சென்ற ஆண்டு தொடங்கி, இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை நாத இன்பத்துடன் சேர்ந்து, நாகஸ்வர கச்சேரி ஒன்றை பரிவாதினி ஒருங்கிணைத்து வருகிறது.
அந்த வரிசையில் இந்த மாதம் 27-ம் தேதி, நெம்மாரா சகோதரர்களின் கச்சேரி ஏற்பாடாகியுள்ளது. கேரளத்தைச் செர்ந்த இந்த கலைஞர்கள் சமீப காலத்தில் சங்கீத உலகில் நல்லதொரு பெயரை ஈட்டி, அனைத்து பிரபல அரங்குகளிலும் வாசித்து வருகின்றனர். இவர்களுடன் தேர்ந்த தவில் கலைஞர்களான திருராமேஸ்வரம் ராதாகிருஷ்ணனும், தாராபுரம் கணேஷும் வாசிக்கவுள்ளனர்.
வழக்கம் போல், கச்சேரியுடன் சேர்ந்து திறமையுள்ள ஆனால் நிதி நிலை ஸ்திரமாக இல்லாத இரு மாணவர்களுக்குத் தவிலும் நாகஸ்வரமும் வழங்கப்படவுள்ளது.
இம்முறை தவில் பெறும் மாணவர் பதினைந்து வயது நிரம்பிய மணிகண்டன். இவர் தென்திருப்பதி அரசு இசைப்பள்ளியில் பயின்று வருகிறார். நாகஸ்வரம் பெறும் மாணவர் சிவகுருகணேஷ். பதினேழு வயது நிரம்பிய இவர், திருவையாறு அரசு இசைப்பள்ளியில் பயின்று வருகிறார்.
கச்சேரிகளுக்கோ, வாத்தியம் வழங்குவதற்கோ நன்கொடை அளிக்க விரும்புவோர் இங்கு குறிப்பிட்டுள்ள வங்கிக் கணக்கில் நன்கொடை அளிக்கலாம்.
Parivadini Charitable Trust,
Union Bank of India
Account Number: 579902120000916
branch: Kolathur, Chennai,
IFSC Code: UBIN0557994
பின்னூட்டமொன்றை இடுக