Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘parivadini’ Category

Parivadini comes to Bangalore!

We are excited to announce that now we will be organising nagaswaram concerts in Bangalore as well. The first concert is scheduled in September! Details in the flyer.

Parivadini Bangalore

We would like to thank Vid. TS Satyavati for inspiring us to start this.

Seeking your support as always!

Read Full Post »

சென்ற ஆண்டு தொடங்கி, இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை நாத இன்பத்துடன் சேர்ந்து, நாகஸ்வர கச்சேரி ஒன்றை பரிவாதினி ஒருங்கிணைத்து வருகிறது.

அந்த வரிசையில் இந்த மாதம் 27-ம் தேதி, நெம்மாரா சகோதரர்களின் கச்சேரி ஏற்பாடாகியுள்ளது. கேரளத்தைச் செர்ந்த இந்த கலைஞர்கள் சமீப காலத்தில் சங்கீத உலகில் நல்லதொரு பெயரை ஈட்டி, அனைத்து பிரபல அரங்குகளிலும் வாசித்து வருகின்றனர். இவர்களுடன் தேர்ந்த தவில் கலைஞர்களான திருராமேஸ்வரம் ராதாகிருஷ்ணனும், தாராபுரம் கணேஷும் வாசிக்கவுள்ளனர்.

PHOTO-2019-04-16-11-43-34

வழக்கம் போல், கச்சேரியுடன் சேர்ந்து திறமையுள்ள ஆனால் நிதி நிலை ஸ்திரமாக இல்லாத இரு மாணவர்களுக்குத் தவிலும் நாகஸ்வரமும் வழங்கப்படவுள்ளது.

இம்முறை தவில் பெறும் மாணவர் பதினைந்து வயது நிரம்பிய மணிகண்டன். இவர் தென்திருப்பதி அரசு இசைப்பள்ளியில் பயின்று வருகிறார். நாகஸ்வரம் பெறும் மாணவர் சிவகுருகணேஷ். பதினேழு வயது நிரம்பிய இவர், திருவையாறு அரசு இசைப்பள்ளியில் பயின்று வருகிறார்.

கச்சேரிகளுக்கோ, வாத்தியம் வழங்குவதற்கோ நன்கொடை அளிக்க விரும்புவோர் இங்கு குறிப்பிட்டுள்ள வங்கிக் கணக்கில் நன்கொடை அளிக்கலாம்.

Parivadini Charitable Trust,
Union Bank of India
Account Number: 579902120000916
branch: Kolathur, Chennai,
IFSC Code: UBIN0557994

 

Read Full Post »

இந்த வருடம் முழுவதும் பரிவாதினியில் மாதம் ஒரு கச்சேரி எஸ்.ராஜம் நூற்றாண்டை முன்னிட்டு நடைபெரும்.

முதல் கச்சேரி எஸ்.ராஜம் அவர்களின் சீடர் அக்‌க்ஷய் பத்மநாபன் பாடுகிறார்.

SRajam- Akshay

Read Full Post »

சென்ற வருடத்தில் தொடங்கிய இரு மாதங்களுக்கு ஒருமுறை நடை பெரும் நாகஸ்வர நிகழ்ச்சியில், இந்த முறை மிகவும் அனுபவம் வாய்ந்த திருபாம்புரம் சகோதரர்கள் வாசிக்கிறார்கள். அவர்களுடன் புகழின் உச்சியில் இருக்கும் மன்னார்குடி திரு. வாசுதேவனும், திருக்கடையூர் திரு. பாபுவும் வாசிக்கின்றனர். விவரங்கள் கீழே.

PHOTO-2019-02-17-20-07-17

சில மாதங்களுக்கு முன் ஒரு நாகஸ்வர நாட்காட்டியை பரிவாதினி உருவாக்கி அதில் 12 கலைஞர்களைப் பற்றிய குறிப்பையும், படங்களையும் இடம்பெறச் செய்தது.இந்த ஆண்டு நடைபெறவுள்ல நாகஸ்வர நிகழ்ச்சிகளை அந்த கலைஞர்களுக்கு சமர்ப்பணம் செய்ய உள்ளோம். அந்த வகையில், முதல் நிகழ்ச்சி வண்டிகாரத்தெரு மணி/மான்பூண்டியா பிள்ளை அவர்களுக்கும், கீழ்வேளூர் சிங்காரவேலு பிள்ளை அவர்களுக்கும் சமர்ப்பணம் செய்கிறோம்.

