Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Posts Tagged ‘nagaswaram’

Today is the remembrance day of Thavil legend TA Kaliyamurthi. Sharing the piece I wrote for his commemorative calendar.

*********************************

If one were to take a census among Nagaswaram artistes who have performed widely for the past fifty years on who would be their most preferred accompaniment, the results would undoubtedly point to thav ilmaestro T. A. Kaliyamurthy.

T. A. Kaliyamurthy was born in Thiruvalaputhur (originally Thiruvazkoliputhur) to V.Arunachalam Pillai and RajamaniAmmal. Talking about his ancestry in an interview published in The Hindu, Kaliyamurthi says, “My grand aunt Tiruvalaputhur Kalyani Ammal was an accomplished Bharatanatyam artiste and was famous for her Simhanandanam dance. My paternal grandfather, Vaidyalingam Pillai, was a mridangam vidwan. Tiruvalaputhur Pasupathiya Pillai was my grand uncle.”Kaliyamurthy started learning thavil at the age of five under the guidance of his maternal uncle S.Kadirvel Pillai. He later joined the much-acclaimed Guru Thiruvalaputhur Pasupathiya Pillai and immensely benefited from the three-year association.

Many artistes who are legends in the musical world have become immortal by playing thavil. There were a few, however, who attained great heights by not performing but by teaching and creating artistes. Foremost among them is Thiruvalaputhur Pasupathiya Pillai. Having learnt the art of thavil-playing from the legendary Ammachathiram Kannusami Pillai, Pasupathiya Pillai could only have a short stint as a performer. His fingers could not take the stress involved in playing the instrument and would bleed profusely if he played the instrument. Not a man to give up easily, Pasupathiya Pillai shifted his focus to teaching. He is credited to have taught over a thousand students without touching the thavil! He is regarded as a ‘Guru Peetam’ among the thavil artistes. The list of his disciples includes legends such as Nachiarkoil Raghava Pillai, Yazhpanam Chinnathambi Pillai, Poraiyar Venugopala Pillai and Perumpallam Venkatesan.

A video interview of T.A.Kaliyamurthy informs that he started playing in concerts even at the age of 10. In his twelfth year, he joined Nagaswaram Maestroes Vandikaratheru Mani–Manpoondiah Pillai’s set. Further, he joined the sets of Vidwan Thiruvengadu Subramania Pillai and Vidwans Semponnarkoil Sambandham and Rajanna. His last stint as a ‘set thavil’ artiste was in the troupe of Vidwan Sivapuri Padmanabhan. By the time he was 19, he had established himself as a player of repute and set out as a ‘Special Thavil’ artiste.

In his twenties, Kaliyamurthy took the music world by storm and played for all the leading artistes of his time such as Thirumeignanam Natarajasundaram Pillai, Sheikh Chinna MoulanaSaheb and Namagiripettai Krishnan. ‘Clarinet Everest’ AKC Natarajan says, “His balance between the thoppi (the left head of the instrument played with the stick) and valanthalai (the right head of the instrument, played with the right hand of right-handed artiste) was something very unique. When he played along it pushed me to play more and explore different musical ideas. Forget his playing; he had the power to captivate the audience by just the way he appeared and the style with which he held the instrument.”

His partnership with Padma Shri awardee Haridwaramangalam A.K. Palanivel catapulted his popularity to dizzy heights. The duo was in great demand to perform all over the country. In a touching video tribute,Vidwan Palanivel says, “In the thousands of concerts we have played together, we have never discussed about what to play in the concert. He had the uncanny ability to reproduce whatever I played—no matter how complex the laya patterns were. My association with him spurred me on to create something new for every concert to challenge him.” In the late 1970s, two more thavil maestros viz. Thanjavur Govindarajan and Vedaranyam Balasubramaniam joined the duo. Together the quartet elevated the status of thavil and the quartet was the first to be booked for important events including celebrity weddings, temple festivals and prestigious music festivals in India and abroad.

Vidwan Kasim says, “I have enjoyed his playing when I was a youngster—when he played for my grandfather—as well as later when I had the fortune of having him accompanying me in my concerts. What struck me most was his humility and his manner of always giving the centre stage to nagaswaram artiste despite his colossal talent and stature. His playing was never intrusive and this approach remained the same for both senior and junior nagaswaram vidwans. He always focused on elevating the concert and waited for the thani to showcase his individuality. He had a distinct approach to playing for different pieces. For example, his playing during the kalpanaswaras during a kriti would be completely different from the way he played for ragamalika swaras during a pallavi. When it came to accompaniment for the lighter pieces towards the end of the concert, he had no equal. I used to wonder if he was playing a tabla instead of the thavil—such were his melody-soaked strokes.”

Kaliyamurthy’s playing took a bigger leap when he joined as a collaborator with the legendary Mridangam player Karaikkudi Mani.Thavil maestro Thanjavur Govindarajan says, “His playing acquired depth and sensitivity after his association with Guru Karaikudi Mani. He carved out a style that was never heard before in thavil. It would not be an exaggeration to say that the generation of thavil players that came after Kaliyamurthy were totally enamored by this new style and incorporated it in their playing. He often played something that was so melodic for the ears but was difficult to comprehend for the brain. One required no effort to appreciate his music butonehad to be extremely sharp to understand and reproduce it.”

Ghatam maestro V.Suresh says, “His unique compositions had progressions within progression and overlapping yati (rhythmic cadences) arrangements. They are inspiring and lasting ones. He was a genial, soft-spoken gentleman all through my association for more than two decades. I have toured with him to Singapore, London and many parts of Europe in the band SrutiLaya headed by Mridangam phenomenon Guru Karaikkudi Mani along with a big contingent of Jazz musicians of the Australian Art Orchestra in 2002. The four of us (with Srirangam Kannan on the Morsing) gelled like a family and presented many grand percussion ensembles in many notable venues. I have also performed with Kaliyamurthy in many saxophone and nagaswaram concerts. I have been inspired by his compositions and have made several musical compositions in similar lines. His performances were packed with intellectual content and aesthetics, guiding along the audience on a rhythmic voyage.”

In his illustrious career he was bestowed with several accolades including the Kalaimamani from the Tamil Nadu Government (1981), AkilaUlaga Thavil Vadhya Janaranjaga Laya Chakravarthi award by RR Sabha, Trichy, (1999), Sangeet Natak Akademi award (2014) and SangitaChoodamani title given by Krishna Gana Sabha (2014). He has traveled widely and performed in many countries including Srilanka, Malaysia, Germany, England, Canada and Australia.

Hundreds of students from various parts of South India have learnt from Kaliyamurthy. Some of the notable students include Srinivasan, Durga Rao, Anjaneyalu and Bangalore Krishna. His son and disciple T. A. K.Shanmuganathan is carrying forward the family legacy today. However, it would be an injustice to say that only the students who had learnt directly from Kaliyamurthy are his disciples. He readily shared his knowledge with anyone who approached him. He encouraged artistes who were junior to him and when he performed with them, he would provide them with many aspects of learning that would last them for a lifetime.

