வருடாந்திர கச்சேரிகளை இந்த வருடம், கரோனா சமயத்தில், வைக்க வேண்டுமா/வேண்டாமா என்று பலமுறை ஊசலாடிய பின் – அற்புதக் கலைஞர்கள் இன்னொரு முறை மக்களை சென்றடைய ஒரு வாய்ப்பாகவாவது செய்ய வேண்டும் என்று தோன்றியது.
இருந்தும் கரோனா காலத்தில் எந்த அரங்கில் வைப்பது? ரசிகர்களை அழைப்பது சரியா? கலைஞர்களை பயணிக்க வைப்பது சரியா என்றெல்லாம் குழப்பம் நிலவியது.
நண்பர் சரவணன் ஒரு வழி சொன்னார். கலைஞர்கள் – அவரவர் சௌகரியத்துக்கு கச்சேரியைப் பதிவு செய்து அனுப்பட்டும். யூடியூபில் நாளுக்கு ஒன்றாய் போடலாம் என்றார்.ஒன்பது நாட்கள் – அரிய கலைஞர்களின் இசை வர்ஷம். வழக்கமாய் நடப்பதைவிட இந்த வருடம் நன்றாகவே அமைந்தது என்று தோன்றியது.
நாகஸ்வரம் அழிந்துவிட்டது. அது வருங்காலத்தில் வழக்கொழிந்தே போய்விடும் என்று பிலாக்காணம் படிப்பவர்கள் இந்தக் கச்சேரிகளைக் கேட்டு மனத்தை மாற்றிக் கொள்ளலாம்.ஒன்பது கச்சேரிகளையும் கேட்க: