Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Posts Tagged ‘தவில்’

சென்ற வருடத்தில் தொடங்கிய இரு மாதங்களுக்கு ஒருமுறை நடை பெரும் நாகஸ்வர நிகழ்ச்சியில், இந்த முறை மிகவும் அனுபவம் வாய்ந்த திருபாம்புரம் சகோதரர்கள் வாசிக்கிறார்கள். அவர்களுடன் புகழின் உச்சியில் இருக்கும் மன்னார்குடி திரு. வாசுதேவனும், திருக்கடையூர் திரு. பாபுவும் வாசிக்கின்றனர். விவரங்கள் கீழே.

PHOTO-2019-02-17-20-07-17

சில மாதங்களுக்கு முன் ஒரு நாகஸ்வர நாட்காட்டியை பரிவாதினி உருவாக்கி அதில் 12 கலைஞர்களைப் பற்றிய குறிப்பையும், படங்களையும் இடம்பெறச் செய்தது.இந்த ஆண்டு நடைபெறவுள்ல நாகஸ்வர நிகழ்ச்சிகளை அந்த கலைஞர்களுக்கு சமர்ப்பணம் செய்ய உள்ளோம். அந்த வகையில், முதல் நிகழ்ச்சி வண்டிகாரத்தெரு மணி/மான்பூண்டியா பிள்ளை அவர்களுக்கும், கீழ்வேளூர் சிங்காரவேலு பிள்ளை அவர்களுக்கும் சமர்ப்பணம் செய்கிறோம்.

PHOTO-2019-02-17-20-07-17 (1)

இந்தக் கலைஞர்களைப் பற்றி காலெண்டரில் பதிவான குறிப்பு:

Vanidakaratheru Mani/Manpoondiah Pillai

Musicians usually attach their hometown to their names. Hailing from Mayiladuthurai that boasted of several nagaswaram greats, Subramania Pillai and Manpoondia Pillai chose to attach the street they lived – Vandikkaara Theru – to their names. The older of the brothers, Subramania Pillai, learnt from his father Ramiah Pillai. The younger brother Manpoondiah Pillai learnt from his father as well as his brother.  The brothers were known for their unique elaborate raga exploration. To them the raga that they took up never constrained them. An apparently small raga with limited scope would be explored for several hours. One such instance when they played Dwijavanthi raga alapana all night during a temple festival is still recalled by many.

Kivalur Sinagaravelu Pillai 

There were many great practitioners of this art. Not all of them can be called as great teachers. Kizhvelur “Kunju” Singaravelu Pillai is widely acknowledged as one of the greatest teachers of thavil ever. Stretching beyond the regular teaching hours of the college that worked in, he would take special interest in each and every student.  His ability to instill the basics in a student was unparalleled. Even when more than thirty students played together, his discerning ears would pick up the slightest of the mistakes. In a teaching tradition that was largely oral, he was a pioneer in teaching through accurate notations. Many of his students have gone on to become maestros. Some of his students include Mannargudi Vasudevan, Thirukarugavur Gurunathan, Kovilur Kalyanasundaram, Idumbavanam Kannan and Thirukadaiyur Babu.

இதோடு, பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மாணவர்கள் இருவருக்கு வாத்தியங்கள் (1 தவில், 1 நாகஸ்வரம்) வழங்கப்படும்.

வித்வான் வியாசர்பாடி கோதண்டராமனின் பரிந்துரையில், வேலூரைச் சேர்ந்த அஜித்துக்கு தவில் வழங்கப்படுகிறது.

PHOTO-2019-02-09-10-00-47

வித்வான் இஞ்சிக்குடி மாரியப்பனின் பரிந்துரையில் காட்டூரைச் சேர்ந்த அபினேஷுக்கு நாகஸ்வரம் வழங்கப்படுகிறது.

