சென்னை போன்ற நகரங்களில் கலைக்காக இசைப் பயிற்சி பெருபவர்கள் அதிகம். கிராமப்புரங்களில், குறிப்பாக நாகஸ்வரம்/தவில் பயில்பவர்களைக் காணும் போது கலைக்காக கற்பவர்களைவிட வறுமையினால் இசைப்பள்ளிக்கு வரும் மாணவர்கள் பலரைக் காணமுடியும்.
அத்தகைய மாணவர்களை ஊக்கிவிக்கும் வண்ணம், முடிந்த அளவில் பரிவாதினியின் மூலமாக உதவி செய்யவுள்ளோம். அதன் தொடக்கமாக வரும் நவம்பர் 3-ஆம் தேதி நான்கு மாணவர்களுக்கு (3 நாகஸ்வரம், 1 தவில்) இசைக்கருவிகளைத் வாங்கித் தரவுள்ளோம்.
பரிவாதினி ஒருங்கிணைத்திருக்கும் வித்வான் யாழ்பாணம் பாலமுருகன் அவர்களின் நாகஸ்வரக் கச்சேரிக்கு முன் இந்த நிகழ்வு இடம் பெரும்.
மாணவர்கள் விவரம்:
நாகஸ்வரம்: பாலகணேஷ் (16), சந்திரசேகர் (18), வேல்மூர்த்தி (17)
தவில்: கோபீஸ்வரன் (9)
இந்த முயற்சியில் பங்களிக்க விரும்புவோர் பரிவாதினிக்கு நன்கொடை செலுத்தலாம்.
For contributions:
Parivadini Charitable Trust,
Union Bank of India
Account Number: 579902120000916
branch: Kolathur, Chennai,
IFSC Code: UBIN0557994
A highly laudable effort.