Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Posts Tagged ‘Mandolin Shrinivas’

இருவாட்சி இலக்கியத் துறைமுகம்பொங்கல் 2021 சிறப்பிதழில் வெளியான கட்டுரை.

நண்பருடன் ஒரு நாகஸ்வர கச்சேரிக்குச் சென்றிருந்தேன். வாசித்த கலைஞர்களின் திறமைக்கு குறைவேயில்லை. இருந்தாலும் அந்தக் கச்சேரியை ரசிப்பது சிரமமாகயிருந்தது.

கச்சேரியில் ஐந்து நிமிடத்துக்கு ஒருமுறை தவில் வித்வான் தனது சிஷ்யனை ஏவி தனக்கு வைக்கப்பட்ட மைக்கின் ஒலியளவை ஏற்றச் சொல்லிக் கொண்டிருந்தார். தவிலின் ஒலியளவு ஏற அதற்கு ஏற்றவாறு நாகஸ்வரத்தின் ஒலியை ஏற்றாவிட்டால் தார ஸ்தாயி சஞ்சாரங்கள் கூட சன்னமாய்க் கேட்கும் அபாயத்தை உணர்ந்து தனது ஒலியளவை ஏற்றச் சொன்னார் நாகஸ்வர வித்வான்.

நாகஸ்வரம் வெளியில் கேட்டதும் தவில் வித்வான் மீண்டும் சிஷ்யனை ஏவினார். இப்படி மாறி மாறி ஏற்றியதில் – ஒரு கட்டத்தில் அத்தனை விசைகளையும் உச்ச அளவில் வைத்துவிட்டு கேண்டீனுக்குச் சென்றுவிட்டார் சபாவின் ஒலியமைப்பாளர்.

அந்த சிறிய கூடத்தில் சத்தம் மண்டையைப் பிளக்க, நானும் நண்பரும் கேண்டீனுக்கு நகர்ந்தோம்.

கள்ளிச் சொட்டுக் காப்பியை உறிஞ்சியபடி நண்பர் சொன்னார். “தவில் எப்படி உருவாச்சுனு ஒரு செவிவழிக் கதையுண்டு. ராமாயண யுத்தத்தின்போது வெவ்வேற விதமா கும்பகர்ணனை எழுப்பினாங்களாம். வாசிச்சா ஊருக்கே கேட்கறா மாதிரியான வாத்தியத்தை அவன் காதுகிட்ட கொண்டு போய் அடிச்சா முழுச்சிப்பான்னு செஞ்ச வாத்யமாம் தவில். இப்ப வாசிக்கற தவில் வித்வானுக்கு வைத்தீஸ்வரன்கோயில்ல நாடி பார்க்கணும். பூர்வ ஜென்மத்துல அவர் பிறந்த ஊர் இலங்கை. கும்பகர்ணனை எழுப்ப தவில் வாசிச்சது அவர்தான்னு நாடி சொல்லும்.”

அவர் இப்படிச் சொன்னதும், அவர் சொன்ன கதையின் நம்பகத்தன்மையை ஆராயவோ, அல்லது அதை ஒட்டி அவர் செய்த நக்கலை ரசிக்கவோ மனம் செல்லவில்லை. இலங்கையில் உருவான ஓர் உன்னத தவில் வித்வானைப் பற்றி மனத்தில் அலையடித்தது.

இந்த வருடம் நூற்றாண்டு காணும் வலங்கைமான் ஷண்முகசுந்தரம் பிள்ளைதான் அந்தக் கலைஞர். ”இலங்கையில் ஏது வலங்கைமான்?” என்று கேள்வி எழலாம். அவரைப் பற்றி தமிழிசைச் சங்க மலரில் வெளியாகியிருக்கும் குறிப்பு, அவர் பிறந்தது திருத்துறைப்பூண்டிக்கு அருகில் உள்ள சேகல் மடப்புரத்தில் என்றும், அவருடைய ஐந்தாவது வயதில் குடும்பம் இலங்கைக்குக் குடிபெயர்ந்துவிட்டது என்றும் கூறுகிறது.

தவிலின் ஆரம்பப் பாடங்களைத் தந்தையிடமும், அதன்பின் இணுவில் சின்னத்தம்பி பிள்ளையிடமும், இராஜகோபால பிள்ளையிடமும் யாழ்ப்பாணத்தில் பயின்றார் ஷண்முகசுந்தரம். சிறப்புத் தேர்ச்சிக்காக பின்னாளில் தவில்மேதை நாச்சியார்கோயில் ராகவப் பிள்ளையிடம் குருகுலவாசம் செய்த போதும், அவர் கச்சேரி வாசிக்க ஆரம்பித்த நாட்களில் ‘யாழ்ப்பாணம் ஷண்முகசுந்தரம்’ என்றே அறியப் பட்டிருக்கிறார்.

குருகுலவாசம் முடிந்து மீண்டும் யாழ்ப்பாணம் சென்று நல்லபடியாய்த் தொழில் செய்துகொண்டிருந்த போதும் அவர் மனமெல்லாம் தஞ்சை ஜில்லாவும், அங்கு நடக்கும் கச்சேரிகளும் நிரம்பியிருந்தன. அதனால் கும்பகோணத்துக்கு அருகில் உள்ள வலங்கைமானுக்குக் குடிபெயர்ந்தார். சில காலங்களில் அது அவருடைய நிரந்தர இடமாகியது. நீடாமங்கலம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை,  நாச்சியார்கோயில் ராகவப் பிள்ளை வரிசையில் தவில் உலகில் முதன்மைக் கலைஞர் என்ற ஸ்தானம் அவருக்குக் கிடைத்த போது அவர் ‘வலங்கைமான்’ ஷண்முகசுந்தரமாக மாறி இருந்தார்.

அவர் வாசிப்பை நான் முதன் முதலில் மேண்டலின் ஸ்ரீநிவாஸின் இசைப் பதிவுகளில் கேட்டேன். மேண்டலினின் தொனிக்கு அத்தனை பாந்தமாய்ப் பொருந்தியிருந்தது அந்தத் தவில். 1994-ல் அவர் மறைந்த போது ஷண்முகா இதழில் அவர் மேண்டலினுக்கு வாசித்ததைப் பற்றி ஒரு குறிப்பு வெளியாகியுள்ளது. மேண்டலின் கச்சேரிக்குத் தலைமை தாங்கச் சென்ற ஷண்முகசுந்தரம் பிள்ளை, “இது போன்ற திறமைசாலிக்கு பெரிய பக்கவாத்தியங்கள் முன்வந்து வாசித்து முன்னேற்றிவிட வெண்டும்,” என்று கூறியுள்ளார். அப்போது கூட்டத்திலிருந்து யாரோ எழுந்து, “அப்படியெனில் நீங்களல்லவா முதலில் வாசிக்க வெண்டும்,” என்று கூறியிருக்கிறார். அதில் இருந்த நியாயத்தை உணர்ந்து அந்தக் கச்சேரியிலேயே மேண்டலினுக்கு வாசித்துள்ளார். 1985-க்குள் ஸ்ரீநிவாஸனுக்கு மட்டும் 100 கச்சேரிகளுக்கு மேல் வாசித்து ‘செஞ்சுரி’ அடித்துள்ளதாகக் கூறுகிறது அந்தக் குறிப்பு.

படம்: வித்வான் மேண்டலின் ராஜேஷ் அளித்தது

1990-களில் சிறு விழாக்களில் அல்லது திருமண விடியோ பதிவுகளில் மங்கல இசையாக மேண்டலின் இடம்பிடித்ததைக் காணலாம். மேண்டலினின் இனிமையான நாதமும், விறுவிறுப்பும் இதற்குக் காரணங்கள் என்றாலும், வலங்கைமானாரின் வாசிப்பு சேர்த்த கம்பீரத்துக்கும் குளுமைக்கும் அந்தப் பதிவுகளை மங்கல வாத்தியமாக்கியதில் சமபங்கு உண்டு.

இதைச் சொல்லும் போது தவில் வாசிப்பைக் குறிப்பிடும் இடத்தில் குளுமை என்ற சொல் எத்தனை கலைஞர்களின் வாசிப்புக்குப் பொருந்தும் என்று சிந்தித்துப் பார்க்க வெண்டும். அதிலும் கம்பீரத்தை விட்டுவிடாத குளுமை. அந்த அபூர்வ கலவையே அவரை தனித்துக் காட்டியது.