PHOTO-2019-01-16-11-02-58

முன்பே குறிப்பிட்டது போல, தவில் வித்வான் குயப்பேட்டை தட்சிணாமூர்த்தி அவர்களின் நலனுக்காக உதவித் தொகையும் அன்று வழங்கப்படும்.

cdb4e9c9-cdd7-4add-afeb-7baae57deb8b

இதற்காக பரிவாதினியின் இருப்பிலிருந்து ரூபாய் ஐம்பதாயிரம் வழங்கப்படும். இதைத் தவிர, இந்த முயற்சிக்கின்று வந்துள்ள நன்கொடையும் சேர்த்து அன்று வழங்கப்படும். இதுவரையில் இதற்கென்று ரூபாய் பதினெட்டாயிரம் திரண்டுள்ளது.

 

 

Read Full Post »

சென்ற மாதம் நாகஸ்வர கலைஞர் வியாசர்பாடி கோதண்டராமனைச் சந்தித்த போது அவர் தவில் வித்வான் ஒருவரைப் பற்றி குறிப்பிட்டு, அவருக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்று வேண்டிக் கொண்டார். அந்த வித்வானைப் பற்றிய குறிப்பு பின்வருமாறு:

cdb4e9c9-cdd7-4add-afeb-7baae57deb8b.JPG

1941-ல் பிறந்த குயப்பேட்டை திரு.கே.என்.தட்சிணாமூர்த்தி, தன் தந்தையார் நாகப்பனிடம் பயிற்சி பெற்று சென்னையில் பிரபலமாக விளங்கிய/விளங்கும் பல நாகஸ்வர கலைஞர்களுடன் வாசித்தவர்.

சென்னை பி.ஐ.நடேச பிள்ளை, சிந்தாதிரிப்பேட்டை நாராயணசாமி, பி.என்.கோவிந்தசாமி, தேனாம்பேட்டை பி.கே.மதுரை, மாம்பலம் எம்.கே.சுவாமிநாதன், சைதை எஸ்.நடராஜன், சென்னை வி.என்.பாலசுப்ரமணி, இந்நாளில் பிரபலமாய் விளங்கும் மாம்பலம் எம்.கே.எஸ் சிவா போன்ற கலைஞர்களுடன் தொடர்ந்து வாசித்தவர். எண்ணற்ற தவில் வித்வான்களுடன் இணைந்தும் வாசித்துள்ளார்.

இவர் உருவாக்கியிருக்கும் பல மாணவர்கள் இன்று சிறப்பாக வாசித்து வருகின்றனர்.

தவிலை மட்டுமே நம்பி வாழ்ந்து கொண்டிருந்த இவர், இன்று முதுமையினாலும், உடல் நலிவினாலும் வாசிக்க முடியாத நிலையில் உள்ளார். இதனால் இவரது பொருளாதார நிலை மிகவும் நலிந்துள்ளது.

வரும் ஃபெப்ரவரி 23 அன்று நடக்கவுள்ள பரிவாதினி/நாத இன்பம் சேர்ந்து ஒருங்கிணைத்திருக்கும் நாகஸ்வர கச்சேரிக்கு முன், இவருக்கு உதவும் வகையில் ஒரு பணமுடிப்பைக் கொடுக்க பரிவாதினி எத்தனிக்கிறது.

இந்த நிகழ்வில், பரிவாதினியுடன் கைகோர்க்க இசை ரசிகர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் உதவும் மனம் படைத்த நல்லோர்களை பணிவன்புடன் அழைக்கிறேன்.

உதவி செய்ய விரும்புவோர் parivadinimusic@gmail.com என்ற முகவரியைத் தொடர்பு கொள்ளலாம். வாட்சாப்-ல் 99809 92830 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

Read Full Post »

1935-ல் தன் முப்பதாவது பிறந்த நாளைக் காண்பதற்கு முன் மறைந்து விட்ட இலுப்பூர் பஞ்சாபிகேச பிள்ளையின் பெயர் இன்றளவும் தலை சிறந்த கலைஞர்களின் பட்டியலில் தவறாமல் இடம் பெற்று வருகிறது.

பஞ்சாமி என்று அழைக்கப்பட்ட பஞ்சாபகேச பிள்ளையின் இள வயதில் தன் தாயாரிடம் வாய்ப்பாட்டு கற்று வந்தார். இயற்கையிலேயே பஞ்சாமிக்கு அமைந்திருந்த லய நிர்ணயத்தை கண்டு மலைக்கோட்டை வெங்கடாசலதவில்காரரும், ’கோடையிடி’ லால்குடி அங்கப்பத் தவில்காரரும் தவில் கற்றுக் கொடுத்தனர்.

