Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘review’ Category

சாயங்காலம் 4.00.

எஸ்.எம்.எஸ் இ.பா-விடமிருந்து. எஸ்.ராஜம் பற்றிய ஆவணபப்டத்தின் டிவிடி வந்து சேர்ந்தது என்றது அந்த எஸ்.எம்.எஸ்.

6.30 மணிக்கு மீண்டும் ஒரு எஸ்.எம்.எஸ். ஆபீஸை விட்டு கிளம்பும் வேளையில் அலுத்துக் கொண்டே பார்த்தேன். மீண்டும் இ.பா. படத்தை பார்த்த கையோடு அனுப்பி இருந்தார். 2 மணி 8 நிமிட படத்தை கையோடு அவர் பார்ப்பார் என்று எதிர்பார்க்கவில்லை. Thank you sir for taking the same.

Brilliant integration of painting and music! Dynamic harmony! Rajam was a sheer genius! Especially when singing those apoorva ragas and integrating them with aesthetically chosen colors to represent them in Art. Poetry in motion! It is a feather in your and Khanthan’s cap.

கொஞ்சம் கிறுகிறுத்டதபடி வானில் வட்டமடித்து தரை இறங்கினேன்.
Made my day!

Read Full Post »

கர்நாடக சங்கீத உலகின் மிருதங்க மேதை பழனி சுப்பிரமணியப் பிள்ளைஎன்கிற பழனி சுப்புடுவின் வாழ்க்கை வரலாற்றை ‘துருவ நட்சத்திரம்’ நூலாக எழுதியிருக்கிறார் இசை வரலாற்று ஆய்வாளர் லலிதாராம். இசைக் கலைஞர்கள் வரலாற்றை எழுதுவதில் முன்னோடி உ.வே.சா.அவர் படைத்த ‘மகா வைத்தியநாத சிவன்’, ‘கனம் கிருஷ்ணய்யர்’, ‘கோபாலகிருஷ்ண பாரதியார்’ போன்றவற்றை வாசகர்கள் படித்திருக்கக்கூடும். இசை வரலாற்று எழுத்தாளர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவுதான். இத்தகைய எழுத்தாளர் வரிசையில் சமீபத்தில் தடம் பதித்துள்ள இளைஞர் லலிதாராம்.

மிருதங்கத்தில் தமது நாதமயமான வாசிப்பு மூலம் லய விவகாரங்களை அறிந்தோர், அறியாதோர் என இருசாரார் மனத்தையும் கொள்ளை கொண்ட மகா கலைஞன் பழனி சுப்புடு. இந்த நாத மயமான லயமயமான குண ரூப (abstract) உலகை எழுத்தில் எழுதிக் காட்டுவது எளிதல்ல. இத்தகைய சவாலை சந்தித்து வெற்றி பெற்றிருக்கிறார் லலிதாராம். இசைக் கலைஞனது வரலாற்றினூடே அவனது பாட்டினை அல்லது வாசிப்பை, தனியாக அவற்றுக்கே உரிய சங்கீத நுட்பங்களுடன் விளக்கி அவற்றை ஆவணப்படுத்துவதை லலிதாராம் மிகச் சிறப்பாகச் செய்துள்ளார். இது தமிழில் இசை வரலாற்று நூல்களுக்கு அவர் சேர்த்துள்ள புதுப் பரிமாணம்.

16 அத்தியாயங்கள், 224 பக்கங்களில் புதுக்கோட்டைப் பள்ளியின் மூலக் கலைஞர்கள் மான்பூண்டியா பிள்ளை, தட்சிணாமூர்த்திப் பிள்ளைஆகியவர்களின் குணச்சித்திரங்களைப் புனைகதை உத்திகளுடன் ஆசிரியர் வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக மிருதங்க மேதைமுருகபூபதி பற்றிய தனி அத்தியாயமும், பழனி சுப்புடுவின் நாம் அறியாத முகங்களும் நம்மை வியக்க வைக்கின்றன. போதும்… இனி வளர்த்தப் போவதில்லை. வாங்கிப் படித்துப் பாருங்கள்! சுப்புடுவினது மிருதங்க கும்காரமும் ரீங்காரமும் உங்கள் காதுகளில் நிச்சயம் கேட்கும்!

– துருவ நட்சத்திரம், லலிதா ராம், சொல்வனம் பதிப்பகம்,விலை: ரூ 150/

Read Full Post »

சென்ற வருடம் டிசம்பர் மாதம், சதுரம் பதிப்பகம் ‘குருவே சரணம்’ என்ற நூலை பதிப்பித்துள்ளது. இந் நூலில், ‘தாம்பரம் மியூசிக் கிளப்’ நடத்தி வரும் பாஷ்யம் தம்பதியினர் கண்டுள்ள நேர்காணல்களை, கிருஷாங்கினி தொகுத்துள்ளார். இதில் பத்தொன்பது மூத்த கலைஞர்களின் நேர்காணல்கள் இடம் பெற்றுள்ளன.

பரவலாய் அறிந்தவர்களை மட்டும் நேர்காணல் செய்யாமல், அறிவும், திறனும் முழுமையாய் வாய்த்திருந்த போதும் அதிகம் அறியப்பட்டிராத அரிய கலைஞர்களையும் தேடிப் பிடித்து, அவர்களிடமிருந்தும் தகவல்களைச் சேகரித்திருக்கும் பாஷ்யம் தம்பதியினர் பாராட்டுக்குரியவர்கள். நேர்காணல் கொடுத்திருக்கும் கலைஞர்கள் அனைவரும், ‘கர்நாடக சங்கீதத்தின் பொற்காலம்’ என்று குறிக்கப்படும் 1930-1960 வரையிலான காலகட்டத்தில் வளர்ந்தவர்கள்.

கச்சேரி இசைப் பதிவுகள் 1950-களின் கடைசியில்தான் சாத்தியமாயின. இந் நிலையில், அதற்கு முந்தைய காலத்தில் வாழ்ந்த ஜாம்பவான்களின் இசையைப் பற்றி, இந் நூலில் இடம் பெற்றிருப்பவர்களைப் போன்றவர்களிடமிருந்தே தெரிந்து கொள்ள முடிகிறது.அனைத்து கலைஞர்களிடமும் ஏறக் குறைய ஒரே விதமான கேள்விகளே கேட்கப்பட்டுள்ளன. கலைஞர்களின் இளமைக் காலம், அவர்களுக்கு சங்கீதத்துடன் ஏற்பட்ட முதல் ஸ்பரிசம், அவர்களுடைய குருவுடனான பந்தம், கலைப் பயணத்தில் மறக்க முடியாத அனுபவங்கள், மடங்களுடனான தொடர்பு ஆகியவை பெரும்பாலான நேர்காணல்களில் விவரமாக இடம் பெற்றுள்ளன. சில வித்வான்களின் விவரிப்பில் பல அரிய தகவல்களும் இடம் பெற்றுள்ளன.

