Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Posts Tagged ‘அறிவிப்பு’

ச்ங்கீத மும்மூர்திகளுள் முத்துஸ்வாமி தீட்சிதர் விசேஷமானவர்.  மற்ற இருவரும் வாய்ப்பாட்டில் சிறந்து விளங்கினர். தீட்சிதர் ஒருவரே வாத்தியத்திலும்  தேர்ச்சி பெற்றவர்.  தென்னிந்திய இசை தவிர ஹிந்துஸ்தானி இசையிலும் பயிற்சி உடையவர்.

ஓவியர் ராஜம் வரைந்த தீட்சிதர்

அவரது கிருதிகள் வரலாற்று ஆவணங்களாக அமைந்துள்ளன. அப்பர், சம்பந்தர் போல ஊர் ஊராகச் சென்று, அந்தந்த க்ஷேத்ரங்களைப் பற்றிப் பாடியவர். கோயில் அமைப்பு, ஸ்தல புராணம், ஸ்தல விருட்சம், குளங்கள் என்று சகல விதமான தகவல்களையும் கீர்த்தனைகளுள் நிரப்பியவர்.

எண்ணற்ற அரிய ராகங்களில் கிருதிகள் அமைத்தவர். விவாதி ராகங்களை கையாள்வதில் முன்னோடி. அஸம்பூர்ண பத்ததியில், எண்ணற்ற மேளராகங்களில் பாடல் புனைந்தவர். பல ராகங்களின் உருவங்களை, இவர் கீர்த்தனை அமைப்பைக் கொண்டே உணர முடிகிறது.

எஸ்.ராஜம் எழுதிய கட்டுரையில், “சங்கதிகள் அதிகமில்லாமல் முழு ராக சாயை ஒரு கீர்த்தனையிலேயே அடக்கிய பெருமை இவருக்குத்தான் உண்டு. ராகத்தின் அமைப்பு மாறாமல் இருக்க சிட்டஸ்வரங்கள் உதவுகின்றன. சவுக்க காலத்தில் பாடும் திறன் பெற்றவரே இவர் கீர்த்தனைகளை போஷாக்குடன் பாட முடியும். தவிர, மந்திரஸ்தாயியிலும் நன்றாக நின்று பாடும் திறனும் தேவைப்படுகிறது.”, என்கிறார்.

நவக்கிரஹ கிருதிகள், பஞ்சலிங்க கிருதிகள், தேவி நவாவர்ண கிருதிகள் முதலிய பல தொகுப்புகளில் கிருதிகள் அமைத்த பெருமையும் இவரையே சேரும்.

இவ்வளவு பெருமைகள் நிறைந்த இவர் கிருதிகள் சமீப காலத்திலேயே புழக்கத்தில் அதிகரித்திருக்கின்றன. தீட்சிதர் கிருதிகள் கடினமானவை, கச்சேரிக்கு ஒவ்வாதவை – என்ற எண்ணம் பல காலம் இருந்தது. அகாடமியில் தீட்சிதர் தினம் கொண்டாடிய போது, அது தேவையில்லாத ஒன்று சுப்புடு எழுதி, பெரும் பரபரப்பை உண்டாக்கியதை பலர் நினைவுபடுத்திக் கொள்ளக் கூடும்.

Justice can be delayed – not denied. என்பது போல, தீட்சிதர் கிருதிகள் இன்று பரவலாகப் பாடப்படுகின்றன.

தொடர்ந்து 12 மணி நேரம் நடை பெரும் ‘தீட்சிதர் அகண்டம்’  தவறாமல் வருடந்தோரும் நடைபெருகிறது.

இந்த வருட அகண்டம் வரும் ஞாயிற்றுக் கிழமை, சிவகாமி பெத்தாச்சி அரங்கில் நடை பெறவுள்ளது.

முன்னணியில் இருக்கும் வித்வான்களும், முன்னணிக்கு வந்து கொண்டிருக்கும் இளைஞர்களும் பங்கு பெறுகின்றனர்.

நான் சென்னைக்குச் செல்ல டிக்கெட் எடுத்து விட்டேன். சென்னையில் இருப்பவர்கள், சென்னைக்கு வரக் கூடியவர்கள் நிச்சயம் பங்கு பெற்று இன்புற வேண்டும்.

