பரிவாதினி வழங்கும் 2021-ம் ஆண்டுக்கான பர்லாந்து விருதை அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
2013-ல் தொடங்கி மிருதங்கம்/கடம்/வீணை/கஞ்சிரா/நாகஸ்வரம் செய்வதில் நிபுணத்துவம் பெற்ற வினைஞர்களை இதுவரை கௌரவித்துள்ளோம். இந்த ஆண்டு ஒரு வித்தியாசமான வினைஞருக்கு இந்த விருதையளிப்பதில் பரிவாதினி பெருமையடைகிறது.

நாகஸ்வர இசைக்கு நாகஸ்வரம் எவ்வளவு முக்கியமோ அதே அளவு முக்கியம் வாய்ந்த அங்கம் சீவளி எனப்படும் நறுக்கிற்கும் உண்டு. பார்க்கச் சாதாரணமாய் தோன்றும் ஓலை போன்ற சீவாளிகளின் தயாரிப்புக்குப் பின்னால் பெரும் உழைப்பு புதைந்துள்ளது. வரும் நாட்களில் இதைப் பற்றி விவரமாக எழுதுகிறேன்.
இந்த ஆண்டு விருது பெரும் திருவாவடுதுறையைச் சேர்ந்த சீவாளி வினைஞர் முத்துராமனுக்கு வாழ்த்துக்கள்.
வாழ்த்துகள்