நாச்சியார்கோயில் ராகவப் பிள்ளையின் இன்னொரு சீடரும், இன்றைய முன்னணி வித்வான்களில் ஒருவருமான தஞ்சாவூர் கோவிந்தராஜன், “தவிலில் ‘தா’ என்கிற சொல்லுக்குச் சொந்தக்காரர் என்று பெயர் வாங்கியவர் ராகவப் பிள்ளை. அவருக்குப் பின் அந்தச் சொல் ஷண்முகசுந்தரம் அவர்களுக்குத்தான் அமைந்தது. தவில் வாசிப்பது என்பது தாளத்துக்கு சரியாக வரும் கணக்கு வழக்குகள் மட்டுமல்ல. நாகஸ்வரக்காரருக்கு, அவர் இசைக்கும் பாட்டுக்கு, உடன் வாசிக்கும் தவில் கலைஞரின் திறனுக்கு ஏற்றாற்போல் வாசித்தால்தான் பரிமளிக்கும். எங்கள் தலைமுறை வித்வான்கள் அதை ஷண்முகசுந்தரம் பிள்ளையின் வாசிப்பைத் தேடித் தேடிச் சென்று கேட்டுத் தெரிந்து கொண்டோம்,” என்கிறார்.

கோவிந்தராஜன் சொல்வதன் முழுவீச்சை உணர இந்த உதாரணம் உதவும். இணையத்தில் நாகஸ்வர வித்வான் ஆண்டான்கோயில் செல்வரத்தினம் வாசித்திருக்கும் சங்கராபரணம் ராகத்தின் பதிவு உள்ளது. அந்த ஆலாபனையில் ஒலிக்கும் தவில் ஒரு நல்ல வாய்ப்பாட்டுக் கச்சேரியில் தேர்ந்த வயலின் வித்வானின் பங்களிப்பை ஒத்து இருப்பதை உணரலாம். வழக்கமாக ராக ஆலாபனையில் நாகஸ்வர வித்வான் ஒரு பகுதியை முடிக்கும் போது தவிலில் சில உருட்டுச் சொற்கள் வாசித்து ஒரு தீர்மானம் வைப்பதைக் கேட்க முடியும். இந்தப் பதிவில் அதற்கும் ஒரு படிக்கு மேல் சென்று நாகஸ்வரத்தை வாசித்துக் கொண்டிருக்கும் போதே சதுஸ்ரத்தில் அழகழகாய், விதவிதமாய் கோவைகளை பன்னீர் தெளித்தது போல வாசித்துள்ளது மொத்த அனுபவத்தை வேறு தளத்துக்கு நகர்த்தியுள்ளது.

வித்வான் ஆண்டான்கோயில் செல்வரத்னத்துடன்

ராகத்துக்கு வாசிப்பது என்பது ஷண்முகசுந்தரம் பிள்ளையின் சிறப்பு அம்சம் என்று எனக்குச் சொன்னவர் சங்கீத கலாநிதி ஷேக் சின்ன மௌலானாவின் பேரன், நாகஸ்வர வித்வான் காசிம்தான். அவர் கூறிய வேறு சில விஷயங்களிலும் ஷண்முகசுந்தரம் பிள்ளையின் அணுகுமுயை உணர உதவும்.

 “என் தாத்தாவும் வலங்கைமான் தாத்தாவும் 33 வருடங்கள் தொடர்ந்து ஒன்றாக கச்சேரி வாசித்துள்ளனர். ரேடியோவில் தாத்தாவின் கச்சேரி என்றால் தவில் யாரென்று கேட்கவே வேண்டாம். அது வலங்கைமான் தாத்தாவாக மட்டும்தான் இருக்கும். நான் பார்த்த வரையில் ‘என்ன வாசிக்கப் போகிறீர்கள்?’ என்றோ, ‘எந்தத் தாளத்தில் தனி வாசிக்க வெண்டும்?’ என்றோ, ‘எவ்வளவு நேரம் தனி வாசிக்க வேண்டும்?” என்றோ அவர் என் தாத்தாவைக் கேட்டதேயில்லை. மூன்று மணி நேரக் கச்சேரிக்கு எப்படி வாசிக்க வெண்டும். அரை மணி நேர தொலைக்காட்சிக்கு எப்படி வாசிக்க வேண்டும். இரண்டு மணி நேரம் வாசித்தாலும், இரண்டரை நிமிடங்கள் வாசித்தாலும் உடன்வாசிப்பவர் சாதாரண தவில் வித்வான் என்றாலும் கூட அவர் குறை வெளியில் தெரியாமல் கச்சேரி சிறப்பாக அமைந்தது என்று நினைக்கும்படி எப்படி வாசிக்க வேண்டும் என்று அவரைப் போல உணர்ந்து வாசித்த வேறொருவரை நான் கண்டதில்லை.

படம்: வித்வான் எஸ்.காசிம்

… தாத்தாவின் உடல்மொழியைப் பார்த்தே எப்படி வாசிக்க வெண்டும் என்று அவருக்குப் புரிந்துவிடும். ஒருமுறை சென்னை கந்தசாமி கோயிலில் புறப்பாட்டிற்கு தாத்தாவின் கச்சேரி ஏற்பாடாகியிருந்தது. பல ஊர்களுக்குச் சென்று அடுத்தடுத்து கச்சேரி செய்துவிட்டு சென்னைக்கு வர நேர்ந்தது. அதனால் சற்று தளர்ந்திருந்தார். அன்று தோடி ராகத்தைப் பிரதானமாக எடுத்து வாசிக்க ஆரம்பித்தார். அவர் வாசிப்பில் அந்தத் தளர்ச்சி தெரிந்தது. அதை உணர்ந்த வலங்கைமான் தாத்தா, அனல் பறக்கும் ஃபரன்களாக சில நிமிடங்களுக்கு வாசித்து ஒரு மோராவை வாசித்தார். அவர் முடித்த போது மொத்த சூழலே மாறிவிட்டது. தாத்தாவுக்கு இருந்த களைப்பெல்லாம் போன இடமே தெரியவில்லை. அதற்குப் பின் வாசித்த தோடியை வாழ்நாளில் மறக்க முடியாது,” என்கிறார் காசிம்.

ஷண்முகசுந்தரம் பிள்ளையைப் பற்றி பலர் சொல்லும் விஷயம் ஒன்று உண்டு. பெரிய ஜாம்பவான்களுக்கு வாசித்தாலும், தன்னைவிட வயதிலும் அனுபவத்திலும் மிகக் குறைந்தவர்களுக்கு வாசித்தாலும் அவருடைய அணுகுமுறை ஒரே மாதிரிதான் இருக்கும். சிறியவர்கள் என்பதற்காக  தன்னை அவர் ஒருநாளும் முதன்மைப் படுத்திக் கொண்டதில்லை. வெளியிலிருந்து கச்சேரி பார்ப்பவர்களுக்குத் தெரியாமல் தன் வாசிப்பின் மூலம் அனுபவத்தில் குறைவானவர்களை இன்னும் சில நிலைகள் உயர்த்தி வாசிக்கச் செய்தார் என்பதைப் பலர் கூறியுள்ளனர்.

உதாரணமாக வயலின் கலைஞர் குமரேஷ், “நாங்கள் வளர்ந்து வந்த காலத்தில் எங்களுக்கு மகிழ்ச்சியோடு பல கச்சேரிகள் வாசித்திருக்கிறார். ஒரு கச்சேரி அவர் ஊரில் அவரே ஏற்பாடு செய்து எங்களை அழைத்திருந்தார். நகர சபைகளில் வாசிப்பது போலவே வலங்கைமான் கிராமத்திலும் வாசிக்க வேண்டுமா என்று நாங்கள் யோசிப்பதை உணர்ந்து, “இங்க வாசிக்காத பெரிய நாயனக்காரங்களே இல்லை. இங்க வந்திருக்கறவங்க எல்லாம் அவங்களைக் கேட்டு வளர்ந்தவங்க. கேதாரகௌளை ராகத்தை நல்லா விஸ்தாரமா வாசிங்க தம்பி,” என்று வழிகாட்டினார். அன்று நாங்கள் வாசித்த ராகத்தை அந்த கிராமத்தில் வெகுவாக ரசித்தார்கள். இள வயதில் எங்களுக்கு அது ஒரு பாடமாகவும் அமைந்தது. அவர் பங்கு பெற்ற கச்சேரிகளில் அவர் பக்கவாத்யம் வாசித்தார் என்று சொல்வதைவிட பீஷ்மர் போல கச்சேரியை வழிநடத்தினார் என்று சொல்வதே சரியாக இருக்கும்,” என்கிறார்.

