Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘பாடகர்’ Category

பட்டம்மாள் என்றதும் அவர் பாடிய எத்தனையோ தீட்சிதர் கீர்த்தனைகள் நினைவுக்கு வரக்கூடும். தீட்சிதரை தவிர்த்துப் பார்த்தால் பல தியாகராஜர் பாடல்கள், பாபநாசம் சிவன் பாடல்கள், கோபாலகிருஷ்ண பாரதி, சுத்தானந்த பாரதி பாடல்கள் பலவற்றை அவர் தனதாக்கிக் கொண்டதை உணர முடியும்?

ஆனால் ஷ்யாமா சாஸ்திரி பாடல்கள்? அவற்றை மட்டும் பாடாமல் இருந்திருப்பாரா என்ன? மற்ற பாடல்களின் ஜொலிப்பில் கொஞ்சம் பட்டம்மாள் பாடிய ஷ்யாமா சாஸ்திரி பாடல்களின் மேல் நிழல்தட்டியிருக்க வேண்டும்.

சில மாதங்களுக்கு முன்னால் ஒரு நண்பர் எனக்கு ஒரு கச்சேரி பதிவை அனுப்பி வைத்தார். அந்தப் பதிவில், ‘கருணாநிதி இலலோ’ என்கிற தோடி கிருதி இடம்பெற்றிருந்தது.

கேட்க ஆரம்பித்ததும் சுழலில் சிக்கிக் கொண்டேன். சுழற்சியை கை நிறுத்தினாலும் பல வாரங்களுக்கு அந்த தோடி மனத்தில் அலையடித்துக் கொண்டே இருந்தது.

ஷ்யாமா சாஸ்திரியின் வரிகளை அலசிப் பார்த்தால், கிட்டத்தட்ட ஒரே விஷயத்தைதான் அவர் பல பாடல்களில் சொல்லியிருக்கிறார் என்று புலப்படும். விஷயம் என்று சொல்வதை விட வார்த்தைகள் என்று சொல்வது பொருத்தம். ஒரே வார்த்தைகள்தான் – ஆனால் சொல்லும் விஷயங்கள் வேறு வேறல்லவா? உதாரணமாய் மாயம்மாவை முதல் வார்த்தையாக்கி வடித்திருக்கும் நாட்டைகுறிஞ்சி ராகக் கிருதியும், ஆஹிரி ராகக் கிருதியும் கிழக்கும் மேற்குமல்லவா?

‘கருணாநிதி இலலோ’-விலும் வழக்கமான அம்மா/பிள்ளை கொஞ்சல்/கெஞ்சல்தான் என்றாலும் வடித்திருக்கும் விதத்தில் விரிந்து பரவும் தனித்துவம்.

திஸ்ரத்தில் நடந்து வரும் மத்தகத்தின் கம்பீரம் என்றால் சரணத்தில் நிரவல் குழந்தையின் தீண்டல்.

‘கோமள மிருது பாஷிணி – அம்பா’

அம்மா! எவ்வளவு அழகு நீ! மிருதுவான உன் குரலில் எத்தனை இனிமை.

நிரவலைக் கேட்கக் கேட்க பிஞ்சு விரல்கள் தாயின் தலை கோதி, தாய் மகனைக் கொஞ்சும் கொஞ்சல்களை எல்லாம் மகன் தாய்க்குச் சொல்லும் மிருது வருடல்கள்!

இது மீளாச் சுழற்சி என்றது சரிதானே!

இனி பட்டம்மாள் என்றதும் ‘மாமவ பட்டாபிராம’, ‘ரக்ஷபேட்டரே’ நினைவுக்கு வருவது போலவே ‘கருணாநிதி இலலோ’-வும் நினைவுக்கு வரும்.

என்ன கேட்கப் போகிறீர்கள் என்று புரியாமல் இல்லை. பதிவு எங்கே என்றுதானே கேட்கிறீர்கள்.

மகாவிதுஷியின் பிறந்த நாளில் – யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகமும்.

வாழ்க கான சரஸ்வதி பட்டம்மாள் புகழ்!

Read Full Post »

மதுரை சோமுவைப் பற்றிய என் உரையில் சோமுவின் பதிவுகளில் இருந்து பல சிறு பகுதிகளைப் போட நினைத்தேன். நான் தேர்ந்தெடுத்த பகுதிகளில் உச்சமென்று நான் கருதியது ஷண்முகப்ரியா ஆலாபனையின் ஒரு பகுதியை.

அந்த சின்ன பகுதி நமக்குப் பல செய்திகளைச் சொல்லக்கூடியவொன்று.

மியூசிக் அகாடமியில் நடந்த கச்சேரியில், ராகம் தானம் பல்லவிக்காகப் பாடிய பிரதான ராகத்தில் இருந்து ஒரு பகுதி.

தார ஸ்தாயி ரிஷபம் ஆலாபனையின் மையமாகும் போது தன் சிஷ்யனை நீ பாடு என்கிறார்.

அரங்கேற்றம் என்றால், பல லட்சங்கள் செலவு வைத்து ஊரைக் கூட்டினால்தான் என்று இல்லை. சங்கீத வித்வத் சபையில் பிரதான ராகத்தில் முக்கியமான இடத்தில் சிஷ்யனை “நீ பாடு” என்றாலும் அது அரங்கேற்றம்தான்.

நாகஸ்வர பாணியில் ராகம் பாடிய பலர் உண்டு. குரலை நாகஸ்வரமாகவே ஆக்கிப்பாடியவர் அனேகமாய் சோமுவாகத்தான் இருக்கமுடியும்.