PHOTO-2019-02-17-20-07-17 (1)

இந்தக் கலைஞர்களைப் பற்றி காலெண்டரில் பதிவான குறிப்பு:

Vanidakaratheru Mani/Manpoondiah Pillai

Musicians usually attach their hometown to their names. Hailing from Mayiladuthurai that boasted of several nagaswaram greats, Subramania Pillai and Manpoondia Pillai chose to attach the street they lived – Vandikkaara Theru – to their names. The older of the brothers, Subramania Pillai, learnt from his father Ramiah Pillai. The younger brother Manpoondiah Pillai learnt from his father as well as his brother.  The brothers were known for their unique elaborate raga exploration. To them the raga that they took up never constrained them. An apparently small raga with limited scope would be explored for several hours. One such instance when they played Dwijavanthi raga alapana all night during a temple festival is still recalled by many.

Kivalur Sinagaravelu Pillai 

There were many great practitioners of this art. Not all of them can be called as great teachers. Kizhvelur “Kunju” Singaravelu Pillai is widely acknowledged as one of the greatest teachers of thavil ever. Stretching beyond the regular teaching hours of the college that worked in, he would take special interest in each and every student.  His ability to instill the basics in a student was unparalleled. Even when more than thirty students played together, his discerning ears would pick up the slightest of the mistakes. In a teaching tradition that was largely oral, he was a pioneer in teaching through accurate notations. Many of his students have gone on to become maestros. Some of his students include Mannargudi Vasudevan, Thirukarugavur Gurunathan, Kovilur Kalyanasundaram, Idumbavanam Kannan and Thirukadaiyur Babu.

இதோடு, பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மாணவர்கள் இருவருக்கு வாத்தியங்கள் (1 தவில், 1 நாகஸ்வரம்) வழங்கப்படும்.

வித்வான் வியாசர்பாடி கோதண்டராமனின் பரிந்துரையில், வேலூரைச் சேர்ந்த அஜித்துக்கு தவில் வழங்கப்படுகிறது.

PHOTO-2019-02-09-10-00-47

வித்வான் இஞ்சிக்குடி மாரியப்பனின் பரிந்துரையில் காட்டூரைச் சேர்ந்த அபினேஷுக்கு நாகஸ்வரம் வழங்கப்படுகிறது.

PHOTO-2019-01-16-11-02-58

முன்பே குறிப்பிட்டது போல, தவில் வித்வான் குயப்பேட்டை தட்சிணாமூர்த்தி அவர்களின் நலனுக்காக உதவித் தொகையும் அன்று வழங்கப்படும்.

cdb4e9c9-cdd7-4add-afeb-7baae57deb8b

இதற்காக பரிவாதினியின் இருப்பிலிருந்து ரூபாய் ஐம்பதாயிரம் வழங்கப்படும். இதைத் தவிர, இந்த முயற்சிக்கின்று வந்துள்ள நன்கொடையும் சேர்த்து அன்று வழங்கப்படும். இதுவரையில் இதற்கென்று ரூபாய் பதினெட்டாயிரம் திரண்டுள்ளது.

 

 

Read Full Post »

வருடா வருடம் பரிவாதினி கச்சேரிகளை ஒருங்கிணைப்பது எவ்வளவுக்கெவ்வளவோ மகிழ்ச்சியளிக்கக் கூடிய ஒன்றோ அதே அளவுக்கு ஆயாசம் அளிக்கும் வேலையும்கூட. இருப்பினும், மண்டி வரும் சோம்பலை உலுக்கித் துரத்த வைக்க வருடாந்திர பர்லாந்து விருதை நினைத்தாலே போதும். மனம் குதூகலிக்கத் தொடங்கிவிடும். அதிகம் கண்டுகொள்ளப்படாத விருதுதான் என்றாலும் என்னளவில் பெருமகிழ்ச்சியை அளிக்கும் நிகழ்விது. வருடம்தோரும் வாத்தியம் செய்யும் ஒரு வினைஞரை கௌரவித்து அவரை வாழ்நாள் நண்பராக்கிக் கொள்ளும் தருணமது.

இந்த வருடம் கஞ்சிரா மேதை ஹரிசங்கர் அவர்களின் அறுபதாவது பிறந்த வருடம் என்பதால், அவருக்கு வாத்தியங்கள் செய்து கொடுத்த வினைஞரை கௌரவிக்கலாம் என்ற எண்ணம் தோன்றியது. ஹரிசங்கர் அவர்களின் சீடர்களுடன் பேசுகையில் திரு.முருகானந்தமே ஹரிசங்கருக்கு வேலை செய்த வினைஞர்களுள் முதன்மையானவர் என்று தெரிய வந்தது. அவருடைய மகன் நவநீதம் சென்னையில் மிருதங்கவேலை செய்து வருகிறார் என்கிற தகவலும் கிடைக்க – கூகிள் உபயத்தில் நவநீதத்தின் தொலைபேசி எண் கிடைத்தது. அவரிடம் பேசுகையில் முருகானந்தம் இப்போது தொழிலிலிருந்து ஓய்விபெற்று தன் சொந்த ஊரான வலங்கைமானில் உள்ளார் என்று தெரிய வந்தது.

