Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘TK Rangachari’ Category

அப்படி இப்படி தட்டித் தடவி நான்கு வருடமாய் சிறியதும் பெரியதுமாய் இதையும் சேர்த்து நூறு பதிவுகள்.

‘புதுமை’யாய் இருக்கட்டுமே என்று அருண் நரசிம்மனுடன் இணைந்து எழுதியுள்ளேன்.

tkr-011

1912இல் திருச்சி மாவட்டம் வராஹனேரியில் ஜூன் மூன்றாம் தேதி பிறந்த ஒரு கர்நாடக சங்கீத வித்வானின் நூற்றாண்டு நினைவு விழாவிற்கு நேற்று மாலை சென்றிருந்தோம். சென்னை போக்குவரத்தை எங்கள் வாகனத்தில் கலந்தாலோசித்துக் கதைத்துக் கலைந்து சற்று தாமதமாக சபாவை அடைகையில், ஐந்தரை மணி என்று சொன்ன நேரத்திற்கு விழாவை தொடங்கிவிட்டிருந்தனர் என்பது தெரிந்தது. அவ்விழாவின் சொற்பமான நேர்த்தியான நிகழ்வுகளில் அது முதன்மையானது.

அரங்கினுள் ரசிகர்களாய் நாங்கள் எதிர்பார்த்ததைவிடவே நல்ல கூட்டம். அடாணா, கருடத்வனி, கௌரிமனோஹரி, வாகதீஸ்வரி, மாஞ்சி, நீலாம்பரி என்று கச்சேரி மேடைகளில் அரிதான ராகங்களின் ஆலாபனைகளில் சிறந்த நூற்றாண்டு விழா நாயகரின் இன்றும் மனத்தில் நிறையும் இசையின் ஆகர்ஷணம் என்றே எடுத்துக்கொள்வோம். விழா நாயகரின் கொடை பற்றி ஒரு கானொளி பிரஸண்டேஷன் ஓடிக்கொண்டிருந்தது. தோடி மற்றும் கல்யாணி ஆலாபனைகளை அவர் கையாண்ட விதத்திற்கு உதாரணங்களாய் அடுத்தடுத்து ஒலித்த இசைத்துண்டுகள் மனதை நிறைத்தது. ஒரு ராகத்தின் சுருதி பேதம் கேட்டது போலவும் உற்சாகமாகவே இருந்தது.

தொடர்ந்து படிக்க இங்கே க்ளிக்கவும்

Read Full Post »