1. சாத்தபுரம் சுப்பா ஐயர் காலத்தில் தனி ஆவர்த்தனத்தின் போது மோரா வாசித்த பின் ஒரு கோர்வையை மூன்று முறை வாசிக்கும் பழக்கம் இல்லை.
2. பாவேந்தரின் ‘துன்பம் நேர்கையில்’ பாடலுக்கு இசை அமைக்க, தண்டபாணி தேசிகர் இரண்டாண்டு காலம் உழைத்தார்.
3. ஏ.கே.சி நடராஜன் வாசிப்பது வழக்கமான கிளாரினெட் அன்று. அவருடைய கிளாரினெட்டில் 5-6 keys மட்டும் கொண்டு, நாதஸ்வரத்தைப் போலவே பாவிப்பதால்தான் கமகங்களை சுலபமாகக் கொண்டு வர முடிகிறது.

போன்ற தகவல்களை, இந் நூலில் இடம் பெற்றுள்ள அரிய தகவல்களுக்கு உதாரணமாகக் கூறலாம்.

தண்டபாணி தேசிகர், டைகர் வரதாச்சாரியார், காரைக்குடி சாம்பசிவ ஐயர் போன்றவர்களைப் பற்றிய குறிப்புகள் இதற்கு முன் அதிகம் வெளி வராதவை. தந்தையே குருவாகவும், குருவே வ்ளர்ப்புத் தந்தையாகவும் மாறி, அன்பைப் பொழிந்த நிகழ்வுகளைப் படிக்கும் போது நெகிழ்ச்சி ஏற்படுகிறது. எவ்வளவுதான் அன்பு வைத்திருந்த போதும், இசை என்று வரும் போது, குரு சிஷ்யரிடம் காட்டிய கண்டிப்பு கவனிக்கப் பட வேண்டியது. அடைந்திருக்கும் உயரங்களுக்குப் பின் இருக்கும் அயராத உழைப்பும், வளர்ந்து வரும் இளம் கலைஞர்களுக்கு ஒரு பாடமாக அமைந்துள்ளது.

பொதுவாக, இசைக் கலைஞர்களைப் பற்றிய புத்தகங்களில், கலைஞனைப் பற்றிய விவரங்கள் இருக்கும் அளவிற்கு, அவன் அந்தக் கலையில் விசேஷமாய் என்ன செய்து இன்றடைந்திருக்கும் உயரத்தை அடைந்தான் என்ற விவரங்கள் இருப்பதில்லை. இந்தப் புத்தகமும் அதற்கு விதிவிலக்காக அமையவில்லை. உதாரணமாக எம்.எஸ்.அனந்தராமனின் நேர்காணலில், ‘பரூர் பாணி’ என்பதை அவரது தந்தை உருவாக்கினார் என்ற விஷயம் இருக்கிறதே அன்றி. ‘பரூர் பாணி’ என்றால் என்ன என்ற விளக்கங்கள் இடம் பெறவில்லை. ஆனால், இதே நேர்காணலில் வெளிநாட்டிலிருந்து திரும்பி வரும் போது விமான நிலையத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் பற்றி விஸ்தாரமான செய்திகள் இடம் பெற்றுள்ளன.

நூலைப் படித்து முடிக்கும் போது, திட்டமிட்டு உழைத்திருந்தால் இன்னும் பல அரிய தகவல்களை வெளிக் கொணர்ந்திருக்க முடியும் என்கிற எண்ணம் மேலெழுகிறது. மூத்த கலைஞர்களை பேட்டி காண்பதற்கு முன் ‘ஹோம் வொர்க்’ செய்வது மிக மிக அவசியம். அனைவரிடமும் ஒரே கேள்விகளைக் கேட்பதோடு நிறுத்திக் கொள்ளாமல், அந்தந்த கலைஞர்களுக்கென்று பிரத்யேகமாய் சில கேள்விகளையும் கேட்டிருக்கலாம். உதாரணமாக, “திருவையாறில் தமிழில் பாடியபின் தண்டபாணி தேசிகர் சந்தித்த சூழல் எப்படி இருந்தது”, என்ற கேள்வி நிச்சயம் அவரைப் பற்றிய முக்கியமான விஷயங்களை வெளிக் கொணர்ந்திருக்கும். “ஒரு காலகட்டத்தில் எம்.எஸ்.அனந்தராமனின் கச்சேரிகள் பற்றிய விமர்சனங்கள் அனைத்திலும், அவர் ஹிந்துஸ்தானி ராகங்களை கலந்து வாசிக்கிறார் என்ற குற்றச்சாட்டு இடம் பெற்றுள்ளது.”, அந்தக் குற்றச்சாட்டில் எதனால் பிறந்தது, அதனால் அவரது இசை வாழ்வுக்கு பாதகம் ஏற்பட்டதா?, போன்ற கேள்விகள் நிச்சயம் அவரிடம் கேட்கப்பட்டிருக்க வேண்டும்.

வயதானவர்களை நேர்காணல் செய்யும் போது மிகுந்த கவனம் தேவை. ஒரு வயதுக்கு மேல், கோவையாக விஷயங்களைக் கூறுவதென்பது எல்லோராலும் முடியாது. அதிலும், கலைஞர்களில் பெரும்பாலானவர்கள் எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள். அவர்கள் கூறிய அனைத்தையும் அப்படியே எழுதிவிட வேண்டும் என்று கட்டாயம் இல்லை. ஒன்றுக்கு இரண்டு முறை சீர்தூக்கி, உண்மை எதுவோ அதை மட்டுமே பதிவு செய்தல் மிகவும் அவசியம். உதாரணமாக, டி.கே.மூர்த்தியின் நேர்காணலில், “மிருதங்கத்தில் ஒரு பாணி என்றால், அது தஞ்சாவூர் வைத்தியநாத ஐயர் பாணி மட்டும்தான். அந்த ஸ்டைல் ஒன்றுதான் உண்டு. வேறு ஒன்றும் கிடையாது. மாமுண்டியா பிள்ளை ஸ்டைல் ஒன்று இருந்தது. ஆனால் அதை வாசிப்பவர் இப்போது யாரும் இல்லை”, என்கிறார். ஆனால் இதே புத்தகத்தில் திருச்சி சங்கரன் மற்றும் குருவாயூர் துரை ஆகியோரின் நேர்காணலும் இடம் பெற்றுள்ளது. இவர்கள் இருவருமே மாமுண்டியா பிள்ளை ஏற்படுத்திய புதுக்கோட்டை வழியில் வாசிப்பவர்கள். இந்தத் தகவலும் அவர்களின் நேர்காணலில் இடம் பெற்றுள்ள நிலையில், சற்றே சீர்தூக்கிப் பார்த்திருந்தால், இது போன்ற தவறான செய்திகள் இடம் பெருவதைக் தவிர்த்திருக்கக் கூடும்.

