Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Posts Tagged ‘Injikudi Mariyappan’

ஆறாம் நாளில் வித்வான் மாரியப்பன் வாசித்துள்ள ராகம் வசுகரி. ஒரு ரேடியோ நேர்காணலில் இந்த ராகத்தைப் பற்றி வித்வான் மதுரை சோமு கூறியுள்ளார். அதன் அடிப்படையில் சண்முகப்ரியாவின் ஜன்யமான இந்த ராகத்தை வாசித்துள்ளார்.

 

ஏழாம் நாளில் உலா வரும் ராக தேவதை மாயாதாரிணி. சுபபந்துவராளியில் ரிஷப ஸ்வரமில்லாத ஜன்யமான இந்த ராகத்தில் சுருக்கமாகவும் உருக்கமாகவும் ஒரு ராகம் தானம் பல்லவியை இசைத்துள்ளார் மாரியப்பன்.

 

எட்டாம் நாளில் கீரவாணி ராகத்தின் ஜன்யமான ரிஷிப்ரியாவை இசைத்துள்ளார் மாரியப்பன். இந்த ராகத்துக்கும் முன்னோடியாக திகழ்ந்தவர் வித்வான் மதுரை சோமு அவர்கள்தான்.

 

நவராத்ரி நவராக தேவதைகளின் உலாவை நிறைவு செய்யும் வண்ணம் மாரியப்பன் வாசித்திருக்கும் ராகம் 72-வது மேளகர்த்தாவான ரசிகப்ரியா.

இந்தத் தொடருக்கு ஆதரவு தந்த அனைத்து ரசிகர்களுக்கும் பரிவாதினியின் சார்பிலும், வித்வான் மாரியப்பன் சார்பிலும் மிக்க நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஒன்பது ராகங்களையும் இந்த இணைப்பில் கேட்கலாம்:

Read Full Post »

ஐந்தாம் நாளில் உலா வரும் ராக தேவதை  காந்தாமணி.

61-வது மேளகர்த்தா ராகமான காந்தாமணியில் வித்வான் மாரியப்பன் சுருக்கமாக ஒரு ராகம் தானம் பல்லவி வாசித்துள்ளார்.

விவாதி ராகங்களின் எழிலை வெளிக்கொணருமாறு அவர் வாசித்துள்ளதை இங்கு காணலாம்.

Read Full Post »

மூன்றாம் நாளில் உலா வரும் ராக தேவதை ஓம்காரி.

நீங்கள் மதுரை சோமுவின் ரசிகரெனில் இந்த ராகத்தை கேட்டிருக்கக்கூடும். இந்த ராகத்தில் வர்ணமும், கீர்த்தனையும் பாடியுள்ளார்.

கரஹரப்ரியாவின் ஜன்யமான இந்த ராகத்தில் தாய் ராகத்தில் வரும் நிஷாதம் இல்லை.

வித்வான் இஞ்சிக்குடி மாரியப்பன் நமக்காக சுருக்கமாய் ஒரு ராகம் தானம் பல்லவியை இந்த ராகத்தில் வழங்கியுள்ளார்.

 

Read Full Post »

இரண்டாம் நாளில் உலா வரும் ராக தேவதை ஹம்ஸப்ரம்மரி.

சபா கச்சேரிகள் அதிகம் கேட்கக் கிடைக்காத ராகமெனினும், கோயில்களில் நாகஸ்வரத்தில் வாசிக்கப்படும் ராகங்களுள் முக்கியமான ஒன்று.

ஹேமவதியின் ஜன்யமான இந்த ராகத்தை சிதம்பரம் கோயில் அருத்ரா தரிசன திருவிழாகாலங்களில் நான்காம் நாள் உற்சவத்தின் போது பிரதான ராகமாக இசைப்பர்.

வித்வான் இஞ்சிக்குடி மாரியப்பன் நமக்காக சுருக்கமாய் ஒரு ராகம் தானம் பல்லவியை இந்த ராகத்தில் வழங்கியுள்ளார்.

Read Full Post »

 

நவராத்ரியை தேவி கீர்த்தனைகள், ஸ்வாதி திருநாளின் நவராத்ரி கீர்த்தனைகள் என்று இசையுலகம் அணைத்துக் கொள்ளும்.