இன்று தவில் என்பது நாகஸ்வரத்துடன் வாசிக்கக் கூடிய துணைக் கருவி என்ற நிலையில்லை. தவிலுடன் சேர்ந்து வாசிக்காத வாத்யங்களே இல்லை எனலாம். வாய்ப்பாட்டுக் கச்சேரிகளில் கூட தவில் பக்கவாத்யமாய் இடம்பெறும் நிகழ்ச்சிகளும் அவ்வப்போது காணக் கிடைக்கின்றன. தவில் கலைஞர் கச்சேரியின் நாயகனாய் அமர்ந்து வழிநடத்தும் கச்சேரிகளும் உலகின் பல இடங்களில் இன்று சாதாரணமாய் நடப்பவையே. இந்த மாற்றத்துக்கான முதல்படியை எடுத்து வைத்தது வலங்கைமான் ஷண்முகசுந்தரம் பிள்ளைதான். எல்.வைத்தியநாதன், எல்.சுப்ரமண்யம், எல்.சங்கர் சகோதரர்களுக்கு வாசிப்பதில் தொடங்கி, மாலியின் குழலுக்கு, ஸ்ரீநிவாஸின் மாண்டலினுக்கு, கணேஷ்-குமரேஷ் சகோதரர்களின் வயலினிசைக்கு என்று அவர் வாசித்த கச்சேரிகள் ஏராளம். எண்பதுகளில் ஒரு கட்டத்தில் அவர் நாகஸ்வரத்துக்கு வாசிப்பதே அரிது என்ற நிலை கூட இருந்துள்ளது.

முதன்மைக் கலைஞராகவும் புதிய தடங்களை அமைத்தவராகவும் இருந்த ஷண்முகசுந்தரம் பிள்ளைக்கு பல அங்கீகாரங்களும் பட்டங்களும் தேடி வந்ததில் ஆச்சரியமில்லை. 1985-ல் மத்திய அரசு அளிக்கும் சங்கீத நாடக அகாடமி விருதைப் பெற்றார். அந்த கௌரவத்தைப் பெற்ற முதல் தவில் கலைஞர் அவர்தான். புகழின் உச்சியில் இருந்த போதும் எந்தக் கச்சேரியிலும் தன்னை முன்னிருத்துக் கொள்ள அவர் முயன்றதில்லை. தனக்குத் தெரிந்த அனைத்தையும் வாசிப்பில் கொட்டிவிட வேண்டும் என்று அவசியமில்லை என்பதில் ஸ்திரமாக இருந்துள்ளார். லயத்தில் ஆழ்ந்த தேர்ச்சியைப் பெற்றிருந்த சீதாராம பிள்ளையிடம் அதிகம் வழக்கில் இல்லாத 108 தாளங்கள் உட்பட பல நுணுக்கங்களில் சிறப்பான தேர்ச்சியைப் பெற்றவர் என்றாலும், “சாகஸத்துக்காக மற்ற நடைகளையோ, அரிய தாளங்களையோ பிரஸ்தாபிப்பதை விட கச்சேரியைப் பரிமளிக்க வைக்க என்ன தேவையோ அதைத்தான் வாசிக்க வேண்டும். நெருடலான விஷயங்களை அவ்வப்போது தொட்டுக் காட்டலாமேயின்றி அவற்றுக்கே பிரதான இடம் அளிப்பதில் எனக்கு ஒப்புதலில்லை,” என்று ஒரு நேர்காணலில் கூறியுள்ளார்.

உயரங்களைத் தொட்ட போதும் சக கலைஞர்களை அவர் மதிக்கத் தவறியதில்லை. அதே வேளையில் தன்மானத்தைக் காத்துக் கொள்ளவும் அவர் தவறியதில்லை. அவருடன் நெருங்கிப் பழகக் கூடிய வாய்ப்பைப் பெற்ற திருப்பூரைச் சேர்ந்த இசை ஆர்வலர் வி.கோ.செந்தில்குமார் நினைவுகூரும் நிகழ்ச்சியை இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம்.

“தில்லானா மோகனாம்பாள் படத்தில் தவில் கலைஞரை அச்சு அசலாகப் பிரதியெடுத்துக் காண்பித்ததற்காக நடிகர் பாலய்யா இன்றும் பேசப்படுகிறார். அவர் அப்படி நடிக்க முன்மாதிரியாகக் கொண்டது வலங்கைமான் ஷண்முகசுந்தரம் பிள்ளையைத்தான். பாலய்யா இந்த விஷயத்தை ஷண்முகசுந்தரம் பிள்ளையிடம் கூறியபோது, எல்லாம் சரிதான். நான் எப்ப கக்கத்துல துண்டையிடுக்கிட்டு நாயனக்காரர்கிட்ட கையைக் கட்டி நின்னு இருக்கேன், என்று கேட்டாராம். இதை அவர் என்னிடம் நேரில் சொல்லியிருக்கிறார்,” என்கிறார்.

அழகுணர்ச்சியைக் கெடுக்காமல் வாசித்த போதும் தன் இருப்பை மனத்தில் பதியும்படி வாசித்த ஷண்முகசுந்தரம் பிள்ளையின் வாசிப்பை நினைக்கும் போதும் இன்னொரு கச்சேரிப் பதிவு நினைவுக்கு வருகிறது.

சங்கீத கலாநிதி மதுரை டி.என்.சேஷகோபாலனும் நாகஸ்வர வித்வான் மாம்பலம் சிவாவும் சேர்ந்து செய்த கச்சேரியின் பதிவு இணையத்தில் கிடைக்கிறது. லயத்துணைக்கு தவிலில் ஷண்முகசுந்தரம் பிள்ளையும், மிருதங்கத்தில் பெங்களூர் பிரவீனும் சேர்ந்துள்ளனர்.

கச்சேரியில் அவர்கள் வாசித்தது இருக்கட்டும். வாய்ப்பாட்டுக் கச்சேரியில் ஒலிப்பெருக்கியை தவிலுக்கு வைத்தால் பாடுவது எடுபடாமல் போய்விடும் என்பதற்காக ஒலிப்பெருக்கியே வைத்துக் கொள்ளாமல் அவர் வாசித்திருக்கும் காட்சியை இன்னொருமுறை மனத்தில் ஓட்டிப் பார்க்கிறேன்.

நாங்கள் அமர்ந்திருந்த கேண்டீனில் யாரோ ஸ்பீக்கருக்கு உயிரூட்டி யிருக்கிறார்கள். கச்சேரிக் கூடத்தில் கேட்ட நாராசம் எங்களைக் கேண்டீனிலும் துரத்துகிறது.

 ‘வலங்கைமானாரே! உங்கள் நூற்றாண்டிலாவது உங்கள் வாரிசுகளுக்கு உங்கள் அடக்கமும் அழகுணர்ச்சியும் வாய்க்க ஆசிர்வதியுங்கள்,’ என்று வேண்டியபடி மிஞ்சியிருந்த காப்பியை ஒரே மடக்கில் முழுங்கி வீதியில் இறங்கினோம்.

Read Full Post »

Raja Govindarajan has tagged me in this FB chain game of choosing 10 albums. Here is the fourth one.

I started collecting music from the late nineties. In a few years, I was obsessed with the recordings of Mandolin Shrinivas. I wanted to have every available recording of the maestro. I can actually do this 10 day series just based on albums of Shrinivas. The recordings and the memories associated with it are vividly etched in my mind for life. I had written one such experience with a Shrinivas album (in Tamil) here:

https://carnaticmusicreview.wordpress.com/2019/09/20/mandolin-bilhari/

I was in college when I started collecting these albums. I studied in Thanjavur. Three of us had rented a 1 BHK apartment. I used to live on a monthly allowance of 1500 Rs. per month. I had to pay rent, manage my food/travel expenses within that amount. There wasn’t much leftover by the end of the month. Every rupee was precious as I had to buy the music albums I wanted only from what I could save out of the monthly allowance. A tape cost anywhere between 30 to 40 bucks.

