Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Posts Tagged ‘Narasingampettai’

கொரோனா தொற்றின் இரண்டாவது அலை கோர தாண்டவம் ஆடத் தொடங்குவதற்கு முன் காருகுறிச்சியாரின் நூற்றாண்டைக் கொண்டாடுவதைப் பற்றி எனக்குப் பல கனவுகள் இருந்தன. அவற்றில் ஒன்று, இந்த வருடம் தென்னிந்தியாவில் பொருளாதார நிலையில்பின் தங்கிய நூறு மாணவர்களுக்கு காருகுறிச்சியாரின் நாகஸ்வரம் வழங்க வேண்டும் என்பது.

அதற்கான அறிவிப்பை நான் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு நிதியளிக்க விண்ணப்பித்தது உங்களுக்கு நினைவில் இருக்கலாம். கேட்ட சில வாரங்களில் நிறையவே நன்கொடை கிடைத்தது. கிட்டத்தட்ட 40 நாகஸ்வரங்கள் வாங்குவதற்கான நிதி திரள்வதற்கும் கரோனாவின் இரண்டாம் அலை உச்சம் பெருவதற்கும் சரியாக இருந்தது.

பல பேரின் வாழ்வாதாரமே பாதிக்கப்பட்ட போது காருகுற்ச்சியாரின் நூற்றாண்டை கொஞ்சம் மறந்துவிட்டு பெருந்தொற்றால் வாழ்வாதாரம் வாசிக்கப்பட்ட கலைஞர்களுக்கு நிதி திரட்டுவதில் அவனம் செலுத்த வேண்டியிருந்தது. பொதுச் சூழல், பணிச் சூழல், குடும்ப சூழல் அனைத்திலும் குழப்பம் நிலவிய நிலையில் காருகுறிச்சியாரின் நூற்றாண்டு திட்டங்கள் அனைத்தும் மறந்தே போயின.

சில வாரங்களுக்கு முன் சங்கீத வித்வத் சபையிலிருந்து காருகுற்ச்சியாரைப் பற்றி உரை ஒன்று நிகழ்த்த அழைப்பு வந்ததும்தான் பழைய நினைவுகள் மனத்தின் ஆழங்களிலிருந்து மீண்டு எழுந்தன. ஏற்கெனவே திரண்டிருந்த 40 நாயனங்களுக்கான நிதியும் நினைவுக்கு வந்தது. ஏப்ரல் மாதத்தில் நூற்றாண்டு முடிவதற்குள் நூறு நாயனங்களுக்கான நிதியை திரட்ட முடியாவிடினும், இது வரை வந்த பணத்திற்காவது நாகஸ்வரம் வாங்கியளிக்க வேண்டும் என்று தோன்றியது.

நண்பர் Swamimalai Saravanan நரசிங்கம்பேட்டையில் ஆசாரியுடன் பேசி முதல் கட்டமாய் இருபது நாகஸ்வரங்கள் செய்ய ஏற்பாடு செய்தார். அவற்றை டிசம்பரில் அளிக்கலாம் என்று திட்டமிட்டோம். நரசிங்கம்பேட்டை நாயங்கள் உலக்ப் பிரசித்தம் என்றாலும் அவற்றை நுணுக்கமாக ஒரு கலைஞர் பரிசோதித்துப் பார்த்து துல்லியத்தை உறுதி செய்த பின் மாணவர்களுக்குக் கொடுப்பதுதான் சரியாக இருக்கும் என்று சரவணன் கூறினார். கூறியதோடு நில்லாமல் நேற்று வித்வான் Prakash Ilayaraja -வுடன் நரசிங்கம்பேட்டை சென்று அத்தனை நாகஸ்வரங்களையும் சரிபார்த்திருக்கிறார்.

நேற்றிரவு படங்களும் சில விடியோ பதிவுகளும் அனுப்பியிருந்தார். பிரகாஷ் இளையராஜா நரசிங்கம்பேட்டையில் அமர்ந்தபடி வாசித்த மோகனத்தைக் கேட்ட போது என்னுள் அடக்கமுடியாமல் உணர்ச்சிப் பெருக்கு ஏற்பட்டது.

காருகுற்ச்சியாரின் பெயரில் அந்த நாயனம் இன்னமொரு நூற்றாண்டு ஒலிக்கும் என்று உள்ளுக்குள் ஒரு கூவல் எழுந்தது.

பி.கு: நாற்பதை நூறாக்க நீங்கள் உதவ நினைத்தால் பரிவாதினி வங்கிக் கணக்குக்கு உங்கள் நன்கொடையை அனுப்பலாம்.