நேர்காணல்களில் பல இடங்களின் பெயரும், கலைஞர்களின் பெயரும் தவறாகக் குறிக்கப்பட்டுள்ளன. உதாரணங்களாக, ‘மழவராயநேந்தல்’ என்ற ஊரின் பெயர் ‘மழவராயபுரம்’ என்றும் ‘மழவராய’ என்றும் குறிக்கப்பட்டுள்ளன. ’நன்றுடையான் பிள்ளையார் கோயில்’ என்ற இருக்க வேண்டிய தொடர் ‘நஞ்சுடையான் பிள்ளையார் கோயில்’ என்று இருக்கிறது. தஞ்சாவூர் வைத்தியநாத ஐயரை, ‘வைத்தியநாதன்’ என்று மட்டும் குறித்தால் (மஹா வைத்தியநாத ஐயர், கோனேரிராஜபுரம் வைத்தியநாத ஐயர், செம்பை வைத்தியநாத ஐயர் போன்ற பல வைத்தியநாதன்கள் இருக்கும் சங்கீத உலகில்), யாரைக் குறிப்பிடுகிறார் என்பதில் பல குழப்பங்கள் நேரக் கூடும்.

பொதுவாகவே நூலில், இசை பற்றிய குறிப்புகள் அரிதாகவே இடம் பெற்றுள்ளன. அப்படி இடம் பெற்றிருக்கும் குறிப்புகளிலும் ஏராளமான தவறுகள் காணப்படுகின்றன. டி.கே.மூர்த்தியின் நேர்காணலில் ஓர் இடத்தில், “சில சாஹித்யங்கள் கீழ் ஸ்தாயியிலும், தாளம் மேல் ஸ்தாயியிலும், சில சாஹித்யங்கள் மேல் ஸ்தாயியிலும், தாளம் கீழ் ஸ்தாயியிலும் இருக்கும்.”, என்று பதிவாகியுள்ளது. தாளத்தில் மேல் ஸ்தாயி, கீழ் ஸ்தாயி என்ற பகுப்பு கிடையாது. ‘மேல் காலம்’, ‘கீழ் காலம்’, என்று இருக்க வேண்டிய தொடர்கள் தவறாகக் குறிக்கப்பட்டுள்ளன. “கால், அரை, முக்கால் என்று பாட்டுக்கு தனி ஆவர்த்தனம் விட்டால் சாபுதாளம் இடத்திற்கு வாசிக்கத் தெரிய வேண்டும்”, என்பது போன்ற முழுமை பெறாத வாக்கியங்களும் இடம் பெற்றுள்ளன. ‘சங்கீர்ண சாபு’ என்ற தாளத்தின் பெயர் ‘சங்கீத சாபு’ என்று பதிவாகியுள்ளது. ‘சேதுலார’ என்ற கிருதி ‘சேதுல்ல’ என்று தவறாகக் குறிக்கப்படுகிறது. இது போன்ற பல பிழைகள் புத்தகம் முழுதும் பரவிக் கிடக்கின்றன.

மொத்தத்தில், புத்தகம் ஒரு அரிய தொகுப்பு என்பதில் ஐயமில்லை. ஆனால், கலைஞர்களின் தனிப் பட்ட வாழ்க்கையை விட, அவர்களின் சங்கீதத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, பதிவு செய்யப்படும் தகவல்களில் தவறு வராமலிருக்க வேண்டிய முனைப்பு தொகுப்பாளருக்கு இருந்திருப்பின் இந்தத் தொகுப்பு காலத்தைக் கடந்து நின்றிருக்கும்.

பி.கு: புத்தகத்தில் வந்துள்ள ஒரு அரிய கட்டுரையை இங்கு படிக்கலாம்.

Read Full Post »

வலைப்பூக்களுக்கு நான் ஒரு late entrant.. 2003-லிருந்து 2005 வரை நிறைய கட்டுரைகளை (பெரும்பாலும் இசை விமர்சனங்கள்) தெரிந்த சில நண்பர்களுக்கு மட்டும் மின்னஞ்சலில் அனுப்பி வைத்துக் கொண்டிருந்தேன். அப்படி அனுப்பிய மின்னஞ்சல்களில் ஒன்று கூட கைவசம் இல்லை.

அப்படி அனுப்பிய ஒரு மடலை பிரகாஷ் அவர் வலைப்பூவில் போட்டார். (இங்கு படிக்கலாம்).

15-20 கட்டுரைகள் காணாமல் போனதே என்றெண்ணி அவ்வப்போது வருந்துவதுண்டு. யாருக்கும் பெரிய இழப்பில்லை எனினும், அந்த கட்டுரைகளைத் திருபிப் பார்க்கும் பொது, நினைவில் நிற்கும் அக் கச்சேரிகளை மீண்டும் ஒருமுறை கேட்பது போன்ற உணர்வு எனக்கு ஏற்படுமே, அந்த அனுபவத்தை இழந்துவிட்டோமே என்று நினைத்துக் கொள்வேன்.

நேற்று, a blast from the past, அன்பது போல, 2003-ல் நான் எழுதிய மின்னஞ்சல் ஒன்று கிடைத்தது. மீண்டும் தொலையாமல் இருக்க, இங்கு போட்டு வைக்கிறேன்.

Dear Lakshmi,

Hope everything is fine at your end. I’m having some free time today, thought I would write about the TNK concert I attended.

It was on 27th dec. 2003 @ Nada Inbam, Raga Sudha hall.

It was heartening to see a full house for a TNK concert (which unfortunately is a rarity these days). Violinist Shriramkumar and vocalist Chengalpet Ranganathan were also among the fortunate few to have listened to this amazing concert.

