Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Posts Tagged ‘Lalitharam’

கடந்த இருபது ஆண்டுகளில் கர்நாடக இசை தொடர்பான தேடல்களில் பல விஷயங்கள் கிடைத்துள்ளன. அதில் சில விஷயங்கள் ‘சுவாரஸ்யமான தகவல்கள்’ என்று வகைப்படுத்தலாம். இந்தச் சிறு தகவல்களை வைத்து ஆய்வு செய்யவோ அல்லது கட்டுரை ஒன்றை எழுதவோ முடியாது. பயனில்லாத துக்கடா செய்தி என்றும் ஒதுக்கக்கூடியவை அல்ல.

இவற்ரை வைத்துக் கொண்டு வாரமொரு செய்தியாய் யுடியூபில் பகிரலாம் என்ற எண்ணம் வந்தது. இதுதான் ‘பொடி சங்கதி’. எனக்குக் கிடைத்ததைப் பகிர்தல் ஒரு பக்கம் இருந்தாலும், இதைப் பகிர்வதன் மூலம் இந்த விஷயங்களைப் பற்றி இன்னுமறிந்தவர் கண்ணில்பட்டு, இது தொடர்பான பார்வை விசாலமாகக்கூடும் சாத்தியம் இருக்கிறதென்று தோன்றுகிறது.

பொடி சங்கதி – வாரம் ஒன்றாய் என்னுடைய புதிய யுடியூப் சானலில் வெளியாகும்.

தொடர்ந்து பேசலாம்.

Read Full Post »

ஜூலையில் ஹம்சத்வனி சபாவில், மதுரை மணி ரசிகர்கள் ஒருங்கிணைத்த நிகழ்ச்சியில் மதுரை சோமுவின் இசைத்துளிகளைத் துணையாகக் கொண்டு ஓர் உரை நிகழ்த்தினேன்.

உரையின் இருதுளிகள் இங்கே

 

இதைப் பற்றி நண்பர் ராஜேஷ் ஆங்கிலத்தில் ஒரு பெரிய கட்டுரை எழுதியுள்ளார். அதை இங்கு படிக்கலாம்.

Read Full Post »

இந்தியாவில் கடந்த சிலநாட்களாய் அதிகம் விவாதிக்கப்பட்டுவரும் #metoo-வில் என் குறைந்தபட்ச பங்களிப்பாய் செய்தகொண்ட சுயபரிசீலனையின் விளைவாய் சில சொந்த நிலைப்பாடுகளையும், நான் பங்களிப்பை அளித்து வரும் பரிவாதினியின் சார்பில் சில நிலைப்பாடுகளையும் எடுத்துள்ளேன்.

 

1. #metoo-வின் மூலமாய் குற்றம்சாட்டப்பட்டிருக்கும் கலைஞரின் கச்சேரிகளுக்கு இனி செல்வதில்லை.

2. அவர் பாடியவற்றைப் பற்றி ரசனைக் குறிப்புகள் எழுதுவதோ, அல்லது அவர் பாடல்களை சமூக வலைத்தளங்களில் பகிர்வதோ செய்யப்போவது இல்லை.

3. அவருடைய வாழ்க்கை வரலாறு எழுதுவது, நேர்காணல் வெளியிடுவது போன்ற செயல்களில் ஈடுபடப்போவதில்லை.

4. பரிவாதினி ஒருங்கிணைக்கும் நிகழ்ச்சிகளில் அவர்கள் இடம்பெற மாட்டார்கள்.

5. பரிவாதினி செய்து வரும் இணைய நேரலை ஒளிபரப்புகளிலும் அவர்களின் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப் போவதில்லை.

இந்தக் கலைஞர்களைப் பற்றி லலிதாராம் எழுதி அவர்களுக்கு ஒன்றும் ஆகப்போவதில்லை. அவர்கள் பரிவாதினியில் பாடித்தான் பெயர் வாங்க வெண்டும் என்ற நிலையுமில்லை என்பதை நன்கறிவேன்.

இத்தனை ஆண்டுகள் “அதெல்லாம் இருக்கட்டும் – அந்தத் தோடியும் காம்போஜியும் பாரு!”, என்றிருந்தது போல இனியும் இருப்பது சரியல்ல என்பதே கடந்த சில நாட்களில் நான் கண்டுகொண்டது. இந்தப் புரிதலை வெளிப்படுத்தும் குறைந்தபட்ச வெளிப்பாடே இந்த நிலைப்பாடு.