அதையொட்டி நாகஸ்வரத்தில் நவராத்ரி சிறப்புப் பகிர்வுகளை பரிவாதினியில் வெளியிடலாமென்று தோன்றியது. நாகஸ்வர வித்வான் இஞ்சிக்குடி மாரியப்பனுடனும், நண்பர் ஸ்வாமிமலை சரவணனுடனும் கலந்து பேசி, ஒன்பது ராக தேவதைகளையே ஒன்பது நாட்களுக்கு சமர்ப்பிக்கலாம் என்ற எண்ணம் தோன்றியது.

அதிகம் கேட்கக் கிடைக்காத ராகங்களில், சுருக்கமாய் ராக ஆலாபனை, கொஞ்சம் தானம், ஒரு பல்லவி அதில் கொஞ்சம் ஸ்வரங்கள் என்று வெளியிட முடிவெடுத்தோம்.

சரவணனின் ஒலி/ஒளிப்பதிவில், மாரியப்பனின் வாசிப்பில் நவராக தேவதைகளின் உலா இதோ இன்று தொடங்கிவிட்டது.

முதல் நாள் உலாவுக்கு வந்திருக்கும் ராக தேவதை சந்திரஜோதி

 

இன்னும் பல ராகங்கள் அடுத்த எட்டு நாட்களில் காணத் தவறாதீர்கள்.

கண்டு, கேட்டுப், பகிர்ந்து மகிழுங்கள்,

நவராத்ரி வாழ்த்துகள்!

Read Full Post »

பரிவாதினியில் நாகஸ்வரத்துக்கு என்றுமே தனி இடமுண்டு. 2013-ல் தொடங்கி நாகஸ்வர நிகழ்ச்சிகள் இல்லாத பரிவாதினி இசைவிழாகள் இல்லாத நிகழ்ச்சி நிரலைக் காண முடியாது. இசைத் தொடரில் சம்பிரதாயமாக மங்கல வாத்யம் என்று ஒரு மணிக்கு குறைவாய் நாகஸ்வரக் கலைஞரை வாசிக்க வைப்பதில் என்றுமே எனக்கு உடன்பாடில்லை. அதனால் பரிவாதினியில் இடம் பெற்ற நாகஸ்வர கச்சேரிகள் அனைத்துமே மற்ற கச்சேரிகளுக்கு இணையான நேர அளவில்தான் அமையும்படி பார்த்துக் கொண்டு வருகிறோம்.

சில மாதங்களுக்கு வைணவ நாகஸ்வர மரபை ஆவணமாக்க இணையத்தில் உதவி கோரிய போது கிடைத்த ஆதரவு உண்மையில் நம்பமுடியாத வகையில் இருந்தது. அதுவே வழக்கமாக ஏற்பாடு செய்யும் வருடத்து ஒன்றிரண்டு நாகஸ்வர கச்சேரிகளைத் தவிர இன்னும் ஏதாவது செய்யத் தூண்டியது.

அந்த எண்ணத்தின் அடுத்த நிலைதான் நாத இன்பத்துடன் பரிவாதினி சேர்ந்து நடத்தும் இருமாதத்துக்கு ஒருமுறை நாகஸ்வர கச்சேரிகள். இதன் தொடக்கம் ஜூலை மாதம் நிகழ்ந்தது.

சின்னமனூர் விஜய்கார்த்திகேயனும், இடும்பாவனம் பிரகாஷ் இளையராஜாவும் இரண்டரை மணி நேரத்துக்கு மேல் அற்புதமாக வாசித்தனர். நாகஸ்வரத்துக்கே உரிய தத்தகாரப் பல்லவி அந்தக் கச்சேரியின் உச்சம் என்று நினைக்கத் தோன்றும் – அன்று அவர்கள் வாசித்த ராகமாலிகையைக் கேட்கும் வரை.