DSC_0097

வலங்கைமான் என்ற பேரைக் கேட்டதுமே அந்த ஊர் சங்கீதத்துக்கு அளித்த தவில் மேதை சண்முகசுந்தரம் அவர்களின் வாசிப்பு காதில் ஒலித்தது. குறிப்பாக மேண்டலின் ஸ்ரீனிவாஸுக்கு அவர் வாசித்த கச்சேரிகள்! மேண்டலின் ஸ்ரீனிவாஸ் உச்சிக்கு வரும்போது நிறைய வீடுகளில் மங்கலவாத்யமாக டேப்ரிக்கார்டர்களில் ஒலித்துக் கொண்டிருந்த நாகஸ்வரத்தின் இடத்தை மேண்டலின் பிடித்துக்கொண்டது. அதற்கு முக்கிய காரணம் சண்முகசுந்தரம் அவர்களின் வாசிப்பு என்பது என்னுடைய துணிபு. மேண்டலினின் இனிமையான நாதத்தையும், விறுவிறுப்பான காலபிரமாணத்தையும் மீறி அந்த ஒலிநாடாக்களுக்கு மங்கல வாத்யத்தின் தன்மையைக் கொடுத்ததில் தவிலின் நாதத்திவலைகளுக்கும் முக்கியப்பங்கு உண்டு.

இந்த எண்ணங்களை எல்லாம் அசை போட்டபடி முருகானந்தம் அவர்களை அழைத்து அவருக்கு விருது வழங்க விரும்பவதைச் சொன்னேன். “எனக்கு விருதா? நான் அப்படி ஒன்னும் பண்ணலியே”, என்றவரிடம் ”ஹரிசங்கரின் அறுபதாவது பிறந்த ஆண்டில் உங்களுக்கு கொடுப்பதுதான் சரியாக இருக்கும்”, என்றவுடன் ஒப்புக் கொண்டார்.

அதன்பின் அவரை வலங்கைமானில் சென்று காண நான் திட்டமிட்ட போதெல்லாம் ஏதோவொரு காரணத்தால் தட்டிக்கொண்டே போனது. விருது கொடுக்க இரண்டு நாட்களே உள்ள நிலையில் தொலைபேசியிலாவது அவரிடம் பேட்டி எடுத்தவிடலாம் என்று இன்று அழைத்தேன்.

எனக்குவோர் இன்ப அதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது.

“என்னை அப்பா தவில் கத்துக்க சொன்னாங்க. நான் மாட்டேனுட்டேன். நாகஸ்வரம் கத்துக்கப் போனேன்.”, என்று பேட்டியைத் தொடங்கினார்.

பெரும்பாலும் வாத்தியம் செய்யும் வினைஞர்களுக்கு இசைப்பயிற்சி இருப்பதில்லை என்பதால் எனக்கு ஆவல் மிகுந்தது.

“அப்பாவுக்கு தவிலில் ஆர்வமா?”

“என்ன இப்படி கேட்கறீங்க. அவரு பெரிய வித்வானாச்சே”

என் ஆவல் அடுத்த நிலையை எட்டியது.

“ஐயா பேரென்னங்க…”

“வலங்கைமான் சண்முகசுந்தரம்….”

“ஆ!!!…”

தூக்கிவாரிப் போட்டது. என்னை சிறுவயதில் இசையின் பால் இழுத்த அந்த வாசிப்புக்கு சொந்தக்காரரின் வாரிசுக்கு விருதளிக்கப் போகிறோம் என்றெண்ணி புளகாங்கிதமடைந்தேன்.

“இவ்வளவு நாளா அவர்தான் உங்க அப்பானு தெரியாம இருந்துட்டேன். மேண்டலினுக்கு அவர் வாசிச்ச பதிவுகளை டேப் தேயத் தேயக் கேட்டிருக்கேன்.”

“அவர் வாசிப்பு பெரிய வாசிப்பு. நானும் வாசிச்சு அந்த அளவுக்கு வரலைன்னா அவர் பேர் கெட்டுபோயிடும்-னு தவில் கத்துக்கமாட்டேனுட்டேன்.”