தனது ஏழாம் வயதில் தன் தமையனாரின் நாகஸ்வரத்துக்கு தவில் வாசிக்க ஆரம்பித்த பஞ்சாமி, பதினைந்து வயதாவதற்குள் தவில் உலகின் முடிசூடா மன்னன் என்ற நிலையை அடைந்தார். நாகஸ்வர மேதை மதுரைபொன்னுசாமி பிள்ளையுடன் ஒப்பந்தம் போட்டுக் கொண்டு, ஐந்து வருட காலம் அவருடைய மேளக் கச்சேரிகளுக்கு பஞ்சாமி வாசித்தார்.

பஞ்சாமிக்கு 22 வயதாகும் போது, மதுரை பொன்னுசாமி பிள்ளை, ராஜரத்தினம் பிள்ளை போன்ற நாகஸ்வர ஜாம்பவான்களுக்கு வாசித்து வந்தார். நீடாமங்கலம் மீனாட்சி சுந்தரம் பிள்ளையுடன் சேர்ந்தும் எண்ணற்ற கச்சேரிகள்செய்து வந்தார். லயத்தில் தன்னிகரற்று விளங்கினாலும், அவருக்கு மேடைக் கச்சேரிகளின் பால் காதல் இருந்தது. நல்ல ரவை ஜாதி சாரீரமும், ராக லட்சணங்களில் நல்ல தேர்ச்சியும் பெற்றிருந்தார் பஞ்சாமி.  ‘நிரவதிஸுகதா’, ‘மரியாதகாதுரா’, ‘பலுகவேமி’ போன்ற கிருதிகளுக்கு இவர் அமைத்த சிட்டை ஸ்வரங்கள் இன்றளவும் மிகப் பிரபலமாய் உள்ளன. ராஜரத்னம் பிள்ளை நிரவதிஸுகதா பாடலை கிராமஃபோன் ரிக்கார்டாக வெலியிட்டுள்ளார். அது அவர் பஞ்சாமிக்கு பெய்த காணிக்கை என்றே சொல்லலாம். ஏனெனெனில், ஒரு பாடலில் அனுபல்லவிக்கும் சரணத்துக்கும் இடையில் ஒரு சிட்டை ஸ்வரம் வாசிப்பதே வழக்கம். இந்த ரிக்கார்டில் சரணத்துக்குப் பின் பஞ்சாமி அமைத்த மூன்று சிட்டை ஸ்வரங்களை வாசித்துள்ளார்

panjami

“பஞ்சாமி பிள்ளை இசையில் தோய்ந்த பல பாடல்களை இயற்றியுள்ளார். அவற்றில்பதினொன்று மட்டுமே இன்று கிடைக்கின்றன.”, என்று பி.எம்.சுந்தரம் எழுதியுள்ளார்.

தட்சிணாமூர்த்தி பிள்ளையின் கஞ்சிரா வாசிப்பில் மயங்கி, தானும் உழைத்து, அந்த வாத்தியத்தில் தேர்ச்சியும் பெற்றார்.  நாயனா பிள்ளை, செம்மங்குடி சீனிவாச ஐயர், சித்தூர் சுப்ரமண்ய பிள்ளை போன்ற பலரதுகச்சேரிகளுக்கு வாசித்துள்ளார்.

 “குறைந்த சன்மானம் கிடைத்த போது பஞ்சாமி என்னுடன் இருந்தார். இன்று ஆயிரக் கணக்கில் சன்மானம் கிடைக்கும் வேளையில் பஞ்சாமி இல்லாமல் போனாரே”, என்று நாகஸ்வர சக்கரவர்த்தி இராஜரத்தினம் பிள்ளை அடிக்கடி அங்கலாய்ப்பாராம்.

பஞ்சாமி, தவில் வாசிப்பை கிராமஃபோனில் வெளியிட மிகப் பெரியத் தோகையை சன்மானமாகக் கேட்டாராம். நிறைய இழுபறிக்குப் பின் அவர் கேட்ட தொகைக்கு சம்மதித்து அவருக்கு ஒரு கடிதத்தை கிராமஃபோன் கம்பெனி அனுப்பியதாம். அந்தக் கடிதம் வீட்டை அடைந்த அன்று அவர் வீட்டில் பிணமாகக் கிடந்தார் என்றொரு செவிவழிச் செய்தி உண்டு.