இதில் சில கலைஞர்களின் மேல் அபாண்டமாய் பழிசுமத்தியிருக்கக் கூடும். எத்தனையோ காலம் எண்ணற்ற இடர்பாடுகளைப் பற்றி மூச்சுவிடக்கூட முடியாத சூழலைக் கொஞ்சமாவது மாற்ற முற்படும் இந்த வேளையில் சன்னமாகவாவது எதிர்குரலை எழுப்பியிருப்பவர்கள் பக்கம் நிற்பதே சரியென்றுபடுகிறது. அந்தக் குரல்களில் ஒலிப்பவையெல்லாம் உண்மையின் குரல்கள்தானா என்ற ஆராய்ச்சிக்கு இது தருணமல்ல.

Read Full Post »

கடந்த வாரம், ஜி.என்.பி-யின் 53-வது நினைவு நாளன்று, சென்னை ராகஸுதா அரங்கில், என் ”இசையுலக இளவரசர்” புத்தகத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பு வெளியானது.

அதையொட்டி, அன்று ஜி.என்.பி-யின் இசையைப் பற்றி ஓர் உரையை பவர்பாயிண்ட் உதவியுடன் வழங்கினேன்.

அந்த உரையை மேலுள்ள சுட்டியில் காணலாம்.

புத்தகத்தை ஸ்ருதி தளத்திலும், அமேஸானிலும் வாங்கலாம்.

Read Full Post »

2006-ல் என் இசையுலக இளவரசர் ஜி.என்.பி நூல் விகடன் பதிப்பாக வெளியானது.

2010-ல் ஜி.என்.பி-யின் நூற்றாண்டின் போது கிட்டத்தட்ட ஓராண்டு காலம் ஸ்ருதி மாத இதழில் அதன் மொழியாக்கத்தை திரு.ராம்நாராயண் வெளியிட்டார். அந்த சமயத்தில்தான் ஜி.என்.பி-யின் நூற்றாண்டு மலரை (கந்தர்வ கானம்) வெளியிட்டோம். மலரின் உள்ளடக்கம் பெரும்பாலும் ஆங்கிலட்டில் என்படாலும், தமிழ் நூல் எழுடி முடித்த நான்கு ஆண்டுகளில் கிடைத்த தகவல்களும் அதில் இடம் பெற்றிருந்ததாலும், ஸ்ருதியில் வெளியான மொழியாக்கத்தை வெளியிட முனைப்பிருக்கவில்லை.

சில மாதங்களுக்கு முன் ராம்நாராயண் அழைத்தார். சமீபத்தில் அந்த மொழியாக்கத்தைப் படித்துப் பார்த்த போது அது ஜி.என்.பி-யைப் பற்றிய எளிய அறிமுக நூலாக இருக்கக்கூடும் என்றும், அதை வெளியிட விரும்புவதாகவும் கூறினார்.

நூல் வெளியாவதில் மகிழ்ச்சிதான் என்றாலும், அந்தப் பதிப்பு அவர் கையைக் கடிக்காமல் இருக்க வேண்டுமே என்ற கவலை எனக்கு. மூன்று நான்கு முறை வெவ்வேறு வகையில் கூறியும் ராம்நாராயண் விடுவதாய் இல்லை. அவர் ஜாதக பலன் அவரைக் காக்கும் என்ற நம்பிக்கையில் ஒப்புக்கொண்டேன்.

நூல் சில வாரங்களுக்கு முன் வெளியாகியுள்ளது.

புத்தகத்தை ஸ்ருதி தளத்திலும், அமேஸானிலும் வாங்கலாம்.

மே 1 ஜி.என்.பி-யின் நினைவு தினம். சென்னை ராக சுதா அரங்கில் ஒரு நிகழ்வு ஏற்பாடாகியுள்ளது. அன்று ஜி.என்.பி-யின் இசையின் பரிமாணங்கள் பற்றி அவர் கச்சேரி பதிவுகளின் உதவியுடன் ஓர் விளக்கவுரையை அளிக்க உள்ளேன்.

IMG_4157

அரங்கிலும் புத்தகத்தை வாங்கிக் கொள்ள முடியும்.

 

 

Read Full Post »