Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for திசெம்பர், 2018

டிசம்பர் சீஸனில் பல்லாயிரக்காண கச்சேரிகள் நடக்கின்றன. இருப்பினும் நாகஸ்வர கச்சேரிகள் பெரும்பாலும் தொடக்க விழா என்ற கேலிக்கூத்துக்கே ஒதுக்கப்படுகின்றன. மங்கல இசை என்ற பெயரில் பெரும் கலைஞர்களை அவமதிப்பதைப் பற்றி தனி பதிவு எழுதவேண்டும்.

நாகஸ்வர கச்சேரிகள் வைக்காததற்கு, சிறிய ஹாலில் அதிக சத்தம், கூட்டம் வராது என்று தொடங்கி பக்கத்துவீட்டுப் பாட்டிக்கு பல் விழுந்துவிட்டது வரை ஆயிரம் காரணங்கள்.

”அதுதான் பொங்கலில் நாகஸ்வர விழா இருக்கிறதே”, என்று எதிர் குரல் வேறு. “சீஸனின் போது நாகஸ்வரக் கலைஞர்கள் தீண்டத்தகாதவர்களா”, என்று சிலரைக் கேட்டு பகைத்துக் கொண்டதுதான் மிச்சம்.

80057-gxebrxxkzz-1516819858

இந்த வருத்தங்கள் பல வருடங்களாய் இருந்தாலும் பெரியதாய் ஒன்றும் செய்யமுடியவில்லை. இந்த நிலையில் மூன்று வருடங்களுக்கு முன் வித்வான் டி.எம்.கிருஷ்ணாவின் தலைமையில் சுமனஸா அறக்கட்டளை ஓர் அரிய, மிகவும் தேவையான முயற்சியை முன்னெடுத்தது.

டிசம்பரில் கச்சேரி நடத்தும் சபைகளுடன் பேசி நாகஸ்வரத்துக்கென்று சில கச்சேரிகளை ஒதுக்கி வைத்திருக்கிறது. கச்சேரி தேதியையும் நேரத்தையும் மட்டும் சபை அளித்தால் போதும். மற்ற அனைத்தையும் சுமனஸா அறக்கட்டளையே பார்த்துக் கொள்கிறது. கச்சேரிகளுக்கு கலைஞர்களை முடிவு செய்வதிலிருந்து, கச்சேரி செலவுகளை ஏற்றுக்கொள்வது வரை அனைத்தையும் சுமனஸா அறக்கட்டளை பார்த்துக்கொள்கிறது.

இந்தப் பணியில் துறை சாதனையாளர் வியாசர்பாடி கோதண்டராமனும் இருப்பதால் பெரும்பாலும் அதிகம் அறியப்படாத கலைஞர்களுக்கு இந்த மேடை கிடைக்கிறது. இன்று நல்ல பெயருடன் விளங்கும் மயிலை கார்த்திகேயன் என்ற அற்புத இளம் கலைஞரை நான் முதன் முதலில் கேட்டது இந்த அறக்கட்டளை நாத இன்பத்தில் ஏற்பாடு செய்திருந்த டிசம்பர் கச்சேரியில்தான்.

இந்த சீஸனில் மட்டும் ஐந்து சபைகளில் பதினோரு கச்சேரிகள் ஏற்பாடாகி சிறப்பாக நடந்துள்ளன.

சென்ற வருடம், டிசம்பர் தவிர மற்ற மாதங்களிலும் நாகஸ்வர கச்சேரிகள் இந்த அறக்கட்டளையால் நடத்தப்பட்டுள்ளன.

தமிழ்நாடு மட்டுமின்றி மற்ற மாநிலங்களில் இருந்தும், நாகஸ்வரக் கலைஞர்கள் வரவழைக்கப்படுகின்றனர். அதிக விளம்பரம் இன்று சத்தமில்லாமல் இது ஒரு புரட்சி என்றுதான் சொல்லவேண்டும்.

மிக அவசியமான முயற்சியை முன்னோடியாய் முன்னெடுத்திருக்கும் சுமனஸா அறக்கட்டளைக்கும், வித்வான் டி.எம்.கிருஷ்ணாவுக்கும் சங்கீத உலகம் என்றென்றும் கடன்பட்டிருக்கும்.

வரும்காலங்களில் பதினொன்று பல நூறாகப் பெருகும் என்று நம்புவோம்.

