இன்று மேண்டலின் ஸ்ரீநிவாஸின் 55-வது பிறந்த நாள்.
சமீப காலமாய் இந்த நாள் கலவையான உணர்வை எனக்குள் எழுப்புகிறது. ஒரு பக்கம் ஸ்ரீநிவாஸின் இசை என் வாழ்வை நிறைத்த கணங்களின் கதகதப்பு. இன்னொருபுறம் அவர் இல்லாததன் வெறுமை.
வெறுமையையும் மீறி கொண்டாடத்தான் வேண்டும் அந்த அவதார புருஷனை.
இன்று அவர் வாசித்த தோடி ராகப் பதிவை பகிர நினைத்தேன். முன்னொட்டாய் கொஞ்சம் பேச எண்ணினேன். பலவகை உணர்வுகள் எழுந்து அலைகழிப்புக்கு நடுவில் தெளிவில்லாமல் ஆனால் நிறுத்தாமல் 15 நிமிடங்கள் பேசினேன். இன்னும் கூட பேசி இருப்பேன். இதுவே அதிகம் என்று தோன்றியதால் நிறுத்துக் கொண்டேன்.
பேசி முடித்ததும், பேசியதை நீக்கிவிட்டு தோடி ராகப் பதிவை மட்டும் போடலாமா என்று தோன்றியது. கோவையாக இல்லாவிட்டாலும் சத்தியம்தானே – இருந்துவிட்டுப் போகட்டும் என்று நான் பேசியதையும் சேர்த்துப் பதிவேற்றியுள்ளேன்.
யுடியூப் தானே – நான் பெசியது அலுப்புத்தட்டினால் நேராக தோடி ராகத்துக்கு சென்றுவிடுங்கள்.
வாருங்கள் கொண்டாடுவோம்!
could you please list the raagas during swaram?