Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Posts Tagged ‘பரிவாதினி’

பரிவாதினியைத் தொடங்கி ஒன்பது ஆண்டுகள் நிறைவடைந்து பத்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

இந்த ஒன்பது ஆண்டுகளில் பரிவாதினியின் ஆகப் பெரிய நிறைவு என்பது – இசைத் துறைக்கு ஏதாவது நன்மை செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் பலர், அதை பரிவாதினியின் மூலமாக செய்தால் சரியானவருக்குப் போய்ச் சேரும் – என்கிற நம்பிக்கையில்தான்.

அந்த வகையில், ஒரு முக்கியமான தொடக்கத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

சில ,மாதங்களுக்கு முன் Natarajan Srinivasan என்னைத் தொடர்பு கொண்டார். தனது பெற்றோர் பத்மா/சீனிவாசன் பெயரில் வருடா வருடம் நாகஸ்வர கலைஞர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆசையைத் தெரிவித்தார். நாங்கள் சிலமுறை தொலைபேசி ஒரு முடிவுக்கு வந்தோம்.

நாகஸ்வரம்/தவில் துறையில் எத்தனையோ சாதனைகள் செய்த கலைஞர்கள் காலப்போக்கில் முதுமை காரணமாகவும், காலச்சூழல் காரணமாகவும் அதிகம் வெளியில் தெரியாமல் ஆகிவிடும் நிலை உருவாகிவிடுகிறது. சில கலைஞர்கள், முதுமை காரணமாக வாசிக்க முடியாத சூழலில், சற்றே சிக்கலான நிதி நிலைமையில் வாழ்க்கையை நடத்தும் நிலையையும் காணமுடிகிறது.

இவ்விரு விஷயங்களை, (1. துறையில் சாதனையாளர், 2. நிதி உதவி கிடைத்தால் வாழ்க்கைக்கு உதவியாக இருக்கும் என்ற நிலையில் இருப்பவர்) கருத்தில் கொண்டு வருடம் ஒருமுறை பரிவாதினி அடையாளம் காட்டும் கலைஞருக்கு பத்மா/சீனிவாசன் அறக்கட்டளை சார்பாக ரூபாய் ஒரு லட்சம் சன்மானத்தை நண்பர் நடராஜனின் குடும்பத்தினர் வழங்கவுள்ளனர்.

இந்த வருடத்துக்கான விருதை மூத்த தவில் கலைஞர் திரு.ஆரணி பாலு அவர்கள் பெறவுள்ளார்கள். (அவரைப் பற்றி தனிப்பதிவு எழுதுகிறேன்.) வருடாந்திர நவராத்திரி நாகஸ்வர கச்சேரி வைபவத்தில் இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெறும் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர் நடராஜன் குடும்பத்தினருக்கு என் தனிப்பட்ட முறையிலும், இசைத் துறை சார்பாகவும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

Read Full Post »

விஜய தசமி அன்று இரண்டு முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி.

இலக்கிய உலகத்துக்கும், இசை உலகத்துக்கும் தினமணி சிவகுமார் நன்கு தெரிந்த பெயர்தான்.

தினமணி கதிரின் ஆசிரியர் பொறுப்பில் அவர் சாதித்தவை ஏராளம் என்றாலும் அவர் வருடா வருடம் மார்கழி மாதத்தின் போது இசை மலராய்த் தொகுத்த தினமணி கதிர் இதழ்கள் மட்டுமே கூடத் தனிப்பெரும் சாதனையாகக் கருதத்தக்கவை.

அவருடைய தினமணி நாட்களுக்குப் பிறகு அத்தகு மலர் தயாரிப்புகள் நின்று போயின என்பதில் எனக்குத் தனிப்பட்ட முறையில் பெருத்த வருத்தமுண்டு.

இதைப் பற்றி எத்தனையோ முறை நாங்கள் பேசியிருந்தாலும், இந்த வருடம்தான் அத்தகைய வருடாந்திர இசை மலரை பரிவாதினி வெளியீடாகவே தயாரித்தாலென்ன என்கிற எண்ணம் எழுந்தது.

