Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for பிப்ரவரி, 2018

காதல் என்றால் என்ன என்ற கேள்விக்கான பதிலை சென்ற சில வாரங்களில் பலர் எழுத பார்க்க முடிந்தது.

இந்தக் கேள்வியை நான் எனக்குள் கேட்டுக் கொண்ட போதெல்லாம் ஒரு பாடல் மனத்தில் ஒலித்துக் கொண்டே இருந்தது.

T N Seshagopalan

CHENNAI, TAMIL NADU, 08/09/2014: Carnatic singer Madurai T.N. Seshagopalan during an interaction in Chennai on september 08, 2014. Photo : K.V. Srinivasan

“சுந்தரி என் சொப்பனத்தில் வந்ததார்…”

அதுவும் சேஷகோபாலன் குரலில்.

போன வாரத் தொடக்கத்திலிருந்து கேட்டே ஆகவேண்டும் என்று உள்ளுக்குள் பரபரத்தது. நேரில் பலமுறை அவர் பாடிக் கேட்டிருந்தாலும் – கைவசம் ஒலிப்பதிவில்லை. இணையத்திலும் என் மேம்போக்கான தேடலில் அகப்படவில்லை.

ஒரு கட்டத்தில் பொறுமையிழந்து செஷகோபலன் அவர்களின் மகன் கிருஷ்ணாவுக்கு செய்தி அனுப்பினேன்.

“குடிகாரனுக்கு கைநடுங்கறா மாதிரி துடிப்பா இருக்கு. சீக்கிரம் அனுப்புங்க”, என்று கெஞ்சினேன்.

இன்று காலை அந்த அற்புதத்தை எனக்கு அனுப்பிவைத்தார்.

“சுந்தரி என் சொப்பனத்தில் வந்ததார் சொல்வாய்”

அந்த கமாஸ்!

ஐயோ!

சொல்லி மாளுமா அந்த சௌந்தர்யத்தை?

சுந்தரிக்கும் சொப்பனத்திக்கும் இடைப்பட்ட அந்த “என்”னில் குரலைக் குறுக்கி மெல்லினமாக்கி சொப்பனத்தை கொஞ்சம் கொஞ்சமாய் வளர விடும் அந்த சாமர்த்தியத்தை!

சங்கதிக்கு சங்கதி விரிந்து பரவும் அந்த சொப்பனம்….

அதுதான். அதேதான்!

நிச்சயமாய் சொல்வேன் – சேஷகோபாலன் குரலில் ஒலிக்கும் சுந்தரியில் வரும் “சொப்பனம்”தான் காதல்.

Read Full Post »

ஆறாம் திருநாளுக்குரிய ராகம் ஷண்முகப்ரியா.

அந்த ராகத்தில் அமைந்த ஆலாபனையை இந்தக் காணொளியில் காணலாம்.

ஆலாபனையைத் தொடர்ந்து பல்லவி இசைக்கப்படும்.

இது போலவே வைணவ மரபையும் ஆவணமாக்க முயன்று வருகிறோம்.

விவரங்கள் இங்கே.

Read Full Post »

ஐந்தாம் திருநாளில், ஐந்து மல்லாரிகள் வாசிக்கப்படும். அவற்றின் அமைப்பு திஸ்ரம், சதுஸ்ரம், கண்டம், மிஸ்ரம், சங்கீர்ணம் ஆகிய ஐந்து ஜாதிகளில் அமைந்திருக்கும் (தாளம் – திரிபுடையாகவோ, ஜம்பையாகவோ, துருவமாகவோ இருக்கலாம்). இந்தப் பதிவில் ஐந்து மல்லாரிகளின் காணொளிகளைக் காணலாம்:

மல்லாரி 1:

மல்லாரி 2:

மல்லாரி 3:

மல்லாரி 4:

மல்லாரி 5:

மல்லாரிகள் வாசித்த பின், கன ராகங்களான நாட்டை, கௌளை, ஆரபி, வராளி, ஸ்ரீ ஆகியவற்றில் கல்பனை ஸ்வரங்கள் வாசித்து முடிப்பது மரபாகும்.

இது போலவே வைணவ மரபையும் ஆவணமாக்க முயன்று வருகிறோம்.

விவரங்கள் இங்கே.

Read Full Post »

இ.பா அவர்களின் ஆசிர்வாதம் பெற்ற இந்த நாள் – இனிய நாளின்றி வேறென்ன?

இந்திரா பார்த்தசாரதி

‘லலிதா ராமி’ன் (ராமச்சந்திரன் மகாதேவன்) இசைமேதை ஜி.என். பாலசுப்ரமணியனின் வாழ்க்கை வரலாற்று நூலை சமீபத்தில் படித்தேன். அவர் தமிழில் எழுதி, அதை ‘சுருதி’ ஆசிரியர் ராம் நாராயண் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த நூல். மிகுந்த ஆராய்ச்சி செய்து ( ஆனால் அந்த ஆராய்ச்சிச் சுமை படிப்பவர்களைத் துன்புறுத்தாமல்) ஒரே மூச்சில் படித்து முடிக்கும் வகையில் சுவாரஸ்யமாக எழுதியிருக்கிறார். ராம் நாராயணின் மொழிபெயர்ப்பு, மொழி ஆக்கம் செய்யப்பட்ட நூலைப் படிக்கிறோம் என்ற உணர்வைத் தரவேயில்லை.