Read Full Post »

தவில்/நாகஸ்வரக் கலைஞர்களைப் பற்றிய முக்கிய ஆவணம் முனைவர். பி.எம்.சுந்தரம் எழுதியுள்ள ‘மங்கல இசை மன்னர்கள்’. அந்தப் புத்தகத்தின் முடிவில், பல கலைஞர்களைப் பற்றி எழுத முடியாமல் போனதை நூலாசிரியர் சொல்கிறார். சமீபத்தில் நண்பர் சரவணன் பல அரிய கலைஞர்களின் புகைப்படங்களை அனுப்பி வைத்தார்.

அதைப் பார்த்ததும், ‘மங்கல இசை மன்னர்கள்-ன் தொடர்ச்சியாய் இந்தக் கலைஞர்களைப் பற்றிய பதிவுகளை செய்யலாமா என்ற எண்ணம் வந்தது. விரிவான பதிவுகளுக்கு மாதக் கணக்கில் உழைப்பு தேவை. விரைவாய் ஒரு குறிப்பு வரைந்து, முதல்கட்டமாய் ஒரு நாட்காட்டியாய் இருக்கும் படங்கள் கொண்டு உருவாக்கலாம் என்ற எண்ணம் உதித்தது.

எண்ணத்தை ஃபேஸ்புக்கில் பகிர்ந்த போது கிடைத்த வரவேற்பைப் பார்த்ததும் காரியத்தில் இறங்கினோம். ஒரு வாரத்தில், ஆறு தவில் கலைஞர்கள், ஆறு நாகஸ்வரக் கலைஞர்களை பட்டியலிட்டுக் கொண்டு (யாரை விடுவது என்பதில் பெரும்பாடுபட்டோம் என்பதைச் சொல்லவேண்டியதில்லை), படங்களைப் பெற்று பெரும்பாலும் அவர்களிடம் கற்றவர்களிடம் பேசி சிறு குறிப்பு ஒன்றையும் வரைந்தோம்.

நாட்காட்டியிஒல் இடம் பெற்றிருக்கும் கலைஞர்களின் பட்டியல் கீழே:

Valangaiman Shanmugasundaram
Sembanarkoil Brothers (SRD Muthukumaraswami and SRD Vaidhyanathan)
Perumpallam Venkatesan
Madurai Ponnuthayi
Thirucherai Muthukumaraswami
Vanidakaratheru Mani/Manpoondiah Pillai
Poraiyar Venugopal
Dharmapuram Govindarajan
Swamimalai Govindaraja Pillai
Thirumagalam Somaskanda Pillai
Kivalur Sinagaravelu Pillai
Pandhanainalloor Dakshinamurthi

காலண்டரைப் பற்றிஒய அழகான அறிமுகம் இன்று இந்து நாளிதழில் நண்பர் கோலப்பனின் வாயிலாக வந்துள்ளது.

calendar

முதன் முயற்சி என்பதால் மிகக் குறைவான பிரதிகளே அச்சடித்துள்ளோம். நாட்காட்டியின் பிரதிகள் வேண்டுவோர்.

Parivadini Charitable Trust, Union Bank of India Account Number: 579902120000916 branch: Kolathur, Chennai, IFSC Code: UBIN0557994

என்ற வங்கிக் கணக்கில் பணம் செலுத்தி parivadinimusic@gmail.com-க்கு மின்னஞ்சல் அனுப்பலாம். ஒரு பிரதியின் விலை 100 ரூபாய். வெளி ஊர்களில் இருப்பவர்களுக்கும் அனுப்பி வைக்கப்படும். அஞ்சல் செலவுக்கு என்று நீங்கள் இஷ்டப்பட்டதை சேர்த்துச் செலுத்தலாம். செலுத்தாவிடினும் (வெளிநாடென்றாலும்) நாட்காட்டி அனுப்பிவைக்கப்படும்.

இதுவொரு தொடக்கம். தொடர இறையருள் கிட்ட வேண்டும்.

Read Full Post »

“ஹிந்துஸ்தானி இசையில் உள்ளது போல ஒவ்வொரு ஸ்வரத்திலும் ஸர்வ நிச்சயமாய், நங்கூரம் பாய்ச்சியது போல நின்று கார்வையில் கேட்பவரை மூழ்க வைக்கும் கம்பீரக் குரல்கள் தென்னகத்தில் உண்டா?”,   என்று கேட்பவர்களுக்கு பதிலளிக்க வித்வான் வோலேடி வெஙக்டேஸ்வருலுவின் குரலைத் தாண்டிச் செல்லத் தேவையில்லை.