இந்த மார்கழிக்கு மீண்டுமொருமுறை சிவகுமாரின் தயாரிப்பில் இசை மலர் வெளியாகவுள்ளது என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.சிவகுமார் – பழைய விஷயங்களின் காதலர். கதிர் போன்ற பத்திரிக்கைக்கு உள நிர்பந்தங்களுக்கு இடையிலும் கணிசமான அளவு பழைய செய்திகளைத் தொகுத்து ஆவணப்படுத்திவிடுவார். இந்தமுறை அத்தகு நிர்பந்தம் ஏதும் இல்லாத சூழலில் மலரப் போகும் மலரை நினைத்தாலே எனக்குப்பரவசமாக இருக்கிறது.

இரண்டாவது அறிவிப்பு உங்களுக்கு ஆச்சர்யத்தைத் தராது என்று நினைக்கிறேன். கடந்த வருடங்களில் இரண்டு நாட்காட்டிகளை – கலைஞர்களை கௌரவிக்கும் வ்சகையில் பரிவாதினி வெளியிட்டதை நீங்கள் அறிந்திருக்கக்கூடும். இந்த முறை காருகுறிச்சியாரின் நூற்றாண்டை முன்னிட்டு காருகுறிச்சி சிறப்பு வெளியீடாகைந்த நாட்காட்டி வெளிவரும்.

இசை மலரையும், நாட்காட்டியையும் சேர்ந்தே வெளியிடத் திட்டமிட்டுள்ளோம். வரும் நாட்களில் மற்ற விவரங்களை வெளியிடுகிறேன்.

Read Full Post »

சென்ற வருடத்தில் தொடங்கிய இரு மாதங்களுக்கு ஒருமுறை நடை பெரும் நாகஸ்வர நிகழ்ச்சியில், இந்த முறை மிகவும் அனுபவம் வாய்ந்த திருபாம்புரம் சகோதரர்கள் வாசிக்கிறார்கள். அவர்களுடன் புகழின் உச்சியில் இருக்கும் மன்னார்குடி திரு. வாசுதேவனும், திருக்கடையூர் திரு. பாபுவும் வாசிக்கின்றனர். விவரங்கள் கீழே.

PHOTO-2019-02-17-20-07-17

சில மாதங்களுக்கு முன் ஒரு நாகஸ்வர நாட்காட்டியை பரிவாதினி உருவாக்கி அதில் 12 கலைஞர்களைப் பற்றிய குறிப்பையும், படங்களையும் இடம்பெறச் செய்தது.இந்த ஆண்டு நடைபெறவுள்ல நாகஸ்வர நிகழ்ச்சிகளை அந்த கலைஞர்களுக்கு சமர்ப்பணம் செய்ய உள்ளோம். அந்த வகையில், முதல் நிகழ்ச்சி வண்டிகாரத்தெரு மணி/மான்பூண்டியா பிள்ளை அவர்களுக்கும், கீழ்வேளூர் சிங்காரவேலு பிள்ளை அவர்களுக்கும் சமர்ப்பணம் செய்கிறோம்.

PHOTO-2019-02-17-20-07-17 (1)

இந்தக் கலைஞர்களைப் பற்றி காலெண்டரில் பதிவான குறிப்பு:

Vanidakaratheru Mani/Manpoondiah Pillai

Musicians usually attach their hometown to their names. Hailing from Mayiladuthurai that boasted of several nagaswaram greats, Subramania Pillai and Manpoondia Pillai chose to attach the street they lived – Vandikkaara Theru – to their names. The older of the brothers, Subramania Pillai, learnt from his father Ramiah Pillai. The younger brother Manpoondiah Pillai learnt from his father as well as his brother.  The brothers were known for their unique elaborate raga exploration. To them the raga that they took up never constrained them. An apparently small raga with limited scope would be explored for several hours. One such instance when they played Dwijavanthi raga alapana all night during a temple festival is still recalled by many.

