested in doing a PhD. Quite unfortunate that people remember you more for the PhD that you guided than for all the musical achievements you scaled over several decades.

To me you are ‘the’ master of kalpana swarams. I’m sure that even decades later your poruthams will continue to create waves among listeners. Your pallavis are deceptive. One day i will grow to appreciate enough of what you had done with them.

In the limited opportunities I got to interact one on one with you, you flooded me with anecdotes and insights – some controversial, some hilarious and some stunningly profound. Despite not agreeing with you on many things that you said, I knew each and every word you uttered were straight from your heart.

We will miss your presence when a young and upcoming talent takes stage. They will have to sing without your knowing nodding of the head and short and sweet speech at the end of the concert.

RIP Prof. TRS sir.

இதைப் படித்ததிலிருந்து அவர் அலை மனத்தில் அடித்தபடி இருக்கிறது.

அவ்வப்போது சில பதிவுகள் ஃபேஸ்புக்கில் எழுதினேன். அவற்றை இங்கு தொகுத்துக் கொள்கிறேன்

******

TR_Subramaniam-250

ஒரு பாடகர் என்கிட்ட “விவகாரம் வெச்சுப் பல்லவி பாடினா சௌக்யம் போயிடும்”-னார். நானும், “ரொம்ப சரி. நீங்க பாடினா போயிடும்.” னு சொன்னேன்..

TRS.

******

அவர் நாண நன்னயம் செய்துவிடல் என்று பல பல்லவன் பேருந்துகளில் பார்த்ததுண்டு. வாழ்க்கையில் அதிர்ஷ்டம் இருந்தால் பார்க்கக் கிடைக்கும். இன்னா செய்தாருக்கு நன்னயம் செய்து நான் பார்த்தவர் டி.ஆர்.எஸ்.

சென்னையில் எங்கு பாடினாலும் மேடையைவிட்டு நீக்கச் செய்து,கச்சேரியே செய்யமுடியாதபடி செய்த இடத்தில் பிடிவாதமாய் தன் கடைசி மூச்சுவரை இளைஞர்களுக்கும், அதிகம் மேடை கிடைக்காதவர்களுக்கும் கச்சேரி செய்ய வழி செய்த மேதை அவர். நாமாய் சென்று வாயை வலியப் பிடுங்கினால் அன்றி அவர் ஆற்றலில் ஒருதுளியைக் கூடி வெளியில் காட்டாது, தான் என்னவோ நேற்றுதான் கற்றுக் கொள்ள ஆரம்பித்த மாணவன் என்ற பாவத்தையே காட்டியபடி கச்சேரியில் அமர்ந்திருந்த டி.ஆர்.எஸ்…..

அவரைப் போன்ற மேதைகளை எல்லாம் தகுந்தவகையில் ஆவணப்படுத்தாமல் விட்டதுதான் நம் பெருமை….

 

******

கல்யாணி வரதராஜன் குறித்து சமீபத்தில் எழுதியிருந்தேன். அந்தப் பதிவில் இருக்கும் அபர்ணா பார்வதியைத் தவிர இணையத்தில் கிடைக்கும் டி.ஆர்.எஸ் பாடிய மற்றுமோர் அற்புதம் இங்கே.

 

******

2013-ல் பரிவாதினி ஏற்பாடு செய்திருந்த விளக்கவுரைகளில் பாலக்காடு ஸ்ரீராம் லயத்தைப் பற்றி பேசினார். அப்போது டி.ஆர்.எஸ் 90-களில் டெல்லியில் தேசிய ஒருமைப்பாட்டிற்காக சேர்ந்திசையாய் அமைத்திருந்த பாட்டைப் பாடிக் காண்பித்தார். அன்றிலிருந்து எப்போது ஸ்ரீராமைப் பார்த்தாலும் அந்தப் பாடலைப் பாடச் சொல்லிக் கேட்பேன். இன்று அதை ஃபேஸ்புக்கில் இட்டிருக்கிறார்.

டி.ஆர்.எஸ்-தான் இப்படி அமைக்க முடியும். இன்றளவில் ஸ்ரீராம்தான் அதைப் பாட முடியும்.