He passed away on 19th February 2020, leaving behind a rich musical treasure to the generation of thavil artistes that followed him.

Read Full Post »

பரிவாதினியைத் தொடங்கி ஒன்பது ஆண்டுகள் நிறைவடைந்து பத்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

இந்த ஒன்பது ஆண்டுகளில் பரிவாதினியின் ஆகப் பெரிய நிறைவு என்பது – இசைத் துறைக்கு ஏதாவது நன்மை செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் பலர், அதை பரிவாதினியின் மூலமாக செய்தால் சரியானவருக்குப் போய்ச் சேரும் – என்கிற நம்பிக்கையில்தான்.

அந்த வகையில், ஒரு முக்கியமான தொடக்கத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

சில ,மாதங்களுக்கு முன் Natarajan Srinivasan என்னைத் தொடர்பு கொண்டார். தனது பெற்றோர் பத்மா/சீனிவாசன் பெயரில் வருடா வருடம் நாகஸ்வர கலைஞர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆசையைத் தெரிவித்தார். நாங்கள் சிலமுறை தொலைபேசி ஒரு முடிவுக்கு வந்தோம்.

நாகஸ்வரம்/தவில் துறையில் எத்தனையோ சாதனைகள் செய்த கலைஞர்கள் காலப்போக்கில் முதுமை காரணமாகவும், காலச்சூழல் காரணமாகவும் அதிகம் வெளியில் தெரியாமல் ஆகிவிடும் நிலை உருவாகிவிடுகிறது. சில கலைஞர்கள், முதுமை காரணமாக வாசிக்க முடியாத சூழலில், சற்றே சிக்கலான நிதி நிலைமையில் வாழ்க்கையை நடத்தும் நிலையையும் காணமுடிகிறது.

இவ்விரு விஷயங்களை, (1. துறையில் சாதனையாளர், 2. நிதி உதவி கிடைத்தால் வாழ்க்கைக்கு உதவியாக இருக்கும் என்ற நிலையில் இருப்பவர்) கருத்தில் கொண்டு வருடம் ஒருமுறை பரிவாதினி அடையாளம் காட்டும் கலைஞருக்கு பத்மா/சீனிவாசன் அறக்கட்டளை சார்பாக ரூபாய் ஒரு லட்சம் சன்மானத்தை நண்பர் நடராஜனின் குடும்பத்தினர் வழங்கவுள்ளனர்.

இந்த வருடத்துக்கான விருதை மூத்த தவில் கலைஞர் திரு.ஆரணி பாலு அவர்கள் பெறவுள்ளார்கள். (அவரைப் பற்றி தனிப்பதிவு எழுதுகிறேன்.) வருடாந்திர நவராத்திரி நாகஸ்வர கச்சேரி வைபவத்தில் இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெறும் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர் நடராஜன் குடும்பத்தினருக்கு என் தனிப்பட்ட முறையிலும், இசைத் துறை சார்பாகவும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

Read Full Post »

1990-களில் கர்நாடக இசையின் பால் ஈர்க்கப்பட்ட எனக்கு சங்கீத கலாநிதி ஏ.கே.சி. நடராஜனின் அறிமுகம் தொலைகாட்சியில் ஒலிபரப்பான நேர்காணல் மூலம் கிடைத்தது. அந்த நேர்காணலிலும் அதன் பின் பல இடங்களிலும் அவர்,

நான் ஆலத்தூர் வெங்கடேச ஐயரிடம் வாய்ப்பாட்டு கற்றேன்இலுப்பூர் பஞ்சாமியின் சகோதரர் நடேசபிள்ளையிடம் நாகஸ்வரம் பயின்றேன்வாய்ப்பாட்டிலும்நாகஸ்வரத்திலும் கச்சேரி செய்யும் நிலைக்கு வந்ததும்அப்போது இருந்த சூழலைப் பார்த்தேன்.

வாய்ப்பாட்டிலோஅரியக்குடிஜி.என்.பிமதுரை மணிஎம்.எஸ்எம்.எல்.விஎன்று ஒரு பெரிய பட்டாளமோ சங்கீத உலகை ஆண்டுகொண்டிருந்ததுநாகஸ்வரத்திலோ ராஜரத்தினம் பிள்ளைவீருசாமி பிள்ளைதிருவெண்காட்டார்திருவீழிமிழலை சகோதரர்கள் என்று அத்தனை ஜாம்பவான்கள்இவர்கள் எல்லாம் உச்சியில் இருக்கும் போது நான் புதிதாய் புறப்பட்டு வந்து வாய்ப்பாட்டிலோநாகஸ்வரத்திலோ எப்படி காலூன்ற முடியும்?

அதனால் கிளாரினெட்டை எடுத்துக் கொண்டுநான் கற்றதை அந்த வாத்யத்தில் கொண்டு வர சாதகம் செய்தேன்கிளாரினெட்டில் எனக்குப் போட்டியே இல்லைஅதனால் மளமளவென மேலே வந்துவிட்டேன்.”

என்று கூறியுள்ளார்.

இதை நான் முதன்முதலில் கேட்ட போது, அவர் என்னமோ குறுக்கு வழியில் மேலே வந்துவிட்டதாய் முதிர்ச்சியற்ற பதின்பருவத்தின் என் மனத்துக்குப்பட்டது. அவர் வாசிப்பின் விசேஷத்தை நான் உணர்ந்து கொள்ள வேண்டுமென்பதற்காகவே ஜெர்மனியில் இருந்து பீட்டர் ஷ்குல்ட்ஸ் என்பவரை நான் பயின்ற அமெரிக்க பல்கலைகழகத்துக்கு விதி அனுப்பியது.

நான் பொறியியலில் முதுகலை பயின்ற போது கேரளத்தைச் சேர்ந்த வாசுதேவன் என்பவர் பல்கலைகழகத்தில் முனைவர் பட்டம் முடித்துவிட்டுப் பணியாற்றி வந்தார். அவர் சங்கீத கலாநிதி என்.ரமணியின் சீடர். சங்கீத ஈடுபாட்டினால் என்னை அவ்வப்போது வீட்டுக்கு அழைத்து உணவளித்து சங்கீதத்தைப் பற்றி பேசுவார். அவருக்கு ஆழ்ந்த ஞானம் இருந்தது என்ற சொல்லமுடியாவிடினும் நிறைய ஆர்வம் இருந்தது. ஒருநாள் அவர் வீட்டுக்குச் சென்ற போது பீட்டரும் அங்கு இருந்தார். வாசுதேவன் வேலை பார்த்த பிரிவில் பீட்டர் ஆராய்ச்சி மாணவர். ஜெர்மனியிலிருந்து வந்திருந்த பீட்டர் வேதியியலில் ஆராய்ச்சிக்காக அமெரிக்கா வந்திருந்தார். முறைப்படி மேற்கத்திய செவ்வியலிசை கற்றவர் அவர்.