Voleti

நினைத்தது பேசும் சாரீரம் அமையப் பெற்றவர்களின் கச்சேரிகளில், குரலின் வசீகரத்தையும், அது செய்யக் கூடிய ஜாலத்தைக் காட்டும் களங்களாகவும் மாறி, சங்கீதம் இரண்டாம் பட்சத்துக்குத் தள்ளப்பட்டுவிடுவதுண்டு. வோலேடியின் கச்சேரிகளில் தன் திறனை காட்ட கச்சேரி ஒரு கருவி என்றல்லாமல் இசையின் அழகை வெளிப்படுத்த தன் குரல் ஒரு கருவி என்கிற அர்ப்பணிப்பு மனோபாவத்தை உணர முடியும். கச்சேரியின் தொடக்கத்தில் கண்ணை மூடி ஸ்ருதியுடன் வோலேடி கலந்து விட்டால் அனைத்தையும் மறந்த மோன நிலை கச்சேரி முடியும் வரை தொடர்ந்து (அவருக்கு மட்டுமல்ல; கேட்வருக்கும்) நிலைக்கும்.

சங்கீத உலகில் ஸ்வரஞானி என்றால் அது வோலேடிதான் என்று பலர் குறிப்பிடுவதுண்டு. முனுகண்டி வெங்கடராவ் பந்துலுவிடம் அடிப்படைகளைக் கற்று கச்சேரி செய்யும் நிலைக்கு வந்துதும், சங்கீத கலாநிதி ஸ்ரீபாத பினாகபாணியிடமும் பயிற்சியைத் தொடர்ந்தார்.

பினாகபாணி வோலேடியைப் பற்றி கூறுகையில், “அவரால் எப்போதாவது வர முடியுமென்பதால் அதிகம் உட்கார வைத்து சொல்லிக் கொடுத்ததில்லை. என்னுடைய பாட்டுப் புத்தகங்களைப் பார்த்து ஒரு முறை எழுதிக் கொண்டாரென்றால் அதை அப்படியே பாடிவிடக் கூடிய திறமை அவருக்கு இயற்கையிலேயே இருந்தது.”, என்றுள்ளார்.

அகில இந்திய வானொலியில் அவர் தொடங்கிய சங்கித சிக்ஷணா என்ற நிகழ்ச்சி ம்ஜூலம் 300-க்கும் மேற்பட்ட அற்புதமான பாடல்களை இந்தியா முழுவதும் இசை மாணாக்கர்கள் கற்க முடிந்தது. நாளடைவில் தமிழகத்திலும் அவருடைய பெயர் பரவி பல கச்சேரிகள் நடந்தன. கச்சேரி செய்வதில் அதிகம் ஆர்வமில்லாதிருந்த வோலேடியை சக கலைஞர்கள் வற்புறுத்தி வரவழைத்தனர். வோலேடி பாட வேண்டுமென்பதற்காகவே லால்குடி ஜெயராமன் பஹாடி ராகத்தில் தில்லானா ஒன்றை உருவாக்கினார்.

ஹிந்துஸ்தானி இசையில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்த வோலேடி, வடக்கத்திய ராகங்களை எந்த ஒரு உஸ்தாதுக்கும் இணையாக இசைக்கக் கூடிய திறன் பெற்றிருந்தார். ஒரு முறை படேகுலாம் அலிகானிடமே தும்ரி ஒன்றைப் பாடி பாராட்டைப் பெற்றதை ஒரு நேர்காணலில் வோலேடி கூறியுள்ளார். பந்துவராளி, ஹிந்தோளம் போன்ற ராகங்களை அவர் விஸ்தரிக்கும் போது அவரிடம் இருந்த ஹிந்துஸ்தானி இசையின் தாக்கத்தை உணர முடியும். கர்நாடக இசைக்கென்றே பிரத்யேகமான ராகங்களான கேதாரகௌளை, சுரட்டி போன்ற ராகங்களின் வடகத்திய வாடை சற்றும் கலக்காமல் இசைப்பதிலும் வோலேடி வல்லவர்.

ஓர் அரிய புகைப்படத்தில், பின்னணியில் அரியக்குடியும் படே குலாம் அலிகானும் இருக்க, வோலேட்டி தன் தம்புராவை ஸ்ருதி சேர்த்துக் கொண்டிருப்பார். இந்தப் படமே அவருடைய சங்கீதத்தின் முழுமையான வர்ணனை எனலாம்.