“அதனால நாகஸ்வரம் கத்துக்கிட்டீங்களா?”

“ஆமாம். ஆண்டான்கோயில் செல்வரத்தினம் எனக்கு தாத்தா முறை. வயசு வித்தியாசம் அவ்வளவு இல்லைனாலும் முறைப்படி தாத்தா. அவர்கிட்ட கத்துகிட்டேன். கோயில்ல எல்லாம் வாசிச்சுப் பழகுவேன். பதினைஞ்சு வயசிருக்கும் போது கொஞ்டம் உடம்பு சரியில்லாம போச்சு. டாக்டர் பாத்துட்டு இதயம் வலுவில்லாம இருக்கு. நாகஸ்வர பயிற்சி கூடாதுனு சொல்லிட்டாரு.”

“அதுனால வாத்தியம் பண்ண ஆரம்பிச்சீங்களா?”

“இல்லை. அம்மையப்பன், வலங்கைமான்-ல எல்லாம் கொஞ்சம் நிலமிருந்தது. அதைப் பார்த்துகிட்டு இரண்டு வருஷம் விவசாயம் பண்ணினேன்”

“அப்புறம் எப்படி இந்தத் தொழிலுக்கு வந்தீங்க?”

“என் தங்கையை மிருதங்க வித்வான் தஞ்சாவூர் உபேந்திரனுக்கு கொடுத்திருந்தோம். அவர் தொழில்ல முன்னேறி சென்னைக்கு குடிபோயிட்டாரு. அவர்தான் என்னையும் சென்னைக்கு வரச் சொன்னாரு.”

தஞ்சாவூர் உபேந்திரன் இன்று முன்னணியில் விளங்கும் கலைஞர்களை மட்டுமல்ல, ஓர் அற்புதமான வினைஞரையும் இசையுலகுக்கு இட்டு வந்திருக்கிறார்.

“அவருக்கு அப்போ ராமகிருஷ்ணன்-னு வண்ணாந்துறையில ஒருத்தர் மிருதங்க வேலை செஞ்சுகொடுத்துகிட்டு இருந்தார். அவர் அண்ணனும் பக்கத்துலையே கடை வெச்சு இருந்தார். அவங்க கிட்ட வேலை செய்ய ஆரம்பிச்சேன். தவில்ல இப்பதான் நட் போல்ட் போட்டு முடுக்கறோம். அப்பல்லாம் வார் பிடிக்கணும். அது அவ்வளவு சுலபமான வேலையில்ல. அப்பாவுக்காக நான் பலமுறை வார்பிடிச்சு கொடுத்து இருக்கேன். அந்த அனுபவத்துனால மிருதங்கத்துக்கு வார்பிடிக்கறது, மூட்டு அடிக்கறது எல்லாம் சுலபமாவே வந்துடுச்சு. கொஞ்ச நாள்ல நானே சொந்தமா கடைவெச்சுட்டேன்.”

“உங்க கடை எங்க இருந்தது?”

“மாதவ பெருமாள் கோயில் பக்கத்துல. அங்க வேதமூர்த்தி-னு ஒரு மெக்கானிக் கடை வெச்சு இருந்தார். அவருக்கு சங்கீதம்னா உயிர். அவருக்கும் எனக்கும் பழக்கம் ஏற்பட்டு, அவர் கடையிலேயே பாதியை எனக்குக் கொடுத்தார். அங்கதான் என் தொழில் தொடங்கிச்சு.”

இசை எப்படி சம்பந்தமில்லாத இருவரை இணைக்கிறது என்று வியந்தபடியே அடுத்த கேள்வுக்குச் சென்றேன்.

”தஞ்சாவூர் உபேந்திரனுக்குதான் முக்கியமா மிருதங்கம் செஞ்சுகொடுக்க ஆரம்பிச்சீங்களா?”

“இல்லையில்லை! அவர் சிஷ்யர் நெய்வேலி நாராயணனுக்குதான் முதல்ல செஞ்சு கொடுத்தேன். அப்புறம் இன்னொரு சிஷ்யர் முருகபூபதிக்கு செஞ்சு கொடுத்தேன். அப்படி கொஞ்சம் கொஞ்சமா என் நிறைய பேருக்கு செய்ய ஆரம்பித்தேன். காரைக்குடி மணி, திருவாரூர் பக்தவத்சலம், ஸ்ரீமுஷ்ணம் ராஜாராவ்-னு நிறைய பெரிய வித்வான்களுக்கு செஞ்சு கொடுத்திருக்கேன்.”