Concert started with the begada varnam rendered in 2 speeds. I was expecting “entharO” to follow. But, TNK played “Nadha thanumanisham” in his own bhava-laden style. He surprised me with several rounds of brisk kalpana swarams.

Duo-concerts become a problem when one of the 2 artistes is of a higher calibre. Viji might be a good violinist, but when playing with TNK, esp. during the kalpana-swarams, one gets a ‘sine curve’ feeling.

Although I had told u in my earlier mail that the kalyaNi aalapanai I heard that day was easily one of the best ever, for me the highlight of the concert was the 2-min. raga sketch of saramathy. I’m sure it would have melted the hardest of the hearts. Just a few strokes brilliantly brought out the pathos feel of saramathy. After the aalapanai I thought there was nothing left in that raagam to be explored. Such was the ‘niRaivu’. The best thing about TNK is his krithi rendition. I would be stating the obvious if I say that the “mokshamu galadha” was rich in emotional content. (TNK was in such a form that I dint even feel like opening my eyes to ‘sight-adichufy’ a ‘sooper-figure’ sitting beside me;-)

Without wasting anytime, he started playing kalyaNi. When I think about that aalapanai, I could imagine a beautiful painting unfolding in front of my eyes. If you imagine TNK as a painter and raga kalyani as the painting, he drew a few sketches here and there on the canvas(his violin) outlining the length and breadth (scope) of the painting(raga). Then he started painting (playing) the details with finnesse and precision. His fingers were weaving several beautiful patterns soaked with a very very pleasant bhavam. One could really feel the first few lines grow into a amazingly colourful, highly imaginative, captivating painting. (huh! I’m running out of adjectives.)

After the kalyani aalapnai, Chengalpet Ranganathan rose from his seat and made a statement from the bottom of his heart. “ithuthaan uNmaiyaana kalyaaNi, intha maathiri kEttu romba varusham aachu.” TNK seemed to be extremely happy after the aalapanai as he won several rounds of applause from the audience.

He dedicated all the applause to his guru semmangudi. He also recollected his initial days when he played kalyani with a flat nishadam. “oru thadavai appadi vaasichapOthu avar mugham suLichathai paarthen, aprum flat-aa vaasikkavE illai, as far as kalyaNi is concerned upper-sa is the nishadam and the madhyamam should be almost near panchamam”

He also demonstrated the kalyaNi “ni” with a flat note and with the gamakam.

He followed the aalapanai with “birana brova” and when he started the kriti almost everone in the hall let out a cry -recollecting the epic rendition of this krithi by semmangudi. Guruvayur Dorai’s accompaniement during the swarams was enjoyable.  Especially his anticipation requires a special mention.

When the kriti and the kalpana-swarams were over, I couldn’t believe that TNK had played kalyani only for about 32 mins. I was left wondering how he managed to fit in so much in such a short time.

Saveri is another bhava-laden raagam. I need not say it would only be a treat if someone like TNK plays it. He took it for elobarating as an RTP. Thanam is a wonderful part of our music, which unfortunately most people do for the sake of doing it. The semi-rythmic syllables are such a pleasure to listen. I was a little disappoined when TNK after a few short-rounds of thanam started to play the pallavi.

When he started the pallavi, it reminded me a lot of the ARI’s saveri pallavi which we were debating on. However, when I went asked the sahithyam for the pallavi after the concert, he said it was “kari mora vina ledhaa hare krishna”, which I dont think is the pallvi line of the ARI concert. The pallavi neraval was pretty elaborate and he did tri-kaalam on it. He played several rounds of swarams at the slower speed and I would pick that as the best part of the RTP. After playing swarams at the faster speed, he played ragamalika swarams in sahana, poorvi kalyani and sree.

After the RTP, the percussionists got a chance to prove their prowess in the thani-aavarthanam. Guruvayur Dorai and Vaikom Gopalakrishnan were very enthusiastic in playing the 2-kaLai aadhi thani. After several aavarathanam in chatrusra nadai, the duo played a few aavarthanams in tisra-nadai. The kuraippu was delectable, especially when Guruvayur Durai played several aavarthanam pre-dominantly with his left hand. His subtle variations on the ‘thoppi-side’ of the mridangam was extremely good.

After the thani, SVK started to speak and he was showering TNK with accolades. Although, TNK deserved that and much more, I felt irritated listening to someone speak in the middle of a great concert. The only good thing he did was requesting TNK to play raagams like “kaapi, yadhukula kambhoji” etc. Which, TNK promptly obliged a played a garland of raga-sketches on ragas kapi, mohanam, thodi (in thodi he made 1 stroke with his bow and said”oru stroke-la raagam vanthudanum, raagam enga-nu thEdindu irukkak koodaathu”), Neelambari, Atana and behag.

When he played the mangalam, I’m sure all the hearts in that room would have been filled with extreme happinness.

regards,
Ram.

Read Full Post »

சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில், கிருதிகளை முன்னிறுத்திய கச்சேரி பத்ததி உருவான போது, சங்கீத மும்மூர்த்திகள் என்று குறிக்கப்படும் தியாகராஜர், தீக்ஷிதர், ஷ்யாமா சாஸ்திரி, ஆகியோர் அமைத்த கிருதிகளே கச்சேரிகளில் புழங்கின. அதற்கு பல காலம் முன்னே, தமிழில், அருணாசல கவி, முத்துத் தாண்டவர், மாரி முத்தாப் பிள்ளை போன்றோர், பாடல்கள் புனைந்திருப்பினும், அவர்கள் அமைத்த மெட்டுகள் அதிகம் கிடைக்கவில்லை. இதனால் ஆங்கொன்றும், ஈங்கொன்றுமாய் கோபால கிருஷ்ண பாரதி போன்றோரின் பாடல்கள் கச்சேரிகளில் இடம் பெற்ற போதும், பெரும்பான்மையான பாடல்கள் தமிழில் அமையவில்லை.