எங்கள் அரட்டை மேற்கத்திய வாத்தியங்களில் கர்நாடக இசையைப் பற்றி திரும்பியதும், என் சேகரத்தில் நிறைய மேண்டலின் பதிவுகளும், சாக்ஸ்ஃபோன் பதிவுகளும் இருப்பதைச் சொன்னேன். சற்றும் எதிர்பார்க்காதபடி, “கிளாரினெட்டில் கர்நாடக இசைப் பதிவுகள் இருக்கின்றனவா?”, என்று கேட்டார் பீட்டர். வாசுதேவனிடம் ஒரே ஒரு ஒலிநாடா இருந்தது. அதிலிருந்து நவரச கன்னடவில் ‘நினுவினா’ பாடலை ஒலிக்கவிட்டார். கர்நாடக சங்கீதத்த்தில் அதிகப் பரிச்சியம் இல்லாதவர்களைக் கூட அந்தப் பாடலின் துள்ளலான காலபிரமாணமும், அனுபல்லவியில் சுருள் சுருளாய் அலையடிக்கும் அடுக்குச் சங்கதிகளும் எளிதில் ஈர்த்துவிடும்.

நான் பீட்டரை பார்த்துக் கொண்டிருந்தேன். நான் நினைத்த சங்கதிகள் பீட்டரிடம் பெரிய சலனத்தை எற்படுத்தவில்லை. நான்காம் கால உருட்டுச் சங்கதிகள் முடிந்ததும் வந்த ஒரு சங்கதிக்கு பீட்டர் துள்ளிக் குதித்தார். வாசுதேவனை மீண்டும் ஒருமுறை அந்தச் சங்கதியை போடச் சொன்னார். அந்தச் சங்கதியில் ஒரு ஜாரு பிரயோகத்தை ஏகேசி வாசித்திருந்தார். (ஜாரு என்பது ஒரு ஸ்வரத்திலிருந்து அதற்கு தொலைவான ஸ்வரத்தை வழுக்கிக் கொண்டு இணைக்கும் கமகம் எனலாம்).

மூன்று நான்கு முறை நாங்கள் அந்தச் சங்கதியைக் கேட்டபின்னும் பீட்டருக்கு ஆச்சரியமடங்கவில்லை. அனுபல்லவியோடு அந்தப் பாடலை வாசுதேவன் நிறுத்தினார். பீட்டர் ஓரளவு நிதானத்துக்கு வந்ததும், “இது எப்படி கிளாரினெட்டில் சாத்தியம்?”, என்று கேட்டார். எங்களுக்கு அவர் என்ன கேட்கிறார் என்றே விளங்கவில்லை.

இது நடந்த இருமாதங்கள் கழித்து ஒரு மதிய வேளையில் பல்கலைகழக உணவு விடுதியில் பீட்டரை சந்தித்தேன். என்னைப் பார்த்ததும் உற்சாகமாய் ஓடி வந்து, “உங்க ஆள் பெரிய ஜீனியஸ்!”, என்றார்.

எங்கள் சந்திப்பு நடந்த சில வாரங்களில் ஏகேசி நடராஜன் காலிஃபோர்னியாவுக்கு வந்து வாசிக்கவுள்ளதை அறிந்து பீட்டர் (கிட்டத்தட்ட ஆயிரம் மைல்கள் விமானப் பயணம்) அங்கு சென்றுள்ளார். கச்சேரி முடிந்ததும் ஏகேசி-யுடன் பேசியிருக்கிறார்.

”ஜீனியஸுக்கு அறிவைவிட அறியாமைதான் உதவி செய்யும்”, என்று தோன்றுகிறது என்றார் பீட்டர்.

நான் புரியாமல் விழிப்பதைப் பார்த்து அவரே விளக்கினார்.

“எங்கள் ஊரில் நாங்கள் வாத்தியத் தேர்ச்சி பெறுவது போல கிளரினெட்டை ஏகேசி கற்றிருந்தாரெனில் உங்களுக்கு ஒரு ஜீனியஸ் கிடைத்திருக்கமாட்டார். வாத்தியத்தின் எல்லைகளில் அவரை ‘அறிவு’ நிறுத்தியிருக்கும். அவர் கற்ற வாய்ப்பாட்டும் நாகஸ்வரமும் அவருக்கு சங்கீதத்தைக் காட்டியிருக்கின்றன. எவையெல்லாம் வாத்தியத்தில் வராதோ அதையெல்லாம் வரவழைக்க வாத்தியத்தை என்ன செய்யலாம் என்பதை நோக்கி அறியாமைதான் செலுத்தமுடியும். கிளாரினெட்டில் தவிர்க்க முடியாத சில விசைகளைத் தவிர மற்றதை நீக்கிவிட்டு, நாகஸ்வரத்தைப் போலவே துளைகளில் விரலடியாகவும், ஊதுகின்ற உத்தியைக் கைவரப்பெற்றும் கர்நாடகசங்கீத நுட்பங்களை முழுமையாக அவரால் கொண்டு வர முடிந்திருக்கிறது”, என்று பீட்டர் சொன்னது பொறியிலடித்தது போல இருந்தது.

ஒரு பெரிய கலைஞர் தன்னடக்கமாய் நேர்காணலில்  சொன்ன வாக்கியத்தைத் தவறாகப் புரிந்து கொண்டு எவ்வளவு இழந்திருக்கிறேன் என்று எனக்குப் புரிய ஆரம்பித்தது. அதன்பின் கவனித்து கேட்டபோதுதான் வழமையான கிளாரினெட்டை எப்படி அமைப்பிலும், நாதத்திலும் கிட்டத்தட்ட நாகஸ்வரமாகவே ஏகேசி மாற்றியிருக்கிறார் என்று விளங்கியது.

கலை வரலாற்றில் திரும்பத் திரும்பக் கிடைக்கும் செய்தியொன்றுள்ளது. ஒவ்வொரு கலைஞனுக்கு முன்னாலும் இரு வழிகள் உண்டு. ஒன்று எளிதில் கடக்கக்கூடிய, வாழும் காலத்தில் ஓரளவுக்கு (அதிர்ஷ்டமிருந்தால் பெரிய அளவுக்கு) பெயரும் புகழும் அளிக்கக் கூடிய பாதை. இன்னொன்று சங்கீதத்தின் எல்லைகளை விஸ்தரிக்கக் கூடிய கடினமான, வாழும் காலத்தில் பல சமயம் அதிகம் கண்டுகொள்ளப்படாத பாதை.

வித்வான் ஏகேசி நடராஜன் இரண்டாம் பாதையைத் தேர்ந்து எடுத்தவர் என்பதை பீட்டர் கணப்பொழுதில் உணர்ந்துவிட்டார். இந்திய இசைச் சூழல் இன்னும் அதை உணரும் கணத்துக்காய் காத்துக் கொண்டிருக்கிறது.