நாகஸ்வரத்தில் இருவர் சேர்ந்து இசைக்கும் போது, ஆலாபனையின் உச்சகட்டத்தில் மாற்றி மாற்றி “கொடுக்கல் வாங்கலாக” வாசிப்பது வழக்கம். இந்த கச்சேரியில் தன் சிஷ்யனை பாட வைத்து அந்த இரட்டை நாகஸ்வர சூழலை உருவாக்குகிறார் சோமு.

சோமுவின் குரலைப் பற்றி பல புரளிகள் உண்டு. அவற்றில் ஒன்று அவருக்கு மந்திர ஸ்தாயியில் குரல் பேசாது என்பது. இந்த ஆலாபனையின் கடைசியில் சோமு பாடியிருக்கும் மந்திர ஸ்தாயி சஞ்சாரங்களைக் கேட்டால் உண்மையை உணர முடியும்.

சரி, என்ன பேசி என்ன? இனிப்பு இனிப்பு என்று எழுதினால் இனிக்கவா போகிறது. இணைப்பைக் கொடுத்துவிடுகிறேன். இனிப்பை நீங்களே சுவைத்துக்கொள்ளுங்கள்.

 

Read Full Post »

கச்சேரிகளில் அதிகம் கேட்கக் கிடைக்கும் தமிழ்ப்பாடல்களுள் ஒன்று, “யாரோ, இவர் யாரோ”. இந்தப்பாடலை பொதுவாக பைரவியிலும், அரிதாக சாவேரியிலும் பாடுவார்கள்.

இந்தப் பாடலை பெரும்பாலானவர்கள் சீதை மாடத்தில் நின்றபடி ராமனைப் பார்த்துப் பாடுவதாகக் கருதுகின்றனர். இதில் கச்சேரி விமர்சன கலாநிதிகளும் அடக்கம். அவர்களின் மேல் உள்ள கரிசனத்தால் இந்தப் பதிவு.

இவர்கள் இந்தப் பாடலை கச்சேரியில் மட்டுமே கேட்டவர்கள். அதனால் பல்லவியில் வரும் “இவர் யாரோ” என்கிற பதம் இவர்களை மயக்குகிறது. ஆண் பெண்ணைப் பார்த்துப் பாடினால் “இவள் யாரோ” என்றுதானே இருக்க வேண்டும்? இங்கு “இவர் யாரோ” என்று இருப்பதால், இது பெண் ஆணைப் பார்த்துப் பாடியதாகத்தான் இருக்க வேண்டும் என்கிற பொதுக் கருத்தில் மயங்கியவர்கள்.

Arunachala Kavi

இராமநாடக கீர்த்தனையின் முழுத் தொகுப்பு, தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் வெளியீடாகக் கிடைக்கிறது. தமிழ் இணையக் கல்விக்கழகத்திலும் இந்தத் தொகுப்பு (இலவசமாகக்) கிடைக்கிறது. அதில், இந்தப் பாடலைப் பார்த்திருந்தால், பாடலுக்கு முன்னால் உள்ள குறிப்பு கண்ணில் பட்டிருக்கும்.

அந்தக் குறிப்பு:

ஸ்ரீராமர் சீதையைக் கண்டு ஐயுறல்

விருத்தம் -13

இடமாம் விசுவா மித்திரன் இந்தச் சேதி உரைக்க லட்சுமண
னுடனே நடந்து மிதிலையிற் போய் ஒருமா மணிமே டையில் சீதை
மடவாள் காணத் தனையந்த மயிலைத் தானும் ரகுராமன்
கடல்வாய் வருசெந் திருவெனவே கண்டான் விரதம் கொண்டானே

கச்சேரிகளில், பல்லவி/அனுபல்லவிக்குப் பின் மூன்றாவது சரணத்துக்குப் பாடகர் தாவிவிடுவது வழக்கம். முதல் சரணத்தை யாராவது பாடியிருந்தால் ஒருவேளை இந்த மயக்கம் தவிர்க்கப்பட்டிருக்கலாம்.

அந்தச் சரணம்:

1. பண்ணிப் பதித்தாற் போல் இரு           ஸ்தனமும்-கூட
பாங்கியர்கள் இன்ன முந்துரைத்        தனமும்
எண்ணத்தாலும் வண்ணத்தாலும்           பங்கயப்
பெண்ணைப் போல் கண்ணிற் காணும்   மங்கையர்(ஆரோ)

தெலுங்கு/சமஸ்கிருத சாஹித்யங்கள் எல்லாம் என்ன சொல்ல வருகின்றன என்றெல்லாம் வம்புக்குப் போகாமல் ராகம்/எழுதியவர் பெயர் என்று மளிகைக் கடை லிஸ்டாக ஜல்லி அடிக்கும் விமர்சகர்களைக் காவு வாங்க இது போன்ற தமிழ்க் கீர்த்தனைகள் வந்துவிடுகின்றன.

மஹானுபாவர்களே! “பண்ணிப் பதித்தாற் போல் இரு ஸ்தனத்தோடு” எல்லாம் ராமனை மனக்கண் முன் வரவழைக்காதீர்கள் ஐயா! கொஞ்சம் கருணை காட்டுங்கள். பிழைத்துப் போகிறேன்.

Read Full Post »

On the third day, I would like to share Rajam’s depiction of Arunachala Kavi.