Fortunately I had Sriram Vijayaraghavan as a partner in crime. He was equally crazy about Carnatic music. Our musical tastes were in sync. – rather we influenced each other heavily. Coincidentally, both our homes had an Aiwa double deck music system. We must have dubbed several hundred tapes in a span of five years. His budget was short stringed as well. So, every purchase of an album had to debated upon and planned upfront. Hindustani Albums used to frustrate us endlessly – for they were almost always double the cost of Carnatic tapes.

I don’t how, but Sriram struck gold one day by discovering Muthu musicals in RK Mutt road. They had so many Mandolin Shrinivas album releases from the eighties that were not available in the then popular outlets such as Music World and Landmark. The bonus was the tapes were also from the old stock – with the inlay card displaying the price from the pre-1990 days. We somehow pooled in a little over 200 bucks and purchased 7 or 8 tapes in a single day. I think that would count as a single largest purchase in terms of number of albums till date. When we headed back to Perambur in the 29C we felt as if we owned the world.

There is an album titled “Rama Sreerama” by Shrinivas. For some reason, the album was priced 125 bucks. After earning my first pay check as a teaching assistant at the University in the US, the first thing I did was ordering this Album in an online store.

By the way, buying an album was the last resort. We would meticulously explore every possibility of someone in our circle owning that tape. If we were successful, we had to only make a copy of the album. That was only one third the cost. We would also try to lure someone whom we knew was into carnatic music to buy the album so that we could manage to get a copy.

One time Sriram even managed to convince the priest of the temple he used to visit regularly to buy an album that we wanted and made a copy for ourselves. I vividly remember that album had a beautiful Sahana with ‘Giripai’ as main rendered in the Mandolin with Kanyakumari on the violin. Often our scapegoat was Sriram’s cousin (and my classmate in school) Srivatsan. With some coaxing it almost always worked with Vatsan.

My parents liked Sriram a lot. So, I would demand for an extra allowance to buy him a birthday gift. It was granted without any questions. Sriram did the same with his parents for my birthday. Those special allowances were saved for expensive Hindustani albums or carnatic albums of international fame artists (again expensive) such as L.Subramaniam or L.Shankar.

Occasionally, my dad would realize that we had a 3CD changer music system (that was a big deal then) and we hardly had any CDs. He would entrust me the job of buying CDs. I would invariably buy T-Series released CDs and report an inflated cost and silently use the remaining amount on tapes.

In the year 2001, BMG Crescendo released four tapes titled “Classical Encounters” – all four recordings were from live concerts. As I mentioned earlier, we never knew Live concert recordings existed in private. Most commercial albums were studio recordings. Live recordings available commercially were very rare. We were desperate to buy them – but there was a problem. Each tape cost 75 bucks. 300 bucks was well beyond our reach.

We had faced some bad experience when we had spotted some live concert recordings of Shashank that we postponed buying and were never able to locate again. The thought of such occurrence with Shrinivas tapes was giving us nightmares. After much thought, we decided to use our trusted trump card one more time. We convinced Srivatsan to buy these albums. He had agreed to buy all four tapes. Sriram went along for the purchase.

It was only during the purchase Sriram noted an interesting detail. Vol 2 and Vol 4 were both showing the same content. They both were having a Ragam Tanam Pallavi in the same raga – Kambhoji. It was ridiculous to spend an extra seventy five bucks on a recording that had the same raga on two recordings. Sriram did the prudent thing. He bought Vol 2 and let go of the Vol 4.

mandolin 1

We had made copies of the three tapes and were listening to the tapes happiy. In fact, the first time I heard the raga Sucharithra was in these recordings. I would later go on to name my daughter Sucharithra thanks to the impact that rendition caused. Ideally, I should have been happy. Buy what started as a insignificant irking about not possessing an album of our hero, started to grow bigger and bigger every day. I was close to buying that missing tape several times but managed to pull myself out of that temptation at the last moment.

Months passed by and after discussions with Sriram, we were ready to buy the next set of albums. Sriram couldn’t join me to Landmark that day. I was supposed to buy three tapes that day. One of those albums was out of stock. While it would take just a few minutes to finish the purchase, usually our visits to Landmark would last for well over an hour. We would go over the collection in every section and make a mental note for future purchases.

While I was doing my usual browsing, I ran into Vol 4 of Classical Encounters. I was caught between satiating my obsession and having to face Sriram for making the purchase. I was sure, he would take me to task if I bought the tape. I took the tape all the way to the billing counter and then went back to place it back fearing consequences. Eventually, the temptation got the better of me. I bought the tape and took the bus to Sriram’s place.

As expected, he was totally mad at me when he saw what I did. I silently let him have a go at me. I didn’t even feel like taking the tape along with me. Next day morning, our landline phone was ringing. It was Sriram on the line. He was hysterical. He was trying to speak but his laughing wouldn’t allow him to speak. I could imagine how his face would turn red and how his eyes would well up when he laughed uncontrollably.

He gathered himself and said, “Super news da! The tape that you bought did not have a rendition of Kambhoji”

“What?”

“Want to take a guess?”

I was in no mood for guessing games. I urged him to tell me the contents of the tape.

It was an RTP in Charukesi.

Within the next half an hour I was at his place to listen to the tape. The rendition was out of the world. As if the elaborate soul stirring RTP was not enough, Shrinivas has played a brilliant ragamalika swaras in Ranjani, Bahudari and Shubapantuvarali. The Shubapantuvarali swaras are particularly long – we almost forgot that the raga that was elaborated was Charukesi. The theermanam ending with a series of ‘kitathakatharikiadhom’ patterns rendered at unimaginable speed and precision cannot be described in words. We must have rewound and heard that portion at least a dozen times that day.

I used to tease Sriram for a long time asking him, what a miss it would have been if I had made a prudent choice like him.
Very soon, I had to go to the US. We couldn’t co-own tapes anymore. It was decided that the person who gets to keep the original tape cannot have the inlay card. I got the inlay card of the tape.

mandolin 2

Sriram had neatly scratched the Kambhoji with a black marker and written Charukesi on the inlay card. That looked like the most beautiful handwriting ever to my eyes.

P.S: I could manage to find the faulty inlay card in an internet search!

Read Full Post »

Raja Govindarajan has tagged me in this FB chain game of choosing 10 albums. Here is the second one.

My dad got a sleek “Sharp” 2 in 1 in the mid eighties. I was thrilled to see a casual picture of Sunil Gavaskar at his home with the same music player. My dad was a banker was posted all over India. After one brief stint in Agra in the mid eighties where my mom traveled along with him, it was decided that only my father would travel to where his job took him and the rest of the family (at that time we were a big joint family with my grandparents and my father’s younger brother and sister staying with us) stayed back in Chennai.

After Agra, my mother could manage a job posting in Chennai but my father was posted in Salem. For some reason, he let the Audio Player be in Chennai. My grandfather used to meticulously guard it. It was played only when my dad used to come to Chennai. TV had arrived then, so even the Philips radio was hardly used. The only time an exception was made was on the occasion when a relative had gifted us a tape of a then newly released film ‘Apoorva Sahodarargal’. My mother manage to convince my grandfather that he should allow me to listen to the tape even during the absence of my father.

I used to eagerly look fwd for my dad’s visit as he always brought home stuff – that are usually bought in small numbers – in packets of 50 or more. It could be chocolates, pencils or pens! One time he brought a box and I remember feeling disappointed to find that it was box of seven cassettes.

51tuvsje2jl

It was a HMV compilation of recordings of many legends of carnatic music titled “Gems from the Carnatic Classicals”

I cannot remember a single instance that this collection was played in my childhood. It was mostly MKT songs as my grandfather had a special liking for them. Otherwise, it was MGR or Sivaji Ganesan hits. Since my father bought the music system in Agra, he had also bought several Hindi film cassettes. Almost after decade, I recorded carnatic music over them. even these tapes, I cannot remember being played at our home at all. While my grandfather was protective about the music player, he wouldn’t care much about what we did with the cassettes at home. As a kid, one of my favorite past time would be to remove the inlay cards and neatly arrange them in the room. I can’t remember the details now. But I faintly remember I had a game of my own with these cards. The central pieces in these arrangements were always this carnatic collection.