இப்பொழுது திரைப் படக் கதாநாயகர்தாம் ‘சூப்பர் ஸ்டாராக’ இருக்க முடியும் என்ற கருத்துப் பரவலாக இருக்கிறது. போன நூற்றாண்டின் ஐம்பதுகளிலும், அறுபதுகளிலும் ஜி,என்.பி இசை உலகின் ‘சூப்பர் ஸ்டாராக’ இருந்திருக்கிறார்.

எனக்கு ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. திருவையாறு தியாகராஜ உற்சவத்தின் போது, (வருடம் எனக்கு நினைவில்லை) மூத்த இசையறிஞர் அரியக்குடி பாடிக் கொண்டிருக்கிறார். அமைதியான சூழ்நிலை. அப்பொழுது திடீரென்று ஒரு சல சலப்பு.காரணம். கம்பீரமான தோற்றத்துடன், காதுகளில் வைரக் கடுக்கன் மின்ன, நறுமணம் சுற்றிச் சூழ, இளமைத் தோற்றத்துடன், ஒரு நடுவயதுக் காரர் அரியக்குடியாரை தாமதத்துக்கு மன்னிப்புக் கேட்கும் முக பாவத்துடன் நுழைகிறார்.அரியக்குடி முகத்தில் லேசான எரிச்சல். உடனே புன்னகையுடன், ‘ அவரும் பாடத் தான் வந்திருக்கார். பேசாம இருங்கோ. மணி, வா இங்கே, உட்காரு.’என்றார்.

வந்தவர் ஜி..என்.பி. இந்தக் காலக் கட்டத்தில் ஒரு கூட்டம் நடக்கும்போது, ரஜினியின் ‘என்ட்ரி’ யை எண்ணிப் பாருங்கள், புரியும்.

லலிதாராம் இப்பொழுது…

View original post 67 more words

Read Full Post »

நாலாம் திருநாள் அன்று வாசிக்கப்படும் ராகம் ஹம்ஸபிரம்மரி.

ஹேமவதியின் ஜன்யமான இந்த அரிய ராகத்தை அனேகமாய் கச்சேரிகளில் யாரும் பாடுவதில்லை. இருப்பினும் நாகஸ்வர மரபில் முக்கிய ராகமாய் கருதப்பட்டு வருகிறது. நாகஸ்வர சக்ரவர்த்தி ராஜரத்தினம் பிள்ளை இந்த ராகத்தில் அசாத்தியமாய் ஆலாபனை செய்திருப்பதாகவும் அந்தக் கால ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.

 

இந்த ராகத்தில் சுருக்கமான ஆலாபனையையும், ஒரு பல்லவியையும் காணலாம்.

இது போலவே வைணவ மரபையும் ஆவணமாக்க முயன்று வருகிறோம்.

விவரங்கள் இங்கே. 

Read Full Post »

மூன்றாம் திருநாளில் வாசிக்கப்படும் ராகம் சக்ரவாகம்,

இந்தக் காணொளியில் சுருக்கமாய் வாசிக்கப்பட்டுள்ள ஒரு சிறிய ஆலாபனையைக் காணலாம்.

ஆலாபனையைத் தொடர்ந்து அதே ராகத்தில் பல்லவி இடம் பெரும்.

இது போலவே வைணவ மரபையும் ஆவணமாக்க முயன்று வருகிறோம்.

விவரங்கள் இங்கே. 

Read Full Post »

இரண்டாம் திருநாளுக்கு உரிய ராகம் ரீதிகௌளை.

இன்றைய முதல் காணொளியில் ரீதிகௌளை ராக ஆலபனையைக் காணலாம்.

ஆலாபனையைத் தொடர்ந்து பல்லவி வாசிக்கப்படும்.

 

 

இது போலவே வைணவ மரபையும் ஆவணமாக்க முயன்று வருகிறோம்.

விவரங்கள் இங்கே. 

Read Full Post »

இங்கு குறிப்பிடதைப் போல, ஊர்வலத்தின் தொடக்கத்தில் மல்லாரிகள் இசைக்கப்படும். தேரடியை அடைந்ததும் அந்த நாளுக்குரிய ராகங்கள் இசைக்கப்படும்.

சைவ மரபை ஆவணப்படுத்தும் போது, இரண்டாம் நாள் ராகத்துக்கு முன்னும் இன்னொரு மல்லாரியை பதிவு செய்யக்கூடிய பேறு கிட்டியது.