It is said that Kamban made his Ramayana public in the Srirangam temple. Arunachala Kavi wished that his Rama Nataka Kirthanais were released in Srirangam as well. There were some resistance to it. The famous song “En Palli Kondeer ayya” is actually a plea to Ranganatha from Arunachala Kavi. The “never sung” third charanam explicitly says that.

I particularly like the Pavala malli decoration on the Perumal.

#Rajam100

 

Arunachala Kavi.jpg

***************************************************************************

The third song that I present is from a private recording. I received a set of recordings from Rajam sir, where his student Smt. Gomathi had digitised his renditons during the classes. There were over 400 songs, including all 72 melakartha songs of Koteeswara Iyer.

Rajam’s most famous musical contribution was popularizing Kotishwara Iyer’s compositions. Here I present the composition in Todi. ‘Kali Theera’ – in true Ariyakudi style. The cascading sangatis and that deep and ringing mandra panchamam in the chitta swarams makes it a cherished recording for me.

In the Kanda Ganamutham album, that is commercially available, he has sung a crisp alapana and lovely swaras as well.

 

Read Full Post »

Starting Today, I plan to publish a painting and a song of S.Rajam, as a tribute to the great man on his centenary. Keep following this space daily.

The first painting we share on the legend’s birthday is the painting of Swaminatha. The choice is inspired from the pallavi of the song that I would share later today, Muruganukkoru Seedan.

It is well known that S.Rajam’s work were published in many Tamil magazines and art magazines such Sruti and journals such as Bhavan’s journal. Not many know that his works adorned the cover of Kannada magazine Sudha on several occasions.

select 46

Here is a rare work that beautifully depicts Pranava mantra tatvopadesa by Murugan to Shiva. This picture, of course a print, and hence lacks the depth of the original painting. However, one can still appreciate the famous multi-layered coloring, the attention to details and those intricate lines.

I scanned this from the personal collection of Rajam sir when I made the documentary on Rajam sir. Do not forget to notice the background design on the page of the album. Every page in his album would have a unique design , augmenting the pasted picture that he meticulously maintained in his archive.

*******************************************************************************

The first song that we share is “Muruganukkoru Seedan”.

A composition of Harikesanallur Muthiah Bhagavathar in Kalyani. S.Rajam had the fortune of learning from many greats. The list also includes the great Muthiah Bhagavathar. Apart from learning carnatic compositions, Rajam considered it a blessing that HMB was the music director to the movie “Radha Kalyanam”, in which Rajam played the lead role.

This recording is from an AIR concert. Interestingly a concert that was telecast on the day of the Kumbabishekam of Myplaore Kapaliswarar Temple. On this occasion he rendered songs on every deity in that temple complex.

 

The sure footing on Shudhdha Swarams, cascading sangatis and that ‘Bigu” sangatis in the pallavi, the smallest of pauses between words that immensely enhance the enunciation and brisk/crisp nereval swarams makes one to keep getting back to this rendition.

Read Full Post »

ஓவியர், பாடகர், நடிகர், ‘சங்கீத கலா ஆசார்யர்’ எஸ்.ராஜம் அவர்களின் நூற்றாண்டு இந்த வருடம்.

அதன் தொடக்கமாய். வரும் வெள்ளிக்கிழமை, ஃபெப்ரவரி 8-ம் தேதி, சென்னை மியூசிக் அகாடமியில் ஒரு நிகழ்வு நடக்கிறது.

அதன் விவரங்கள்

PHOTO-2019-02-05-19-13-05.jpg

PHOTO-2019-02-05-19-13-05 (1)

அவர் நூற்றாண்டை முன்னிட்டு நிகழ்ந்த பாட்டுப் போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு வழங்கப்படும். அவரைப் பற்றிய ஆவணப்படத்திலிருந்தும் பல சுவாரஸ்ய காட்சிகளைக் காணும் வாய்ப்பும் உள்ளது. அவருடன் பழகிய பலரின் அனுபவப் பகிர்வும் நிகழ்ச்சிக்கு செறிவு சேர்க்கும்.

இவைத் தவிர, அவர் ஓவியத்தை முன் வைத்து ஒரு நாட்டிய நிகழ்ச்சியும் (நவ்யா நடராஜன்), அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இசைக் கச்சேரியும் (ரஞ்சனி காயத்ரி) இடம் பெறவுள்ளது.

இந்த அரிய நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம். கலை ரசிகர்கள் வந்து ரசிக்கும்படி வேண்டிக் கொள்கிறேன்.

இது தொடங்கி, இன்னும் ஓராண்டுக்கு மாதம் ஒரு கச்சேரி ராஜம் அவர்களைச் சிறப்பிக்கும் வகையில் பரிவாதினியின் மூலம் நடக்கவுள்ளது.

முதல் கச்சேரியாய். ஃபெப் 22-ம் தேதி எஸ்.ராஜத்திடம் கற்ற பாடகர் அக்ஷய் பத்மநாபன் பாடுகிறார்.

இந்த முயற்சிக்கு பொருள் உதவி செய்ய விழைவோர்.

Parivadini Charitable Trust,
Union Bank of India
Account Number: 579902120000916
branch: Kolathur, Chennai,
IFSC Code: UBIN0557994

என்ற வங்கிக் கணக்கில் தங்கள் பங்களிப்பை அளிக்கலாம்.

 

 

Read Full Post »

அது 1940-ஆம் வருடம். தன் அறையில் கையில் தியாகராஜர் கீர்த்தனையொன்றை வைத்துக் கொண்டு ஆழ்ந்த யோசனையில் இருக்கிறார் ஜி.என்.பி. அவரைத் தொந்தரவு செய்யாமல், அவரது மன ஓட்டத்தைக் கவனிப்போம்.