******

செண்ட்ரல் காலேஜ் சென்னையில் தொடங்கப்பட்ட போது அதன் முதல்வராக முசிறி சுப்ரமண்ய ஐயர் இருந்தார். அதில் சேர்ந்த மாணவர்களுள் டி.ஆர்.எஸ்-ம் ஒருவர். வருடாந்திர பரிட்சைகளுக்கு சில நாட்களுக்கு முன் மாணவர்களை காரிடாரில் சந்தித்த முசிறி, “பரிட்சைக்கு எல்லாம் தயார்தானே”, என்று விசாரிக்க ஒரு மாணவன் (டி.ஆர்.எஸ்) மட்டும் இல்லை என்றிருக்கிறார்.

மேலும் விசாரித்த முசிறியிடம், “சிலபஸில் ஆறு பல்லவிகள் என்று இருக்கிறது. ஆனால் எங்களுக்கு சொல்லிக் கொடுக்கப்பட்டதோ ஒரே பல்லவிதான்”, என்றிருக்கிறார் டி.ஆர்.எஸ்.

அதிர்ச்சியுற்ற முசிறி உடனே விசாரிக்க, ஆறு பல்லவிகள் சொல்லிவைக்கப்பட்டுள்ளதாய் அங்கு பணியாற்றிய ஆசிரியர்கள் கூறியுள்ளனர்.

சுப்ரமணியத்தை தனியே அழைத்து விசாரித்த முசிறியிடம்,

“அது ஆறு பல்லவிகள் அல்ல. ஒரே பல்லவிதான். நீங்க வேணா பாருங்க

கா ன லோ ல கரு ணா- -ஆ ல வா ல

மா ம து ர மீனா ட்சி- -அம் பா தே வி

இந்த ரெண்டு பல்லவியும் பாருங்க. ஒரே தாளம். ஒரே அமைப்பு. அதே எடுப்பு. அதே அருதிக் கார்வை. வார்த்தையையும் ராகமும் மாத்திட்டா வேற பல்லவியாயிடுமா? ஆறு பல்லவியும் ஒண்ணுதான் ஸார். நான் பாடிக் காட்டவா?”

கேட்ட முசிறிக்கு கோபம் வரவில்லை, “போய்த் தொலைடா ராஸ்கல்!”, என்று வாழ்த்தி அனுப்பி வைத்தார்.

டி.ஆர்.எஸ்-இன் பல்லவிகள் என்று யாராவது பி.எஹ்.டி செய்திருக்கிறார்களா தெரியவில்லை. நிச்சயம் செய்யலாம். வளமான தலைப்பு.

ஒரு நேர்காணலில், “பல்லவி-னா அடிச்சு உதைச்சு – கேட்க சுகமில்லாமதான் இருக்கும்-னு நினைக்கறாங்க. அப்படி ஒரு அவசியமும் இல்லை, உதாரணமா

“பாகாய் உருகு நெஞ்சே – பங்கஜ கண்ணனை நினைந்து” – என்று பீம்ப்ளாஸில் பாடிய பல்லவியை ஜென்மத்திற்கும் மறக்க முடியாது.

பாகாய் என்பதில் அந்தப் பாகு ஸ்வராக்ஷரமாய் கொதிநிலைக்கு வந்து “உருகு நெஞ்சேவில்” உருகி ஓடி நெஞ்சை உருக்கித் தள்ளும் அந்தப் பல்லவியை அவர் இரண்டு மூன்று முறை பாடியிருந்தால் அதிகம். ஆழ்மனதில் பதிந்துவிட்டது.

ஒரு ரேடியோ ஒலிபரப்பில்

“ர கு கு ல தில குடை வெலசின ரா ம ச ந்த்ரு டை – மாபாலி தேவுடு ஸ்ரீ”

என்றொரு பிலஹரி ராகப் பல்லவி.

ரகுகுல கீழ்காலத்தில்

திலகுடை – மத்யம காலத்தில்

வெலசின – துரித காலத்தில்.

பல்லவியாய் ஒருமுறை பாடிவிடலாம்?

இதில் த்ரிகாலம் செய்யமுடியுமா? நிரவ முடியுமா?

