ஆறாம் திருநாளுக்குரிய ராகம் ஷண்முகப்ரியா.
அந்த ராகத்தில் அமைந்த ஆலாபனையை இந்தக் காணொளியில் காணலாம்.
ஆலாபனையைத் தொடர்ந்து பல்லவி இசைக்கப்படும்.
இது போலவே வைணவ மரபையும் ஆவணமாக்க முயன்று வருகிறோம்.
விவரங்கள் இங்கே.
Posted in அறிவிப்பு, ஆவணப்படம், ஆவணம், நாகஸ்வரம், நாதமும் நாதனும், பரிவாதினி, parivadini, tagged ஆச்சாள்புரம் சின்னத்தம்பி பிள்ளை, சின்னத்தம்பி பிள்ளை, தவில், நாகஸ்வரம், நாதமும் நாதனும், பி.எம்.சுந்தரம், மல்லாரி, ஷண்முகப்ரியா, nagaswaram, thavil on பிப்ரவரி 16, 2018| 3 Comments »
ஆறாம் திருநாளுக்குரிய ராகம் ஷண்முகப்ரியா.
அந்த ராகத்தில் அமைந்த ஆலாபனையை இந்தக் காணொளியில் காணலாம்.
ஆலாபனையைத் தொடர்ந்து பல்லவி இசைக்கப்படும்.
இது போலவே வைணவ மரபையும் ஆவணமாக்க முயன்று வருகிறோம்.
விவரங்கள் இங்கே.
Posted in அறிவிப்பு, ஆவணப்படம், ஆவணம், நாகஸ்வரம், நாதமும் நாதனும், பரிவாதினி, parivadini, tagged ஆச்சாள்புரம் சின்னத்தம்பி பிள்ளை, சின்னத்தம்பி பிள்ளை, தவில், நாகஸ்வரம், நாதமும் நாதனும், பி.எம்.சுந்தரம், மல்லாரி on பிப்ரவரி 15, 2018| Leave a Comment »
ஐந்தாம் திருநாளில், ஐந்து மல்லாரிகள் வாசிக்கப்படும். அவற்றின் அமைப்பு திஸ்ரம், சதுஸ்ரம், கண்டம், மிஸ்ரம், சங்கீர்ணம் ஆகிய ஐந்து ஜாதிகளில் அமைந்திருக்கும் (தாளம் – திரிபுடையாகவோ, ஜம்பையாகவோ, துருவமாகவோ இருக்கலாம்). இந்தப் பதிவில் ஐந்து மல்லாரிகளின் காணொளிகளைக் காணலாம்:
மல்லாரி 1:
மல்லாரி 2:
மல்லாரி 3:
மல்லாரி 4:
மல்லாரி 5:
மல்லாரிகள் வாசித்த பின், கன ராகங்களான நாட்டை, கௌளை, ஆரபி, வராளி, ஸ்ரீ ஆகியவற்றில் கல்பனை ஸ்வரங்கள் வாசித்து முடிப்பது மரபாகும்.
இது போலவே வைணவ மரபையும் ஆவணமாக்க முயன்று வருகிறோம்.
விவரங்கள் இங்கே.
Posted in அறிவிப்பு, ஆவணப்படம், ஆவணம், நாகஸ்வரம், நாதமும் நாதனும், பரிவாதினி, parivadini, tagged ஆச்சாள்புரம் சின்னத்தம்பி பிள்ளை, சிதம்பரம், சின்னத்தம்பி பிள்ளை, தவில், நாகஸ்வரம், பி.எம்.சுந்தரம், ஹம்ஸபிரம்மரி, Music on பிப்ரவரி 11, 2018| Leave a Comment »
நாலாம் திருநாள் அன்று வாசிக்கப்படும் ராகம் ஹம்ஸபிரம்மரி.
ஹேமவதியின் ஜன்யமான இந்த அரிய ராகத்தை அனேகமாய் கச்சேரிகளில் யாரும் பாடுவதில்லை. இருப்பினும் நாகஸ்வர மரபில் முக்கிய ராகமாய் கருதப்பட்டு வருகிறது. நாகஸ்வர சக்ரவர்த்தி ராஜரத்தினம் பிள்ளை இந்த ராகத்தில் அசாத்தியமாய் ஆலாபனை செய்திருப்பதாகவும் அந்தக் கால ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த ராகத்தில் சுருக்கமான ஆலாபனையையும், ஒரு பல்லவியையும் காணலாம்.
இது போலவே வைணவ மரபையும் ஆவணமாக்க முயன்று வருகிறோம்.
விவரங்கள் இங்கே.