“வாஸ¤தேவா! என்று கூவியபடி வரும் இந்த துவார பாலகரைப் பாரீர்! இதுதான் பல்லவி. அந்த துவார பாலகன் கூவுகிறான் என்றால் அவன் உச்ச ஸ்தாயிலதானே பேசி இருக்க முடியும்? அப்படிப் பார்த்தா, தியாகராஜ ஸ்வாமியும் பாட்டை தார ஸ்தாயியில்தானே தொடங்கி இருப்பார்? இன்னிக்கு நமக்குக் கிடைக்கும் கீர்த்தனை வடிவம் தியாகராஜ ஸ்வாமி அமைத்தது போலதான் இருக்கணும்-னு இல்லையே. நிறைய பேர் இந்தப் பாட்டை மத்ய ஸ்தாயி பஞ்சமத்தில் தொடங்கி, மத்ய ஸ்தாயிக்கே பிரதானம் அளித்துப் பாடறா. கல்யாணியை எந்த ஸ்தாயியில் பாடினாலும், எந்த காலப்பிரமாணத்தில் பாடினாலும், எந்த ஸ்வரத்தில் நின்று பாடினாலும் அழகு சொட்டும்தான். ஆனாலும் பாட்டுக்கென்று ஒரு போக்கிருக்கில்லையா? தார ஸ்தாயி ஷட்ஜத்தில் தொடங்கி ‘வாஸ¤தேவா!” என்றால்தானே துவார பாலகனின் உற்சாகத்தைக் காட்ட முடியும். “வாஸ¤தேவா என்று கூவினான்” என்னும் வாக்கியத்தைப் பார்த்தால், ‘வாஸ¤தேவா’ என்னும் சொல் தார ஸ்தாயில தொடங்கி, ‘என்று’ என்ற சொல்லில் narator-இன் பேசுவது போல ஒரு இறக்கத்தை மத்ய ஸ்தாயில காட்டி, ‘கூவினான்’ என்ற சொல்லில் கூவுதலைக் காட்ட திரும்ப மத்ய ஸ்தாயியிலிருந்து தார ஷட்ஜத்துக்குக் கொண்டு போய் நிறுத்தினால்தானே பாட்டின் பாவம் முழுமையா வருது. பல்லவியை இப்படிப் பாடிதான் பார்ப்போமே”

‘ஏதாவுனரா’, ‘கமலாம்பா பஜரே’, ‘தல்லி நின்னு’, ‘நிதி சால’ என்று எத்தனையோ கல்யாணிகள் கோலோச்சும் வேளையில், எங்கேயோ உறங்கிக் கிடக்கும் பாடல் எப்படி மெருகேறி கச்சேரிக்குத் தயாராகிறது பாருங்கள்!

https://gaana.com/song/vasudevayani-raga-kalyani-g-n-balasubramaniam

“ஸாஸ ஸநிநிதபாப” என்று தொடங்கி பல்லவி கொஞ்சம் கொஞ்சமாக புது உரு பெறுகிறது. ‘வெடலின’ என்ற இடத்தில் ‘கநிதப’ என்றொரு சுழற்றலில் கல்யாணியின் அழகைச் சொட்ட விடுகிறார் ஜி.என்.பி. அனுபல்லவியோ இந்திரன் முதலான வானவர்கள் வாஸ¤தேவனைப் பூஜித்ததைக் குறிக்கிறது. பலர் பூஜிக்க வேண்டுமல்லவா? அதனால், ‘பூஜிதுடை’ என்ற இடத்தில் ‘‘மேல் ஷட்ஜத்தில்’ நின்று ஒருவரும், ‘மத்யம ஸ்தாயி நிஷாதத்தில்’ நின்று ஒருவரும், ‘தார ஸ்தாயி ரிஷபத்தில்’ நின்று ஒருவரும் பூஜிப்பது போல சங்கதிகள் மலர்கின்றன. ‘மிகவும் அழகாக நர்த்தனம் செய்து, எளியோரைக் காக்கும் ஹரியை போற்றுவதாகக்’ கூறும் சரணத்தில் ‘நிதா வேடுசுனு’ என்ற இடத்தில் ‘நிதா’-வை ஸ்வராக்ஷரமாக்கி, நிஷாதத்தை கொஞ்சமாக அசைத்து, கமகத்துடன் அந்த வரியை முடிக்கிறார். ‘ராக தாளத்துடன் பாடுவதைக் குறிக்கும்’ வரிகளுக்கு அனுபல்லவியில் போட்ட சங்கதிகளே கச்சிதமாய் பொருந்துகின்றன. துரிதமாகவும் இல்லாமல், சவுக்க காலப்ரமாணத்திலும் இல்லாமல், துவார பாலகனின் அழகிய நடனத்தைக் காட்டும் வகையில் மத்யம காலத்தில் பாடுகிறார் ஜி.என்.பி. கல்யாணி ராகத்தின் உத்திராங்கத்தின் அழகு முழுவதையும் வெளிப்படுத்தும் வண்ணம் ஒரு புதிய கீர்த்தனை தயாராகிவிட்டது.

Vasudevayani

வாஸுதேவயனி கீர்த்தனை எஸ்.ராஜம் கைவண்ணத்தில். ஜி.என்.பி நூற்றாண்டு மலருக்காக 2009-ல் வரைந்து கொடுத்த ஓவியம்.

