Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Posts Tagged ‘announcement’

As a minimum response to the recent #metoo wave I introspected for the last few days and made a few decisions – some personal and some for Parivadini.

  1. I will not attend concerts of the artists who have been outed by the #metoo wave.
  2. I will not write notes/articles on their music. I will not share their music on Social media.
  3. I will not involve in writing their biography or publish their interviews.
  4. They will not be part of Programs curated under Parivadini banner.
  5. Parivadini will not webcast programs involving these artists.

I’m fully aware that these artists will not miss much if Lalitharam doesn’t write about them. Neither do these artists gain visibility y performing for Parivadini.

This is a minimum response to show support to the victims who have shown courage to come out speak up. I have been guilty to always looking at the glory of art and turning a blind eye on the prevalent exploitation. Time is truly up for such thinking now. This stance is a small step towards the change.

It is quite possible that some of the allegations could be baseless. At this juncture, I would like to stand with the side that didn’t have a chance to voice out their sufferings. Addressing concerns on baseless allegations can wait for now.

Read Full Post »

2006-ல் என் இசையுலக இளவரசர் ஜி.என்.பி நூல் விகடன் பதிப்பாக வெளியானது.

2010-ல் ஜி.என்.பி-யின் நூற்றாண்டின் போது கிட்டத்தட்ட ஓராண்டு காலம் ஸ்ருதி மாத இதழில் அதன் மொழியாக்கத்தை திரு.ராம்நாராயண் வெளியிட்டார். அந்த சமயத்தில்தான் ஜி.என்.பி-யின் நூற்றாண்டு மலரை (கந்தர்வ கானம்) வெளியிட்டோம். மலரின் உள்ளடக்கம் பெரும்பாலும் ஆங்கிலட்டில் என்படாலும், தமிழ் நூல் எழுடி முடித்த நான்கு ஆண்டுகளில் கிடைத்த தகவல்களும் அதில் இடம் பெற்றிருந்ததாலும், ஸ்ருதியில் வெளியான மொழியாக்கத்தை வெளியிட முனைப்பிருக்கவில்லை.

சில மாதங்களுக்கு முன் ராம்நாராயண் அழைத்தார். சமீபத்தில் அந்த மொழியாக்கத்தைப் படித்துப் பார்த்த போது அது ஜி.என்.பி-யைப் பற்றிய எளிய அறிமுக நூலாக இருக்கக்கூடும் என்றும், அதை வெளியிட விரும்புவதாகவும் கூறினார்.

நூல் வெளியாவதில் மகிழ்ச்சிதான் என்றாலும், அந்தப் பதிப்பு அவர் கையைக் கடிக்காமல் இருக்க வேண்டுமே என்ற கவலை எனக்கு. மூன்று நான்கு முறை வெவ்வேறு வகையில் கூறியும் ராம்நாராயண் விடுவதாய் இல்லை. அவர் ஜாதக பலன் அவரைக் காக்கும் என்ற நம்பிக்கையில் ஒப்புக்கொண்டேன்.

நூல் சில வாரங்களுக்கு முன் வெளியாகியுள்ளது.

புத்தகத்தை ஸ்ருதி தளத்திலும், அமேஸானிலும் வாங்கலாம்.

மே 1 ஜி.என்.பி-யின் நினைவு தினம். சென்னை ராக சுதா அரங்கில் ஒரு நிகழ்வு ஏற்பாடாகியுள்ளது. அன்று ஜி.என்.பி-யின் இசையின் பரிமாணங்கள் பற்றி அவர் கச்சேரி பதிவுகளின் உதவியுடன் ஓர் விளக்கவுரையை அளிக்க உள்ளேன்.

IMG_4157

அரங்கிலும் புத்தகத்தை வாங்கிக் கொள்ள முடியும்.

 

 

Read Full Post »

முதலாம் திருநாளில் உற்சவ மூர்த்திகள் தேரடியை அடையும் போது அந்த நாளுக்குரிய ராகம் இசைக்கப்படும். முதல் நாளுக்குரிய ராகம் சங்கராபரணம் (அல்லது ஹம்ஸத்வனி).

இந்தக் காணொளியில் சங்கராபரண ராக ஆலாபனையைக் கேட்கலாம். நிஜமான உற்சவத்தில் ஆலாபனை மட்டுமே மணிக்கணக்கில் வாசிக்கப்படும்.

ஆலாபனையைத் தொடர்ந்து தானமும்:

தானத்தை தொடர்ந்து ரக்தியும் வாசிக்கப்படும். உருப்படிகளில் மல்லாரியைப் போலவே – ரக்தியும் நாகஸ்வரத்துக்கே உரிய ஒன்று. ஏழு எண்ணிக்கை கொண்ட தாளத்தில் ‘தீம் தக த தி தை’ என்கிற தத்தகார அமைப்பை ரக்தியாக வாசிப்பர். முதல் பார்வைக்கு எளிமையாகத் தோன்றினாலும், பல்லவிகளைப் போலவே ரக்தியும் நுணுக்கங்கள் நிறைந்த உருப்படியாகும்.  பல்லவிகளில் ‘பூர்வாங்கம், அருதி கார்வை, உத்ராங்கம்’ என்று பகுதிகள் இருப்பது போன்று அல்லாமல் ஒரே பகுதியாய் ஏழு அட்சர தாளத்தில் ரக்தி அமைந்திருக்க அனைத்து ராகங்களிலும் இடம் பெருவதில்லை. சங்கராபரண ராகத்தில் பொதுவாக ரக்தி வாசிப்பதுண்டு.