”ஹரிசங்கர் அவர்களை எப்படி சந்திச்சீங்க?”

“அவரை உபேந்திரன் அத்தான்தான் வீட்டுக்கு கூட்டிகிட்டு வந்தாங்க. மேடலின் கச்சேரிக்கு அப்போ இவங்க எல்லாம்தான் செட்டு. அப்பா, அத்தான், ஹரிசங்கர், விநாயக்ராம் சேர்ந்து வாசிப்பாங்க. பல ஊர்கள்ல, கல்யாணங்கள்ல கச்சேரி நடக்கும். அப்படி சந்திச்சுப் பழக்கம். அப்பா மேல ஹரிசங்கருக்கு ரொம்ப மரியாதை. என்கிட்டையும் ரொம்ப பிரியமா நடந்துப்பாங்க.”

“கச்சேரிகள் நிறைய கேட்டு இருக்கீங்க. உங்களைக் கவர்ந்த கச்சேரி?”

“நிறைய போவேன். எல்லாம் கேட்பேன். அதுக்கு மேல சொல்ற அளவுக்கு நுணுக்கமெல்லாம் தெரியாது. பாட்டைவிட கலைஞர்களைப் பார்த்து பழகறதுலதான் எனக்கு கவனமிருந்தது.”

”ஹரிசங்கருக்குனு ப்ரத்யேகமா ஏதாவது செய்யச் சொல்லுவாரா?”

“அப்படி ஒண்ணும் இல்லை. அவர் முக்கியமா என்கிட்ட தோலைத்தான் வாங்கிப்பாரு. நான் கட்டையில் ஒட்டிக் கொடுத்த வாத்தியங்களும் அவர் வாங்கிக்கிட்டிருந்தாலும் அவருக்கு அவரே தோலை ஒட்டினாத்தான் பிடிக்கும். ஃபெவிக்காலை வெச்சு ஒட்டறது அவருக்குப் பிடிக்காது. சாதத்தை வெச்சே ஒட்டிப்பாரு. அது அவருக்குத்தான் முடியும்.”

“கஞ்சிராவுக்கு அப்பல்லாம் உடும்புத் தோல் உபயோகிச்சீங்க இல்லையா?”

“ஆமாம். அதுலதான் அந்த நாதம் கிடைக்கும். வேற தோலுல கிடைக்காது. எஙக் ஊர்ல, வேதாரண்யத்துல, ஆடுதுறைல எல்லாம் மாமிசத்துக்காக உடும்பு அடிப்பாங்க. அதனால் தோல் சுலபமா கிடைக்கும்.”

“இப்ப உடும்பு அடிக்கறது தடை பண்ணிட்டாங்களே”

“ஆமாம்.”

“இப்ப என்ன தோலு உபயோகிக்கறீங்க?”

“நான் தொழில் பண்ணின வரைக்கும் உடும்புதோல்தான் உபயோகிச்சேன். இப்ப என்ன பண்றாங்கனு தெரியலை”

”ஹரிசங்கரோட அறுபதாவது பிறந்த வருடமிது, அவரைப் பற்றி வேற எதாவது சொல்ல விரும்பறீங்களா?

“அவருக்கும் எனக்கும் முதலாளி தொழிலாளி உறவில்ல. நண்பர்கள் மாறிதான் பழகினோம். அவரும் நானும் அடிக்கடி வெத்தலை கடையில சந்திச்சுப்போம். அவர் அன்பா பழகினதை வாழ்நாள் முழுக்க மறக்கமுடியாது.”

“இந்த விருதை மிருதங்கம் செய்வதுல நிபுணரா இருந்த பர்லாந்து அவர்கள் பேருல கொடுக்கறோம். அவரை நீங்க சந்திச்சதுண்டா?”

“ஒரு முறை பார்த்து இருக்கேன். உபேந்திரன் அத்தான் தஞ்சாவூர்ல இருந்தபோது அவர் வீட்டுக்கு வந்து பர்லாந்து வேலை செய்வாரு. அப்ப பார்த்து இருக்கேன். அன்னிக்கு எனக்குத் தெரியாது நானும் இந்தத் தொழிலுக்குத்தான் வருவேன்னு.”

“ஒரு பெரிய இசை பரம்பரைல வந்த நீங்க வாத்தியங்கள் செய்யறதை தொழிலா எடுத்துக்கிட்டீங்க. இப்ப உங்க வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கும் போது நிறைவா இருக்கா?”