நன்றி: இந்து தமிழ்

Read Full Post »

கொரோனா தொற்றின் இரண்டாவது அலை கோர தாண்டவம் ஆடத் தொடங்குவதற்கு முன் காருகுறிச்சியாரின் நூற்றாண்டைக் கொண்டாடுவதைப் பற்றி எனக்குப் பல கனவுகள் இருந்தன. அவற்றில் ஒன்று, இந்த வருடம் தென்னிந்தியாவில் பொருளாதார நிலையில்பின் தங்கிய நூறு மாணவர்களுக்கு காருகுறிச்சியாரின் நாகஸ்வரம் வழங்க வேண்டும் என்பது.

அதற்கான அறிவிப்பை நான் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு நிதியளிக்க விண்ணப்பித்தது உங்களுக்கு நினைவில் இருக்கலாம். கேட்ட சில வாரங்களில் நிறையவே நன்கொடை கிடைத்தது. கிட்டத்தட்ட 40 நாகஸ்வரங்கள் வாங்குவதற்கான நிதி திரள்வதற்கும் கரோனாவின் இரண்டாம் அலை உச்சம் பெருவதற்கும் சரியாக இருந்தது.

பல பேரின் வாழ்வாதாரமே பாதிக்கப்பட்ட போது காருகுற்ச்சியாரின் நூற்றாண்டை கொஞ்சம் மறந்துவிட்டு பெருந்தொற்றால் வாழ்வாதாரம் வாசிக்கப்பட்ட கலைஞர்களுக்கு நிதி திரட்டுவதில் அவனம் செலுத்த வேண்டியிருந்தது. பொதுச் சூழல், பணிச் சூழல், குடும்ப சூழல் அனைத்திலும் குழப்பம் நிலவிய நிலையில் காருகுறிச்சியாரின் நூற்றாண்டு திட்டங்கள் அனைத்தும் மறந்தே போயின.

சில வாரங்களுக்கு முன் சங்கீத வித்வத் சபையிலிருந்து காருகுற்ச்சியாரைப் பற்றி உரை ஒன்று நிகழ்த்த அழைப்பு வந்ததும்தான் பழைய நினைவுகள் மனத்தின் ஆழங்களிலிருந்து மீண்டு எழுந்தன. ஏற்கெனவே திரண்டிருந்த 40 நாயனங்களுக்கான நிதியும் நினைவுக்கு வந்தது. ஏப்ரல் மாதத்தில் நூற்றாண்டு முடிவதற்குள் நூறு நாயனங்களுக்கான நிதியை திரட்ட முடியாவிடினும், இது வரை வந்த பணத்திற்காவது நாகஸ்வரம் வாங்கியளிக்க வேண்டும் என்று தோன்றியது.

நண்பர் Swamimalai Saravanan நரசிங்கம்பேட்டையில் ஆசாரியுடன் பேசி முதல் கட்டமாய் இருபது நாகஸ்வரங்கள் செய்ய ஏற்பாடு செய்தார். அவற்றை டிசம்பரில் அளிக்கலாம் என்று திட்டமிட்டோம். நரசிங்கம்பேட்டை நாயங்கள் உலக்ப் பிரசித்தம் என்றாலும் அவற்றை நுணுக்கமாக ஒரு கலைஞர் பரிசோதித்துப் பார்த்து துல்லியத்தை உறுதி செய்த பின் மாணவர்களுக்குக் கொடுப்பதுதான் சரியாக இருக்கும் என்று சரவணன் கூறினார். கூறியதோடு நில்லாமல் நேற்று வித்வான் Prakash Ilayaraja -வுடன் நரசிங்கம்பேட்டை சென்று அத்தனை நாகஸ்வரங்களையும் சரிபார்த்திருக்கிறார்.

நேற்றிரவு படங்களும் சில விடியோ பதிவுகளும் அனுப்பியிருந்தார். பிரகாஷ் இளையராஜா நரசிங்கம்பேட்டையில் அமர்ந்தபடி வாசித்த மோகனத்தைக் கேட்ட போது என்னுள் அடக்கமுடியாமல் உணர்ச்சிப் பெருக்கு ஏற்பட்டது.

காருகுற்ச்சியாரின் பெயரில் அந்த நாயனம் இன்னமொரு நூற்றாண்டு ஒலிக்கும் என்று உள்ளுக்குள் ஒரு கூவல் எழுந்தது.

பி.கு: நாற்பதை நூறாக்க நீங்கள் உதவ நினைத்தால் பரிவாதினி வங்கிக் கணக்குக்கு உங்கள் நன்கொடையை அனுப்பலாம்.

Parivadini Charitable Trust,

Union Bank of India Account Number:

579902120000916 branch: Kolathur, Chennai,

IFSC Code: UBIN0557994

Read Full Post »

இந்தக் கரோனா பேரிடர் காலத்தில் நாம் அறியாத எத்தனையோ விஷயங்களை அறியும் வாய்ப்பு அமைந்துள்ளது.


அந்த வகையில் நான் அறிந்து கொண்டது பெண் நாகஸ்வர கலைஞர்களைப் பற்றி.


கடந்த சில வருடங்களாக நாகஸ்வர கலைஞர்களோடு தொடர்ந்து தொடர்பில் இருந்து வந்தாலும், பெண் நாகஸவர கலைஞர்கள் என்றால், என் மனத்துள் அந்த வரிசை மதுரை பொன்னுத்தாயி அம்மாளிடம் தொடங்கி சமீபத்தில் பத்ம விருது பெற்ற கலீஷாபி மெஹ்பூப் அவர்களுடன் முடிந்துவிடுகிறது என்பதைப் பற்றி நான் யோசித்ததே இல்லை.


பேரிடரின் இரண்டாம் அலையின் போது நண்பர் சரவணன், ‘பெண் கலைஞர்களுக்கு உதவ என்று பிரத்யேகமாய் முயற்சி எடுக்கலாமா?’,என்று கேட்டார். அந்த முயற்சியின் போதுதான் தென்னிந்தியாவில் இத்தனை பெண் கலைஞர்கள் நாகஸ்வரத்தை தொழிலாகக் கொண்டுள்ளார்கள் என்று அறிந்து கொண்டேன்.

ஒருவகையில் எனக்கு வெட்கமாகக்கூட இருந்தது.


சென்ற நவராத்ரியில் ஒன்பது நாகஸ்வர கச்சேரிகள் வலையேற்றியது போல இந்த முறை ஒன்பது பெண் கலைஞர்களை முதன்மைப்படுத்தி ‘நவசக்தி’ என்று ஒன்பது கச்சேரிகள் ஒருங்கிணைக்க வெண்டும் என்று அப்போதே முடிவு செய்து கொண்டேன்.


கலைஞர்கள் தேர்வும், கச்சேரிப் பதிவுகளுக்கான ஏற்பாடுகளும் ஆகிவிட்டன. பரிவாதினியின் முயற்சிகள் அனைத்தும் ரசிகர்கள் ஆதரவில் நடப்பவை என்று சொல்லித் தெரிய வேண்டாம்.
எப்போதும் போல் இப்போதும், இந்த முயற்சிக்கு உங்கள் ஆதரவைக் கோருகிறேன்.


