ஓவியர், பாடகர், நடிகர், ‘சங்கீத கலா ஆசார்யர்’ எஸ்.ராஜம் அவர்களின் நூற்றாண்டு இந்த வருடம்.
அதன் தொடக்கமாய். வரும் வெள்ளிக்கிழமை, ஃபெப்ரவரி 8-ம் தேதி, சென்னை மியூசிக் அகாடமியில் ஒரு நிகழ்வு நடக்கிறது.
அதன் விவரங்கள்
அவர் நூற்றாண்டை முன்னிட்டு நிகழ்ந்த பாட்டுப் போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு வழங்கப்படும். அவரைப் பற்றிய ஆவணப்படத்திலிருந்தும் பல சுவாரஸ்ய காட்சிகளைக் காணும் வாய்ப்பும் உள்ளது. அவருடன் பழகிய பலரின் அனுபவப் பகிர்வும் நிகழ்ச்சிக்கு செறிவு சேர்க்கும்.
இவைத் தவிர, அவர் ஓவியத்தை முன் வைத்து ஒரு நாட்டிய நிகழ்ச்சியும் (நவ்யா நடராஜன்), அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இசைக் கச்சேரியும் (ரஞ்சனி காயத்ரி) இடம் பெறவுள்ளது.
இந்த அரிய நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம். கலை ரசிகர்கள் வந்து ரசிக்கும்படி வேண்டிக் கொள்கிறேன்.
இது தொடங்கி, இன்னும் ஓராண்டுக்கு மாதம் ஒரு கச்சேரி ராஜம் அவர்களைச் சிறப்பிக்கும் வகையில் பரிவாதினியின் மூலம் நடக்கவுள்ளது.
முதல் கச்சேரியாய். ஃபெப் 22-ம் தேதி எஸ்.ராஜத்திடம் கற்ற பாடகர் அக்ஷய் பத்மநாபன் பாடுகிறார்.
இந்த முயற்சிக்கு பொருள் உதவி செய்ய விழைவோர்.
Parivadini Charitable Trust,
Union Bank of India
Account Number: 579902120000916
branch: Kolathur, Chennai,
IFSC Code: UBIN0557994
என்ற வங்கிக் கணக்கில் தங்கள் பங்களிப்பை அளிக்கலாம்.