“நிச்சயமா நிறைவா இருக்கு. இந்தத் தொழில்தான் என்னை ஒருமனுஷனா ஆக்கி இருக்கு. எந்தக் குறையுமில்லாம நிம்மதியா இருக்க வெச்சிருக்கு. என்  பசங்க – நவநீதம், தனபால் – ரெண்டு பேரும் இன்னிக்கு இந்தத் தொழில்தான் பண்ணிகிட்டு இருக்காங்க”

நான் பர்லாந்து அவர்களைப் பார்த்ததில்லை. அவர் மகன் செல்வத்தைப் பார்த்து கௌரவித்த போது பர்லாந்து அவர்களையே பார்த்த உணர்வு ஏற்பட்டது. இன்னும் இரண்டு நாட்களில் முருகானந்தம் அவர்களைப் பார்க்கும் போது மேதை வலங்கைமான் சண்முகசுந்தரம் அவர்களையே பார்த்த நிறைவு ஏற்படும் என்று தோன்றியது. அந்த மகிழ்ச்சியில் துளிர்த்த புன்னகையோடு பேட்டியை முடித்துக்கொண்டேன்.

நன்றி: இன்மதி.காம்

Read Full Post »

சென்ற ஞாயிற்றுக்கிழமை, 25 நவம்பர் 2018-ல், பர்லாந்து விருது 2018-ஐ

திரு.முருகானந்தம் பெற்றார்.

விருது விழாவின் காணொளி இங்கே:

படங்கள் சில:

Read Full Post »

2013-ல் தொடங்கிய பரிவாதினி வருடாந்திர இசை விழா இந்த ஆண்டும் சில வாரங்களில் நடை பெறவுள்ளது.

நிகழ்ச்சி நிரல் இங்கே:

Parivadini Navaratri Series Invitation

இந்த வருடம் கஞ்சிரா மாமேதை ஹரிசங்கர் பிறந்த அறுபதாவது ஆண்டு என்பதனால் அவருக்கு வாத்தியங்கள் செய்து கொடுத்த முருகானந்தம் அவர்களுக்கு பர்லாந்து விருதினை வழங்கிவதில் பரிவாதினி பெருமையடைகிறது.

பரிவாதினியின் முயற்சிகள் ரசிகர்களின் ஆதரிவினால்தான் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது என்பதைச் சொல்லவும் தேவையில்லை. பங்களிக்க விரும்புவோர் பின்வரும் வங்கிக் கணக்கில் நன்கொடையை அளிக்கலாம்.

Parivadini Charitable Trust,
Union Bank of India
Account Number: 579902120000916
branch: Kolathur, Chennai,
IFSC Code: UBIN0557994

Read Full Post »

இந்தியாவில் கடந்த சிலநாட்களாய் அதிகம் விவாதிக்கப்பட்டுவரும் #metoo-வில் என் குறைந்தபட்ச பங்களிப்பாய் செய்தகொண்ட சுயபரிசீலனையின் விளைவாய் சில சொந்த நிலைப்பாடுகளையும், நான் பங்களிப்பை அளித்து வரும் பரிவாதினியின் சார்பில் சில நிலைப்பாடுகளையும் எடுத்துள்ளேன்.

 

1. #metoo-வின் மூலமாய் குற்றம்சாட்டப்பட்டிருக்கும் கலைஞரின் கச்சேரிகளுக்கு இனி செல்வதில்லை.

2. அவர் பாடியவற்றைப் பற்றி ரசனைக் குறிப்புகள் எழுதுவதோ, அல்லது அவர் பாடல்களை சமூக வலைத்தளங்களில் பகிர்வதோ செய்யப்போவது இல்லை.

3. அவருடைய வாழ்க்கை வரலாறு எழுதுவது, நேர்காணல் வெளியிடுவது போன்ற செயல்களில் ஈடுபடப்போவதில்லை.

4. பரிவாதினி ஒருங்கிணைக்கும் நிகழ்ச்சிகளில் அவர்கள் இடம்பெற மாட்டார்கள்.

5. பரிவாதினி செய்து வரும் இணைய நேரலை ஒளிபரப்புகளிலும் அவர்களின் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப் போவதில்லை.

இந்தக் கலைஞர்களைப் பற்றி லலிதாராம் எழுதி அவர்களுக்கு ஒன்றும் ஆகப்போவதில்லை. அவர்கள் பரிவாதினியில் பாடித்தான் பெயர் வாங்க வெண்டும் என்ற நிலையுமில்லை என்பதை நன்கறிவேன்.