Read Full Post »

1935-ல் தன் முப்பதாவது பிறந்த நாளைக் காண்பதற்கு முன் மறைந்து விட்ட இலுப்பூர் பஞ்சாபிகேச பிள்ளையின் பெயர் இன்றளவும் தலை சிறந்த கலைஞர்களின் பட்டியலில் தவறாமல் இடம் பெற்று வருகிறது.

பஞ்சாமி என்று அழைக்கப்பட்ட பஞ்சாபகேச பிள்ளையின் இள வயதில் தன் தாயாரிடம் வாய்ப்பாட்டு கற்று வந்தார். இயற்கையிலேயே பஞ்சாமிக்கு அமைந்திருந்த லய நிர்ணயத்தை கண்டு மலைக்கோட்டை வெங்கடாசலதவில்காரரும், ’கோடையிடி’ லால்குடி அங்கப்பத் தவில்காரரும் தவில் கற்றுக் கொடுத்தனர்.

தனது ஏழாம் வயதில் தன் தமையனாரின் நாகஸ்வரத்துக்கு தவில் வாசிக்க ஆரம்பித்த பஞ்சாமி, பதினைந்து வயதாவதற்குள் தவில் உலகின் முடிசூடா மன்னன் என்ற நிலையை அடைந்தார். நாகஸ்வர மேதை மதுரைபொன்னுசாமி பிள்ளையுடன் ஒப்பந்தம் போட்டுக் கொண்டு, ஐந்து வருட காலம் அவருடைய மேளக் கச்சேரிகளுக்கு பஞ்சாமி வாசித்தார்.

பஞ்சாமிக்கு 22 வயதாகும் போது, மதுரை பொன்னுசாமி பிள்ளை, ராஜரத்தினம் பிள்ளை போன்ற நாகஸ்வர ஜாம்பவான்களுக்கு வாசித்து வந்தார். நீடாமங்கலம் மீனாட்சி சுந்தரம் பிள்ளையுடன் சேர்ந்தும் எண்ணற்ற கச்சேரிகள்செய்து வந்தார். லயத்தில் தன்னிகரற்று விளங்கினாலும், அவருக்கு மேடைக் கச்சேரிகளின் பால் காதல் இருந்தது. நல்ல ரவை ஜாதி சாரீரமும், ராக லட்சணங்களில் நல்ல தேர்ச்சியும் பெற்றிருந்தார் பஞ்சாமி.  ‘நிரவதிஸுகதா’, ‘மரியாதகாதுரா’, ‘பலுகவேமி’ போன்ற கிருதிகளுக்கு இவர் அமைத்த சிட்டை ஸ்வரங்கள் இன்றளவும் மிகப் பிரபலமாய் உள்ளன. ராஜரத்னம் பிள்ளை நிரவதிஸுகதா பாடலை கிராமஃபோன் ரிக்கார்டாக வெலியிட்டுள்ளார். அது அவர் பஞ்சாமிக்கு பெய்த காணிக்கை என்றே சொல்லலாம். ஏனெனெனில், ஒரு பாடலில் அனுபல்லவிக்கும் சரணத்துக்கும் இடையில் ஒரு சிட்டை ஸ்வரம் வாசிப்பதே வழக்கம். இந்த ரிக்கார்டில் சரணத்துக்குப் பின் பஞ்சாமி அமைத்த மூன்று சிட்டை ஸ்வரங்களை வாசித்துள்ளார்

panjami

“பஞ்சாமி பிள்ளை இசையில் தோய்ந்த பல பாடல்களை இயற்றியுள்ளார். அவற்றில்பதினொன்று மட்டுமே இன்று கிடைக்கின்றன.”, என்று பி.எம்.சுந்தரம் எழுதியுள்ளார்.

தட்சிணாமூர்த்தி பிள்ளையின் கஞ்சிரா வாசிப்பில் மயங்கி, தானும் உழைத்து, அந்த வாத்தியத்தில் தேர்ச்சியும் பெற்றார்.  நாயனா பிள்ளை, செம்மங்குடி சீனிவாச ஐயர், சித்தூர் சுப்ரமண்ய பிள்ளை போன்ற பலரதுகச்சேரிகளுக்கு வாசித்துள்ளார்.