முடியும்.

முடிந்தது.

அதுதான் டி.ஆர்.எஸ்!

Read Full Post »

அது 1940-ஆம் வருடம். தன் அறையில் கையில் தியாகராஜர் கீர்த்தனையொன்றை வைத்துக் கொண்டு ஆழ்ந்த யோசனையில் இருக்கிறார் ஜி.என்.பி. அவரைத் தொந்தரவு செய்யாமல், அவரது மன ஓட்டத்தைக் கவனிப்போம்.

“வாஸ¤தேவா! என்று கூவியபடி வரும் இந்த துவார பாலகரைப் பாரீர்! இதுதான் பல்லவி. அந்த துவார பாலகன் கூவுகிறான் என்றால் அவன் உச்ச ஸ்தாயிலதானே பேசி இருக்க முடியும்? அப்படிப் பார்த்தா, தியாகராஜ ஸ்வாமியும் பாட்டை தார ஸ்தாயியில்தானே தொடங்கி இருப்பார்? இன்னிக்கு நமக்குக் கிடைக்கும் கீர்த்தனை வடிவம் தியாகராஜ ஸ்வாமி அமைத்தது போலதான் இருக்கணும்-னு இல்லையே. நிறைய பேர் இந்தப் பாட்டை மத்ய ஸ்தாயி பஞ்சமத்தில் தொடங்கி, மத்ய ஸ்தாயிக்கே பிரதானம் அளித்துப் பாடறா. கல்யாணியை எந்த ஸ்தாயியில் பாடினாலும், எந்த காலப்பிரமாணத்தில் பாடினாலும், எந்த ஸ்வரத்தில் நின்று பாடினாலும் அழகு சொட்டும்தான். ஆனாலும் பாட்டுக்கென்று ஒரு போக்கிருக்கில்லையா? தார ஸ்தாயி ஷட்ஜத்தில் தொடங்கி ‘வாஸ¤தேவா!” என்றால்தானே துவார பாலகனின் உற்சாகத்தைக் காட்ட முடியும். “வாஸ¤தேவா என்று கூவினான்” என்னும் வாக்கியத்தைப் பார்த்தால், ‘வாஸ¤தேவா’ என்னும் சொல் தார ஸ்தாயில தொடங்கி, ‘என்று’ என்ற சொல்லில் narator-இன் பேசுவது போல ஒரு இறக்கத்தை மத்ய ஸ்தாயில காட்டி, ‘கூவினான்’ என்ற சொல்லில் கூவுதலைக் காட்ட திரும்ப மத்ய ஸ்தாயியிலிருந்து தார ஷட்ஜத்துக்குக் கொண்டு போய் நிறுத்தினால்தானே பாட்டின் பாவம் முழுமையா வருது. பல்லவியை இப்படிப் பாடிதான் பார்ப்போமே”

‘ஏதாவுனரா’, ‘கமலாம்பா பஜரே’, ‘தல்லி நின்னு’, ‘நிதி சால’ என்று எத்தனையோ கல்யாணிகள் கோலோச்சும் வேளையில், எங்கேயோ உறங்கிக் கிடக்கும் பாடல் எப்படி மெருகேறி கச்சேரிக்குத் தயாராகிறது பாருங்கள்!

