இந்தக் கரோனா பேரிடர் காலத்தில் நாம் அறியாத எத்தனையோ விஷயங்களை அறியும் வாய்ப்பு அமைந்துள்ளது.
அந்த வகையில் நான் அறிந்து கொண்டது பெண் நாகஸ்வர கலைஞர்களைப் பற்றி.

கடந்த சில வருடங்களாக நாகஸ்வர கலைஞர்களோடு தொடர்ந்து தொடர்பில் இருந்து வந்தாலும், பெண் நாகஸவர கலைஞர்கள் என்றால், என் மனத்துள் அந்த வரிசை மதுரை பொன்னுத்தாயி அம்மாளிடம் தொடங்கி சமீபத்தில் பத்ம விருது பெற்ற கலீஷாபி மெஹ்பூப் அவர்களுடன் முடிந்துவிடுகிறது என்பதைப் பற்றி நான் யோசித்ததே இல்லை.
பேரிடரின் இரண்டாம் அலையின் போது நண்பர் சரவணன், ‘பெண் கலைஞர்களுக்கு உதவ என்று பிரத்யேகமாய் முயற்சி எடுக்கலாமா?’,என்று கேட்டார். அந்த முயற்சியின் போதுதான் தென்னிந்தியாவில் இத்தனை பெண் கலைஞர்கள் நாகஸ்வரத்தை தொழிலாகக் கொண்டுள்ளார்கள் என்று அறிந்து கொண்டேன்.
ஒருவகையில் எனக்கு வெட்கமாகக்கூட இருந்தது.
சென்ற நவராத்ரியில் ஒன்பது நாகஸ்வர கச்சேரிகள் வலையேற்றியது போல இந்த முறை ஒன்பது பெண் கலைஞர்களை முதன்மைப்படுத்தி ‘நவசக்தி’ என்று ஒன்பது கச்சேரிகள் ஒருங்கிணைக்க வெண்டும் என்று அப்போதே முடிவு செய்து கொண்டேன்.
கலைஞர்கள் தேர்வும், கச்சேரிப் பதிவுகளுக்கான ஏற்பாடுகளும் ஆகிவிட்டன. பரிவாதினியின் முயற்சிகள் அனைத்தும் ரசிகர்கள் ஆதரவில் நடப்பவை என்று சொல்லித் தெரிய வேண்டாம்.
எப்போதும் போல் இப்போதும், இந்த முயற்சிக்கு உங்கள் ஆதரவைக் கோருகிறேன்.
வங்கிக் கணக்கு விவரங்கள் கீழே:
Parivadini Charitable Trust,
Union Bank of India
Account Number: 579902120000916
branch: Kolathur, Chennai,
IFSC Code: UBIN0557994