Read Full Post »

ஆழ்வார்கள், நாயன்மார்கள், தியாகராஜர், தீட்சிதர் போன்ற பலர், பல க்ஷேத்ரங்களுக்குச் சென்று, அந்த இடங்களின் மேல் பாடல் புனைந்துள்ளனர். அப்படிப் ப்ட்ட இடங்களைத் தேர்வு செய்து, அந்த ஊரின் தனிச் சிறப்பு, அங்கிருக்கும் கோயில்கள், அந்த இடத்தைப் போற்றும் பாடல்களின் பெருமை ஆகியவற்றை விளக்கி, தேவாரம், பிரபந்தம், கிருதிகள், திருப்புகழ் ஆகியவற்றைக் கொண்டு கச்சேரியும் செய்ய விதுஷி விஜயலட்சுமி சுப்ரமணியம் ஒரு முயற்சியைத் தொடங்கியுள்ளார்.

அந்த வரிசையில் முதல் கச்சேரி ஜனவரி 31-ம் தேதி,நாரத கான சபா மினி ஹாலில், காஞ்சிபுரத்தைப் பற்றி நடக்கவிருக்கிறது.

விஜயலட்சுமி கொடுத்த விவரங்கள் கீழே:

First Kshetra Sangeetham Episode : KANCHI Kshetra

Date: January 31, 2010, Sunday
Time: 6 :00 PM
Venue:  Narada Gana Sabha mini hall, 6 pm.
Guest of Honour: Smt. Devaki Muthaiah

Presentation on KANCHI: Dr. Sarada Nambi Arooran, eminent Tamil scholar and Orator. Kalaimamani Dr. Sarada Nambi Arooran is a renowned Tamil scholar, actively spreading the glory of Tamil and saivite literature across the Globe. She belongs to the Maraimalai Adigalar family. She also holds the position of the State Information Commissioner.

Vocal: Smt Vijayalakshmy Subramaniam
Violin: Dr. R. Hemalatha
Mridangam: Sri. B. Ganapathyraman  

Vijayalakshmy Subramaniam is one of the leading exponents of Carnatic music. A disciple of Sangita Kala Acharya Shri S. Rajam, she has been performing since the age of twelve and has an impressive list of achievements to her credit. Vijayalakshmy has held audiences worldwide spellbound with her rich and mellifluous voice, her vast repertoire of ragas and compositions, and her perfect control on rhythmic aspects of music. Her concerts are rich with raga bhava and sahitya bhava, imparting tremendous refinement and sophistication to her presentations. She has conducted many workshops for the initiated and the layman with equal felicity.

www.vijayalakshmysubramaniam.com

Read Full Post »

IMG_7633_2IMG_7633_2பேராசிரியர் மா.ரா.அரசு, புகழ் பெற்ற வரலாற்று அறிஞரும் தமிழ்ப் புலவருமான டாக்டர் மா. இராசமாணிக்கனாரின் மகன். முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேல் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக பணி புரிந்த இவர், தமிழ் இதழியல் வரலாற்றை முறையாகத் தொகுத்து வெளியிடல், இதழியல் பற்றிய தலைப்புகளில் கருத்தரங்குகள் நடத்துதல் இவற்றை நோக்கங்களாகக் கொண்டு 1983-ல் டாக்டர் மா.இராசமாணிக்கனார் இதழியல் ஆய்வு மையத்தை நிறுவினார். 1986-87-ல் திங்கள் ஒரு பொழிவென ஒரு வருட காலம் தமிழ் இதழியல் பற்றி ஆய்வுத் தொடரொன்றை இந்த மையம் நடத்தியது. தமிழ்நாட்டில் முதல் முறையாக இதழியல் பற்றி ஓராண்டு தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வுத் தொடர் இதுவேயாகும்.
உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து இந்திய விடுதலைக்கு முந்தைய தமிழ் இதழ்கள், திராவிட இயக்க இதழ்கள், தமிழ் ஆய்வு இதழ்கள், பொதுவுடைமை இயக்க இதழ்கள், மகளிர் இதழ்கள், தமிழ் இலக்கிய இதழ்கள், தமிழ் இதழியல் என்னும் தலைப்புகளில் பதினொரு கருத்தரங்குகள் செம்மையாக நடத்தியதிலும், அக் கருத்தரங்கத் தொகுதிகளை எழிலுற அச்சிட்டதிலும் பெரும் பங்கு மா.ரா.அரசுவையே சேரும். ‘இதழாளர் இராஜாஜி’ எனும் ஆய்வு நூலையும் ‘இளமையின் குரல்’. ‘கொறிப்பு’ எனும் மாணவர்க்கான இதழ்களையும் இவர் நிறுவிய மையம் மூலம் வெளியிட்டுள்ளார். வ.உ.சி-யைப் பற்றிய ஓரு தரமான ஆய்வின் மூலம் முனைவர் பட்டத்தைப் பெற்ற இவர், பேராசிரியர் பணி மூலம் உருவாக்கியுள்ள தமிழறிஞர்கள் ஏராளம்.
சிறந்த எழுத்தாளர், ஆசிரியர் மட்டுமின்றி நயம்பட பேசுவதிலும் வல்லவர். ஆசிரியர் பணியிலிருந்து ஒய்வு பெரும் வேளை, அவர் சாதனைகளைத் திரும்பிப் பார்க்கத் தோதான ஒன்று. அதனால் http://www.varalaaru.com சார்பில் இவருக்காக சிறப்பிதழ் ஒன்றை வெளியிட்டுள்ளோம். இவருடைய நேர்காணலை இங்கு காணலாம்.