இதில் தவில் வித்வான் அலாரிப்பு வாசித்து தொடக்கி வைக்க அதன்பின் இசைக்கப்படும் மல்லாரியில் திரிகாலம் முதலான நகாஸுகளைக் காணலாம்.

இது போலவே வைணவ மரபையும் ஆவணமாக்க முயன்று வருகிறோம்.

விவரங்கள் இங்கே. 

Read Full Post »

முதலாம் திருநாளில் உற்சவ மூர்த்திகள் தேரடியை அடையும் போது அந்த நாளுக்குரிய ராகம் இசைக்கப்படும். முதல் நாளுக்குரிய ராகம் சங்கராபரணம் (அல்லது ஹம்ஸத்வனி).

இந்தக் காணொளியில் சங்கராபரண ராக ஆலாபனையைக் கேட்கலாம். நிஜமான உற்சவத்தில் ஆலாபனை மட்டுமே மணிக்கணக்கில் வாசிக்கப்படும்.

ஆலாபனையைத் தொடர்ந்து தானமும்:

தானத்தை தொடர்ந்து ரக்தியும் வாசிக்கப்படும். உருப்படிகளில் மல்லாரியைப் போலவே – ரக்தியும் நாகஸ்வரத்துக்கே உரிய ஒன்று. ஏழு எண்ணிக்கை கொண்ட தாளத்தில் ‘தீம் தக த தி தை’ என்கிற தத்தகார அமைப்பை ரக்தியாக வாசிப்பர். முதல் பார்வைக்கு எளிமையாகத் தோன்றினாலும், பல்லவிகளைப் போலவே ரக்தியும் நுணுக்கங்கள் நிறைந்த உருப்படியாகும்.  பல்லவிகளில் ‘பூர்வாங்கம், அருதி கார்வை, உத்ராங்கம்’ என்று பகுதிகள் இருப்பது போன்று அல்லாமல் ஒரே பகுதியாய் ஏழு அட்சர தாளத்தில் ரக்தி அமைந்திருக்க அனைத்து ராகங்களிலும் இடம் பெருவதில்லை. சங்கராபரண ராகத்தில் பொதுவாக ரக்தி வாசிப்பதுண்டு.

ரக்தியைத் தொடர்ந்து பல்லவியும் (நேரத்துக்கு ஏற்ப) இடம் பெருவதுண்டு. இந்தப் பல்லவிகள் தத்தகாரமாகவோ, சாஹித்ய பல்லவியாகவோ அமைந்திருக்கலாம்.

இது போலவே வைணவ மரபையும் ஆவணமாக்க முயன்று வருகிறோம்.

விவரங்கள் இங்கே. 

Read Full Post »

கோயில்களில் நடக்கும் புறப்பாடுகளில் வாசிக்கப்படும் உருப்படி மல்லாரி. கம்பீர நாட்டை ராகத்தில் அமைந்த மல்லாரியில் வாசிக்கின்ற தருணத்திற்கும், கலைஞரின் திறனுக்கேற்றும் சுருக்கமாகவோ, விரிவாகவோ மல்லாரிகள் வாசிக்கப்படும். சாஹித்யங்களின்று தத்தகாரங்களினால் இசைக்கப்படும் மல்லாரியை முதலில் ‘அல்லாரிப்பு’ (கண்ட நடையில்) வாசித்து தவில் கலைஞரே தொடங்கி வைப்பார். தத்தகார அமைப்பை திஸ்ரம் செய்வது, திரிகாலம் செய்வது, கல்பனை ஸ்வரம் வாசிப்பது போன்ற மேன்மெருகேற்றல்களும் நடைபெருவதுண்டு.

பதினொரு நாள் நடைபெரும் திருவிழாவில், பெரும்பாலான நாட்களில் பஞ்ச மூர்த்திகளின் உலா இடம் பெறும். சிதம்பரத்தை பொருத்தமட்டில், உற்சவ மூர்த்திகள் புறப்பட்டு வீதிக்கு வரும் வரையில் ஒரு மல்லாரியும் (ஒப்பீட்டளவில் எளிமையான ஒன்று), வீதிக்கு வந்ததும் வேறொரு மல்லாரியும் (ஒப்பீட்டில் நுணுக்கங்கள் நிறைந்த ஒன்று – உ.தா. – திரிபுட தாள மல்லாரி) இடம் பெறும். இந்த மல்லாரி உற்சவர் தேரடி அடைந்து மாட வீதிகளில் திரும்பும் வரை வாசிக்கப்படும்.

இந்த இணைப்பில் முதலில் புறப்பாட்டின் தொடக்கத்தில் வாசிக்கப்படும் மல்லாரியும், அதனைத் தொடர்ந்து திரிபுட தாள மல்லாரியும் இடம்பெற்றுள்ளன.

இது போலவே வைணவ மரபையும் ஆவணமாக்க முயன்று வருகிறோம்.

விவரங்கள் இங்கே. 

Read Full Post »

Older Posts »