மேற்கூறியது போலத்தான் கீர்த்தனையை ஆராய்ச்சி செய்து ஜி.என்.பி பிரயோகங்களையும், சங்கதிகளையும் அமைத்தாரா என்று கூறுவதற்கில்லை. எனினும், மேற்கூறிய வகையில்தான் அந்த கீர்த்தனையைப் பாடியிருக்கிறார் என்று உறுதியாகக் கூறலாம். அவர் கச்சேரி மேடைக்கு அறிமுகப் படுத்திய கீர்த்தனைகளை எடுத்து, கீர்த்தனையின் பாவத்தையும், அந்த கீர்த்தனையை அவர் கையாண்ட முறையையும் ஒப்பிட்டு நோக்கினோமெனில், அவர் பாடலை மெருகேற்றிய விதம் பாடலில் பொதிந்திருக்கும் பாவத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

ஜி.என்.பி-யால் மெருகேற்றப் பட்டு, கச்சேரி மேடைக்கு வந்த பாடலை, 1940-ஆம் வருடம் 78 rpm இசைத் தட்டாக வெளியிட்டார். திரு. கும்பகோணம் ராஜமாணிக்கம் பிள்ளை வயலின், திரு. பாலக்காடு மணி ஐயர் மிருதங்கம். மொத்தமே எட்டு நிமிட நேரத்திற்குதான் பதிவு செய்யக் கூடிய இசைத் தட்டில், ஒரு ராகம் பாடி, அதை கிரஹித்து வயலின் ராகம் வாசித்து, கீர்த்தனைகளை சங்கதிகளுடன் பாடி, கல்பனை ஸ்வரம் பாடி, தனி ஆவர்த்தனமும் கொடுத்து, கேட்பவருக்கு நிறைவையும் கொடுப்பதென்பது, ‘next to impossible’, என்பார்களே, அந்த வகையில் சேரும். அதை இந்தக் கூட்டணி செய்து காட்டியது என்பதைச் சொல்லவும் வேண்டுமா என்ன?

தார ஸ்தாயி ஷட்ஜமத்தில் தொடங்கி,கீர்த்தனையின் போக்கைப் போலவே ஆலாபனையிலும் கல்யாணியின் உத்தராங்கத்தையே பிரதானப்படுத்தி ஒன்றரை நிமிடத்துக்குள் ஜி.என்.பி-யின் அதிசயக் குரல் அழகான குழைவுகளுடனும், அளவான பிருகாக்களுடனும் படம்பிடித்துக் காட்ட, அந்த அழகிற்கு அழகு சேர்க்கும் வகையில் முப்பது நொடிகளுக்குள் தன் வில் வித்தையை ராஜமாணிக்கம் பிள்ளை காட்டியவுடன் பாலக்காடு மணியையர் தனது மிருதங்கத்தின் தொப்பியை இரு முறை தட்டுகிறார். அதன் பின், தியாகராஜரின் பிரகலாத பக்தி விஜயத்தில் வரும் ‘வாஸ¤தேவயனி’ கீர்த்தனை புதுப் பொலிவுடன் பவனி வருகிறது. ‘சநிபதநி வாஸ¤தேவயனி’ என்று தொடங்கி கல்பனை ஸ்வரம் விறுவிறுப்பாக சில நிமிடங்களுக்குத் தொடர்கிறது. அதன் பின், சதுஸ்ர நடையை மூன்றாலும் ஐந்தாலும் இணைத்து சில ஆவர்த்தனங்களும், மின்னல் வேகத்தில் பரவும் வலக்கைக்குச் சம்பந்தமே இல்லாதது போல இடது கை ரஞ்சகமாய் சில குமுக்கிகளை உதிர்த்தபடி சில ஆவர்த்தனங்கள் என்று வாசித்து, இறுதியில் மோரா கோர்வை வைத்து, பாலக்காடு மணி ஐயர் ஒன்றரை நிமிடதுக்குள் ஒரு தனி ஆவர்த்தனம் வாசித்த பின், ஜி.என்.பி பல்லவியைப் பாடி பாடலை முடிக்கிறார்.

எத்தனை தலைமுறையினர், எத்தனை முறை இந்த ரிக்கார்டை கேட்டிருப்பார்கள்? “மாமா! உங்க காரில் வாஸ¤தேவயனி பாட்டு வருமா? இல்லைன்னா நான் உங்களோட வர மாட்டேன்”, என்று சொன்ன மூன்று வயது பாலகனை எனக்குத் தெரியும். பத்து நிமிடத்தில் ஒரு முழு கச்சேரி கேட்ட நிறைவை எப்படி இவர்களால் ஏற்படுத்த முடிந்தது என்று எண்ணி எண்ணி தூக்கம் வராமல் தவித்தவர்களுள் என் நண்பர்களும் சிலருண்டு. அப்படியிருக்கையில், 1940-ஆம் வருடத்தில் பத்தியாரம் ரூபாய் (இன்றைய கணக்குப் படி மாற்ற வேண்டுமானால், அந்த ஐந்து பூஜ்ஜியங்களுக்குப் பக்கத்தில் எத்தனை பூஜ்ஜியங்களைச் சேர்க்க வேண்டியிருக்குமோ?) ‘ராயல்டி-யாக’ மட்டும் ஜி.என்.பி-க்குக் கிடைத்ததில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. “அவருடைய கடைசி காலம் வரையில் இந்த ரிக்கார்டின் மூலம் ராயல்டி பணம் வந்தபடியே இருந்தது”, என்கிறார் ஜி.என்.பி-யின் இளவல் பாலகிருஷ்ணன்.