வங்கிக் கணக்கு விவரங்கள் கீழே:
Parivadini Charitable Trust,

Union Bank of India

Account Number: 579902120000916

branch: Kolathur, Chennai,

IFSC Code: UBIN0557994

Read Full Post »

2011-ல் சங்கீத சீஸனுக்கு முன் எழுதியது. இன்றும் பெரிய மாற்றம் நிகழ்ந்துவிடவில்லை.

கர்நாடக சங்கீத உலகின் பிரபலங்களின் பெயரை எடுத்துப் பார்த்தால், அவற்றுக்கு முன்னால் ஏதேனும் ஓர் ஊர் பெயரை நிச்சயம் பார்க்க முடியும். இன்னும் சொல்லப் போனால், அரியக்குடி, ஆலத்தூர், செம்மங்குடி, செம்பை, லால்குடி, காருக்குறிச்சி என்று பல கிராமங்களின் பெயர் உலகெங்கும் பரவ இசைக் கலைஞர்களே காரணம். இன்றும் இளம் கலைஞர்களின் பெயரில் ஊர்கள் இடம் பெற்றுள்ளன. ஒரே வித்தியாசம் – “பெயரளவில்”தான் இடம் பெற்றுள்ளன. இவர்களுள் பெரும்பாலானவர்களின் விலாசங்கள் மயிலாப்பூரிலும், மந்தைவெளியிலும் மட்டுமே அடங்கிவிடக் கூடும். இந்த மாற்றம் இன்று நேற்று நிகழ்ந்ததன்று. கடந்த 70-80 ஆண்டுகளில் மெதுவாய் நிகழ்ந்த ஒன்று.

வரலாறைப் பார்த்தால், தென்னாட்டு மரபிசை கோவில் கலைகளுள் ஒன்றாகவே தழைத்தது. சோழர்களின் தலைநகரமான தஞ்சாவூர், அவர்களுக்குப் பின்னால் வந்த நாயக்கர், மராட்டியர் காலத்திலும் செழிப்பான நகரமாகவே விளங்கியது. உழவுத் தொழில் முதன்மைத் தொழிலாக விலங்கிய காலகட்டத்தில், காவிரி வளம் சேர்த்த இடங்கள் செழிப்புடன் விளங்கின. இசைக் கலைஞர்கள் பெரும்பாலும் ஒரு கோயிலுடன் தொடர்புடையவர்களாகவோ, அரசவைக் கலைஞர்களாகவோ விளங்கினர். ஆன்மீக விஷயங்களைத் தவிரவும், பொது மக்களின் வாழ்க்கையில் கோவில் இன்றியமையாத பங்கை வகித்தது. இதனால் கோயில் வளர்த்த கலைகளான இசையும் நாட்டியமும் பொது மக்கள் வாழ்வுடன் பின்னிப் பிணைந்தன. தொலைக்காட்சியும், இணையமும், செல்ஃபோன்களும் இல்லாத காலமென்பதால், பெரும்பாலான மக்களின் பொழுதுபோக்காகவும் கோவில் கலைகள் விளங்கின. இதனால், ஒரு சாதாரணனுக்குக் கூட மரபிசையும் ஆழ்ந்த தேர்ச்சியில்லை என்றாலும் குறைந்தபட்ச பரிச்சயமாவது இருந்தது.

ஆங்கிலேயர் வருகைக்குப் பின், கல்வி முறையிலும் ஆட்சி முரையிலும் பல மாற்றங்கள் நிகழ்ந்து, விவசாயம் தவிர மற்ற தொழில்களின் பாலும் மக்கள் ஈர்க்கப்பட்டனர். சென்னை பட்டிணமாகி கிராமங்களில் இருந்து பலரை ஈர்த்தது. குருகுல கல்விமுறை வழக்கொழியத் தொடங்கியது. ஒரு குறுநில மன்னன், ஒரு செல்வந்தர் என்று தனிப்பட்டவர்கள் அளித்த கலை ஆதரவுக்கு பதிலாக, சமூகத்தில் உயர்நிலையில் இருந்தோர் ஒன்று கூடி சபை அமைத்து கலை வளர்க்க வழி செய்தனர்.

1880-களில் தொண்டைமண்டல சபா சென்னை, மிண்ட் ஸ்ட்ரீடில் இயங்கி வந்தது. ராம நவமியையும், கோகுலாஷ்டமியையும் ஒட்டி கச்சேரிகள் நடந்தன.

முதலில் செல்வந்தர்கள் அளித்த ஆதரவைப் போலவே இந்தச் சபைகளும் இயங்கின என்றாலும், காலப்போக்கில் பொது மக்களிடையே கட்டணம் வசூலித்து கச்சேரிகள் நிகழ்த்தப்பட்டன. தஞ்சாவூர் ஜில்லாவில்லிருந்து வந்து இசைத்த கலைஞர்களுக்கு பெரும் வரவேற்பு கிடைத்ததைப் பார்த்து இன்னும் சில சபைகள் தோன்றின. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், மயிலாப்பூர் சங்கீத சபா, ஸ்ரீ பார்த்தசாரதி ஸ்வாமி சபா போன்ற சபைகள் தோன்றின. தனவந்தர்களின் நேரடியாகக் கலைஞர்களை ஆதரித்த நிலை மாறி, இது போன்ற சபைகளை ஆதரிக்கத் தொடங்கினர்.

1927-ல் காங்கிரஸ் ‘அகில இந்திய இசை மாநாடு’ ஒன்றை சென்னையில் நடத்தியது. அந்த மாநாட்டின் முடிவில் கர்நாடக இசையின் வளர்ச்சிக்காக ஓர் அமைப்பை உருவாக்குவது என்று முடிவெடுக்கப்பட்டு, 1928-ல் மெட்ராஸ் ம்யூசிக் அகாடமி தொடங்கப்பட்டது. இன்று பிரபலமாய் விளங்கும் டிசம்பர் இசை விழாவை முதன் முதலில் தொடங்கி வைத்ததும் அகாடமிதான்.

சபைகளும் கச்சேரி வாய்ப்புகளும் சென்னையில் பெருகப் பெருக இசைக் கலைஞர்களும் சென்னைக்குப் பெயர்வது சுதந்திரத்துக்கு முன்னிருந்தே தொடங்கிவிட்டது.

தஞ்சாவூர் ஜில்லா கலைஞர்களின் புலம் பெயர்தல் காலப்போக்கில் மற்ற மாநிலக் கலைஞர்களிடையேயும் வழக்கத்துக்கு வந்தது. துவாரம் வெங்கடசாமி நாயுடுவை சென்னைக்கு வரவழைக்க ரசிகர்கள் நிதி திரட்டி திருவல்லிக்கேணியில் ‘துவாரம் இல்லம்’ என்று ஒரு வீட்டையும் கட்டிக் கொடுத்தனர். இசையுலகின் சிகரங்களைத் தொட்டுள்ள பாலமுரளிகிருஷ்ணா, “நீங்கள் சென்னைக்கு வாருங்கள். உங்கள் திறமைக்கு ஏற்ற வாய்ப்புகள் அங்குதான் உள்ளன என்று பழனி சுப்ரமணிய பிள்ளை அறிவுரைத்தார். அதன் பெயரில் சென்னைக்குக் குடி பெயர்ந்தேன்.” என்று கூறியுள்ளார்.