Posted in அறிவிப்பு, ஆவணப்படம், ஆவணம், நாகஸ்வரம், நாதமும் நாதனும், பரிவாதினி, Documentary, parivadini, tagged ஆச்சாள்புரம் சின்னத்தம்பி பிள்ளை, சக்ரவாகம், சிதம்பரம், சின்னத்தம்பி பிள்ளை, தவில், நாகஸ்வரம், நாதமும் நாதனும், பி.எம்.சுந்தரம், மல்லாரி on பிப்ரவரி 9, 2018| Leave a Comment »
மூன்றாம் திருநாளில் வாசிக்கப்படும் ராகம் சக்ரவாகம்,
இந்தக் காணொளியில் சுருக்கமாய் வாசிக்கப்பட்டுள்ள ஒரு சிறிய ஆலாபனையைக் காணலாம்.
ஆலாபனையைத் தொடர்ந்து அதே ராகத்தில் பல்லவி இடம் பெரும்.
இது போலவே வைணவ மரபையும் ஆவணமாக்க முயன்று வருகிறோம்.
விவரங்கள் இங்கே.
Posted in அறிவிப்பு, ஆவணப்படம், ஆவணம், நாகஸ்வரம், நாதமும் நாதனும், பரிவாதினி, வரலாறு, Documentary, parivadini, tagged ஆச்சாள்புரம் சின்னத்தம்பி பிள்ளை, தவில், நாகஸ்வரம், நாதமும் நாதனும், பி.எம்.சுந்தரம் on பிப்ரவரி 8, 2018| Leave a Comment »
இரண்டாம் திருநாளுக்கு உரிய ராகம் ரீதிகௌளை.
இன்றைய முதல் காணொளியில் ரீதிகௌளை ராக ஆலபனையைக் காணலாம்.
ஆலாபனையைத் தொடர்ந்து பல்லவி வாசிக்கப்படும்.
இது போலவே வைணவ மரபையும் ஆவணமாக்க முயன்று வருகிறோம்.
விவரங்கள் இங்கே.
Posted in அறிவிப்பு, ஆவணப்படம், ஆவணம், நாகஸ்வரம், நாதமும் நாதனும், பரிவாதினி, tagged announcement, ஆச்சாள்புரம் சின்னத்தம்பி பிள்ளை, சங்கராபரணம், சிதம்பரம், தவில், தானம், நாகஸ்வரம், நாதமும் நாதனும், பல்லவி, பி.எம்.சுந்தரம், மல்லாரி, முதலாம் திருநாள், ரக்தி மேளம், ராகம், Music on பிப்ரவரி 6, 2018| 1 Comment »
முதலாம் திருநாளில் உற்சவ மூர்த்திகள் தேரடியை அடையும் போது அந்த நாளுக்குரிய ராகம் இசைக்கப்படும். முதல் நாளுக்குரிய ராகம் சங்கராபரணம் (அல்லது ஹம்ஸத்வனி).
இந்தக் காணொளியில் சங்கராபரண ராக ஆலாபனையைக் கேட்கலாம். நிஜமான உற்சவத்தில் ஆலாபனை மட்டுமே மணிக்கணக்கில் வாசிக்கப்படும்.
ஆலாபனையைத் தொடர்ந்து தானமும்:
தானத்தை தொடர்ந்து ரக்தியும் வாசிக்கப்படும். உருப்படிகளில் மல்லாரியைப் போலவே – ரக்தியும் நாகஸ்வரத்துக்கே உரிய ஒன்று. ஏழு எண்ணிக்கை கொண்ட தாளத்தில் ‘தீம் தக த தி தை’ என்கிற தத்தகார அமைப்பை ரக்தியாக வாசிப்பர். முதல் பார்வைக்கு எளிமையாகத் தோன்றினாலும், பல்லவிகளைப் போலவே ரக்தியும் நுணுக்கங்கள் நிறைந்த உருப்படியாகும். பல்லவிகளில் ‘பூர்வாங்கம், அருதி கார்வை, உத்ராங்கம்’ என்று பகுதிகள் இருப்பது போன்று அல்லாமல் ஒரே பகுதியாய் ஏழு அட்சர தாளத்தில் ரக்தி அமைந்திருக்க அனைத்து ராகங்களிலும் இடம் பெருவதில்லை. சங்கராபரண ராகத்தில் பொதுவாக ரக்தி வாசிப்பதுண்டு.
ரக்தியைத் தொடர்ந்து பல்லவியும் (நேரத்துக்கு ஏற்ப) இடம் பெருவதுண்டு. இந்தப் பல்லவிகள் தத்தகாரமாகவோ, சாஹித்ய பல்லவியாகவோ அமைந்திருக்கலாம்.
இது போலவே வைணவ மரபையும் ஆவணமாக்க முயன்று வருகிறோம்.
விவரங்கள் இங்கே.