Eventually, I had forgotten about these collections. It was around 1996/97 I started developing an interest in classical music. I had run out of tapes from my father’s Hindi film collection that I can use to record classical music of my liking. It is when the wicked thought of reusing these classical tapes came to my mind. My friend Sriram suggested that we should at least listen to it once before we recorded over it. By then, we were ardent fans of Mandolin Shrinivas. To my surprise, this collection had an elaborate rendition of Saveri and the Shyama Sastri Kriti ‘Sankari Shamkuru’ by Shrinivas. That is when I started realizing I was sitting on a gold mine. My first brush with MLV’s classical music (excluding her Tiruppavai) was from this collection. I vividly remember listening to the Chaturdasa Ragamalika again and again. There was a TNS’s phenomenal rendition of Kanukontini in Bilahari. MSS’s ‘Paratpara’. Maharajapuram Santhanam’s ‘Nalinakanthimathim’. Master Shankaran Nampoothri’s ‘Kshira Sagara’ were other favorites from this collection. For about an year since I rediscovered the collection, I repeatedly listen to them over and over. It increased my Carnatic listening repertoire significantly. Suddenly, I knew a lot more names in Carnatic music. I had poured over the inlay card details and I knew the song, composer, tala etc.

I didn’t take good care of the tapes in 2000s. Due to excessive use, these tapes started falling apart. I always wanted to buy another set but never got around doing it. I do think, by investing enough time, it is possible to locate every recording in that collection. But the wonderful compilation served on a platter is something I will always miss.

I hope Saregama releases this compilation one more time.

Read Full Post »

ஸ்ரீநிவாஸ் இல்லாத வெறுமை காலத்தால் அழிய மறுக்கும் வடுதான் என்றாலும் இன்று அவன் இசை வாழ்வை நிறைத்த கணத்தையே நினைக்க விரும்புகிறேன்.

இதைப் படிக்கும் போது கேனைத்தனமாக உங்களுக்குத் தோன்றலாம். இன்று நினைத்தாலும் பரவசப் பிரவாகமாய் என் மனத்தை அந்த நிகழ்வு நிரப்புவது நிச்சயம் சத்தியம்.

1999-ம் ஆண்டு தஞ்சாவூரில் தங்கியபடி கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலம், சேத்ராடனம் செல்லும் உறவுக்காரர்கள் தஞ்சாவூருக்கு வந்தால் சில சமயம் நானும் அவர்களுடன் சென்றதுண்டு.

அப்படியொரு முறை கும்பகோணம் திருவாரூர் சாலையில் இருந்த கோயில்களுக்குச் சென்ற போது மாலை வெளையில் திருச்சேறை கோயிலை அடைந்தோம்.

சங்கீதா காஸெட், ஏவிம் ஆடியோ, எச்.எம்.வி, பி.எம்.ஜி கிரசெண்டோ என்று வெவ்வேறு கம்பெனிகள் வெளியிட்டிருந்த மாண்டலின் பதிவுகள் அனைத்தும் இருந்ததாக நினைத்துக் கொண்டிருந்த காலம். கோயிலின் டேப்ரிக்கார்டரில் இருந்து அற்புதமாய் பிலஹரி ராகம் மாண்டலினில் ஒலித்துக் கொண்டிருந்தது.

என்னிடம் இல்லாத ஒரு பதிவு. அதிகம் கூட்டமில்லாத கோயிலில், பட்டாச்சாரியார் தீபாராதனை காட்டிய போடும் மனமெல்லாம் பிலஹரியில்? என்ன பதிவு இது என்று மனத்தை அரிக்கத் தொடங்கியது.

கன்யாகுமரி வயலினில் வாசிக்கத் துவங்கிய போது பட்டாச்சாரியரை கேட்டேவிட்டேன்.

“என்ன கேஸட் இது”

“இங்க இருக்கற ஒரே காஸெட் இதுதான். தினமும் இதைத்தான் போடறோம்”

”எந்தக் கம்பெனி வெளியிட்ட பதிவு?”

“அதெல்லாம் எனக்குத் தெரியாது!”

“காஸெட் கவர் இருக்கா?”

பெரியவர் ஏற இறங்கப் பார்த்தார். இது என்னடா ரோதனை என்று நினைத்திருக்கக் கூடும்.

தீர்மானமாய் நான் அங்கு நின்றது அவரை அசைத்திருக்க வெண்டும். உள்ளே சென்று காஸெட் கவரை எடுத்து வந்தார்.

ஒரு டீ-சீரீஸ் காஸெட்டில் யாரோ பதிவு செய்திருக்கிறார்கள்.

தயங்கியபடி, “இதுல எந்தக் கம்பெனி பதிவுனு தெரியலை. நான் ஸ்ரீனிவாஸ் வாசிச்ச எல்லா காஸெட்டையும் வாங்கணும்னு நினைக்கறேன். இந்தக் காஸெட்டை இரவல் தர முடியுமா? நான் பிரதியெடுத்துட்டு திருப்பித் தரேன்.”

“நீ யாருன்னே தெரியாது. எந்த ஊரோ என்னமோ. உன்னை நம்பி இருக்கற ஒரே காஸெட்டை எப்படித் தர்ரது.”

“பணம் வேணா குடுக்கறேன்”

“பணம் எல்லாம் வேண்டாம்பா. யாராவது கேட்டா வம்பாயிடும்.”

“இங்க எதாவது மியூசிகல் இருந்தா உடனே பிரதி எடுத்துட்டுத் தந்துடறேன்”

இதற்கு நடுவில் ஊர் சுற்ற வந்திருந்த உறவுக்கார் பொறுமையிழந்தார்.

“இன்னும் நாலு கோயிலுக்கு போகணும். சீக்கிரம் வாப்பா”, என்றார்.

“இது கிடைக்கத காஸெட். இதை நான் பிரதி எடுக்கப் போறேன். நீங்க மத்த கோயிலுக்குப் போங்க”

அவர் என்னமோ சொல்ல வாயெடுத்த போது, கோயில் பட்டர், “நான் எப்பப்பா உனக்கு காஸெட் தரேன்னு சொன்னேன்”, என்றார்.

எனக்கு கண்ணில் நீர் துளிர்த்துவிட்டது.

“ப்ளீஸ், என்னை நம்புங்க. நிச்சயமா இன்னைக்கே திருப்பிக் கொடுத்துடறேன்”, என்றேன்.

உறவுக்காரருக்கும் அப்படி பாதியில் என்னைவிட மனமில்லை. பட்டருக்கு கொஞ்சம் மனமிளகினாலும் காஸெட்டைக் கொடுக்க மனமில்லை. எனக்கும் காஸெட் வெண்டுமென்றாலும் மற்றவர்களை சங்கடப்படுத்துகிறோமே என்று மனவுளைச்சல்.

முப்பது வினாடிகள் மூன்று மணி நேரம் போல ஊர்ந்தன.

பட்டர் ஒருமாதிரி இறங்கி வந்து, “எங்கப் போய் பதிவெடுப்ப?”, என்ரார். என் நண்பன் பாலாஜி கும்பகோணத்தில் இருந்தான். அவன் வீட்டில் பிரதியெடுக்க வசதியுண்டென்று அறிவேன்.

ஹைஸ்பீட் டப்பிங்கில் அரைமணியில் ஆகிவிடும்,

“கும்பகோணத்துக்குப் போய் பிரதியெடுத்துடுவேன்”,என்றேன்.

“ராத்திரிக்குள்ள வர முடியுமா?”

“பன்னிரெண்டு மணியானாலும் ராத்திரி கொடுத்துவிடுகிறேன்”, என்றேன்.

கூடயிருந்த உறவுக்காரர் கும்பகோணத்திலிருந்து நாள் வாடகை பேசி கார் எடுத்து வந்திருந்தார். அவருக்கு என்னத் தோன்றியதோ தெரியவில்லை, “நான் காரில் கூட்டிட்டுப் போய், திரும்ப கொண்டுவிடுகிறேன்”, என்றார்.

பட்டருக்கு ஒரே அதிர்ச்சி. தலையை கிழக்கும் மேற்குமாய் இரண்டு முறை அசைத்துவிட்டு, “இது என்ன கெஸெட்னே எனக்குத் தெரியாது. கடைமைக்கு தினமும் பொடறேன். இவ்வளவு ஆர்வமா இதைக் கேட்கும் போது என்னால மறுக்க முடியலை. கும்பகோணத்துக்கு போயெல்லாம் காப்பி எடுக்க வெண்டாம். காஸெட்டை நீயே வெச்சுக்கோ”, என்றார்.