குன்னக்குடியானாலும், லால்குடியானாலும் இன்று சென்னையில் வசித்தாலன்றி ஜீவனம் நடத்த முடியாது. இன்று சென்னையில் எழுபது சபைகளுக்கு மேல் இயங்கி டிசம்பரில் மட்டும் இரண்டாயிரம் கச்சேரிகளுக்கு மேல் நடத்தப்படுகின்றன.

கடந்த 10-15 ஆண்டுகளில் சங்கீதத் துறையில் முன்னணிக்கு வந்துள்ள கலைஞர்களை மட்டும் கணக்கில் கொண்டால், கிராமபுறங்களில் பிறந்து வளர்ந்த கலைஞர்கள் சிலராவது தேருவார்களா என்பதே சந்தேகம்தான். பெரும்பாலான கலைஞர்கள் சென்னை அல்லது குறைந்தபட்சம் திருச்சி, மதுரை போன்ற சிறு நகரங்களில் இருந்து வந்தவர்களாகவே இருக்கின்றனர்.

கோவில்கள் சார்ந்த சமூகம் என்ற நிலை மாறி கோவில்கள் ஆன்மிகத் தலங்களாகவும், சுற்றுலாத் தலங்களாகவும் ஆகிவிட்ட நிலையில், கிராமங்களில் கோவில் சார்ந்தே தழைத்த கலையான கர்நாடக இசை நீர்க்கத் தொடங்கியது. இன்று கிராமப்புறங்களில் உள்ள நாகஸ்வர கலைஞர்கள் ஒரு மகத்தான வரலாற்றின் எச்சங்களாகவே இருக்கின்றனர். சின்னச் சின்ன ஊர்களிலும் கூட அந்தந்த ஊர் கோவில்கள் ஆதரித்து வந்த நாகஸ்வர குழுவினரை இன்று நாராசமாய் ஒலிக்கும் தானியங்கி முழக்கு இயந்திரங்கள் வெளியேற்றிவிட்டன.

கோவில்களில் அடிக்கும் இந்த எலக்டிரானிக் மணிகள் ஆண்டவனை ஆராதிக்கும் ஆன்மிக மணிகளல்ல. மரபிசை தந்த மாணிக்கங்களை குப்பையில் கிடத்திவிடாமல் இருக்க வேண்டி சங்கீதத் துறைக்கு ஒலிக்கும் எச்சரிக்கை மணிகள் அவை. எவ்வளவோ சிறந்த நாகஸ்வர கலைஞர்கள் இருப்பினும், மிகச் சில கலைஞர்களுக்கு மட்டுமே சென்னைக் கச்சேரிகளில் வாசிக்கும் (சொர்ப்ப) வாய்ப்புகள் கிட்டுகின்றன. இவர்கள் நிலை இப்படியே தொடர்ந்தால், அடுத்த தலைமுறையினர் கிராமப்புறங்களில் திருமணம் செய்து கொண்டால் ‘கெட்டி மேளம்’ கொட்டக் கூட சி.டி-யை இயக்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிடும்.

”இனி ஒரு மாகலைஞன் செம்மங்குடியில் இருந்தோ காருக்குறிச்சியில் இருந்தோ வர சாத்தியமே இல்லையா?” என்ற கேள்வி நம் முன் பிரம்மாண்டமாய் நிற்கிறது.

இந்தக் கேள்விக்கான பதிலும், “இனி ஒரு பெரிய விஞ்ஞானி தமிழகத்தின் கிராமப்புறங்களில் இருந்து வருவதற்கு சாத்தியமே இல்லையா?”, என்ற கேள்விக்கான பதிலும் ஒன்றுதான்.

ஐ.ஐ.டி-களும், என்.ஐ.டி-களும் கிராமங்களில் இல்லாத போதும், ஐ.ஐ.டி-யில் சேர வேண்டிய அடிப்படை அறிவையாவது பெறுவதற்கான வசதிகள் பல கிராமங்களில் உள்ளன. சங்கீதத் துறையிலும் இது சாத்தியமானால், கிராமப்புறங்களில் இருந்து இசைக் கலைஞர்கள் வெளி வர முடியும்.

குக்கிராமத்திலும் திரைப்படங்கள் பார்க்கவும், திரையிசையைக் கேட்கவும் வாய்ப்புகள் இருப்பது போல, மரபிசையைக் கேட்கும் வாய்ப்புகள் ஏற்படுத்தினாலன்றி கிராமங்களில் கர்நாடக இசை தழைக்காது. “கிராமங்களில் கச்சேரி வைத்தால் கூட்டம் வருமா?” என்று கேள்வி எழலாம். ஒரு மாத காலத்தில் இரண்டாயிரம் கச்சேரிகளை ஐந்து கிலோ மீட்டர் பரப்பளவுக்குள் நடத்தும் போது வரும் கூட்டத்தில் பாதியாவது இரண்டு மாதத்துக்கு ஒருமுறை நடக்கும் ஒரே கச்சேரிக்கு வராமலா போய்விடும்?

சில பத்தாண்டுகள் முன் வரை, இந்திய இசை என்றால் என்னவென்றே அறிந்திருக்காத க்ளீவ்லேண்டுக்குச் சென்று இன்று கச்சேரி செய்யாத பெரிய வித்வானே இல்லை. “அமெரிக்கா பணக்கார நாடு. அவர்கள் கொடுக்கும் சன்மானம் கலைஞர்களை இழுப்பதில் என்ன ஆச்சர்யம்”, என்பதும் உண்மைதான்.

அந்தக் கால இசைக் கலைஞர்களுள் பெரும்பாலோர் முறையான பள்ளிப் படிப்பை பெறாதவர்கள். குருகுலவாசம் மூலம் கலையைப் பயின்று, கச்சேரி வாய்புகள் அமைந்தாலும் அமையாவிட்டாலும் கலைஞர்களாகவே கடைசிவரை வாழ்ந்தவர்கள். இன்று சங்கீதத் துறைக்கு வரும் இளைஞர்கள் வெறொரு துறையிலும் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்கின்றனர். தம்மை சங்கீதத்தில் முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டாலும் பொருளாதாரத்துக்கு எந்த பங்கமும் வராது என்று உணர்ந்த பின்னரே துறையில் முழு நேரக் கலைஞராக மாறுகின்றனர். இதில் தவறொன்றுமில்லை.