“அவர் கொண்டு வந்த பாட்டுகளெல்லாம், அதுக்கு முன்னாடி எப்படியிருந்தது-னு கேள்வியே இல்லை! அதெல்லாம் நிக்கலை, ஜி.என்.பி கொண்டு வந்தது எல்லாம் காலத்தைக் கடந்து நின்னு இருக்கு!”, என்று பல தலைமுறை பாடகர்களை கேட்டிருக்கும் எஸ்.ராஜம் கூறிய போது, “உண்மைதான்! இல்லையெனில், ஜி.என்.பி மறைந்து பதினைந்து ஆண்டுகள் கழித்துப் பிறந்தவனைப் அந்த 8 நிமிட கல்யாணி எப்படி பைத்தியமாய் அடித்திருக்க முடியும்?”, என்றெண்ணிக் கொண்டேன்!

இசையுலக இளவரசர் ஜி.என்.பி நூலில் இருந்து.

Read Full Post »

2014-ல் தினமலரில் எழுதியது. பதிவுக்காக இங்கும் போட்டு வைக்கிறேன்

அபர்ணா பார்வதி’ என்று டி.ஆர்.சுப்ரமணியத்தின் கணீர் குரலில் நளினகாந்தி அலையடித்துக் கொண்டுஇருந்தது. நிறைய கேட்கக் கிடைக்கும் ராகம் என்றாலும், இந்தப் பாடலில் விவரிக்க முடியாத, ஒரு புத்துணர்வு நிரம்பி வழிந்தது.

யார் புனைந்த பாடலிது? கற்பனைக்குப் பெயர்போன டி.ஆர்.சுப்ரமணியத்தின் மற்றுமொரு அற்புத வெளிப்பாடோ என்று எண்ணிக் குழம்புகையில், ”இந்தப் பாடல், கல்யாணி வரதராஜனுடையது,” என்று அறிவித்தார். அப்போதுதான் அந்தப் பெயர் முதன் முதலில் என் காதில் ஒலித்தது.

42540278_263247444531011_5988844179260702720_n

பின்னர் ஒருமுறை அவரிடம், இதுகுறித்து கேட்கையில், ”ஆந்திரத்தில் வளர்ந்த தமிழ்ப் பெண்மணி. அவர் பம்பாயில் புனைந்த சமஸ்கிருதப் பாடலைத் தான் அன்று பாடினேன். தானுண்டு தன் இசை உண்டு என்று வெளியில் தெரியாத எத்தனையோ ரத்தினங்களில் இவரும் ஒருவர்,” என்றார். பம்பாயில் வானொலி நிலையத்தில் பணிபுரிந்து வந்த, கல்யாணி வரதராஜன் வாய்ப்பாட்டு, வயலின், வீணை மூன்றிலும் தேர்ந்து விளங்கினார்.

42532359_256637188526922_354650469131354112_n

பம்பாய்க்கு கச்சேரி செய்ய சென்ற, எஸ்.கல்யாணராமன், எஸ்.ராஜம், டி.ஆர்.சுப்ரமணியம் போன்ற மேதைகள், இவரைத் தேடிச் சென்று, இவர் பாடல்களைக் கற்று கச்சேரிகளில் பரப்பிஉள்ளனர். தேர்ந்த சமஸ்கிருதத்தைத் தவிர, தமிழிலும் தெலுங்கிலும் பாடல்கள் புனைந்திருக்கும் இவர் ஐந்தாம் வகுப்பு வரையே படித்தவர் என்றொரு குறிப்பு தெரிவிக்கிறது. எழுபத்திரண்டு மேளகர்த்தா ராகங்களிலும் மற்ற ராகங்களிலும், பல்வேறு தெய்வங்களின் பெயரில், இவரது பாடல்கள் அமைந்துள்ளன.

அழகான ஸ்வராக்ஷரங்களும், கச்சிதமான சிட்டை ஸ்வரங்களும், இசையைக் குலைக்காத சாகித்யங்களும் இவர் பாட்டில் நிறைந்திருக்கின்றன, வர்ணங்கள், கீர்த்தனங்கள், தில்லானாக்கள், ராகமாலிகைகள் என்று ஒரு முழுக் கச்சேரியே, இவர் பாடல்களைக் கொண்டு மட்டும் செய்யக்கூடிய வகையில், 700க்கு மேலான பாடல்களைப் புனைந்து உள்ளார். துந்துபி, பானு கீரவாணி போன்ற கேட்கக் கிடைக்காத ராகங்களிலும் இவர் பாடல்கள் அமைந்துள்ளன. இந்துஸ்தானி இசையிலும் தேர்ச்சி பெற்றிருந்த இவர், வடநாட்டு ராகங்களான த்விஜாவந்தி, மதுகவுன்ஸ், சந்திரகவுன்ஸ், குர்ஜரி தோடி போன்ற வற்றிலும் கீர்த்தனைகள் புனைந்து உள்ளார். இவர் கீர்த்தனைகளைத் தொகுக்கவும் பிரபலப்படுத்தவும் இவரது மருமகள் சரோஜா ராமன், டில்லி யில் இருந்தபடி பெருமுயற்சி எடுத்து வருகிறார். கல்யாணி வரதராஜனின் பேரன், டில்லி ஆர். ஸ்ரீனிவாசன் ஒரு சிறந்த மிருதங்க கலைஞர்.