ரக்தியைத் தொடர்ந்து பல்லவியும் (நேரத்துக்கு ஏற்ப) இடம் பெருவதுண்டு. இந்தப் பல்லவிகள் தத்தகாரமாகவோ, சாஹித்ய பல்லவியாகவோ அமைந்திருக்கலாம்.

இது போலவே வைணவ மரபையும் ஆவணமாக்க முயன்று வருகிறோம்.

விவரங்கள் இங்கே. 

Read Full Post »

கோயில்களில் நடக்கும் புறப்பாடுகளில் வாசிக்கப்படும் உருப்படி மல்லாரி. கம்பீர நாட்டை ராகத்தில் அமைந்த மல்லாரியில் வாசிக்கின்ற தருணத்திற்கும், கலைஞரின் திறனுக்கேற்றும் சுருக்கமாகவோ, விரிவாகவோ மல்லாரிகள் வாசிக்கப்படும். சாஹித்யங்களின்று தத்தகாரங்களினால் இசைக்கப்படும் மல்லாரியை முதலில் ‘அல்லாரிப்பு’ (கண்ட நடையில்) வாசித்து தவில் கலைஞரே தொடங்கி வைப்பார். தத்தகார அமைப்பை திஸ்ரம் செய்வது, திரிகாலம் செய்வது, கல்பனை ஸ்வரம் வாசிப்பது போன்ற மேன்மெருகேற்றல்களும் நடைபெருவதுண்டு.

பதினொரு நாள் நடைபெரும் திருவிழாவில், பெரும்பாலான நாட்களில் பஞ்ச மூர்த்திகளின் உலா இடம் பெறும். சிதம்பரத்தை பொருத்தமட்டில், உற்சவ மூர்த்திகள் புறப்பட்டு வீதிக்கு வரும் வரையில் ஒரு மல்லாரியும் (ஒப்பீட்டளவில் எளிமையான ஒன்று), வீதிக்கு வந்ததும் வேறொரு மல்லாரியும் (ஒப்பீட்டில் நுணுக்கங்கள் நிறைந்த ஒன்று – உ.தா. – திரிபுட தாள மல்லாரி) இடம் பெறும். இந்த மல்லாரி உற்சவர் தேரடி அடைந்து மாட வீதிகளில் திரும்பும் வரை வாசிக்கப்படும்.

இந்த இணைப்பில் முதலில் புறப்பாட்டின் தொடக்கத்தில் வாசிக்கப்படும் மல்லாரியும், அதனைத் தொடர்ந்து திரிபுட தாள மல்லாரியும் இடம்பெற்றுள்ளன.

இது போலவே வைணவ மரபையும் ஆவணமாக்க முயன்று வருகிறோம்.

விவரங்கள் இங்கே. 

Read Full Post »

வரலாறு என்றால், பல நூறு வருடங்களுக்கு முன்னால் நிகழ்ந்தவைதான் என்று ஒரு போதும் (http://varalaaru.com/Default.asp) வரலாறு.காம் எண்ணியதில்லை. நம்மிடையே வாழும் வரலாறுகளாய் விளங்குபவர்களை இயன்ற வரை கௌரவப்படுத்துவதும் இவ்விதழின் முதன்மை நோக்கங்களுள் ஒன்று. அவ்வகையில், இந்த மாதம் மலரும் வரலாறு.காம் இதழை, எஸ்.ராஜத்திற்குக் காணிக்கை ஆக்குகிறோம்.

வரலாறு.காமில் இது வரை வந்த சிறப்பிதழ்கள் அனைத்தையும் மட்டற்ற மகிழ்ச்சியுடன்தான் வெளியிட்டோம். இந்த மாதம் மலரும் எஸ்.ராஜம் சிறப்பதிழை மிகுந்த வருத்தத்துடன் வெளியிடுகிறோம்.

ஸ்ருதி இதழ் ஆசிரியர் ஜானகி, ராஜத்தின் மூத்த மகன் ராமமூர்த்தி, தமிழ்ஸ்டுடியோ.காமின் அருண், விதுஷி விஜயலட்சுமி சுப்ரமணியம், கவிஞர் ஹரிகிருஷ்ணன் என்று பலரின் படைப்புகள் வெளியாயுள்ளன.

அகில இந்திய வானொலியின் அஞ்சலியும், ஓவியர் மணியம் செல்வனின் அஞ்சலியும் ஒலிப்பதிவாக இட்டுள்ளோம்.

வருக வரலாறு.காம்-க்கு!

Read Full Post »