நல்ல சன்மானம்தான் கலைஞர்களை ஈர்க்கக் கூடுமெனில், அதைச் செய்யும் வழிகளைக் கண்டு அடைய வெண்டும். மந்தைவெளியில் பத்தடிக்குப் பத்தடி மொட்டைமாடியில் ஷாமியானா போட்டு கச்சேரி வைத்தால் கூட ஸ்பான்ஸர் செய்ய ஆட்கள் உண்டு. இந்த ஸ்பான்சர்களுக்காகவே டிசம்பரில் மட்டும் முளைக்கும் சபாகள் இருக்கும் போது, நல்ல சன்மானம் கொடுத்து கிராமங்களில் கச்சேரிகள் நடத்துவதா கடினம்? மனமிருந்தால் மார்க்கமுண்டு.

மனமிருக்கிறதா நம்மிடம்?

Read Full Post »

வருடாந்திர கச்சேரிகளை இந்த வருடம், கரோனா சமயத்தில், வைக்க வேண்டுமா/வேண்டாமா என்று பலமுறை ஊசலாடிய பின் – அற்புதக் கலைஞர்கள் இன்னொரு முறை மக்களை சென்றடைய ஒரு வாய்ப்பாகவாவது செய்ய வேண்டும் என்று தோன்றியது.

இருந்தும் கரோனா காலத்தில் எந்த அரங்கில் வைப்பது? ரசிகர்களை அழைப்பது சரியா? கலைஞர்களை பயணிக்க வைப்பது சரியா என்றெல்லாம் குழப்பம் நிலவியது.

நண்பர் சரவணன் ஒரு வழி சொன்னார். கலைஞர்கள் – அவரவர் சௌகரியத்துக்கு கச்சேரியைப் பதிவு செய்து அனுப்பட்டும். யூடியூபில் நாளுக்கு ஒன்றாய் போடலாம் என்றார்.ஒன்பது நாட்கள் – அரிய கலைஞர்களின் இசை வர்ஷம். வழக்கமாய் நடப்பதைவிட இந்த வருடம் நன்றாகவே அமைந்தது என்று தோன்றியது.

நாகஸ்வரம் அழிந்துவிட்டது. அது வருங்காலத்தில் வழக்கொழிந்தே போய்விடும் என்று பிலாக்காணம் படிப்பவர்கள் இந்தக் கச்சேரிகளைக் கேட்டு மனத்தை மாற்றிக் கொள்ளலாம்.ஒன்பது கச்சேரிகளையும் கேட்க:

Read Full Post »

நேற்று இந்தப் பதிவை எழுதியிருந்தேன்.

அந்தப் பதிவு வானொலி நிலையத்தின் துணை இயக்குநர் திரு.ரகு அவர்களின் பார்வைக்குக் கொண்டு சொல்லப்பட்டுள்ளது. யாரோ உளறியது என்று ஒதுக்கித் தள்ளாமல் அவர் விசாரித்துப் பார்த்துள்ளார்.

முதல் இரண்டு பாடல்கள் ஒரு பதிவிலிருந்தும், மூன்றாவதாக வந்த ராகம் பல்லவி வேறொரு பதிவிலிருந்தும், கடைசியாக வெளியான ரஞ்சனி ராகப்பாடல் வெறொரு பதிவிலிருந்தும் ஒலிபரப்பப்பட்டுள்ளன.

ஒலிபரப்பப்பட்ட அத்தனை பாடல்களும் நாமகிரிப்பேட்டை திரு. கிருஷ்ணன் வாசித்தவைதான்.

கீழுள்ள பதிவைக் கேட்டுப் பாருங்கள்.

வழக்கமான நாகஸ்வர ஒலியில் இல்லாமல் கேட்கிறதா? கூடவே வயல்னும் மிருதங்கமும் சேர்ந்துகொள்ள, பயணத்துக்கு நடுவில் கேட்ட நான் இதை சாக்ஸஃபோன் என்று நினைத்துக் கொண்டேன். தவறு என்னுடையதுதான்.

ஒலிபரப்பிய ஷன்முகப்ரியா ராகம்/பல்லவியில், ராகம் முடிந்ததும் தனி ஆவர்த்தனம் வேறு வந்ததால் நிலையத்தில் நிகழ்ந்த குழப்பம் என்று நினைத்துவிட்டேன்.

அவசரத்தில் விளைந்த சறுக்கல். எனக்கு ஒரு பாடமிது.

என் முந்தைய பதிவுக்கு வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிரேன்.

என் பதிவை ஒதுக்காமல் விசாரித்ததிலிருந்தே வானொலி நிலையத்தினரின் சிரத்தை தெரிகிறது. அப்படிப்பட்டவர்களுக்கு என் பதிவு நிச்சயம் வருத்தமளித்திருக்கும். அதற்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.

 

 

Read Full Post »

இன்று உலக ரேடியோ தினமாம்.

என் போதாத வேளை இன்று காலையில் ரேடியோவில் நாமகிரிப்பேட்டையாரின் கச்சேரி என்று நண்பர் Alex Pandian டிவிட்டரில் கூறினார்.

கேட்போமே என்று போட்டால் ஆனந்த பைரவி முடிந்து கொண்டிருந்தது. என் காதுகளுக்கு வயலின் கேட்டது. ராஜரத்தினம் பிள்ளை வாய்ப்பாட்டு பாடியது போல, நாமகிரிப்பேட்டையார் வயலின் வாசித்திருப்பரோ என்று நினைக்கையில், அடுத்த பாடல் கல்யாண வசந்தம் என்ற அறிவிப்பு வந்தது.

அறிவிப்பு முடிந்ததும் சாக்ஸஃபோன் ஒலித்தது. நம் நண்பர் நாளைய கச்சேரி பற்றிய ஒலிபரப்பைத் தவறாகக் கேட்டிருப்பார் என்று எண்ணினேன். பாடல் முடிந்ததும், “நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பது நாமகிரிப்பேட்டை கிருஷ்ணனின் நாகஸ்வர நிகழ்ச்சி” என்று கன்னடத்தில் பெரிய குண்டாய் போட்டார் நிலைய அறிவிப்பாளர்.

Dad's Radio

அடுத்து வருவது ஷண்முகப்ரியா ராகம் தானம் பல்லவி என்றவுடன் அனேகமாய் பாலமுரளிகிருஷ்ணா பாடுவார் என்று நினைத்தேன்.

நல்ல காலம், நாமகிரிப்பேட்டையாரின் நாதக் குழல் ஒலித்தது. ஆலாபனையில் இரண்டு சுற்று முடிந்ததும் தவில் ஒலிக்க ஆரம்பித்தது. ராகத்துக்கு இடையில் ஒலிக்கும் தீர்மானம் என்று நினைத்தால், இரண்டு தவில்களும் மாறி மாறி ஆதி தாளத்தில் தனி வாசிக்கத் துவங்கி இருந்தனர். கண்ட நடையை வெளுத்து வாங்கிய பின், நாகஸ்வரத்தில் பல்லவி ஒலிக்க ஆரம்பித்தது.