கோயில்களில் உற்சவ மூர்த்தி வீதி வலம் முடித்தபின், கோயில்வாசலுக்கு வந்து திருவந்திக் காப்பு முடித்து தன் இருப்பிடத்துக்குப் போகும் போது படியேற்றம் வாசிக்கப் படும். அதாவது ஒவ்வுரு படியாய் ஏறி தன் அறைக்குச் செல்லும் போது ஒவ்வொரு படிக்கும் ஒவ்வொருராகம் இசைக்கப்படும். கிட்டத்தட்ட பத்து வினாடிகளுக்குள் ஒருபடியைக் கடக்கும் கணத்தில் ஒரு ரகத்தைக் கடப்பார்கள் நாகஸ்வரக் கலைஞர்கள். இந்த நிகழ்வை மனக்கண் முன் நிறுத்தி அன்று கார்த்திகேயனும் இளையராஜாவும் வாசித்த ராகமாலிகையை நேரில் கேட்ட்வர்கள் புண்ணியம் செய்தவர்கள். (அவர்களைக் காட்டிலும் அளவில் சற்று குறைவாய் புண்ணியம் செய்தவர்களுக்காக இணைப்பு கீழே)

 

பரிவாதினி ஒருங்கிணைத்த நிகழ்வுகளில் கச்சேரி முடிந்தும் பல வாரங்களுக்கு பரபரப்பாய் பேசப்பட்ட நிகழ்ச்சி இதுதான்.

அதனைத் தொடர்ந்து செப்டம்பர் மாதத்தில் இஞ்சிக்குடி மாரியப்பன் அவர்களின் கச்சேரி இடம் பெற்றது. ஆரம்பம் முதல் கடைசி வரை பல அரிய பாடல்களின் ஆவணமாக அந்தக் கச்சேரி அமைந்தது. அவர் வாசித்த நீதிமதி அந்தக் கச்சேரியின் சிகரம் எனலாம்.

 

அன்ர்த மூன்றரை மணி நேர இசை மழையைத் தொடர்ந்து வரும் நவம்பர் 3-ம் தேதி ஒரு அரிய நிகழ்ச்சி ஏற்பாடாகியுள்ளது.

இணையத்தில் இசையைத் தேடி அடைபவர்களுக்கு யாழ்பாணம் பாலமுருகனின் இசையைத் தெரிந்திருக்கும். அவர் வாசித்த பல இசைத் துளிகள் ஃபேஸ்புக்கிலும், யூடியூபிலும் மிகவும் பிரபலம். சென்ற வருடம் கோலப்பன் ஹிந்துவில் எழுதியிருந்த கட்டுரையில், கேரளமும், கர்நாடகமும், ஆந்திரமும் இந்தக் கலைஞனை அழைக்கும் அளவிற்கு தமிழ்நாடும், சென்னை சபைகளும் அழைப்பதில்லை என்று எழுதியிருந்தார். அந்தக் குறை பரிவாதினியின் மூலம் தீர்வதில் எனக்க்குப் பெருமகிழ்ச்சி.

balamurugan

நினைத்த மாத்திரத்தில் கேட்டுவிடும் தூரத்தில் இல்லாத ஓர் கலைஞனின் அரிய நிகழ்வென்பதால் ரசிகர்கள் திரளாக வந்து ரசித்து இன்புற வேண்டும் என்று கோருகிறேன்.

இந்த நிகழ்ச்சியில் திறமை வாய்ந்த, பொருளாதர வசதி அதிகம் இல்லாத மூன்று நாகஸ்வர மாணவர்களுக்கும் ஒரு தவில் மாணவருக்கும் வாத்தியங்கள் வழங்கி மகிழவுள்ளோம்.

இந்த நிகழ்வுகளுக்கெல்லாம் ஆதாரம் பரிவாதினியின் ஆதரவாளர்கள் தொடர்ந்து அளித்து வரும் உதவியும் ஊக்கமும்தான். அதற்கு எத்தனை முறை நன்று கூறினாலும் ஈடாகாது.

இந்தத் தொடர் நிகழ்வுகளுக்கு பங்களிக்க விரும்புவோருக்காக க்வங்கிக் கனக்கு கீழே அளிக்கப்பட்டுள்ளது. பரிவாதினிக்கு அளிக்கும் நன்கொடைகள் செக்தன் 80ஜி-யின் கீழ் வருமானவரிச் சலுகைக்கு தகுதிபெற்றவை.

Parivadini Charitable Trust,
Union Bank of India
Account Number: 579902120000916
branch: Kolathur, Chennai,
IFSC Code: UBIN0557994

Read Full Post »