பஞ்சாமியை நேரில் கேட்டவர்களை இன்று காண்பது அரிது.

அவர் பெயரைச் சொல்ல இன்று பாடி விட்டுச் சென்ற சில கிராமஃபோன் ரிக்கார்டுகள்தான் மிஞ்சுகின்றன.

Read Full Post »

சென்னை போன்ற நகரங்களில் கலைக்காக இசைப் பயிற்சி பெருபவர்கள் அதிகம். கிராமப்புரங்களில், குறிப்பாக நாகஸ்வரம்/தவில் பயில்பவர்களைக் காணும் போது கலைக்காக கற்பவர்களைவிட வறுமையினால் இசைப்பள்ளிக்கு வரும் மாணவர்கள் பலரைக் காணமுடியும்.

அத்தகைய மாணவர்களை ஊக்கிவிக்கும் வண்ணம், முடிந்த அளவில் பரிவாதினியின் மூலமாக உதவி செய்யவுள்ளோம். அதன் தொடக்கமாக வரும் நவம்பர் 3-ஆம் தேதி நான்கு மாணவர்களுக்கு (3 நாகஸ்வரம், 1 தவில்) இசைக்கருவிகளைத் வாங்கித் தரவுள்ளோம்.

பரிவாதினி ஒருங்கிணைத்திருக்கும் வித்வான் யாழ்பாணம் பாலமுருகன் அவர்களின் நாகஸ்வரக் கச்சேரிக்கு முன் இந்த நிகழ்வு இடம் பெரும்.

மாணவர்கள் விவரம்:

நாகஸ்வரம்: பாலகணேஷ் (16), சந்திரசேகர் (18), வேல்மூர்த்தி (17)

தவில்: கோபீஸ்வரன் (9)

இந்த முயற்சியில் பங்களிக்க விரும்புவோர் பரிவாதினிக்கு நன்கொடை செலுத்தலாம்.

For contributions:

Parivadini Charitable Trust,
Union Bank of India
Account Number: 579902120000916
branch: Kolathur, Chennai,
IFSC Code: UBIN0557994

Read Full Post »

ஆறாம் திருநாளுக்குரிய ராகம் ஷண்முகப்ரியா.

அந்த ராகத்தில் அமைந்த ஆலாபனையை இந்தக் காணொளியில் காணலாம்.

ஆலாபனையைத் தொடர்ந்து பல்லவி இசைக்கப்படும்.

இது போலவே வைணவ மரபையும் ஆவணமாக்க முயன்று வருகிறோம்.

விவரங்கள் இங்கே.

Read Full Post »

ஐந்தாம் திருநாளில், ஐந்து மல்லாரிகள் வாசிக்கப்படும். அவற்றின் அமைப்பு திஸ்ரம், சதுஸ்ரம், கண்டம், மிஸ்ரம், சங்கீர்ணம் ஆகிய ஐந்து ஜாதிகளில் அமைந்திருக்கும் (தாளம் – திரிபுடையாகவோ, ஜம்பையாகவோ, துருவமாகவோ இருக்கலாம்). இந்தப் பதிவில் ஐந்து மல்லாரிகளின் காணொளிகளைக் காணலாம்:

மல்லாரி 1:

மல்லாரி 2:

மல்லாரி 3:

மல்லாரி 4:

மல்லாரி 5:

மல்லாரிகள் வாசித்த பின், கன ராகங்களான நாட்டை, கௌளை, ஆரபி, வராளி, ஸ்ரீ ஆகியவற்றில் கல்பனை ஸ்வரங்கள் வாசித்து முடிப்பது மரபாகும்.

இது போலவே வைணவ மரபையும் ஆவணமாக்க முயன்று வருகிறோம்.

விவரங்கள் இங்கே.

Read Full Post »

நாலாம் திருநாள் அன்று வாசிக்கப்படும் ராகம் ஹம்ஸபிரம்மரி.