Kivalur Sinagaravelu Pillai 

There were many great practitioners of this art. Not all of them can be called as great teachers. Kizhvelur “Kunju” Singaravelu Pillai is widely acknowledged as one of the greatest teachers of thavil ever. Stretching beyond the regular teaching hours of the college that worked in, he would take special interest in each and every student.  His ability to instill the basics in a student was unparalleled. Even when more than thirty students played together, his discerning ears would pick up the slightest of the mistakes. In a teaching tradition that was largely oral, he was a pioneer in teaching through accurate notations. Many of his students have gone on to become maestros. Some of his students include Mannargudi Vasudevan, Thirukarugavur Gurunathan, Kovilur Kalyanasundaram, Idumbavanam Kannan and Thirukadaiyur Babu.

இதோடு, பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மாணவர்கள் இருவருக்கு வாத்தியங்கள் (1 தவில், 1 நாகஸ்வரம்) வழங்கப்படும்.

வித்வான் வியாசர்பாடி கோதண்டராமனின் பரிந்துரையில், வேலூரைச் சேர்ந்த அஜித்துக்கு தவில் வழங்கப்படுகிறது.

PHOTO-2019-02-09-10-00-47

வித்வான் இஞ்சிக்குடி மாரியப்பனின் பரிந்துரையில் காட்டூரைச் சேர்ந்த அபினேஷுக்கு நாகஸ்வரம் வழங்கப்படுகிறது.

PHOTO-2019-01-16-11-02-58

முன்பே குறிப்பிட்டது போல, தவில் வித்வான் குயப்பேட்டை தட்சிணாமூர்த்தி அவர்களின் நலனுக்காக உதவித் தொகையும் அன்று வழங்கப்படும்.

cdb4e9c9-cdd7-4add-afeb-7baae57deb8b

இதற்காக பரிவாதினியின் இருப்பிலிருந்து ரூபாய் ஐம்பதாயிரம் வழங்கப்படும். இதைத் தவிர, இந்த முயற்சிக்கின்று வந்துள்ள நன்கொடையும் சேர்த்து அன்று வழங்கப்படும். இதுவரையில் இதற்கென்று ரூபாய் பதினெட்டாயிரம் திரண்டுள்ளது.

 

 

Read Full Post »

சென்ற மாதம் நாகஸ்வர கலைஞர் வியாசர்பாடி கோதண்டராமனைச் சந்தித்த போது அவர் தவில் வித்வான் ஒருவரைப் பற்றி குறிப்பிட்டு, அவருக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்று வேண்டிக் கொண்டார். அந்த வித்வானைப் பற்றிய குறிப்பு பின்வருமாறு:

cdb4e9c9-cdd7-4add-afeb-7baae57deb8b.JPG

1941-ல் பிறந்த குயப்பேட்டை திரு.கே.என்.தட்சிணாமூர்த்தி, தன் தந்தையார் நாகப்பனிடம் பயிற்சி பெற்று சென்னையில் பிரபலமாக விளங்கிய/விளங்கும் பல நாகஸ்வர கலைஞர்களுடன் வாசித்தவர்.

சென்னை பி.ஐ.நடேச பிள்ளை, சிந்தாதிரிப்பேட்டை நாராயணசாமி, பி.என்.கோவிந்தசாமி, தேனாம்பேட்டை பி.கே.மதுரை, மாம்பலம் எம்.கே.சுவாமிநாதன், சைதை எஸ்.நடராஜன், சென்னை வி.என்.பாலசுப்ரமணி, இந்நாளில் பிரபலமாய் விளங்கும் மாம்பலம் எம்.கே.எஸ் சிவா போன்ற கலைஞர்களுடன் தொடர்ந்து வாசித்தவர். எண்ணற்ற தவில் வித்வான்களுடன் இணைந்தும் வாசித்துள்ளார்.