கச்சேரி மேடைக்கு இதெல்லாம் புதுமையில்லையென்றாலும் ரேடியோ ஒலிபரப்புக்கு இந்தப் பின்நவீனத்துவமெல்லாம் எப்போது புகுந்தன?

அடுத்து ஒலித்த பாடல் ரஞ்சனி ராகத்தில் அமைந்த ஒன்று. முற்றிலும் வேறு ஸ்ருதியில், வாணி கேஸட் வெளியிட்டு வளையப்பட்டியாருடன் கிருஷ்ணன் வாசித்து வெளியிட்டுள்ள இசைத்தகட்டிலிருந்து ஒரு பாடல் ஒலிபரப்பானது.

ஒருமணி நேர நிகழ்ச்சிக்குள் இத்தனை குழப்பமா?

ஆசிரியர் தினத்தன்று பள்ளியில் ஆசிரியர்கள் பாடம் எடுக்காமல் சீனியர் மாணவர்களை பாடல் எடுக்க வைப்பது போல, ரேடியோ தினத்தன்று ரேடியோ நிலையத்தில் வேலைபார்ப்பவர்களுக்கு விடுப்பு கொடுத்துவிட்டு, பக்கத்து ஓட்டலில் அவியல் செய்யும் கேரள சமையற்காரருக்கு ஒலிபரப்பும் வேலையைக் கொடுத்திருப்பார்கள் போலும்.

வாழ்க ரேடியோ! வளர்க அவியல்.

Read Full Post »

பள்ளி மாணவர்களுக்காக எழுதிய கட்டுரை.

நீங்கள் பங்கெடுத்துக் கொண்ட திருமணம் முதலான குடும்ப விழாகளை எண்ணிப் பாருங்கள். அந்த நிகழ்வின் மகிழ்ச்சியின் சாரலில் இசையும் இரண்டரக் கலந்திஒருக்கும். அந்த இசை நாகஸ்வரம் எழுப்பிய மங்கல இசையாக இருக்கும். இனிமையான நாதத்தை வழங்கக்கூடிய இந்தக் கருவியை இன்று பெரும்பாலும் ‘நாதஸ்வரம்’ என்று அழைத்தாலும், அது சமீபகாலத் திரிபுதான்.

‘நாகஸ்வரம்’ என்ற பெயர் ‘நாகச் சின்னம்’ என்கிற வேரில் இருந்து உருவான ஒன்றும். கோயில் வழிபாட்டில், இறைவன் உலாவைப் பறைசாற்றும் கருவிகளை சின்னங்கள் என்று குறிப்பதுண்டு. கொம்பு, எக்காளம், சங்கு, முரசு போன்ற சின்னங்களை பழங்கால சிற்பங்களிலும், கல்வெட்டுகளிலும் காண முடியும். காலப்போக்கில் உருவான நாகம் போன்ற நீண்ட சின்னமே நாகஸ்வரம்.

’நாகஸ்வரம்’ என்கிற சொல் பழம் இலக்கியங்களிலும், கல்வெட்டுகளிலும் நமக்குக் கிடைப்பதில்லை. அறிஞர்களில் ஒருசாரர் சிலப்பதிகாரம் முதலான இலக்கியங்கள் குறிக்கும் பெருவங்கியம் நாகஸ்வரம்தான் என்கின்றனர். மற்றவர்களோ, பெருவங்கியமும் புல்லாங்குழல் போன்ற கருவிதான் என்கின்றனர். 17-ம் நூற்றாண்டில் இருந்து நாகஸ்வரம் என்கிற பெயர் நமக்குக் காணக் கிடைக்கின்றது.

மரத்தினால் செய்யப்படும் இந்தக் கருவியில் மூன்று பகுதிகள் உள்ளன. ஸ்வரங்கள் வாசிக்க வேண்டிய துளைகளுடன் கூடிய உடற்பகுதியை உலவு என்றழைப்பர். இது ஆச்சா மரத்தினால் ஆனது. நல்ல நாகஸ்வரத்துக்கு பழமையான மரமே தேவைப்படும். இதனால். மரத்திலிருந்து வெட்டி எடுப்பதைவிட, பழைய வீடுகளின் கதவுகள், தூண்கள் என்று 75 வருடத்துக்கு மேலான மரங்களைக் கொண்டே நாகஸ்வரம் செய்வது வழக்கம். உலவின் ஒரு முனையில் கூம்பு வடிவிலான அணைசு இடம்பெரும். மற்றொரு முனையில் கெண்டையின் துணை கொண்டு ஊதுவதற்கான சீவாளி இணைக்கப்படும். சீவாளி காவிரி ஆற்றின் கரைகளில் விளையும் கொறுக்கைத் தட்டை என்கிற நாணலில் இருந்து செய்யப்படுகிறது.

கோயிலை ஒட்டி வளர்ந்த கலையான நாகஸ்வரத்தில், வெவ்வேறு தருணங்களில் வாசிப்பதற்கென்று பல உருப்படிகள் உள்ளன. அதில் முக்கியமானவை மல்லாரிகள்.

இறைவனின் திருவுருவங்களை சுமந்து சென்றவர்களுக்கு மல்லர்கள் என்று பெயருண்டு. உற்சவங்களின் போது, மல்லர்களின் அரவமாக ஒலித்ததால் மல்லாரி என்று பெயர் ஏற்பட்டது என்பர். வார்த்தைகள் இல்லாத இசை வடிவமான இதை நாகஸ்வர வித்வான்களும் தவில் வித்வான்களும் சேர்ந்து அமைத்துக் கொண்டனர். மல்லாரிகளில் பல வகையுண்டு. உதாரணமாக இறைவனுக்கு திருவமுது படைக்க மடைப்பள்ளியில் இருந்து உணவு கொண்டு வரும்போது வாசிக்கப்படுவது ‘தளிகை மல்லாரி’ ஆகும். தேர் திருவிழாவின் போது வாசிக்கப்படுவது தேர் மல்லாரி.

இந்த இசை வடிவம் ‘கம்பீர நாட்டை’ ராகத்தில்தான் அமைந்திருக்கும். கோயில் விழாக்களிலும், திருமணம் போன்ற விழாகளிலும் நாள் முழுவதும் நாகஸ்வர கலைஞர் இசைப்பதைக் கேட்க முடியும். நீண்ட காலம் வாசிக்கும் போதும் தொய்வில்லாமல் இருக்க இந்தக் கலைஞர்கள் தங்கள் கற்பனையை உபயோகித்தனர்.

சாஸ்திரிய சங்கீதத்தின் எல்லைகள் விஸ்தரித்ததில் இவர்களின் பங்களிப்பு முக்கியமானது. இன்று கர்நாடக இசையின் ஜாம்பவான்களென்று ஒப்புக்கொள்ளப்படும் முன்னோடி வாய்ப்பாட்டுக் கலைஞர்கள் அனைவருக்கும் தூண்டுகோலாக விளங்கியது அவர்கள் கேட்டு வளர்ந்த நாகஸ்வர இசைதான்.

 

Read Full Post »

Older Posts »