https://gaana.com/song/vasudevayani-raga-kalyani-g-n-balasubramaniam

“ஸாஸ ஸநிநிதபாப” என்று தொடங்கி பல்லவி கொஞ்சம் கொஞ்சமாக புது உரு பெறுகிறது. ‘வெடலின’ என்ற இடத்தில் ‘கநிதப’ என்றொரு சுழற்றலில் கல்யாணியின் அழகைச் சொட்ட விடுகிறார் ஜி.என்.பி. அனுபல்லவியோ இந்திரன் முதலான வானவர்கள் வாஸ¤தேவனைப் பூஜித்ததைக் குறிக்கிறது. பலர் பூஜிக்க வேண்டுமல்லவா? அதனால், ‘பூஜிதுடை’ என்ற இடத்தில் ‘‘மேல் ஷட்ஜத்தில்’ நின்று ஒருவரும், ‘மத்யம ஸ்தாயி நிஷாதத்தில்’ நின்று ஒருவரும், ‘தார ஸ்தாயி ரிஷபத்தில்’ நின்று ஒருவரும் பூஜிப்பது போல சங்கதிகள் மலர்கின்றன. ‘மிகவும் அழகாக நர்த்தனம் செய்து, எளியோரைக் காக்கும் ஹரியை போற்றுவதாகக்’ கூறும் சரணத்தில் ‘நிதா வேடுசுனு’ என்ற இடத்தில் ‘நிதா’-வை ஸ்வராக்ஷரமாக்கி, நிஷாதத்தை கொஞ்சமாக அசைத்து, கமகத்துடன் அந்த வரியை முடிக்கிறார். ‘ராக தாளத்துடன் பாடுவதைக் குறிக்கும்’ வரிகளுக்கு அனுபல்லவியில் போட்ட சங்கதிகளே கச்சிதமாய் பொருந்துகின்றன. துரிதமாகவும் இல்லாமல், சவுக்க காலப்ரமாணத்திலும் இல்லாமல், துவார பாலகனின் அழகிய நடனத்தைக் காட்டும் வகையில் மத்யம காலத்தில் பாடுகிறார் ஜி.என்.பி. கல்யாணி ராகத்தின் உத்திராங்கத்தின் அழகு முழுவதையும் வெளிப்படுத்தும் வண்ணம் ஒரு புதிய கீர்த்தனை தயாராகிவிட்டது.

Vasudevayani

வாஸுதேவயனி கீர்த்தனை எஸ்.ராஜம் கைவண்ணத்தில். ஜி.என்.பி நூற்றாண்டு மலருக்காக 2009-ல் வரைந்து கொடுத்த ஓவியம்.

மேற்கூறியது போலத்தான் கீர்த்தனையை ஆராய்ச்சி செய்து ஜி.என்.பி பிரயோகங்களையும், சங்கதிகளையும் அமைத்தாரா என்று கூறுவதற்கில்லை. எனினும், மேற்கூறிய வகையில்தான் அந்த கீர்த்தனையைப் பாடியிருக்கிறார் என்று உறுதியாகக் கூறலாம். அவர் கச்சேரி மேடைக்கு அறிமுகப் படுத்திய கீர்த்தனைகளை எடுத்து, கீர்த்தனையின் பாவத்தையும், அந்த கீர்த்தனையை அவர் கையாண்ட முறையையும் ஒப்பிட்டு நோக்கினோமெனில், அவர் பாடலை மெருகேற்றிய விதம் பாடலில் பொதிந்திருக்கும் பாவத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

ஜி.என்.பி-யால் மெருகேற்றப் பட்டு, கச்சேரி மேடைக்கு வந்த பாடலை, 1940-ஆம் வருடம் 78 rpm இசைத் தட்டாக வெளியிட்டார். திரு. கும்பகோணம் ராஜமாணிக்கம் பிள்ளை வயலின், திரு. பாலக்காடு மணி ஐயர் மிருதங்கம். மொத்தமே எட்டு நிமிட நேரத்திற்குதான் பதிவு செய்யக் கூடிய இசைத் தட்டில், ஒரு ராகம் பாடி, அதை கிரஹித்து வயலின் ராகம் வாசித்து, கீர்த்தனைகளை சங்கதிகளுடன் பாடி, கல்பனை ஸ்வரம் பாடி, தனி ஆவர்த்தனமும் கொடுத்து, கேட்பவருக்கு நிறைவையும் கொடுப்பதென்பது, ‘next to impossible’, என்பார்களே, அந்த வகையில் சேரும். அதை இந்தக் கூட்டணி செய்து காட்டியது என்பதைச் சொல்லவும் வேண்டுமா என்ன?