Parivadini Charitable Trust,

Union Bank of India Account Number:

579902120000916 branch: Kolathur, Chennai,

IFSC Code: UBIN0557994

Read Full Post »

நாகஸ்வரம் என்றதும் மனத்தில் தோன்றும் பெயர் மேதை ராஜரத்தினம் பிள்ளையினுடையதுதான். அவரின் நீங்காப் புகழுக்கு அவருடைய அதீத கற்பனையும், அதை வெளிக்காட்டக் கூடிய அற்புதத் திறனும் காரணங்கள் என்றாலும் இன்னொரு முக்கிய காரணமும் உண்டு.

அது அவர் வாசித்த வாத்யம். ராஜரத்தினம் பிள்ளை வாசிக்கத் தொடங்கிய காலத்தில் அளவில் சிறிய, ஐந்து கட்டை ஸ்ருதியில் ஒலித்த திமிரி நாயனம் என்கிற வகை நாகஸ்வரமே உபயோகத்திலிருந்தது. திமிரி நாயனத்தில் அனைத்து ஸ்வரங்களையும் துல்லியமாக வெளிப்படுத்துவதில் சிக்கல்கள் இருந்தன. குறிப்பாக சுத்த மத்தியம ஸ்வரத்தை வாசிக்க கலைஞர்கள் மிகவும் சிரமப்பட்டனர்.

96b98603-325f-4b0b-9c02-5f0a45308547

1945-ல் கும்பகோணத்துக்கு அருகில் உள்ள நரசிங்கம்பேட்டையில் இருந்த ரங்கநாத ஆசாரி என்பவர். இரண்டு கட்டை ஸ்ருதியில் வாசிக்கக் கூடிய, அளவில் சற்று பெரிய நாகஸரத்தை வடிவமைத்தார். அடுத்த ஊரான திருவாவடுதுறையில் இருந்த ராஜரத்தினம் பிள்ளையைச் சந்தித்து தன் கண்டுபிடிப்பைக் காட்டினார். வாசித்துப் பார்த்த ராஜரத்தினம் அனைத்து ஸ்வரங்களும் துல்லியமாய் சேருவதைக் கண்டு பெருமகிழ்ச்சியடைந்தார்.. சுத்த மத்யமத்தை இடைஞ்சலின்றி வாசிக்க முடிந்ததால் அதுவரை கடக்க முடியாத எல்லைகளை எல்லாம் அவரது வாசிப்பு கடக்கத் தொடங்கியது. தன்னுடனே இருந்து தனக்கு மட்டுமே இந்த வாத்தியத்தை அளிக்குமாறு ரங்கநாத ஆசாரியைக் கேட்டுக் கொண்டார் ராஜரத்தினம்.

தன் வாழ்வின் கடைசியில், ஒரு கடிதம் ஒன்றை ராஜரத்தினம் எழுதியுள்ளார். அதில் தமிழக அரசும், மற்ற நாகஸ்வர கலைஞர்களும் ரங்கநாத ஆசாரிக்கு ஆதரவு வழங்க வேண்டுமாய் கேட்டுக் கொண்டுள்ளார். ராஜரத்தினம் பிள்ளைக்குப் பின் அந்த வாத்யத்தை மேதை காருக்குறிச்சி அருணாசலத்துக்கு அளித்தார் ரங்கனாத ஆசாரி. ‘கொஞ்சும் சலங்கை’ திரைப்படத்தில் ‘சிங்கார வேலனே தேவா’ பாடலில் காருக்கிறிச்சி வாசித்ததும் அந்தப் பாடல் பட்டிதொட்டியெல்லாம் பிரபலமானது. அப்போது அந்தப் பாடலின் வெற்றிக்கு காரணம் தன் வாசிப்பு மட்டும் காரணமல்ல, ரங்கநாத ஆசாரியின் வாத்தியமும் காரணம் என்று உலகுக்கு தெரியப்படுத்தினார் அருணாசலம். அதோடு தன் செலவில் ஒரு வைர மோதிரம் ஒன்றையும் ரங்கநாத ஆசாரிக்கு அணிவித்து மகிழ்ந்தார்.

81c12041-5ea2-4065-a20d-a6b276602297

அதன் பின்னரே, அனைத்து கலைஞர்களும் ரங்கநாத ஆசாரியின் கண்டுபிடிப்பை உபயோகப்படுத்தத் தொடங்கினர். அவர் கண்டுபிடித்த வகையிலேயே இன்றைய நாகஸ்வரங்கள் செய்யப்படுகின்றன. ரங்கநாத ஆசாரியின் பிள்ளைகள் இன்றளவும் நரசிங்கம்பேட்டையில் நாகஸ்வரம் செய்து வருகின்றனர்.

ஒரு ஆளுமையின் நூற்றாண்டு, அவரின் பங்களிப்பைத் திரும்பிப் பார்க்க ஓர் அரிய வாய்ப்பு. ரஙநாத ஆசாரியின் நூற்றாண்டான இந்த வருடத்தில் அவரின் பங்களிப்பின் மேல்போதிய வெளிச்சம் விழ இசைத்துறை கடமைப்பட்டுள்ளது.

நன்றி: தினமலர் பட்டம்.

Read Full Post »