எனக்கு மறுக்கக் கூடத் தோன்றவில்லை. ஸ்தம்பித்த நிலையில் காஸெட் கவரை வாங்கிக் கொண்டேன். உறவுக்காரர்தான், “பணம் எதாவது குடுக்கட்டுமா?”,என்றார். பட்டர் மறுத்துவிட்டார்.

அவர் டெப்ரிக்காடரை அணைக்கச் சென்ற போது தனி ஆவர்த்தனம் முடிந்து் ஸ்ரீனிவாஸ் வாசிக்கத் தொடங்கியிருந்தான், “தொரகுணா இடுவண்டி சேவா”

ஆமாமப்பா! “யாருக்குக் கிடைக்கும் இப்படியொரு சேவை!:”

Read Full Post »

வருடா வருடம் பரிவாதினி கச்சேரிகளை ஒருங்கிணைப்பது எவ்வளவுக்கெவ்வளவோ மகிழ்ச்சியளிக்கக் கூடிய ஒன்றோ அதே அளவுக்கு ஆயாசம் அளிக்கும் வேலையும்கூட. இருப்பினும், மண்டி வரும் சோம்பலை உலுக்கித் துரத்த வைக்க வருடாந்திர பர்லாந்து விருதை நினைத்தாலே போதும். மனம் குதூகலிக்கத் தொடங்கிவிடும். அதிகம் கண்டுகொள்ளப்படாத விருதுதான் என்றாலும் என்னளவில் பெருமகிழ்ச்சியை அளிக்கும் நிகழ்விது. வருடம்தோரும் வாத்தியம் செய்யும் ஒரு வினைஞரை கௌரவித்து அவரை வாழ்நாள் நண்பராக்கிக் கொள்ளும் தருணமது.

இந்த வருடம் கஞ்சிரா மேதை ஹரிசங்கர் அவர்களின் அறுபதாவது பிறந்த வருடம் என்பதால், அவருக்கு வாத்தியங்கள் செய்து கொடுத்த வினைஞரை கௌரவிக்கலாம் என்ற எண்ணம் தோன்றியது. ஹரிசங்கர் அவர்களின் சீடர்களுடன் பேசுகையில் திரு.முருகானந்தமே ஹரிசங்கருக்கு வேலை செய்த வினைஞர்களுள் முதன்மையானவர் என்று தெரிய வந்தது. அவருடைய மகன் நவநீதம் சென்னையில் மிருதங்கவேலை செய்து வருகிறார் என்கிற தகவலும் கிடைக்க – கூகிள் உபயத்தில் நவநீதத்தின் தொலைபேசி எண் கிடைத்தது. அவரிடம் பேசுகையில் முருகானந்தம் இப்போது தொழிலிலிருந்து ஓய்விபெற்று தன் சொந்த ஊரான வலங்கைமானில் உள்ளார் என்று தெரிய வந்தது.

DSC_0097

வலங்கைமான் என்ற பேரைக் கேட்டதுமே அந்த ஊர் சங்கீதத்துக்கு அளித்த தவில் மேதை சண்முகசுந்தரம் அவர்களின் வாசிப்பு காதில் ஒலித்தது. குறிப்பாக மேண்டலின் ஸ்ரீனிவாஸுக்கு அவர் வாசித்த கச்சேரிகள்! மேண்டலின் ஸ்ரீனிவாஸ் உச்சிக்கு வரும்போது நிறைய வீடுகளில் மங்கலவாத்யமாக டேப்ரிக்கார்டர்களில் ஒலித்துக் கொண்டிருந்த நாகஸ்வரத்தின் இடத்தை மேண்டலின் பிடித்துக்கொண்டது. அதற்கு முக்கிய காரணம் சண்முகசுந்தரம் அவர்களின் வாசிப்பு என்பது என்னுடைய துணிபு. மேண்டலினின் இனிமையான நாதத்தையும், விறுவிறுப்பான காலபிரமாணத்தையும் மீறி அந்த ஒலிநாடாக்களுக்கு மங்கல வாத்யத்தின் தன்மையைக் கொடுத்ததில் தவிலின் நாதத்திவலைகளுக்கும் முக்கியப்பங்கு உண்டு.

இந்த எண்ணங்களை எல்லாம் அசை போட்டபடி முருகானந்தம் அவர்களை அழைத்து அவருக்கு விருது வழங்க விரும்பவதைச் சொன்னேன். “எனக்கு விருதா? நான் அப்படி ஒன்னும் பண்ணலியே”, என்றவரிடம் ”ஹரிசங்கரின் அறுபதாவது பிறந்த ஆண்டில் உங்களுக்கு கொடுப்பதுதான் சரியாக இருக்கும்”, என்றவுடன் ஒப்புக் கொண்டார்.

அதன்பின் அவரை வலங்கைமானில் சென்று காண நான் திட்டமிட்ட போதெல்லாம் ஏதோவொரு காரணத்தால் தட்டிக்கொண்டே போனது. விருது கொடுக்க இரண்டு நாட்களே உள்ள நிலையில் தொலைபேசியிலாவது அவரிடம் பேட்டி எடுத்தவிடலாம் என்று இன்று அழைத்தேன்.

எனக்குவோர் இன்ப அதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது.

“என்னை அப்பா தவில் கத்துக்க சொன்னாங்க. நான் மாட்டேனுட்டேன். நாகஸ்வரம் கத்துக்கப் போனேன்.”, என்று பேட்டியைத் தொடங்கினார்.

பெரும்பாலும் வாத்தியம் செய்யும் வினைஞர்களுக்கு இசைப்பயிற்சி இருப்பதில்லை என்பதால் எனக்கு ஆவல் மிகுந்தது.

“அப்பாவுக்கு தவிலில் ஆர்வமா?”

“என்ன இப்படி கேட்கறீங்க. அவரு பெரிய வித்வானாச்சே”

என் ஆவல் அடுத்த நிலையை எட்டியது.

“ஐயா பேரென்னங்க…”

“வலங்கைமான் சண்முகசுந்தரம்….”

“ஆ!!!…”

தூக்கிவாரிப் போட்டது. என்னை சிறுவயதில் இசையின் பால் இழுத்த அந்த வாசிப்புக்கு சொந்தக்காரரின் வாரிசுக்கு விருதளிக்கப் போகிறோம் என்றெண்ணி புளகாங்கிதமடைந்தேன்.

“இவ்வளவு நாளா அவர்தான் உங்க அப்பானு தெரியாம இருந்துட்டேன். மேண்டலினுக்கு அவர் வாசிச்ச பதிவுகளை டேப் தேயத் தேயக் கேட்டிருக்கேன்.”

“அவர் வாசிப்பு பெரிய வாசிப்பு. நானும் வாசிச்சு அந்த அளவுக்கு வரலைன்னா அவர் பேர் கெட்டுபோயிடும்-னு தவில் கத்துக்கமாட்டேனுட்டேன்.”

“அதனால நாகஸ்வரம் கத்துக்கிட்டீங்களா?”

“ஆமாம். ஆண்டான்கோயில் செல்வரத்தினம் எனக்கு தாத்தா முறை. வயசு வித்தியாசம் அவ்வளவு இல்லைனாலும் முறைப்படி தாத்தா. அவர்கிட்ட கத்துகிட்டேன். கோயில்ல எல்லாம் வாசிச்சுப் பழகுவேன். பதினைஞ்சு வயசிருக்கும் போது கொஞ்டம் உடம்பு சரியில்லாம போச்சு. டாக்டர் பாத்துட்டு இதயம் வலுவில்லாம இருக்கு. நாகஸ்வர பயிற்சி கூடாதுனு சொல்லிட்டாரு.”

“அதுனால வாத்தியம் பண்ண ஆரம்பிச்சீங்களா?”

“இல்லை. அம்மையப்பன், வலங்கைமான்-ல எல்லாம் கொஞ்சம் நிலமிருந்தது. அதைப் பார்த்துகிட்டு இரண்டு வருஷம் விவசாயம் பண்ணினேன்”

“அப்புறம் எப்படி இந்தத் தொழிலுக்கு வந்தீங்க?”

“என் தங்கையை மிருதங்க வித்வான் தஞ்சாவூர் உபேந்திரனுக்கு கொடுத்திருந்தோம். அவர் தொழில்ல முன்னேறி சென்னைக்கு குடிபோயிட்டாரு. அவர்தான் என்னையும் சென்னைக்கு வரச் சொன்னாரு.”