இந்நிலை இன்று பெருமளவு மாறியுள்ளது. அதற்கு முக்கிய காரணம் இருவர். முதலாமவர், பாபநாசம் சிவன். இவர் பாடல்கள் சென்ற நூற்றாண்டிலேயே பிரபலமடைந்து விட்டன. அவர் சம காலத்தில் வாழ்ந்து பல அரிய பாடல்கள் புனைந்த மற்றொருவர் கோடீஸ்வர ஐயர். மதுரை அருகே நந்தனூரில் 1869-ல் பிறந்த இவர், ஸ்கந்த புராண கீர்த்தனைகள், பேரின்ப கீர்த்தனைகள் போன்ற பல கீர்த்தனைகள் புனைந்த கவி குஞ்சர பாரதியின் பெயரன். சிறு வயதில் பெற்றோரை இழந்த கோடீஸ்வர ஐயர், தன் பாட்டனாரிடம் சங்கீதமும், தமிழும் பயின்றதோடு, ஆங்கிலக் கல்வியிலும் தேர்ச்சி பெற்ற பி.ஏ. பட்டமும் பெற்றார். சென்னை உயர் நீதி மன்றத்தில் மொழிபெயர்ப்பாளராக பணியாற்றிய போதும், தன் பாட்டனாரின் கீர்த்தனைகளைப் பிரபலப்படுத்தும் வகையில் ஹரிகதா காலட்சேபம் செய்தும், அவ்ற்றைத் தொகுத்துப் புத்தகங்கள் வெளியிட்டும் வந்தார்.

படிக்கும் போதே மதுரை சித்தி விநாயகர் பதிகம், கயற்கண்ணி பதிற்றுப் பத்தந்தாதி, மதுரை ஷண்முக மாலை முதலியவற்றை எழுதியுள்ளார். பட்டிணம் சுப்ரமணிய ஐயர், பூச்சி ஸ்ரீநிவாஸ அய்யங்கார் ஆகியோரிடம் பயின்றதாலும், மஹாவைத்தியநாத சிவன், குன்றக்குடி கிருஷ்ணையர் ஆகியோருடன் நெருங்கிப் பழகியதாலும் இசையில் சிறந்த தேர்ச்சியைப் பெற்றார். இவரது மொழித் தேர்ச்சியும், இசைத் தேர்ச்சியும் ஒருங்கிணைந்து, எழிலுறு பாடல்களாய் வெளிப்பட ஆரம்பித்தன. தனது 47-வது வயதில், சம்பூர்ண மேள பத்ததியின் வழியில் உள்ள 72 மேளகர்த்தா ராகங்களிலும் கிருதிகள் அமைக்க விழைந்தார். பாடலுக்கான பொருளாக, தன் குல தெய்வமான முருகனையே கொண்டார்.

ஹம்சத்வனி ராகத்தில், பிள்ளையார் துதியில் தொடங்கி, 72 மேளகர்த்தா ராகங்களிலும் கோடீஸ்வர ஐயர் புனைந்த பாடல்கள் தொகுப்புக்கு ‘கந்த கானாமுதம்’ என்று பெயரிட்டார். கந்த கானாமுதத்தின் சுத்த மத்யம ராகங்கள் அடங்கிய தொகுப்பு 1932-லும், பிரதி மத்யம ராகங்கள் அடங்கிய தொகுப்பு 1938-லும் புத்தகங்களாய் வெளியாயின. அந்தக் காலத்தில், விவாதி ராகங்கள் எல்லாம் தோஷ ராகங்கள். அவற்றைப் பாடினால் கேடு விளையும் என்ற எண்ணம் பரவலாக இருந்தது. மேளகர்த்தா ராகங்கள் 72-ல், 40 ராகங்கள் விவாதி ராகங்கள் என்ற போதும், இந்தக் கருத்தே ஓங்கி இருந்தது. உண்மையில், விவாதி ராகங்களைக் கையாள்வது கடினம். இந்த ராகங்களைப் பாட, ‘சுத்த ஸ்வரங்களைக்’ கையாளும் தேர்ச்சி மிகவும் அவசியம். அவற்றை கையாண்டு சங்கடத்தில் மாட்டிக் கொள்வதை விட, தோஷ ராகங்கள் என்று பெயரிட்டுத் தப்பித்துக் கொள்வதையே பலர் விரும்பினர். ’தோஷ ராக’ கருத்தை ஏற்காதவருக்கும் விவாதி ராகங்களைப் பாடுவதென்பது அத்தனை சுலபமாக இல்லை.

கர்நாடக இசையில், ராகம் என்பது வெறும் ஸ்வரங்களின் சேர்க்கையன்று. ஸ்வரங்கள் என்பது வெறும் எலும்புக் கூடுதான். அதற்கு உயிர் கொடுக்கும் வகையில், ஒவ்வொரு ராகத்துக்கும் பிரத்யேக பிரயோகங்கள், ஜீவ, நியாஸ ஸ்வரங்கள் ஆகியவற்றை அறிந்தால்தான், எலும்புக் கூட்டிற்கு உடலும் உயிரும் கிடைக்கும். கல்யாணி. கரஹரப்ரியா போன்ற பிரபல ராகங்களின் சஞ்சாரங்களை உணர்ந்த அளவிற்கும், இந் நாளில் கூட, விவாதி ராகங்களின் அமைப்புகள் அதிகம் உணரப்படவில்லை. இந்த நிலையில், சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில், 72 மேளகர்த்தா ராகங்களிலும் பாடல் புனைந்தது, மிகப் பெரிய சாதனையாகும்.

கந்த கானாமுதத்தின் முகவுரையில் இடம் பெற்றிருக்கும் பிரபலங்களின் அணிந்துரைகள் அந்தக் காலகட்டத்தை உணர ஏதுவானவை. பரூர் சுந்தரமையர், “குருடனுக்கு நேத்திரம் கிடைத்தது போல், உங்களிடம் சில கீர்த்தனைகளைக் கற்ற பிறகு, 72 ராகங்களையும் சர்வ சாதாரணமாகவே பாடலாம் என்று உணர்ந்து கொண்டேன்”, என்கிறார். “தமிழ் பாஷை இசைக்குப் பொருத்தமற்றது என்ற முடிவை பண்ணாளாய் கொண்டுள்ள கொள்கை தப்பானது என்பதை இந்நூல் எடுத்துக் காட்டுகிறது”, என்கிறார் பாபநாசம் சிவன். “Mr. Kotiswara Iyer made first comprehensive attempt to compose kirthanas in all Melas. The scientific value of his kirtanas is of high order and this publication is a landmark.”, என்கிறார் டி.எல்.வெங்கடராம ஐயர். தெள்ளு தமிழில் விளங்கும் இந்தக் கீர்த்தனங்களில் மிளிரும் ஸ்வராக்ஷரப் பிரயோகங்களை, தமிழ்த் தாத்தா உ.வே.சா, துவாரம் வெங்கடசாமி நாயுடு, கீர்த்தனாச்சாரியார் ஸ்ரீநிவாஸய்யங்கார், டி.எஸ்.சபேஸ ஐயர் போன்ற பண்டிதர்கள் பெரிதும் பாராட்டியுள்ளனர். ஒவ்வொரு பாடலிலும், பாடல் அமைந்துள்ள ராகத்தின் பெயர் வருமாறு சாஹித்யத்தை அமைத்திருப்பது மற்றொரு சிறப்பாகும்.