இவர் உருவாக்கியிருக்கும் பல மாணவர்கள் இன்று சிறப்பாக வாசித்து வருகின்றனர்.

தவிலை மட்டுமே நம்பி வாழ்ந்து கொண்டிருந்த இவர், இன்று முதுமையினாலும், உடல் நலிவினாலும் வாசிக்க முடியாத நிலையில் உள்ளார். இதனால் இவரது பொருளாதார நிலை மிகவும் நலிந்துள்ளது.

வரும் ஃபெப்ரவரி 23 அன்று நடக்கவுள்ள பரிவாதினி/நாத இன்பம் சேர்ந்து ஒருங்கிணைத்திருக்கும் நாகஸ்வர கச்சேரிக்கு முன், இவருக்கு உதவும் வகையில் ஒரு பணமுடிப்பைக் கொடுக்க பரிவாதினி எத்தனிக்கிறது.

இந்த நிகழ்வில், பரிவாதினியுடன் கைகோர்க்க இசை ரசிகர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் உதவும் மனம் படைத்த நல்லோர்களை பணிவன்புடன் அழைக்கிறேன்.

உதவி செய்ய விரும்புவோர் parivadinimusic@gmail.com என்ற முகவரியைத் தொடர்பு கொள்ளலாம். வாட்சாப்-ல் 99809 92830 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

Read Full Post »

தவில்/நாகஸ்வரக் கலைஞர்களைப் பற்றிய முக்கிய ஆவணம் முனைவர். பி.எம்.சுந்தரம் எழுதியுள்ள ‘மங்கல இசை மன்னர்கள்’. அந்தப் புத்தகத்தின் முடிவில், பல கலைஞர்களைப் பற்றி எழுத முடியாமல் போனதை நூலாசிரியர் சொல்கிறார். சமீபத்தில் நண்பர் சரவணன் பல அரிய கலைஞர்களின் புகைப்படங்களை அனுப்பி வைத்தார்.

அதைப் பார்த்ததும், ‘மங்கல இசை மன்னர்கள்-ன் தொடர்ச்சியாய் இந்தக் கலைஞர்களைப் பற்றிய பதிவுகளை செய்யலாமா என்ற எண்ணம் வந்தது. விரிவான பதிவுகளுக்கு மாதக் கணக்கில் உழைப்பு தேவை. விரைவாய் ஒரு குறிப்பு வரைந்து, முதல்கட்டமாய் ஒரு நாட்காட்டியாய் இருக்கும் படங்கள் கொண்டு உருவாக்கலாம் என்ற எண்ணம் உதித்தது.

எண்ணத்தை ஃபேஸ்புக்கில் பகிர்ந்த போது கிடைத்த வரவேற்பைப் பார்த்ததும் காரியத்தில் இறங்கினோம். ஒரு வாரத்தில், ஆறு தவில் கலைஞர்கள், ஆறு நாகஸ்வரக் கலைஞர்களை பட்டியலிட்டுக் கொண்டு (யாரை விடுவது என்பதில் பெரும்பாடுபட்டோம் என்பதைச் சொல்லவேண்டியதில்லை), படங்களைப் பெற்று பெரும்பாலும் அவர்களிடம் கற்றவர்களிடம் பேசி சிறு குறிப்பு ஒன்றையும் வரைந்தோம்.

நாட்காட்டியிஒல் இடம் பெற்றிருக்கும் கலைஞர்களின் பட்டியல் கீழே:

Valangaiman Shanmugasundaram
Sembanarkoil Brothers (SRD Muthukumaraswami and SRD Vaidhyanathan)
Perumpallam Venkatesan
Madurai Ponnuthayi
Thirucherai Muthukumaraswami
Vanidakaratheru Mani/Manpoondiah Pillai
Poraiyar Venugopal
Dharmapuram Govindarajan
Swamimalai Govindaraja Pillai
Thirumagalam Somaskanda Pillai
Kivalur Sinagaravelu Pillai
Pandhanainalloor Dakshinamurthi

காலண்டரைப் பற்றிஒய அழகான அறிமுகம் இன்று இந்து நாளிதழில் நண்பர் கோலப்பனின் வாயிலாக வந்துள்ளது.

calendar

முதன் முயற்சி என்பதால் மிகக் குறைவான பிரதிகளே அச்சடித்துள்ளோம். நாட்காட்டியின் பிரதிகள் வேண்டுவோர்.