பேராசிரியர் மா.ரா.அரசு, புகழ் பெற்ற வரலாற்று அறிஞரும் தமிழ்ப் புலவருமான டாக்டர் மா. இராசமாணிக்கனாரின் மகன். முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேல் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக பணி புரிந்த இவர், தமிழ் இதழியல் வரலாற்றை முறையாகத் தொகுத்து வெளியிடல், இதழியல் பற்றிய தலைப்புகளில் கருத்தரங்குகள் நடத்துதல் இவற்றை நோக்கங்களாகக் கொண்டு 1983-ல் டாக்டர் மா.இராசமாணிக்கனார் இதழியல் ஆய்வு மையத்தை நிறுவினார். 1986-87-ல் திங்கள் ஒரு பொழிவென ஒரு வருட காலம் தமிழ் இதழியல் பற்றி ஆய்வுத் தொடரொன்றை இந்த மையம் நடத்தியது. தமிழ்நாட்டில் முதல் முறையாக இதழியல் பற்றி ஓராண்டு தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வுத் தொடர் இதுவேயாகும்.

உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து இந்திய விடுதலைக்கு முந்தைய தமிழ் இதழ்கள், திராவிட இயக்க இதழ்கள், தமிழ் ஆய்வு இதழ்கள், பொதுவுடைமை இயக்க இதழ்கள், மகளிர் இதழ்கள், தமிழ் இலக்கிய இதழ்கள், தமிழ் இதழியல் என்னும் தலைப்புகளில் பதினொரு கருத்தரங்குகள் செம்மையாக நடத்தியதிலும், அக் கருத்தரங்கத் தொகுதிகளை எழிலுற அச்சிட்டதிலும் பெரும் பங்கு மா.ரா.அரசுவையே சேரும். ‘இதழாளர் இராஜாஜி’ எனும் ஆய்வு நூலையும் ‘இளமையின் குரல்’. ‘கொறிப்பு’ எனும் மாணவர்க்கான இதழ்களையும் இவர் நிறுவிய மையம் மூலம் வெளியிட்டுள்ளார். வ.உ.சி-யைப் பற்றிய ஓரு தரமான ஆய்வின் மூலம் முனைவர் பட்டத்தைப் பெற்ற இவர், பேராசிரியர் பணி மூலம் உருவாக்கியுள்ள தமிழறிஞர்கள் ஏராளம்.

சிறந்த எழுத்தாளர், ஆசிரியர் மட்டுமின்றி நயம்பட பேசுவதிலும் வல்லவர். ஆசிரியர் பணியிலிருந்து ஒய்வு பெரும் வேளை, அவர் சாதனைகளைத் திரும்பிப் பார்க்கத் தோதான ஒன்று. அதனால் http://www.varalaaru.com சார்பில் இவருக்காக சிறப்பிதழ் ஒன்றை வெளியிட்டுள்ளோம். இவருடைய நேர்காணலை இங்கு காணலாம்.

Read Full Post »