இவ்வளவு சிறப்பினைப் பெற்றிருந்த போதும், இந்தக் கீர்த்தனைகள் கச்சேரியில் அதிகம் பாடப்படாமலேயே இருந்தன. காலப்போக்கில் கந்தகானாமுத புத்தகம் கூட கிடைக்காத நிலை ஏற்பட்டது. அந்தச் சமயத்தில், வித்வான் எஸ்.ராஜம், டி.சங்கரனின் தூண்டுதலால், இந்தக் கீர்த்தனைகளை வானொலியில் ஒலிபரப்ப முனைந்து பாடுபட்டார். ராஜமும், விதுஷி ஜி.வைதேஹியும், கோடீஸ்வர ஐயரிடம் நேரில் கற்றுக் கொண்ட ஆர்.எம்.சுந்தரத்திடம் 72 கீர்த்தனைகளையும் பாடம் செய்து, வாரம் ஒரு சுத்த மத்யம ராகம், ஒரு பிரதி மத்யம ராகம் வீதம் வானொலியில் பாடி ஒலிபரப்பினர். இந்த ஒலிபரப்பு, பெரும் வரவேற்பைப் பெற்றது.

அப்போதிலிருந்து வித்வான் எஸ்.ராஜத்துக்கு கோடீஸ்வர ஐயரின் கீர்த்தனைகளைப் பரப்புவதே வாழ்வின் முக்கிய குறிக்கோளாக மாறிப் போனது. பல வித்வான்களுக்கு, “நிச்சயம் ஒரு கீர்த்தனையாவது, என் கச்சேரிகளில் பாடுவேன்.”, என்று சத்தியம் வாங்கிக் கொண்டு சொல்லிக் கொடுத்துள்ளார் எஸ்.ராஜம். இவரது தொண்டுக்கெல்லாம் மகுடம் வைத்தார் போல், சென்னைப் பல்கலைகழகத்தின் இசைத் துறையின் இந் நாள் தலைவரும், எஸ்.ராஜத்தின் மருமகளுமான விதுஷி பிரமீளா குருமூர்த்தியின் தூண்டுதலில், ராஜம் அவரது 72-ஆவது வயதில், கோடீஸ்வர ஐயரின் 72 மேளகர்த்தா கீர்த்தனைகளையும் பதிவு செய்து, ஒலிநாடாக்களாக வெளியிட்டார்.

ஒவ்வொரு மேளகர்த்தாவுக்கும் ஆரோஹணம் அவரோஹணம் பாடிக் காண்பித்து, சிறு சித்திரமாய் ஆலாபனை பாடியுள்ளார். ராஜத்துக்கு இயற்கையிலேயே நல்ல குரல் வளமும், நல்ல மனோதர்மமும் அமைந்திருந்த போதும், இந்தப் பதிவைப் பொறுத்தவரையில், அவற்றை முன்னிறுத்துக் கொள்ளவேயில்லை. கீர்த்தனைகளை அவசரமாகப் பாடி, தான் இன்னும் இரண்டு ஆவர்த்தம் அதிகமாக ஸ்வரம் பாடலாமே என்ற எண்ணங்களை எல்லாம் அரவே தவிர்த்து, கீர்த்தனையின் முழு அழகை வெளிப்படுத்தும் வகையில் அழகாகப் பாடியுள்ளார். இன்று மலிந்து கிடக்கும் பதச் சேதங்கள், உச்சரிப்புப் பிழைகள், சாஹித்யங்களில் தெளிவின்மை ஆகியவற்றை மருந்திற்கும் கண்டுபிடிக்க முடியாது. 72 வயதிலும் கணீரென்று ஒலிக்கும் ராஜத்தின் குரலும், இம்மி பிசகினாலும் இடரிவிடக்கூடிய ராகங்களை அநாயாசமாக அவர் கையாண்டுள்ள முறையும் ஆச்சரியமானவை. அதிகம் காணக் கிடைக்காதவை. ராஜத்தின் பாடும் முறையில் உள்ள மற்றொரு விசேஷம், அவரது சுத்த ஸ்வர நிர்ணயம். உதாரணமாக, ரிஷபப்ரியா ராகக் கீர்த்தனையின் சரணத்தில், “ஷட்ஜ, ரிஷபப்ரிய, காந்தார, மத்யம, பஞ்சம, தைவத, நிஷாத வித ஸப்தஸ்வர”, என்ற வரியில் ஒவ்வொரு ஸ்வரத்திலும் அவர் நின்று பாடியிருக்கும் விதம் வெகு அற்புதம். ஓரிரு நிமிடங்களுக்கு மட்டுமே ஒலிக்கும் ஸர்வலகு பாணியில் அமைந்துள்ள கல்பனை ஸ்வரங்கள், முயிற்சி இருந்தால் விவாதி ராகங்களையும், தோடியையும், கல்யாணியையும் போல பாட முடியும் என்று திட்டவட்டமாய் நிறுவும் வகையில் அமைந்திருக்கின்றன.

தீபாவளிக்கும் செய்யும் மைசூர் பாகில், பாகை, அழகாய், அடுக்காய் வெட்டியபின், ஒரே ஒரு துண்டத்தை அம்மா குழந்தையிடம் தருவார். அதை உண்ட பிள்ளைக்கோ, அனைத்து துண்டங்களும் தனக்கே வேண்டும் என்று தோன்றும். ராஜத்தின் கல்பனை ஸ்வரங்கள் அந்த விதத்தைச் சேர்ந்தவை. ஒவ்வொரு ராகத்திலும் இன்னும் ஐந்தாறு நிமிடங்களுக்குப் பாடியிருக்கக் கூடாதா என்று ஏங்க வைப்பவை.

