Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for செப்ரெம்பர், 2021

இந்தக் கரோனா பேரிடர் காலத்தில் நாம் அறியாத எத்தனையோ விஷயங்களை அறியும் வாய்ப்பு அமைந்துள்ளது.


அந்த வகையில் நான் அறிந்து கொண்டது பெண் நாகஸ்வர கலைஞர்களைப் பற்றி.


கடந்த சில வருடங்களாக நாகஸ்வர கலைஞர்களோடு தொடர்ந்து தொடர்பில் இருந்து வந்தாலும், பெண் நாகஸவர கலைஞர்கள் என்றால், என் மனத்துள் அந்த வரிசை மதுரை பொன்னுத்தாயி அம்மாளிடம் தொடங்கி சமீபத்தில் பத்ம விருது பெற்ற கலீஷாபி மெஹ்பூப் அவர்களுடன் முடிந்துவிடுகிறது என்பதைப் பற்றி நான் யோசித்ததே இல்லை.


பேரிடரின் இரண்டாம் அலையின் போது நண்பர் சரவணன், ‘பெண் கலைஞர்களுக்கு உதவ என்று பிரத்யேகமாய் முயற்சி எடுக்கலாமா?’,என்று கேட்டார். அந்த முயற்சியின் போதுதான் தென்னிந்தியாவில் இத்தனை பெண் கலைஞர்கள் நாகஸ்வரத்தை தொழிலாகக் கொண்டுள்ளார்கள் என்று அறிந்து கொண்டேன்.

ஒருவகையில் எனக்கு வெட்கமாகக்கூட இருந்தது.


சென்ற நவராத்ரியில் ஒன்பது நாகஸ்வர கச்சேரிகள் வலையேற்றியது போல இந்த முறை ஒன்பது பெண் கலைஞர்களை முதன்மைப்படுத்தி ‘நவசக்தி’ என்று ஒன்பது கச்சேரிகள் ஒருங்கிணைக்க வெண்டும் என்று அப்போதே முடிவு செய்து கொண்டேன்.


கலைஞர்கள் தேர்வும், கச்சேரிப் பதிவுகளுக்கான ஏற்பாடுகளும் ஆகிவிட்டன. பரிவாதினியின் முயற்சிகள் அனைத்தும் ரசிகர்கள் ஆதரவில் நடப்பவை என்று சொல்லித் தெரிய வேண்டாம்.
எப்போதும் போல் இப்போதும், இந்த முயற்சிக்கு உங்கள் ஆதரவைக் கோருகிறேன்.


வங்கிக் கணக்கு விவரங்கள் கீழே:
Parivadini Charitable Trust,

Union Bank of India

Account Number: 579902120000916

branch: Kolathur, Chennai,

IFSC Code: UBIN0557994

Read Full Post »

நாகஸ்வர ஏகசக்ராதிபதி டி.என்.ராஜரத்னம் பிள்ளையைப் பற்றிய ஓர் உரைக்காக கடந்த ஒரு மாதமாய் அவர் இசையில் திளைக்கிறேன்.

உரையைப் பதிவு செய்து, ஒருங்கிணைப்பாளர்கள் தேவைக்கேற்ப சுருக்கி இன்று அனுப்பி வைத்து பெருமூச்சுவிடும் இவ்வேளையில் அதிர்ச்சியான தகவல் வந்து இறங்குகிறது.

திருவாவடுதுறையில் ராஜரத்தினம் பிள்ளை கட்டிய மாளிகை போன்ற வீடு சமீபத்தில் இடித்துத் தரைமட்டம் ஆக்கப்பட்டதாம்.

சங்கீத உலகில் தோன்றிய/தோன்றப்போகும் கலைஞர்கள் எல்லோரையும் திரட்டினால்கூட ஒரு ராஜரத்தினத்துக்கு ஈடாகமாட்டார்கள் என்பது (என் தனிப்பட்ட) எண்ணம். தன் வாசிப்பை அரை நொடியானாலும் தன் வீட்டைக் கடந்து செல்லும் ரயிலில் செல்பவன்கூடக் கேட்க வேண்டுமென்று வீட்டில் ஒலிப்பெருக்கி அமைத்து, அவர் சாதகம்செய்ததைக் கூட உலகுக்கு வழங்கிய கலைஞனின் வீடு.

எத்தனை நடபைரவிகளையும், காம்போதிகளையும் அந்தச் சுவர்கள் கேட்டிருக்கக்கூடும்!

நினைவு மண்டபமாகவோ, அருங்காட்சியகமாகவோ இருந்திருக்க வேண்டும் என்று இந்தியச் சூழலில் நினைப்பதெல்லாம் பேதமை.

எப்போது அந்தப் பக்கம் போனாலும் வெளியிலிருந்தாவது அந்தக் கம்பீரக் கட்டிடத்தைப் பார்க்கலாம் என்கிற நிலைமையும் போய் அங்கு குடியிருப்புகள் எழப் போகின்றன என்பதைத்தான் மனம் ஏற்க மறுக்கிறது.

நண்பர் Swamimalai Saravanan-உடனும் Mariyappan Muthukumaraswamy-உடனும் திருவாவடுதுறை சென்ற போது, ராஜரத்தினம் பிள்ளையின் வீட்டில் – குறிப்பாக அவர் மாடியில் அமைத்திருந்த இசை அறையில் கச்சேரிகள் ஏற்பாடு செய்து தொடர்ந்து நடத்த வேண்டுமென்று நிறைய கனவுகளைப் பேசினோம்.

கனவுகள்….

Read Full Post »