தார ஸ்தாயி ஷட்ஜமத்தில் தொடங்கி,கீர்த்தனையின் போக்கைப் போலவே ஆலாபனையிலும் கல்யாணியின் உத்தராங்கத்தையே பிரதானப்படுத்தி ஒன்றரை நிமிடத்துக்குள் ஜி.என்.பி-யின் அதிசயக் குரல் அழகான குழைவுகளுடனும், அளவான பிருகாக்களுடனும் படம்பிடித்துக் காட்ட, அந்த அழகிற்கு அழகு சேர்க்கும் வகையில் முப்பது நொடிகளுக்குள் தன் வில் வித்தையை ராஜமாணிக்கம் பிள்ளை காட்டியவுடன் பாலக்காடு மணியையர் தனது மிருதங்கத்தின் தொப்பியை இரு முறை தட்டுகிறார். அதன் பின், தியாகராஜரின் பிரகலாத பக்தி விஜயத்தில் வரும் ‘வாஸ¤தேவயனி’ கீர்த்தனை புதுப் பொலிவுடன் பவனி வருகிறது. ‘சநிபதநி வாஸ¤தேவயனி’ என்று தொடங்கி கல்பனை ஸ்வரம் விறுவிறுப்பாக சில நிமிடங்களுக்குத் தொடர்கிறது. அதன் பின், சதுஸ்ர நடையை மூன்றாலும் ஐந்தாலும் இணைத்து சில ஆவர்த்தனங்களும், மின்னல் வேகத்தில் பரவும் வலக்கைக்குச் சம்பந்தமே இல்லாதது போல இடது கை ரஞ்சகமாய் சில குமுக்கிகளை உதிர்த்தபடி சில ஆவர்த்தனங்கள் என்று வாசித்து, இறுதியில் மோரா கோர்வை வைத்து, பாலக்காடு மணி ஐயர் ஒன்றரை நிமிடதுக்குள் ஒரு தனி ஆவர்த்தனம் வாசித்த பின், ஜி.என்.பி பல்லவியைப் பாடி பாடலை முடிக்கிறார்.

எத்தனை தலைமுறையினர், எத்தனை முறை இந்த ரிக்கார்டை கேட்டிருப்பார்கள்? “மாமா! உங்க காரில் வாஸ¤தேவயனி பாட்டு வருமா? இல்லைன்னா நான் உங்களோட வர மாட்டேன்”, என்று சொன்ன மூன்று வயது பாலகனை எனக்குத் தெரியும். பத்து நிமிடத்தில் ஒரு முழு கச்சேரி கேட்ட நிறைவை எப்படி இவர்களால் ஏற்படுத்த முடிந்தது என்று எண்ணி எண்ணி தூக்கம் வராமல் தவித்தவர்களுள் என் நண்பர்களும் சிலருண்டு. அப்படியிருக்கையில், 1940-ஆம் வருடத்தில் பத்தியாரம் ரூபாய் (இன்றைய கணக்குப் படி மாற்ற வேண்டுமானால், அந்த ஐந்து பூஜ்ஜியங்களுக்குப் பக்கத்தில் எத்தனை பூஜ்ஜியங்களைச் சேர்க்க வேண்டியிருக்குமோ?) ‘ராயல்டி-யாக’ மட்டும் ஜி.என்.பி-க்குக் கிடைத்ததில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. “அவருடைய கடைசி காலம் வரையில் இந்த ரிக்கார்டின் மூலம் ராயல்டி பணம் வந்தபடியே இருந்தது”, என்கிறார் ஜி.என்.பி-யின் இளவல் பாலகிருஷ்ணன்.

“அவர் கொண்டு வந்த பாட்டுகளெல்லாம், அதுக்கு முன்னாடி எப்படியிருந்தது-னு கேள்வியே இல்லை! அதெல்லாம் நிக்கலை, ஜி.என்.பி கொண்டு வந்தது எல்லாம் காலத்தைக் கடந்து நின்னு இருக்கு!”, என்று பல தலைமுறை பாடகர்களை கேட்டிருக்கும் எஸ்.ராஜம் கூறிய போது, “உண்மைதான்! இல்லையெனில், ஜி.என்.பி மறைந்து பதினைந்து ஆண்டுகள் கழித்துப் பிறந்தவனைப் அந்த 8 நிமிட கல்யாணி எப்படி பைத்தியமாய் அடித்திருக்க முடியும்?”, என்றெண்ணிக் கொண்டேன்!

இசையுலக இளவரசர் ஜி.என்.பி நூலில் இருந்து.

Read Full Post »