சமீப காலமாக கோடீஸ்வர ஐயரின் கீர்த்தனைகள் கச்சேரிகளில் அதிகம் ஒலிப்பதில் இந்த இசைப் பதிவின் பங்கு கணிசமானது என்றால், அது மிகையாகாது. கிட்டத்தட்ட பதினெட்டு வருடமாய், ராஜத்திடம் மட்டுமே இந்த இசைக் கோவை விற்பனைக்குக் கிடைத்து வந்தது. குடத்தில் இட்ட விளக்கை, குன்றின் மேலிட்ட விளக்காக மாற்றியுள்ளது ஸ்வாதிசாஃப்ட் நிறுவனம். சென்ற மாதம், அந் நிறுவனத்தாரின் சன்ஸ்கிருதி வரிசையில், MP3 ஆல்பமாக ‘கந்த கானாமுதம்’ வெளியாகியுள்ளது. மூன்று தகடுகள் அடங்கிய இந்த ஆல்பத்தின் விலை ரூ.600. அரிய பதிவு என்ற போது, அதிகம் அறியப்படாத பதிவாக இருந்து வந்த இந்தப் பதிவு, அனைத்து இசை ரசிகர்களிடமும் இருக்க வேண்டிய ஒன்று.

கந்த கானாமுதத்தை இங்கு வாங்கலாம்.

ஸ்வாதி நிறுவனத்தாரின் அனுமதியுடன், தொகுப்பிலிருந்து லதாங்கி ராகப் பாடலை இங்கு இடுகிறேன். தட்டுத் தடுமாறி இந்த ஒலியிணைப்பைக் கொடுக்க ம்யன்றிருக்கிறேன். உங்களுக்குக் கொடுப்பினை இருந்தால் பாடும்:-)

Read Full Post »

முடிந்த சீஸனில் சௌம்யா, மேண்டலின் ஸ்ரீனிவாஸ், சஷாங்க், லால்குடி டூயட், அபிஷேக் ரகுராம் போன்றவர்களை கேட்க முடியாமல் போனது வருத்தம்தான். அந்த வரிசையில் நான் அதிகம் கேட்க விரும்பி, ஆனால் கேட்க முடியாமல் போனவருள் இன்னொருவர் காயத்ரி வெங்கடராகவன். இன்று அவருடைய கச்சேரி இருப்பதை பேப்பரில் பார்த்ததும், நிச்சயம் போய்விட வேண்டும் என்று முடிவெடுத்தேன்.

நல்ல கனமான சாரீரம். லயத்தில் நல்ல பிடிப்பு. பாவபூர்வமான சங்கீதம் என்று இவருடையதைக் கூறலாம். நிறைய கே.வி.நாராயணசாமி வழியில் பாடுகிறார் என்று எனக்குத் தோன்றும். ஒவ்வொரு ராகத்தையும், கீர்த்தனையையும் திளைத்து, ருசித்து, ரசித்துப் பாடுகிறார் என்று கேட்பவருக்கு நன்றாக விளங்கும்.

இன்று ஸ்ரீ பார்வதி கூடத்தில், பத்மா வீரராகவனின் கிருதிகளைப் பாடினார். பத்மா வீரராகவன் என்ற பெயரை நான் கேள்விப்பட்டதே இல்லை. ஸ்ரீபார்வதி அரங்கம் கச்சேரிக்கு அவ்வளவு உகந்தததல்ல. இருப்பினும் காயத்ரியின் கச்சேரியை தவறவிடக்கூடாது என்றே சென்றேன்.

தற்கால வாக்கேயக்காரரான பத்மா வீரராகவன், காயத்ரியின் முதல் குருவாம். நிறைய திவ்யபிரபந்தங்களுக்கு மெட்டமைத்திருக்கிறாராம். திருவிண்ணகரத்து ஒப்பிலியப்பன் மேல் நிறைய பாடல்கள் புனைந்திருக்கிறாராம். சமீபத்தில் ஸவர சாஹித்யங்களுடன் அவருடைய உருவாக்கங்கள் ”ஒப்பிலியப்பன் மலர்கள்” என்ற பெயரில் புத்தகமாய் வெளியாயுள்ளன. 72 மேளகர்த்தா ராகங்களிலும், ராக முத்திரையோடு, எளிமையான தமிழில் பாடல்கள் புனைந்துள்ளார்.

கச்சேரி கீரவாணி வர்ணத்துடன் தொடங்கியது. சில ஆவர்த்தங்கள் கல்பனை ஸ்வரங்களும் பாடினார். ’வானத்தின் மீதொரு அதிசயம்’ என்ற மோகன ராக கிருதி, நல்ல விறுவிறுப்பான காலப்ரமாணத்தில் அமைந்திருக்கிரது. ’நட்சத்திரங்கள்’ என்ற வார்த்தையில் அழகழகாய் சங்கதிகள்! அதற்கடுத்து ‘கம்பீர நடை காண’ என்ற பாடலை கம்பீர நாட்டை ராகத்தில் பாடினார். அதன்பின், கமாஸ் சாயல் அடிக்காமல், காம்போஜியின் பிரயோகங்கள் புகாமல் ஹரிகாம்போஜியை தனித்தன்மையுடன் மிளிரும் வகையில் short and sweet-ஆக ராகம் பாடினார். அதுவரை வயலினில் ரூபா ராஜகோபாலன் என்ன வாசித்தார் என்று கேட்கவில்லை. இந்த ராகத்தின் போது, கேட்க ஆரம்பித்தது. காயத்ரி பாடியதை, இவரும் பிரமாதமாய் வாங்கி வாசித்தார். ‘வருவாரோ வரம்’ என்ற பாடல் is a welcome addition to the raga. கச்சேரிகளில் பந்துவராளிக்கும், ஆனந்த பைரவ்களுக்கும் பதிலாக இந்த ராகத்தைப் பாடலாம். பாடலின் சரணத்தின் ராகத்தின் பெயரும் அழகாக பொருந்தியுள்ளது.