 “குறைந்த சன்மானம் கிடைத்த போது பஞ்சாமி என்னுடன் இருந்தார். இன்று ஆயிரக் கணக்கில் சன்மானம் கிடைக்கும் வேளையில் பஞ்சாமி இல்லாமல் போனாரே”, என்று நாகஸ்வர சக்கரவர்த்தி இராஜரத்தினம் பிள்ளை அடிக்கடி அங்கலாய்ப்பாராம்.

பஞ்சாமி, தவில் வாசிப்பை கிராமஃபோனில் வெளியிட மிகப் பெரியத் தோகையை சன்மானமாகக் கேட்டாராம். நிறைய இழுபறிக்குப் பின் அவர் கேட்ட தொகைக்கு சம்மதித்து அவருக்கு ஒரு கடிதத்தை கிராமஃபோன் கம்பெனி அனுப்பியதாம். அந்தக் கடிதம் வீட்டை அடைந்த அன்று அவர் வீட்டில் பிணமாகக் கிடந்தார் என்றொரு செவிவழிச் செய்தி உண்டு.

பஞ்சாமியை நேரில் கேட்டவர்களை இன்று காண்பது அரிது.

அவர் பெயரைச் சொல்ல இன்று பாடி விட்டுச் சென்ற சில கிராமஃபோன் ரிக்கார்டுகள்தான் மிஞ்சுகின்றன.

Read Full Post »

2008-ல் ஐராவதம் மகாதேவனின் பணிப்பாராட்டு மலரை வரலாறு.காம் வெளியிட்டது.

பல அறிஞர்கள் பங்களித்த அந்த மலரின் மின்பதிப்பை திரு.மகாதேவனுக்கு காணிக்கையாய் இலவசமாய் இங்கு வெளியிடுகிறோம்.

பதிப்பின் முன்னுரை இங்கே.

airavati wrapper 1

Anyone can make history. But it takes a genius to write it. Little did the toddy-tapper Nakkan realize, when he scribed his name on his pot, that he was creating history. Several centuries later, it took the genius of Iravatham Mahadevan to correlate this pot with the widespread literacy in the ancient Tamil country.

This felicitation volume, Airāvati, for Iravatham Mahadevan is brought out, as researchers, scholars, admirers and followers – young and old, spread across the world celebrate Mahadevan‘s Golden Jubilee year in Indological research. This volume stands to represent the tribute paid to his outstanding work in Indus Script, Tamil Brahmi, Journalism and Numismatics.

While men of honour in different fields are recognized in various ways, wise men in the field of history, have set a unique tradition by publishing a felicitation volume that carries articles from the best in the field. Airāvati is no exception. It contains interesting articles from several accomplished experts in their fields . The enthusiastic response from the scholars across the globe to our request for an article for this volume testifies the global admiration that Mahadevan enjoys among his peers.

Like any other student of history, our editorial board too is indebted to Mahadevan for his contributions through his multitude of journal articles and his two meticulously worked out books. However, the intention of this volume is neither to show our gratitude nor to eulogise the veteran. Purpose of this volume is to inspire and encourage all those individuals, who are interested in history but are hesitant to pursue research on it, as they feel they don‘t have the background to do quality research. This volume felicitates a man, who studied Chemistry and Law; earned his living as a civil servant; did not earn a formal degree in history; nor was he an expert in technology. But through his insatiable thirst for knowledge and passionate pursuit of Truth, he went on to become the best in the fields he worked on.

The volume is divided in to three sections. The first section in English and the second section in Tamil contain articles from proficient historians, archaeologists, journalists and numismatists. The third section is dedicated to Iravatham Mahadevan and it carries his bibliography on Indus script, Tamil Brahmi, a couple of reviews on his magnum opus – Early Tamil Epigraphy, one article each in his fields of accomplishment and an interview – throwing light on the man behind these great works.

Bringing out such a volume is not possible without the cooperation of the academic community. We thank all the contributors for their prompt response. The Editorial board is a truly global team with members in India, Japan and the U.S. Even at this technologically advanced age, our correspondence would have not been possible without human intervention in the form of Prof. M. R. Arasu, Mr. M. Selvamoorthy, Mrs. S. Sumitha, Mr. S. Seetharaman and Mr. Bala. Padmanaban. Special thanks must be given to Alamu Printers for their highly professional work in printing this volume.

வரலாற்று ஆர்வலர்களுடன் இதைப் பகிர்வதில் பெருமகிழ்ச்சி. பரவலாய் பகிருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

தரவிறக்க இந்த இணைப்பில் சொடுக்கவும்: ஐராவதி

Read Full Post »