Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for செப்ரெம்பர், 2022

பரிவாதினியைத் தொடங்கி ஒன்பது ஆண்டுகள் நிறைவடைந்து பத்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

இந்த ஒன்பது ஆண்டுகளில் பரிவாதினியின் ஆகப் பெரிய நிறைவு என்பது – இசைத் துறைக்கு ஏதாவது நன்மை செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் பலர், அதை பரிவாதினியின் மூலமாக செய்தால் சரியானவருக்குப் போய்ச் சேரும் – என்கிற நம்பிக்கையில்தான்.

அந்த வகையில், ஒரு முக்கியமான தொடக்கத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

சில ,மாதங்களுக்கு முன் Natarajan Srinivasan என்னைத் தொடர்பு கொண்டார். தனது பெற்றோர் பத்மா/சீனிவாசன் பெயரில் வருடா வருடம் நாகஸ்வர கலைஞர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆசையைத் தெரிவித்தார். நாங்கள் சிலமுறை தொலைபேசி ஒரு முடிவுக்கு வந்தோம்.

நாகஸ்வரம்/தவில் துறையில் எத்தனையோ சாதனைகள் செய்த கலைஞர்கள் காலப்போக்கில் முதுமை காரணமாகவும், காலச்சூழல் காரணமாகவும் அதிகம் வெளியில் தெரியாமல் ஆகிவிடும் நிலை உருவாகிவிடுகிறது. சில கலைஞர்கள், முதுமை காரணமாக வாசிக்க முடியாத சூழலில், சற்றே சிக்கலான நிதி நிலைமையில் வாழ்க்கையை நடத்தும் நிலையையும் காணமுடிகிறது.

இவ்விரு விஷயங்களை, (1. துறையில் சாதனையாளர், 2. நிதி உதவி கிடைத்தால் வாழ்க்கைக்கு உதவியாக இருக்கும் என்ற நிலையில் இருப்பவர்) கருத்தில் கொண்டு வருடம் ஒருமுறை பரிவாதினி அடையாளம் காட்டும் கலைஞருக்கு பத்மா/சீனிவாசன் அறக்கட்டளை சார்பாக ரூபாய் ஒரு லட்சம் சன்மானத்தை நண்பர் நடராஜனின் குடும்பத்தினர் வழங்கவுள்ளனர்.

இந்த வருடத்துக்கான விருதை மூத்த தவில் கலைஞர் திரு.ஆரணி பாலு அவர்கள் பெறவுள்ளார்கள். (அவரைப் பற்றி தனிப்பதிவு எழுதுகிறேன்.) வருடாந்திர நவராத்திரி நாகஸ்வர கச்சேரி வைபவத்தில் இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெறும் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர் நடராஜன் குடும்பத்தினருக்கு என் தனிப்பட்ட முறையிலும், இசைத் துறை சார்பாகவும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

Read Full Post »