Parivadini Charitable Trust, Union Bank of India Account Number: 579902120000916 branch: Kolathur, Chennai, IFSC Code: UBIN0557994

என்ற வங்கிக் கணக்கில் பணம் செலுத்தி parivadinimusic@gmail.com-க்கு மின்னஞ்சல் அனுப்பலாம். ஒரு பிரதியின் விலை 100 ரூபாய். வெளி ஊர்களில் இருப்பவர்களுக்கும் அனுப்பி வைக்கப்படும். அஞ்சல் செலவுக்கு என்று நீங்கள் இஷ்டப்பட்டதை சேர்த்துச் செலுத்தலாம். செலுத்தாவிடினும் (வெளிநாடென்றாலும்) நாட்காட்டி அனுப்பிவைக்கப்படும்.

இதுவொரு தொடக்கம். தொடர இறையருள் கிட்ட வேண்டும்.

Read Full Post »

சென்ற ஞாயிற்றுக்கிழமை, 25 நவம்பர் 2018-ல், பர்லாந்து விருது 2018-ஐ

திரு.முருகானந்தம் பெற்றார்.

விருது விழாவின் காணொளி இங்கே:

படங்கள் சில:

Read Full Post »

2013-ல் தொடங்கிய பரிவாதினி வருடாந்திர இசை விழா இந்த ஆண்டும் சில வாரங்களில் நடை பெறவுள்ளது.

நிகழ்ச்சி நிரல் இங்கே:

Parivadini Navaratri Series Invitation

இந்த வருடம் கஞ்சிரா மாமேதை ஹரிசங்கர் பிறந்த அறுபதாவது ஆண்டு என்பதனால் அவருக்கு வாத்தியங்கள் செய்து கொடுத்த முருகானந்தம் அவர்களுக்கு பர்லாந்து விருதினை வழங்கிவதில் பரிவாதினி பெருமையடைகிறது.

பரிவாதினியின் முயற்சிகள் ரசிகர்களின் ஆதரிவினால்தான் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது என்பதைச் சொல்லவும் தேவையில்லை. பங்களிக்க விரும்புவோர் பின்வரும் வங்கிக் கணக்கில் நன்கொடையை அளிக்கலாம்.

Parivadini Charitable Trust,
Union Bank of India
Account Number: 579902120000916
branch: Kolathur, Chennai,
IFSC Code: UBIN0557994

Read Full Post »

சென்னை போன்ற நகரங்களில் கலைக்காக இசைப் பயிற்சி பெருபவர்கள் அதிகம். கிராமப்புரங்களில், குறிப்பாக நாகஸ்வரம்/தவில் பயில்பவர்களைக் காணும் போது கலைக்காக கற்பவர்களைவிட வறுமையினால் இசைப்பள்ளிக்கு வரும் மாணவர்கள் பலரைக் காணமுடியும்.

அத்தகைய மாணவர்களை ஊக்கிவிக்கும் வண்ணம், முடிந்த அளவில் பரிவாதினியின் மூலமாக உதவி செய்யவுள்ளோம். அதன் தொடக்கமாக வரும் நவம்பர் 3-ஆம் தேதி நான்கு மாணவர்களுக்கு (3 நாகஸ்வரம், 1 தவில்) இசைக்கருவிகளைத் வாங்கித் தரவுள்ளோம்.

பரிவாதினி ஒருங்கிணைத்திருக்கும் வித்வான் யாழ்பாணம் பாலமுருகன் அவர்களின் நாகஸ்வரக் கச்சேரிக்கு முன் இந்த நிகழ்வு இடம் பெரும்.