இத்தனை ஆண்டுகள் “அதெல்லாம் இருக்கட்டும் – அந்தத் தோடியும் காம்போஜியும் பாரு!”, என்றிருந்தது போல இனியும் இருப்பது சரியல்ல என்பதே கடந்த சில நாட்களில் நான் கண்டுகொண்டது. இந்தப் புரிதலை வெளிப்படுத்தும் குறைந்தபட்ச வெளிப்பாடே இந்த நிலைப்பாடு.

இதில் சில கலைஞர்களின் மேல் அபாண்டமாய் பழிசுமத்தியிருக்கக் கூடும். எத்தனையோ காலம் எண்ணற்ற இடர்பாடுகளைப் பற்றி மூச்சுவிடக்கூட முடியாத சூழலைக் கொஞ்சமாவது மாற்ற முற்படும் இந்த வேளையில் சன்னமாகவாவது எதிர்குரலை எழுப்பியிருப்பவர்கள் பக்கம் நிற்பதே சரியென்றுபடுகிறது. அந்தக் குரல்களில் ஒலிப்பவையெல்லாம் உண்மையின் குரல்கள்தானா என்ற ஆராய்ச்சிக்கு இது தருணமல்ல.

Read Full Post »

As a minimum response to the recent #metoo wave I introspected for the last few days and made a few decisions – some personal and some for Parivadini.

  1. I will not attend concerts of the artists who have been outed by the #metoo wave.
  2. I will not write notes/articles on their music. I will not share their music on Social media.
  3. I will not involve in writing their biography or publish their interviews.
  4. They will not be part of Programs curated under Parivadini banner.
  5. Parivadini will not webcast programs involving these artists.

I’m fully aware that these artists will not miss much if Lalitharam doesn’t write about them. Neither do these artists gain visibility y performing for Parivadini.

This is a minimum response to show support to the victims who have shown courage to come out speak up. I have been guilty to always looking at the glory of art and turning a blind eye on the prevalent exploitation. Time is truly up for such thinking now. This stance is a small step towards the change.

It is quite possible that some of the allegations could be baseless. At this juncture, I would like to stand with the side that didn’t have a chance to voice out their sufferings. Addressing concerns on baseless allegations can wait for now.

Read Full Post »

பரிவாதினியில் நாகஸ்வரத்துக்கு என்றுமே தனி இடமுண்டு. 2013-ல் தொடங்கி நாகஸ்வர நிகழ்ச்சிகள் இல்லாத பரிவாதினி இசைவிழாகள் இல்லாத நிகழ்ச்சி நிரலைக் காண முடியாது. இசைத் தொடரில் சம்பிரதாயமாக மங்கல வாத்யம் என்று ஒரு மணிக்கு குறைவாய் நாகஸ்வரக் கலைஞரை வாசிக்க வைப்பதில் என்றுமே எனக்கு உடன்பாடில்லை. அதனால் பரிவாதினியில் இடம் பெற்ற நாகஸ்வர கச்சேரிகள் அனைத்துமே மற்ற கச்சேரிகளுக்கு இணையான நேர அளவில்தான் அமையும்படி பார்த்துக் கொண்டு வருகிறோம்.

சில மாதங்களுக்கு வைணவ நாகஸ்வர மரபை ஆவணமாக்க இணையத்தில் உதவி கோரிய போது கிடைத்த ஆதரவு உண்மையில் நம்பமுடியாத வகையில் இருந்தது. அதுவே வழக்கமாக ஏற்பாடு செய்யும் வருடத்து ஒன்றிரண்டு நாகஸ்வர கச்சேரிகளைத் தவிர இன்னும் ஏதாவது செய்யத் தூண்டியது.

அந்த எண்ணத்தின் அடுத்த நிலைதான் நாத இன்பத்துடன் பரிவாதினி சேர்ந்து நடத்தும் இருமாதத்துக்கு ஒருமுறை நாகஸ்வர கச்சேரிகள். இதன் தொடக்கம் ஜூலை மாதம் நிகழ்ந்தது.

சின்னமனூர் விஜய்கார்த்திகேயனும், இடும்பாவனம் பிரகாஷ் இளையராஜாவும் இரண்டரை மணி நேரத்துக்கு மேல் அற்புதமாக வாசித்தனர். நாகஸ்வரத்துக்கே உரிய தத்தகாரப் பல்லவி அந்தக் கச்சேரியின் உச்சம் என்று நினைக்கத் தோன்றும் – அன்று அவர்கள் வாசித்த ராகமாலிகையைக் கேட்கும் வரை.