துந்துபி, பானு கீரவாணி போன்ற கேட்கக் கிடைக்காத ராகங்களிலும் இவர் பாடல்கள் அமைந்துள்ளன. இந்துஸ்தானி இசையிலும் தேர்ச்சி பெற்று இருந்த இவர், வடநாட்டு ராகங்களான த்விஜாவந்தி, மதுகவுன்ஸ், சந்திரகவுன்ஸ், குர்ஜரி தோடி போன்றவற்றிலும் கீர்த்தனைகள் புனைந்துள்ளார்.

படங்கள்: கிருஷ்ணன் ராஜேந்திரம் (கல்யாணி வரதராஜனின் பேரன்)
கல்யாணி வரதராஜனே  பாடிய சில பாடல்கள் இங்கு உள்ளன:

Read Full Post »

2014 டிசம்பரில் தினமலரில் வெளியான கட்டுரை

கச்சேரி மேடையில் சோபிக்கும் கலைஞர்கள் எல்லோருக்கும் சங்கீத இலக்கணத்தில் ஆழ்ந்த தேர்ச்சி இருக்கக் கூடும் என்று சொல்வதற்கில்லை. இலக்கண நூல்களில் ஆய்வாளர்களாக விளங்குபவர்கள் எல்லோரும் தேர்ந்த கச்சேரி வித்வான்களாக இருப்பதில்லை. செவ்வியல் இசையில் ஆய்வாளர்களை எடுத்துக் கொண்டால் சமஸ்கிருத நூல்களில் தேர்ச்சி உடையவர்களுக்கு பழந்தமிழ் நூல்களில் பரிச்சியம் இருப்பதில்லை. தமிழிசை ஆய்வு செய்பவர்களுள் பலருக்கு வடமொழித் தேர்ச்சி இருப்பதில்லை. மேற்சொன்னவற்றை ஒருசேரப் பெற்றவர்களைப் பற்றி நினைக்கும் போதே தொன்றும் முதல் பெயர் டாக்டர் எஸ்.இராமநாதன்.

அண்ணாமலை பல்கலைகழகத்தில் ‘சங்கீத பூஷண’ பட்டயப் படிப்பில் சேர்ந்ததன் மூலம் திருவையாறு சபேஸ ஐயர், டைகர் வரதாச்சாரியார் போன்ற ஜாம்பவான்களிடம் தன்னைப் பட்டைத் தீட்டிக் கொண்ட எஸ்.இராமநாதன், இள வயது முதலே இசை ஆய்விலும் முனைப்போடு செயல்பட்டு வந்தார். வாய்ப்பாட்டிலும் வீணையிலும் தேர்ந்து விளங்கிய அவரது கச்சேரி வாழ்க்கையோடு ஆய்வு வாழ்க்கையும் இரண்டரக் கலக்க அவர் பணியாற்றிய பல்வேறு பல்கலைகழகங்கள் பெரிதும் உதவின.

1950-களில் இராமநாதன் வெளியிட்ட “சிலப்பதிகாரத்து இசை நுணுக்க விளக்கம்” என்கிற நூல் பெரும் வரவேற்பைப் பெற்றது. பின்னாளில் வெஸ்லியன் பல்கலைகழகத்தில் இந்தத் தலைப்பிலேயே ஆய்வினைத் தொடர்ந்து முனைவர் பட்டத்தினையும் பெற்றார். ஐ.நா சபையில் அவருக்குக் கிடைத்த கச்சேரி வாய்ப்பை அவரது இசை வாழ்வின் உச்சங்களுள் ஒன்றாகக் கருதலாம்.

இந்தியா திரும்பிய இராமநாதன் கர்நாடக இசை பயிற்றுவிப்பவர்களுள் முதன்மையானவர்களாகக் கருதப்பட்டார். அந்த நிலையிலும் தன்னை ஒரு முதல் நிலை மாணவனாகக் கருதி புதியனவற்றை தினம் தினம் திரட்டித் தொகுத்தது அவரது சிறப்பம்சமாகும்.

இராமநாதன் எவ்வளவுக்கு எவ்வளவு சிறந்து கலைஞரோ அவ்வளவுக்கு அவ்வளவு சிறந்த ரசிகர். 22 ஸ்ருதிகள், ராக லட்சணங்கள் போன்ற தலைப்பில் அவர் ஆற்றிய உரைகள் சங்கீத விற்பன்னர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது என்றால் தியாகராஜருடன் ஒரு நாள், பாமரர்க்கு இசை போன்ற தலைப்புகளில் அவர் கொடுத்த விரிவுரைகளை சாதாரண ரசிகர்கள் இன்றளவும் நினைவில் வைத்துள்ளனர்.

பி.ராஜம் அய்யருடன் சேர்ந்து சுப்பராம தீட்சிதரின் சங்கீத சம்பிரதாய பிரதர்ஷணியை தமிழாக்கம் செய்தார். பாரதியாரின் பாடல்கள், அண்ணாமலை ரெட்டியாரின் காவடிச் சிந்துகள், கோபாலகிருஷ்ண பாரதியின் நந்தனார் சரித்திரக் கீர்த்தனைகள் போன்ற பல தமிழ்ப் பாடல்கள் பாதுகாக்கப்பட்டு பரவ எஸ்.இராமநாதன் எடுத்துக் கொண்ட முயற்சி அளப்பெரியது.