தஞ்சாவூர் உபேந்திரன் இன்று முன்னணியில் விளங்கும் கலைஞர்களை மட்டுமல்ல, ஓர் அற்புதமான வினைஞரையும் இசையுலகுக்கு இட்டு வந்திருக்கிறார்.

“அவருக்கு அப்போ ராமகிருஷ்ணன்-னு வண்ணாந்துறையில ஒருத்தர் மிருதங்க வேலை செஞ்சுகொடுத்துகிட்டு இருந்தார். அவர் அண்ணனும் பக்கத்துலையே கடை வெச்சு இருந்தார். அவங்க கிட்ட வேலை செய்ய ஆரம்பிச்சேன். தவில்ல இப்பதான் நட் போல்ட் போட்டு முடுக்கறோம். அப்பல்லாம் வார் பிடிக்கணும். அது அவ்வளவு சுலபமான வேலையில்ல. அப்பாவுக்காக நான் பலமுறை வார்பிடிச்சு கொடுத்து இருக்கேன். அந்த அனுபவத்துனால மிருதங்கத்துக்கு வார்பிடிக்கறது, மூட்டு அடிக்கறது எல்லாம் சுலபமாவே வந்துடுச்சு. கொஞ்ச நாள்ல நானே சொந்தமா கடைவெச்சுட்டேன்.”

“உங்க கடை எங்க இருந்தது?”

“மாதவ பெருமாள் கோயில் பக்கத்துல. அங்க வேதமூர்த்தி-னு ஒரு மெக்கானிக் கடை வெச்சு இருந்தார். அவருக்கு சங்கீதம்னா உயிர். அவருக்கும் எனக்கும் பழக்கம் ஏற்பட்டு, அவர் கடையிலேயே பாதியை எனக்குக் கொடுத்தார். அங்கதான் என் தொழில் தொடங்கிச்சு.”

இசை எப்படி சம்பந்தமில்லாத இருவரை இணைக்கிறது என்று வியந்தபடியே அடுத்த கேள்வுக்குச் சென்றேன்.

”தஞ்சாவூர் உபேந்திரனுக்குதான் முக்கியமா மிருதங்கம் செஞ்சுகொடுக்க ஆரம்பிச்சீங்களா?”

“இல்லையில்லை! அவர் சிஷ்யர் நெய்வேலி நாராயணனுக்குதான் முதல்ல செஞ்சு கொடுத்தேன். அப்புறம் இன்னொரு சிஷ்யர் முருகபூபதிக்கு செஞ்சு கொடுத்தேன். அப்படி கொஞ்சம் கொஞ்சமா என் நிறைய பேருக்கு செய்ய ஆரம்பித்தேன். காரைக்குடி மணி, திருவாரூர் பக்தவத்சலம், ஸ்ரீமுஷ்ணம் ராஜாராவ்-னு நிறைய பெரிய வித்வான்களுக்கு செஞ்சு கொடுத்திருக்கேன்.”

”ஹரிசங்கர் அவர்களை எப்படி சந்திச்சீங்க?”

“அவரை உபேந்திரன் அத்தான்தான் வீட்டுக்கு கூட்டிகிட்டு வந்தாங்க. மேடலின் கச்சேரிக்கு அப்போ இவங்க எல்லாம்தான் செட்டு. அப்பா, அத்தான், ஹரிசங்கர், விநாயக்ராம் சேர்ந்து வாசிப்பாங்க. பல ஊர்கள்ல, கல்யாணங்கள்ல கச்சேரி நடக்கும். அப்படி சந்திச்சுப் பழக்கம். அப்பா மேல ஹரிசங்கருக்கு ரொம்ப மரியாதை. என்கிட்டையும் ரொம்ப பிரியமா நடந்துப்பாங்க.”

“கச்சேரிகள் நிறைய கேட்டு இருக்கீங்க. உங்களைக் கவர்ந்த கச்சேரி?”

“நிறைய போவேன். எல்லாம் கேட்பேன். அதுக்கு மேல சொல்ற அளவுக்கு நுணுக்கமெல்லாம் தெரியாது. பாட்டைவிட கலைஞர்களைப் பார்த்து பழகறதுலதான் எனக்கு கவனமிருந்தது.”

”ஹரிசங்கருக்குனு ப்ரத்யேகமா ஏதாவது செய்யச் சொல்லுவாரா?”

“அப்படி ஒண்ணும் இல்லை. அவர் முக்கியமா என்கிட்ட தோலைத்தான் வாங்கிப்பாரு. நான் கட்டையில் ஒட்டிக் கொடுத்த வாத்தியங்களும் அவர் வாங்கிக்கிட்டிருந்தாலும் அவருக்கு அவரே தோலை ஒட்டினாத்தான் பிடிக்கும். ஃபெவிக்காலை வெச்சு ஒட்டறது அவருக்குப் பிடிக்காது. சாதத்தை வெச்சே ஒட்டிப்பாரு. அது அவருக்குத்தான் முடியும்.”

“கஞ்சிராவுக்கு அப்பல்லாம் உடும்புத் தோல் உபயோகிச்சீங்க இல்லையா?”

“ஆமாம். அதுலதான் அந்த நாதம் கிடைக்கும். வேற தோலுல கிடைக்காது. எஙக் ஊர்ல, வேதாரண்யத்துல, ஆடுதுறைல எல்லாம் மாமிசத்துக்காக உடும்பு அடிப்பாங்க. அதனால் தோல் சுலபமா கிடைக்கும்.”

“இப்ப உடும்பு அடிக்கறது தடை பண்ணிட்டாங்களே”

“ஆமாம்.”

“இப்ப என்ன தோலு உபயோகிக்கறீங்க?”

“நான் தொழில் பண்ணின வரைக்கும் உடும்புதோல்தான் உபயோகிச்சேன். இப்ப என்ன பண்றாங்கனு தெரியலை”

”ஹரிசங்கரோட அறுபதாவது பிறந்த வருடமிது, அவரைப் பற்றி வேற எதாவது சொல்ல விரும்பறீங்களா?

“அவருக்கும் எனக்கும் முதலாளி தொழிலாளி உறவில்ல. நண்பர்கள் மாறிதான் பழகினோம். அவரும் நானும் அடிக்கடி வெத்தலை கடையில சந்திச்சுப்போம். அவர் அன்பா பழகினதை வாழ்நாள் முழுக்க மறக்கமுடியாது.”

“இந்த விருதை மிருதங்கம் செய்வதுல நிபுணரா இருந்த பர்லாந்து அவர்கள் பேருல கொடுக்கறோம். அவரை நீங்க சந்திச்சதுண்டா?”

“ஒரு முறை பார்த்து இருக்கேன். உபேந்திரன் அத்தான் தஞ்சாவூர்ல இருந்தபோது அவர் வீட்டுக்கு வந்து பர்லாந்து வேலை செய்வாரு. அப்ப பார்த்து இருக்கேன். அன்னிக்கு எனக்குத் தெரியாது நானும் இந்தத் தொழிலுக்குத்தான் வருவேன்னு.”

“ஒரு பெரிய இசை பரம்பரைல வந்த நீங்க வாத்தியங்கள் செய்யறதை தொழிலா எடுத்துக்கிட்டீங்க. இப்ப உங்க வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கும் போது நிறைவா இருக்கா?”

“நிச்சயமா நிறைவா இருக்கு. இந்தத் தொழில்தான் என்னை ஒருமனுஷனா ஆக்கி இருக்கு. எந்தக் குறையுமில்லாம நிம்மதியா இருக்க வெச்சிருக்கு. என்  பசங்க – நவநீதம், தனபால் – ரெண்டு பேரும் இன்னிக்கு இந்தத் தொழில்தான் பண்ணிகிட்டு இருக்காங்க”

நான் பர்லாந்து அவர்களைப் பார்த்ததில்லை. அவர் மகன் செல்வத்தைப் பார்த்து கௌரவித்த போது பர்லாந்து அவர்களையே பார்த்த உணர்வு ஏற்பட்டது. இன்னும் இரண்டு நாட்களில் முருகானந்தம் அவர்களைப் பார்க்கும் போது மேதை வலங்கைமான் சண்முகசுந்தரம் அவர்களையே பார்த்த நிறைவு ஏற்படும் என்று தோன்றியது. அந்த மகிழ்ச்சியில் துளிர்த்த புன்னகையோடு பேட்டியை முடித்துக்கொண்டேன்.