கோயில்களில் உற்சவ மூர்த்தி வீதி வலம் முடித்தபின், கோயில்வாசலுக்கு வந்து திருவந்திக் காப்பு முடித்து தன் இருப்பிடத்துக்குப் போகும் போது படியேற்றம் வாசிக்கப் படும். அதாவது ஒவ்வுரு படியாய் ஏறி தன் அறைக்குச் செல்லும் போது ஒவ்வொரு படிக்கும் ஒவ்வொருராகம் இசைக்கப்படும். கிட்டத்தட்ட பத்து வினாடிகளுக்குள் ஒருபடியைக் கடக்கும் கணத்தில் ஒரு ரகத்தைக் கடப்பார்கள் நாகஸ்வரக் கலைஞர்கள். இந்த நிகழ்வை மனக்கண் முன் நிறுத்தி அன்று கார்த்திகேயனும் இளையராஜாவும் வாசித்த ராகமாலிகையை நேரில் கேட்ட்வர்கள் புண்ணியம் செய்தவர்கள். (அவர்களைக் காட்டிலும் அளவில் சற்று குறைவாய் புண்ணியம் செய்தவர்களுக்காக இணைப்பு கீழே)

 

பரிவாதினி ஒருங்கிணைத்த நிகழ்வுகளில் கச்சேரி முடிந்தும் பல வாரங்களுக்கு பரபரப்பாய் பேசப்பட்ட நிகழ்ச்சி இதுதான்.

அதனைத் தொடர்ந்து செப்டம்பர் மாதத்தில் இஞ்சிக்குடி மாரியப்பன் அவர்களின் கச்சேரி இடம் பெற்றது. ஆரம்பம் முதல் கடைசி வரை பல அரிய பாடல்களின் ஆவணமாக அந்தக் கச்சேரி அமைந்தது. அவர் வாசித்த நீதிமதி அந்தக் கச்சேரியின் சிகரம் எனலாம்.

 

அன்ர்த மூன்றரை மணி நேர இசை மழையைத் தொடர்ந்து வரும் நவம்பர் 3-ம் தேதி ஒரு அரிய நிகழ்ச்சி ஏற்பாடாகியுள்ளது.

இணையத்தில் இசையைத் தேடி அடைபவர்களுக்கு யாழ்பாணம் பாலமுருகனின் இசையைத் தெரிந்திருக்கும். அவர் வாசித்த பல இசைத் துளிகள் ஃபேஸ்புக்கிலும், யூடியூபிலும் மிகவும் பிரபலம். சென்ற வருடம் கோலப்பன் ஹிந்துவில் எழுதியிருந்த கட்டுரையில், கேரளமும், கர்நாடகமும், ஆந்திரமும் இந்தக் கலைஞனை அழைக்கும் அளவிற்கு தமிழ்நாடும், சென்னை சபைகளும் அழைப்பதில்லை என்று எழுதியிருந்தார். அந்தக் குறை பரிவாதினியின் மூலம் தீர்வதில் எனக்க்குப் பெருமகிழ்ச்சி.

balamurugan

நினைத்த மாத்திரத்தில் கேட்டுவிடும் தூரத்தில் இல்லாத ஓர் கலைஞனின் அரிய நிகழ்வென்பதால் ரசிகர்கள் திரளாக வந்து ரசித்து இன்புற வேண்டும் என்று கோருகிறேன்.

இந்த நிகழ்ச்சியில் திறமை வாய்ந்த, பொருளாதர வசதி அதிகம் இல்லாத மூன்று நாகஸ்வர மாணவர்களுக்கும் ஒரு தவில் மாணவருக்கும் வாத்தியங்கள் வழங்கி மகிழவுள்ளோம்.

இந்த நிகழ்வுகளுக்கெல்லாம் ஆதாரம் பரிவாதினியின் ஆதரவாளர்கள் தொடர்ந்து அளித்து வரும் உதவியும் ஊக்கமும்தான். அதற்கு எத்தனை முறை நன்று கூறினாலும் ஈடாகாது.

இந்தத் தொடர் நிகழ்வுகளுக்கு பங்களிக்க விரும்புவோருக்காக க்வங்கிக் கனக்கு கீழே அளிக்கப்பட்டுள்ளது. பரிவாதினிக்கு அளிக்கும் நன்கொடைகள் செக்தன் 80ஜி-யின் கீழ் வருமானவரிச் சலுகைக்கு தகுதிபெற்றவை.

Parivadini Charitable Trust,
Union Bank of India
Account Number: 579902120000916
branch: Kolathur, Chennai,
IFSC Code: UBIN0557994

Read Full Post »

Older Posts »