ஹேமவதியின் ஜன்யமான இந்த அரிய ராகத்தை அனேகமாய் கச்சேரிகளில் யாரும் பாடுவதில்லை. இருப்பினும் நாகஸ்வர மரபில் முக்கிய ராகமாய் கருதப்பட்டு வருகிறது. நாகஸ்வர சக்ரவர்த்தி ராஜரத்தினம் பிள்ளை இந்த ராகத்தில் அசாத்தியமாய் ஆலாபனை செய்திருப்பதாகவும் அந்தக் கால ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.

 

இந்த ராகத்தில் சுருக்கமான ஆலாபனையையும், ஒரு பல்லவியையும் காணலாம்.

இது போலவே வைணவ மரபையும் ஆவணமாக்க முயன்று வருகிறோம்.

விவரங்கள் இங்கே. 

Read Full Post »

மூன்றாம் திருநாளில் வாசிக்கப்படும் ராகம் சக்ரவாகம்,

இந்தக் காணொளியில் சுருக்கமாய் வாசிக்கப்பட்டுள்ள ஒரு சிறிய ஆலாபனையைக் காணலாம்.

ஆலாபனையைத் தொடர்ந்து அதே ராகத்தில் பல்லவி இடம் பெரும்.

இது போலவே வைணவ மரபையும் ஆவணமாக்க முயன்று வருகிறோம்.

விவரங்கள் இங்கே. 

Read Full Post »

இரண்டாம் திருநாளுக்கு உரிய ராகம் ரீதிகௌளை.

இன்றைய முதல் காணொளியில் ரீதிகௌளை ராக ஆலபனையைக் காணலாம்.

ஆலாபனையைத் தொடர்ந்து பல்லவி வாசிக்கப்படும்.

 

 

இது போலவே வைணவ மரபையும் ஆவணமாக்க முயன்று வருகிறோம்.

விவரங்கள் இங்கே. 

Read Full Post »

முதலாம் திருநாளில் உற்சவ மூர்த்திகள் தேரடியை அடையும் போது அந்த நாளுக்குரிய ராகம் இசைக்கப்படும். முதல் நாளுக்குரிய ராகம் சங்கராபரணம் (அல்லது ஹம்ஸத்வனி).

இந்தக் காணொளியில் சங்கராபரண ராக ஆலாபனையைக் கேட்கலாம். நிஜமான உற்சவத்தில் ஆலாபனை மட்டுமே மணிக்கணக்கில் வாசிக்கப்படும்.

ஆலாபனையைத் தொடர்ந்து தானமும்:

தானத்தை தொடர்ந்து ரக்தியும் வாசிக்கப்படும். உருப்படிகளில் மல்லாரியைப் போலவே – ரக்தியும் நாகஸ்வரத்துக்கே உரிய ஒன்று. ஏழு எண்ணிக்கை கொண்ட தாளத்தில் ‘தீம் தக த தி தை’ என்கிற தத்தகார அமைப்பை ரக்தியாக வாசிப்பர். முதல் பார்வைக்கு எளிமையாகத் தோன்றினாலும், பல்லவிகளைப் போலவே ரக்தியும் நுணுக்கங்கள் நிறைந்த உருப்படியாகும்.  பல்லவிகளில் ‘பூர்வாங்கம், அருதி கார்வை, உத்ராங்கம்’ என்று பகுதிகள் இருப்பது போன்று அல்லாமல் ஒரே பகுதியாய் ஏழு அட்சர தாளத்தில் ரக்தி அமைந்திருக்க அனைத்து ராகங்களிலும் இடம் பெருவதில்லை. சங்கராபரண ராகத்தில் பொதுவாக ரக்தி வாசிப்பதுண்டு.

ரக்தியைத் தொடர்ந்து பல்லவியும் (நேரத்துக்கு ஏற்ப) இடம் பெருவதுண்டு. இந்தப் பல்லவிகள் தத்தகாரமாகவோ, சாஹித்ய பல்லவியாகவோ அமைந்திருக்கலாம்.

இது போலவே வைணவ மரபையும் ஆவணமாக்க முயன்று வருகிறோம்.

விவரங்கள் இங்கே. 

Read Full Post »

Older Posts »