எத்தனையோ பட்டங்கள் தேடி வந்து அலங்கரித்த போதும், எந்தவித படாடோபமும் இன்றி சீனிவாஸ சாஸ்திரி ஹாலில் அமர்ந்தபடி முன்னுக்கு வந்து கொண்டிருக்கும் இளைஞரை ஊக்கிவிக்கும் ரசிகராய் இருப்பதையே பெரிதும் விரும்பினார். சிறந்த வாக்கேயக்காரராகவும் விளங்கிய இராமநாதனின் பெயர் இன்று அவருடைய நூல்களாலும் அவர் உருவாக்கிய மாணவர்களாலும் உயர்த்திப் பிடிக்கப்பட்டு வருகிறது.

பி.கு: டாக்டர் ராமநாதனின் நூற்றாண்டு விழா நாளை மாலை 5.00 மணிக்கு சென்னை வாணி மஹாலில் நடை பெறுகிறது.

Read Full Post »

2014-ல் தினமலரில் பதினைந்து கட்டுரைகள் டிசம்பரில் எழுதினேன். அவற்றை இங்கு வெளியிடவில்லை. இன்று கல்யாணராமனின் பிறந்த நினைவு நாளை சாக்காக வைத்து அவரைப் பற்றி எழுதியதை இங்கு வெளியிட்டுத் தொகுத்துக் கொள்கிறேன்.

தஞ்சாவூர் எஸ் கல்யாணராமன்

Thanjavur S Kalyanaraman

முன்னோடி கலைஞர்களில் சிலர் அவர்கள் பிறக்கவேண்டிய காலத்துக்கு முன்னால் பிறந்துவிடுவதுண்டு. அதனாலேயே அவர்கள் வாழும் காலத்தில் அவர்களுக்கு நியாயமாய் கிடைக்க வேண்டிய பெயரும் புகழும் கிடைக்காமல் போய்விடுகிறது. இத்தகைய கலைஞர்களே, “அவர் மறைந்தாலும் அவர் இசை சிரஞ்சீவியாய் இருக்கும்”, என்ற சம்பிரதாய மொழிக்கு அர்த்தம் அளிப்பவர்கள். அப்படிப்பட்ட சிரஞ்சீவிகளுள் முதன்மையானவர் தஞ்சாவூர் எஸ். கல்யாணராமன்.

கல்யாணராமனைப் பார்த்தேயிராத இன்றைய இளைஞர்களுக்கு அவருடைய சங்கீதமே ஆதர்சமாக விளங்குகிறது. மனத்தின் கற்பனை ஓட்டங்களுக்கு மனிதனின் குரல் ஓரளவுக்குத்தான் ஈடு கொடுக்க முடியும். கல்யாணராமனின் ஆய்வு நோக்கும் தீரா முயற்சியும் மனிதக் குரலின் சாகஸங்களுக்கு எல்லையேயில்லை என்பது போன்ற மாயத் தோற்றத்தை உருவாக்கியிருக்கின்றன.

புதுமைக்குப் பெயர் போன ஜி.என்.பி வழியில் வந்த கல்யாணராமன், தன் குருவின் பாணியை அப்பட்டமாய் பின்பற்றாமல் இள வயது முதலே தனக்கென வழியை வகுத்துக் கொண்டார். இசையை தன் வளர்ச்சிக்கான கருவியாய் கருதாமல் தன்னை இசையின் வளர்ச்சிக்கான கருவியாய் நினைத்துக் கொண்ட கல்யாணராமனின் விஸ்வரூபம் அவர் சமகாலத்தினவருக்குக் கண்கூச வைத்தது.

ஸுசரித்ரா, சந்திரஜோதி போன்று யாரும் தொட்டிராத விவாதி ராகங்களைக் கையாளுதல், நுட்பமான தாள அமைப்பில் நடை பல்லவிகளைப் பாடுதல், பிரமிக்க வைக்கும் கிரகபேதங்களை செய்தல், மேளகர்த்தா ராகங்களில் பஞ்சமத்தைத் தவிர்த்து இரு மத்யமங்களையும் வைத்துக் கொண்டு ”பஞ்சம வர்ஜ த்விமத்யம ராகங்கள்” என்று ஒரு புதிய ராக வகையயே உருவாக்கி அவற்றுக்கு உயிர் கொடுத்தல் என்று கல்யாணராமன் புகுத்திய புதுமைகள் இன்றுதான் ஓரளவுக்குப் புரிந்து கொள்ளப்படுகின்றன.

ஆழ்வார் பாசுரங்கள், ஜெயதேவர் அஷ்டபதிகள் போன்றவற்றை கல்யாணராமனின் அரிய ராகத்தில் அமைந்த அற்புத மெட்டுக்கள் அலங்கரிக்கின்றன. மாயையை பழித்தல் என்ற பாரதி பாடலுக்கு ஸுமனிஸரஞ்சனியின் கல்யாணராமன் அமைத்திருக்கும் மெட்டின் அழகை வெளிப்படுத்த வார்த்தைகளுக்கு வலுவில்லை. கேட்டுத்தான் உணர வேண்டும். இன்று பிரபலமாய் விளங்கும் “கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி” பாடலின் மெட்டும் கல்யாணராமனின் கைவண்ணம்தான்.

இசை கற்பிப்பதில் கல்யாணராமன் ஒரு துரோணர்தான். தன்னிடம் வந்தவர்களுக்கு அள்ளி அள்ளி வழங்கியதால் மட்டுமல்ல! தன் இசையால் தன்னைப் பார்த்தேயிராத சந்ததியனரையும் ஏகலைவர்களாய் மாற்றுவதால்!

Read Full Post »

Older Posts »