மாணவர்கள் விவரம்:

நாகஸ்வரம்: பாலகணேஷ் (16), சந்திரசேகர் (18), வேல்மூர்த்தி (17)

தவில்: கோபீஸ்வரன் (9)

இந்த முயற்சியில் பங்களிக்க விரும்புவோர் பரிவாதினிக்கு நன்கொடை செலுத்தலாம்.

For contributions:

Parivadini Charitable Trust,
Union Bank of India
Account Number: 579902120000916
branch: Kolathur, Chennai,
IFSC Code: UBIN0557994

Read Full Post »

நேற்று சின்மயி கர்நாடக சங்கீத உலகில் பெண்களிடம் வரம்பு மீறியவர்களென்று ஒரு பெயர் பட்டியல் வெளியிடத் தொடங்கியுள்ளார்.

இந்த விஷயத்தில், எது வரம்பு? பாதிக்கப்பட்டது உண்மையா? அவதூறாக இருக்க முடியாதா? பாதிக்கப்பட்டவர் விவரம் வெளியில் தெரியாத போது, யாரைப் பற்றி வெண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் சொல்லலாம் என்று ஆகிவிடாதா?

என்றெல்லாம் பல கேள்விகள்…

 

2951080-KWGMGAQN-32

Source: https://www.saatchiart.com/art/Painting-stop-child-abuse/999085/3690152/view

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதிலை சுலபமாக கண்டடைய முடியாது. இதற்கெல்லாம் பதில் தெரிந்த பின்தான் நாம் வரம்பு மீறலைப் பற்றி பேச வேண்டும் என்றால் இன்னும் ஒரு நூற்றாண்டுக்கு மௌனமாகத்தான் இருக்கமுடியும்.

கர்நாடக இசையின் தீவிர ரசிகனாக பல ஆண்டுகளாய் இருப்பவன் என்கிற வகையில் பல கலைஞர்களுடனும், மாணவர்களுடனும் பழக வாய்ப்பு எனக்கு அமைந்துள்ளது. பரிவாதினியைத் தொடங்கிய பின் பல சபாகள், அதன் நிர்வாகிகள் , நிர்வாகிகளாக இல்லாத போதும் அதிகாரம் செலுத்தும் நிழல் மனிதர்கள் என்று பல நாவல்களுக்கு உரிய மனிதர்களுடன் பழக நேர்ந்தது.

அந்த அனுபவத்தில், பெண்களிடம் வரம்பு மீறி நடப்பதில் இந்தத் துறை எந்தத் துறைக்கும் குறைந்ததல்ல என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.

இசையைப் பொருத்தவரை (மற்ற துறையிலும் இது பொருந்தலாம்) கலை காட்டும் உயரத்தில் கலைஞனையும் வைத்துப் பார்ப்பது நமது பிழையே. தூரத்தில் அமர்ந்து போலி வெளிச்சத்தில் மேடையில் அமர்ந்திருக்கும் கலைஞனைக் காணும்போது இசையின் உன்னதம் கலைஞனையும் கலையையும் இரண்டரக் காட்டும் மாயவித்தை இயற்கையானதே. ஆனால் தோற்றமயக்கங்கள் என்றைக்கு நிதர்சனங்களாயிருக்கின்றன. மேடை இறங்கயதும் அரிதாரம் கலைந்துதானே தீரவேண்டும்?

கலைஞர்கள் மட்டும்தானா இதில் அடக்கம்?

குரு ஸ்ருதி சேர்த்துக் கொள்ளும் போது,  ”சிஷ்யையை அனுப்பு, உனக்காக ஸ்பெஷல் சீரக வெந்நீர் போட்டு வைத்திருக்கிறேன்”, என்று அறைக்குள் அழைத்துப் போகும் காரியதரிசிக்கு பயந்து சங்கீதமே வேண்டாம் என்று முடிவெடுத்த பெண்ணை எனக்குத் தெரியும்.