’பட்டாபிஷேகம் காண’ என்ற அடுத்த பாடல் ரசிகப்ரியா ராகத்தில் அமைந்துள்ளது. பாடலின் பல்லவி, இன்று பிரபலமாய் இருக்கும் ‘அருள் செய்ய வேண்டுமையா’ பாடலின் பல்லவியை நிறைய நினைவுபடுத்தியது. காயத்ரியின் பெரிய பலம் அவர் கொடுக்கும் பாவம். அவர் இழுத்து இழுப்புக்கெல்லாம் குரல் போகிறது. பிருகாவா, கார்வையா, ஜாருவா…நினைத்ததெல்லாம் பேசுகிறது. இன்று சாருகேசியில், தார ஸ்தாயியில் நின்று கார்வைகள் கொடுத்த பின், மத்ய ஸ்தாயி தைவதத்தை நோக்கி அவரோஹணித்து (புது பிரயோகம்! சரியா என்று தெரியவில்லை) கடைசியில் பல அழகிய கோவைகள் பாடி தார ஷட்ஜத்தில் ஆலாபனையை நிறைவு செய்த அழகிருக்கிறதே…த்சொ… த்சொ…அப்படி ஒரு உருக்கம். சாருகேஸி ராகம் பிரவாகமாய் ஓடியது. ‘நாவினிக்க மனமினிக்க’ என்று தீந்தமிழில் இசைமாறி பொழிந்தார். கல்பனை ஸ்வர பொருத்தங்களுக்கு பெயர் எடுத்த டி.ஆர்.சுப்ரமணியம்தான் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர். அவர் முன்னிலையில் காயத்ரி சாருகேஸியில் வைத்த பொருத்தங்கள் would have definitely made TRS proud.

ஈரோடு நாகராஜ் மிக உற்சாகமாய் மிருதங்கத்தில் பக்கபலமாக இருந்தார். வழக்கமாய் தொப்பியில் வாசிப்பவைகள், நம்மூரில் இருக்கும் ஒலியமைப்பால் கேட்காது. இன்று, தொப்பி நன்றாகக் கேட்டது. வலந்தலையில் வாசித்த ஃபரன்கள் எல்லாம் சுத்தமாய் கேட்கவில்லை. இன்று வாசித்த தனியில், திஸ்ர நடை கதி-பேதம் நன்றாக இருந்தது. கடைசியில் வைத்த கேர்வையும் ப்ளிச்சென்று இருந்தது.

சாருகேஸியைத் தொடர்ந்து தோடியிலும், ஷண்முகப்ரியாவிலும் கிருதிகளைப் பாடினார். தோடி கீர்த்தனை மிஸ்ர சாபுவில் அமைந்துள்ளது. நிச்சயம் மெயின் கிருதியாகக் கூட இதைப் பாடலாம் என்றே தோன்றியது. அமீர்கல்யாணியில் ‘நீல வண்ணக் கண்ணா’ என்று தாலட்டு பாடலொன்றில் கண்ணனை கொஞ்சிய போது, ஒவ்வொரு ‘தாலேலோவுக்கும்’ அரங்கிலிருந்த ஒவ்வொரு மனமும் தூளியாடின!

சிவரஞ்சனியில் தில்லானா பாடிய போது, அதற்குள் கச்சேரி முடிந்துவிட்டதே என்று தோன்றியது! பத்மா மெட்டமைத்துள்ள இரண்உ பாசுரங்களைப் பாடினார் காயத்ரி. அரியக்குடி அமைத்துள்ள சிந்து பைரவி மெட்டை விட, ‘அன்று இவ்வுலகம்’ பாசுரத்துக்கு, பேகடாவில் அமைக்கப்பட்டுள்ள மெட்டு எடுப்பாக உள்ளது. ‘அன்று இவ்வுலகம் அளந்தாய்’ என்ற வரியில் ‘அளந்தாய்’ என்ற வார்த்தையை கீழ் நோக்கி பிரயோகிக்குமாறு அரியக்குடி அமைத்துள்ளார். அவ்வார்த்தை மேல் நோக்கி செல்வது போல் அமைத்திருக்கிறார் பத்மா வீரராகவன். உலகளந்தவன் என்றது, தூக்கிய திருவடியே நினைவுக்கு வருவதால், புதிய மெட்டு இன்னும் நன்றாய் பொருந்துகின்றது.

நிறைவாக மங்களம் பாடினார். இந்த ‘மங்களம்’-தான் ஹம்சத்வனியில் அமைந்துள்ள ஒரே மங்களமாக இருக்கும் என்று நினைக்கிறேன். இந்தப் பாடல்தான் பத்மா வீரராகவன் புனைந்த முதல் பாடலாம்.

ஸ்பென்சர் வேணுகோபால், ராஜி கிருஷ்ணன், அஷோக் மாதவ் போன்ற தற்கால வாக்கேயக்காரர் வரிசையில் பத்மா வீரராகவனையும் இன்று அறிய முடிந்தது. காயத்ரி போன்ற அவரது சிஷ்யர்கள் நிறைய பாடினால் நிச்சயம் இவரது புனைவுகள் காலத்தைத் தாண்டி நிற்கும்.

கச்சேரி முடிந்ததும், ‘உப்பிலியப்பன்’ என்று பாடுவதை விட ‘ஒப்பிலியப்பன்’ என்று பாடினால் இன்னும் நன்றாக இருக்கும் என்று காயத்ரியிடம் கூறினேன். “அதற்கென்ன, அடுத்த கச்சேரியில் மாற்றிவிடலாம்”, என்று அவருடைய ட்ரேட் மார்க் புன்னகை ஒன்றை வீசியபடி.

கச்சேரி முடிந்ததும் பேசிய டி.ஆர்.எஸ், காயத்ரிக்கு, melody princess’ (queen என்றால் வயதானவர் என்று தோன்றுகிறதாம்), என்று பட்டம் கொடுக்கலாம் என்றார்!

கச்சேரியில் ஒரே ஒரு குறைதான். ‘அதிசயம்’, ‘இசை’, ‘சேய்’, ‘சில’ போன்ற பதங்கள் ‘அதிஷயம்’, ‘இஷை’, ‘ஷேய்’, ‘ஷில’ என்று பாடப்பட்டன. இந்த ஒரு குறையை மட்டும் களைந்துவிட்டால், காயத்ரி நிச்சயம் melody princess-தான்!

Read Full Post »

ஜி.என்.பி நூற்றாண்டு மலர், கந்தர்வ கானம், பற்றிய விமர்சனம் இங்கே

Read Full Post »

லா.ச.ரா-வின் புதல்வர் சப்தரிஷி எழுதியுள்ள விமர்சனம் இந்த மாத அமுதசுரபியில். என் புத்தகம் வெளியான போது எனக்கொரு கடிதம் எழுதியிருந்தார். அதைப் படித்ததும், “கடிதம் என் புத்தகத்தை விட நன்றாக இருக்கிறது”, என்றேன். இப்போதும் அதைத்தான் சொல்லத் தோன்றுகிறது. லா.ச.ரா-வும் சுஜாதாவும் கலந்த கலவையாக சப்தரிஷியின் பிரயோகங்கள் ஜொலிக்கின்றன.

டிவிடியை இங்கே வாங்கலாம்

Read Full Post »