நன்றி: இன்மதி.காம்

Read Full Post »

இரண்டு நாட்களாய் ஸ்ரீனிவாஸ் என் வாழ்வை நிறைத்த கணங்கள் மனம் முழுதும் அலையடித்துக் கொண்டிருக்கின்றன. ஒரே ஒரு கச்சேரி மட்டும் மீண்டும் மீண்டும் வந்து போய்க் கொண்டிருக்கிறது.

Shrinivas

ஸ்டேஜ் டிக்கெட் வாங்கி ஸ்ரீநிவாஸுக்கு மிக அருகில் அமர்ந்து கொண்டு கேட்ட கச்சேரி. பிரதானமாய் வகுளாபரண ராகத்தை எடுத்துக் கொண்டு ஆலாபனை. மத்ய ஸ்தாயியில் ஆரம்பித்து ஸ்வரம் ஸ்வரமாய் ராகத்தை வளர்த்து, தார ஸ்தாயியில் புயல் போல் மையம் கொண்டு மின்னல் சஞ்சாரங்களை மேலும் கீழுமாய் உதிர்த்து மீண்டும் ஒரு முறை மந்தர ஸ்தாயிக்கு வந்ததும் இப்போது முடிந்துவிடும் ஆலாபனை என்று நினைக்கையில் மந்த்ர ஸ்தாயி விஸ்ரூபமாய் தன்னைக் காட்டிக் கொள்ள முடிவெடுத்தது. ஸ்ரீநிவாஸ் கருவியானார், மாண்டலின் அக்கருவியின் ஓர் அங்கமானது. கையும் கருவியும் ஒன்றரக் கலந்தன. அதிகமில்லை இரண்டு மூன்று நிமிடங்களில் வாத்யத்தின் எல்லைக்குத் தள்ளப்பட்டது அந்த இடக் கரம். இனி செல்ல இடமில்லை என்ற நிலையிலும் மந்த்ர ஸ்தாயியின் பவனி முடிந்தபாடில்லை. இன்னும் இன்னும் என்று அந்தக் கரங்களை எக்கித் தள்ளின ராக சஞ்சாரங்கள்.

ஸ்ரீனிவாஸின் வலக் கரம் பிரடைக்குச் சென்றது. துல்லியமாய் ஸ்ருதி சேர்க்க மட்டும் பிரடையைத் தீண்டும் கரம் இன்று தந்தியின் இறுக்கத்தை தளர்த்தத் துவங்கியது. பிரடையை எவ்வளவு திருகினால் தந்தி எவ்வளவு தளரும், அந்தத் தளர்ந்த நிலையின் எந்த எடத்தில் என்ன ஸ்வரம் பேசும் என்று ஒருவனுக்குத் தெரிந்திருக்க முடியுமா? ஸ்ரீநிவாஸாகவே இருக்கட்டுமே!

பல்லாயிர மணி நெர உழைப்பில் கிட்டும் கனியா? அல்லது பல்லாயிர ஜென்ம பூர்வ புண்ணிய பலனா? யாருக்குத் தெரியும்?

பளிச்சென்று கண்கூசி மறையும் அமானுஷ்யக் கீற்று!

தளர்ந்த அந்தத் தந்தியில் இன்னும் இரண்டு மூன்று சஞ்சாரங்கள் வாசித்ததும் ராகத்துக்கு முழுமையாய் வெளிப்பட்டுவிட்ட திருப்தி ஏற்பட்டிருக்க வேண்டும். ஸ்ரீனிவாஸில் விரல்கள் ராகத்தை ஷட்ஜத்துக்கு நகர்த்தி ஆலாபனையை நிறைவு செய்தன. குறைந்த பட்சம் தம்புராவைத் தொட்டாவது பர்த்தவர்களுக்கு அன்று நடந்த விஷயத்தின் வீச்சு கொஞ்சமாவது புரியக் கூடும்.

தான் என்ன செய்தோம் என்பதை ஸ்ரீனிவாஸ் உணர்ந்திருப்பாரா? எத்தனையோ கச்சேரிகள் நேரில் கேட்டிருந்த போதும் இது போன்ற நிகழ்வை வேறெப்போதும் நான் கண்டதில்லை, ஒரு வேளை இது என் அதீத கற்பனையொ என்று கூட நினைத்துக் கொள்வதுண்டு. அப்போதெல்லாம் என்னருகில் அமர்ந்தபடி “டேய்!” என்று வாயடைத்த நண்பன் வத்ஸனின் கையை கெட்டியாக நான் பிடித்தது கனவில்லைதானே என்று வத்ஸனுக்குத் தொலைபேசி உறுதிப் படுத்திக் கொள்வேன். மேடையில் வெகு அருகில் இருந்தவர்களுக்கு மட்டுமே புரிந்திருக்கக் கூடிய அந்தக் காட்சியை ஸ்ரீனிவாஸ் நினைத்திருந்தால் விஸ்தாரமான நாடகமாக்கி அரங்கமே அறிய செய்திருக்க முடியும். அந்தக் பிரக்ஞையெல்லாம் இருந்தால் அவன் அவதார புருஷனாக முடியுமா என்ன?

ஸ்ரீனிவாஸை என் போன்ற ரசிகர்கள் எங்களுக்கானவனாய், எங்கள் வீட்டில் ஒரு ஆளாய், பிரத்யேகமாய் எங்களுக்கே வாசிப்பவனாய் நினைத்ததில் ஆச்சரியமில்லை. எந்த ஒரு படைப்பும் உருவாக்கும் மாயத் தொற்றம் அது. பெரும்பாலான சமயங்களில் படைப்புக்குரியவனை நேருக்கு நேர் சந்திக்கும் போது அந்த மாய பிம்பம் வெடித்துச் சிதறிவிடும். ஸ்ரீனிவாஸுடன் எதேச்சையாய் நிகழ்ந்த ஒரு சில சம்பாஷணைகளில் ”நம்ப ஸ்ரீனிவாஸ்” என்கிற எண்ணம் இன்னும் இறுகித்தான் போனது. நேற்று ஒரு அம்மா எழுதியிருந்தார், “என் மகனை இழந்தது போல இருக்கிறது”, என்று. எத்தனை உண்மையான உணர்வு!

அவன் ராக அலையெழுப்பி மேலே சென்ற போது நானும் சென்றேன். அவன் ராகக் கடலில் மூழ்கி முத்தெடுத்த போது அது எனக்கே கிடைத்த முத்தாய் கூத்தாடினேன். பிரமாதமாய் ஒரு சங்கதி வாசித்து முடித்து தலை எழுப்பி அவன் சிரித்த போது அது எனக்கும் அவனுக்கும் நிகழ்ந்த சங்கேத சம்பாஷணையாய் நினைத்துக் கொண்டேன். வாகதீஸ்வரி, வனஸ்பதி, விஜயஸ்ரீ, வீரவசந்தம், வந்தனதாரிணி, வர்தினி, சூர்யகாந்தம், பிந்துமாலினி, ஸ்ருதிரஞ்சனி, ஊர்மிகா என்று எததனை எத்தனை அறிமுகங்கள் ஏற்படுத்திக் கொண்டுத்த நண்பன் அவன். காதில் மாட்டிய ஹெட்ஃபோனில் அவன் ஒலிக்க எத்தனை மணி நேர நடை பயணங்களில் துணையாய், வழியாய் நின்றவன். இன்னும் எத்தனையோ பயணங்களை அவன் அழைத்துப் போக தயாராய்தான் இருந்தான். சென்ற மாதம் கூட இரண்டு தெரு தள்ளியிருக்கும் உன்னதியில் கோகுலாஷ்டமிக்கு வாசித்துப் பொயிருக்கிறான். “எங்கப்பா போயிடப் போற நீ? மத்த வேலையும் கொஞ்சம் பார்க்க வேண்டாமா? அடுத்த தடவைக்கு வந்துடறேன்”, என்று எனக்குள்ளே சொல்லிக் கொண்ட நான் தான் எவ்வளவு மடையன்?

இப்போது இறுதிப் பயணத்தில் பறந்தேவிட்டான். இனி கத்தினால் வருவானா? கதறினால் கிடைப்பானா?

அவன் போனாலும் அவன் இசை வாழும் என்கின்றனர். அவன் இசையை நீங்கள் வைத்துக் கொள்ளுங்கள் எனக்கு அவனைத் திருப்பிக் கொடுத்துவிடுங்கள். இந்த ஜென்மத்துக்கு அது போதும்.

Read Full Post »