“எனக்கு எப்போ வேணாலும் நேரம் கிடைக்கும். நான் பாதி ராத்திரிக்கு கூப்பிட்டாலும் பெண்ணை அனுப்பி வெக்கணும். சங்கீதம்-னா சும்மா இல்லை”, என்று முதல் நாளே பெற்றோரிடம் நிபந்தனை போட்டுக் கொள்ளும் வாத்தியார்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

என்னதான் திறமை வாய்த்தாலும்,  இசையை மட்டும் தொழிலாக வைத்துக் கொள்ள ஒரு கலைஞன் என்னென்னமோ சமரசங்களை செய்துகொள்ளத்தான் வேண்டியிருக்கிறது. ஐந்து வருடங்களாக மட்டுமே, அதுவும் மிகச் சிறிய அளவில் கச்சேரிகள் ஒருங்கிணைத்து வரும் பரிவாதினிக்கே வாரம் தவறாமல் வாய்ப்புகள் கேட்டு எங்கிருந்தெல்லாமோ அழைப்புகள் வந்தபடியிருக்கின்றன. அந்த அழைப்புகளில் பலநேரம் “எத்தைத் தின்றால் பித்த தெளியும்” என்கிற பதட்டமும் சேர்ந்து ஒலிக்கும்.

“வேற எதாவது பண்ணனுமா ஸார்…”, என்று ஒரு இளைஞனின் அப்பா இழுக்கும்போது தொடங்குகிறது இந்த அழுக்காட்டம். ”கச்சேரி நடத்தறது என்ன சுலபமாவா இருக்கு? கொஞ்சம் அழுக்கும் சேர்த்துக்கத்தான் வேண்டியிருக்கு”, என்றுதான் பின்னால் நிறைய அழுக்கையும் சேர்த்துக்கொள்ளும் அனைவரும் தொடங்குகின்றனர். எது கொஞ்சம், எது நிறையவென யார் வரையறுப்பது?

அவரவருக்குத் தக்கபடிதான்.

இந்த நிலையில் அறவுணர்வை மட்டும் நம்பி எல்லோரையும் பாதுகாத்துவிடலாம் என்று நம்புவது அப்பாவித்தனத்தின் உச்சம். என்னதான் பிரசாரம் செய்தாலும், ஹெல்மெட் போடாவிட்டால் நூறு ரூபாய் அபராதம் என்கிற விதியைக் கண்டு பயந்து தலைக்கவசம் அணிபவர்கள்தான் அதிகம். அந்த வகையில், எல்லை மீறினால் தன் பெயர் வெளியிடப்படும் என்கிற பயம் இன்றைய அவசியம் என்றே நினைக்கிறேன்.

இதனால் சிலர் மேல் அபாண்டமாய் பழிசுமத்தக்கூடும்தான். சூழலின் பெருநலன் கருதி இந்த விஷயத்தை சிறு சங்கடமாய் கடக்க வேண்டியதுதான் சரியென்றுபடுகிறது.

வெளியிடப்பட்டிருக்கும் பெயர்களும், அதன் நம்பகத்தன்மையும், அதையொட்டிக் கிடைக்கும் வம்புகளும் என்று விவாதங்களின் மையம் செல்லாமல், சங்கீதத்துறையில் ஈடுபடும் ஒவ்வொருவரும் தன்னைத்தானே கேள்வி கேட்டுக் கொண்டு நேர்மையாய் நமக்கு நாமே பதிலளித்துக் கொள்ளும் தருணமாய் இதை மாற்றிக்கொள்வதுதான் நாம் இப்போது செய்யக்கூடிய குறைந்தபட்ச பொறுப்புள்ள செயலாக இருக்கமுடியும்.

இதை நான் யாருக்கும் சொல்லவில்லை. எனக்கு நானே ஒருமுறை சொல்லிக் கொள்கிறேன்…

Read Full Post »